அலைகடலிடம் அமைதியையும், குளத்தில் ஆழிப்பேரலைகளையும் எதிர்பார்ப்பது போன்றதே சிலரிடம் வைக்கப்படும் எதிர்பார்ப்புகளும்..
உர்ர்ர்ர்ர்ர்சாகமாக விடியும் பொழுதை, சில இனிய நிகழ்வுகள் உற்சாகமாக மலர வைத்து விடுகின்றன.
ரசித்துச்சிரிக்கத் தெரிந்தவனுக்கு அழகாய்த்தெரியும் உலகம், தெரியாதவனுக்கு கரடுமுரடாய்க் காட்சியளிக்கிறது.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.
எறியப்பட்ட கல் குளத்தில் எழுப்பும் அலைகள் கரையிலிருப்பவரையும் தொட்டுச்செல்வது போல், ஒருவர் மேல் காட்டப்படும் கருணையானது பலருக்கும் பரவுகிறது.
அன்பு--- எல்லாச்சுமைகளையும் வலிகளையும் நீக்கவும், கொடுக்கவும் வல்ல ஒரே உணர்வு.
சிலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான விலையென்பது, அதற்காகச் செலவிட்ட நம் வாழ்நாளின் பகுதியாகக்கூட இருக்கலாம்.
உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புபவர்களின் கண்களுக்கு முட்டுக்கட்டைகள் தட்டுப்படுவதில்லை.
சிக்கல்களில்லாமல் எளிமையாக, நிம்மதியாக வாழ்வதென்பதே இன்றைய சூழலில் மனிதனுக்கு சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது.
முழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக.
உர்ர்ர்ர்ர்ர்சாகமாக விடியும் பொழுதை, சில இனிய நிகழ்வுகள் உற்சாகமாக மலர வைத்து விடுகின்றன.
ரசித்துச்சிரிக்கத் தெரிந்தவனுக்கு அழகாய்த்தெரியும் உலகம், தெரியாதவனுக்கு கரடுமுரடாய்க் காட்சியளிக்கிறது.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.
எறியப்பட்ட கல் குளத்தில் எழுப்பும் அலைகள் கரையிலிருப்பவரையும் தொட்டுச்செல்வது போல், ஒருவர் மேல் காட்டப்படும் கருணையானது பலருக்கும் பரவுகிறது.
அன்பு--- எல்லாச்சுமைகளையும் வலிகளையும் நீக்கவும், கொடுக்கவும் வல்ல ஒரே உணர்வு.
சிலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான விலையென்பது, அதற்காகச் செலவிட்ட நம் வாழ்நாளின் பகுதியாகக்கூட இருக்கலாம்.
உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புபவர்களின் கண்களுக்கு முட்டுக்கட்டைகள் தட்டுப்படுவதில்லை.
சிக்கல்களில்லாமல் எளிமையாக, நிம்மதியாக வாழ்வதென்பதே இன்றைய சூழலில் மனிதனுக்கு சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது.
முழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக.










