Monday 14 November 2011

மழலை உலகம் மகத்தானது...(தொடர்பதிவு)


எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்..
ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப்பு இருக்குது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமா கொண்டாடப்படுவதுதான் அந்தத் தினத்தோட சிறப்பு.

நவம்பர் 20-ஐ அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும் யூனிசெஃப் அமைப்பும் கடந்த 1954-டிசம்பர் பதினாலுலேர்ந்து கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் பிரகடனப் படுத்தப்பட்டிருக்குது. அத்தோட ஜூன் ஒண்ணாம் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுது.
முள்ளில்லா ரோஜாக்களும் அவங்க ராஜாவும்..
அப்படியிருந்தும் நாம மட்டும் ஏன் நவம்பர் 14-ஐ குழந்தைகள் தினமாகக் கொண்டாடுறோம்ன்னா அதுக்கு முழுக்க முழுக்க நம்ம நேருமாமாதான் காரணம். வடக்கே சாச்சா நேருன்னும் தெற்கில் நேருமாமான்னும் அழைக்கப்படற நம்ம சுதந்திர இந்தியாவோட முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 1889ஆம் வருஷம் பிறந்தார். அவர் குழந்தைகள் மேல் ரொம்பவும் பாசம் கொண்டவர். அதனாலதான் அவரோட பிறந்த தினமே இந்தியாவில் குழந்தைகள் தினமா கொண்டாடப்படுது.

குழந்தைகள்ன்னதும் நமக்கு மொதல்ல ஞாபகம் வர்றது அவங்களோட வெள்ளை மனசுதான்.எந்தக் கவலையுமே இல்லாம ஆடிப்பாடி விளையாடித் திரிஞ்ச நம்ம குழந்தைப் பருவத்தை நினைக்கிறச்சே,..”ஹூம்.. அதெல்லாம் ஒரு பொற்காலம்”ன்னு ஒரு ஏக்கப்பெருமூச்சு வர்றதையும், கூடவே இப்பத்திய குழந்தைகளோட குழந்தைப் பருவம் எப்படிக் கழியுதுன்னு ஒப்பிட்டுப் பார்க்கறதையும் நம்மால நிச்சயமா தவிர்க்க முடியலை. ஏன்னா, இப்பத்திய குழந்தைகள் வாழும் சூழல் அப்படி. அதை நாமே உருவாக்கி வெச்சிட்டோம்ங்கறதும் வேதனைக்குரிய உண்மையே.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 40% இருக்கும் குழந்தைங்க சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் இன்னும் இருக்கு. இதுல முக்கியமானது ஆண்குழந்தை மோகத்தால் பெண்குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது. இது போக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்து பிறத்தல், சரியான எடையில் பிறக்காம இருக்கறது, பிறந்த குழந்தைங்களும் தாக்குப் பிடிக்க முடியாம சின்ன வயசுலயே இறந்துடுறது, குழந்தைங்க மீது நடத்தப் படற வன்முறைகள்ன்னு எவ்வளவோ இருக்கு.

இந்தக் காலத்துக் குழந்தைகள் எதிர் நோக்க வேண்டியிருக்கற வாழ்க்கை சவால்கள் நிறைஞ்சதாவே இருக்குது. இன்றைய குழந்தைகள் வளர்ந்து பெரியவங்களாகும்போது தனக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கணும்ன்னு குறிக்கோளோட இருக்கறாங்க. அப்டி நினைக்கிறது தப்பேயில்லை. ஆனா, அப்படி இருந்தாத்தான் வாழ்க்கையில் ஜெயிச்சதாவும், அப்படியில்லைன்னா தான் எதுக்கும் லாயக்கில்லைன்னும் நினைக்கிறாங்க. சின்னத் தோல்விகளைக்கூட தாங்கிக்கற மனப்பக்குவம் அவங்களுக்கில்லை. எது சரி?.. எது தப்பு?ன்னு சரியான முடிவெடுக்கத் தெரியாம சட்ன்னு குழம்பிடறாங்க.

இதற்கெல்லாம் நம்ம கூட்டுக் குடும்ப கலாச்சாரம் அழிஞ்சுட்டு வர்றதும் பள்ளிகள்லயும் மாரல் வகுப்புகள் நடக்கறதில்லைங்கறதும் ஒரு முக்கியக் காரணம். அந்த வகுப்புகளுக்கான நேரத்தையும் உடற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரத்தையும் மத்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கறதுதான் இப்பல்லாம் நடக்குது. “ஓடி விளையாடு பாப்பா”ன்னு பாரதி பாடி வெச்சுட்டுப் போயிட்டார். ஆனா, இப்பத்திய குழந்தைகளோட குழந்தைப் பருவம் வகுப்பறையில் கரும்பலகை முன்னாடி இல்லைன்னா வீட்ல தொலைக்காட்சி, அல்லது கணினி முன்னாடி மட்டுமே கழியுது. இதுல எங்கேயிருந்து ஓடி விளையாடறது?..

குழந்தைகளுக்கு அந்தக் காலத்துல நல்லது கெட்டது, நம்ம கலாச்சாரப் பண்புகள், அப்றம் மற்றவர்களோட நல்ல உறவு முறைகளை பராமரிக்கச் சொல்லித் தரும் அனுபவப் பெட்டகங்களா தாத்தா பாட்டிகள் இருந்தாங்க. இப்ப அவங்கல்லாம் முதியோர் இல்லத்துக்குப் போயாச்சு. வீட்ல இருக்கற தாத்தா பாட்டிகள்லயும் சிலபேர் போட்டி போட்டுக்கிட்டு சீரியல் பாக்கறதும், ரிமோட்டுக்காக பேரப்பிள்ளைகள் கிட்ட மல்லுக்கு நிக்கிறதும்தான் சில வீடுகள்ல நடக்குது.

கதை சொல்லும் தாத்தா பாட்டியின் இடத்தை இப்ப தொலைக்காட்சியும் கணினியும் பிடிச்சுக்கிட்டது. அதிலும் முக்கியமா தொலைக்காட்சி குழந்தைகள் மனசுல ஏற்படுத்தும் தாக்கம் ரொம்பவே அதிகம். இப்பல்லாம் குழந்தைகளுக்கான நல்ல சினிமாவோ, இல்லை கார்ட்டூங்களோ கூட வர்றதில்லை. நிதர்சனத்தைக் காட்டுறதா சொல்லிக்கிட்டு காண்பிக்கப்படற அடிதடி, ரத்தம், முறையற்ற உறவுகள் மற்றும் வன்முறைகள் நிரம்பி வழியும் அந்தக் காட்சிகள் குழந்தைகளோட பிஞ்சு மனசுல நிச்சயமா விஷ விதைகளைத் தூவுது. சமுதாயத்தைப் பத்தின அவங்களோட சிந்திக்கும் கோணத்தையே நிச்சயமா மாத்துது.

இப்பத்திய கல்வியமைப்பும் குழந்தைகளுக்கு ரொம்பவே மன அழுத்தம் கொடுக்கக் கூடியதா அமைஞ்சுருக்கு. அவங்களுக்கு பிடிச்சதையோ அல்லது அவங்க எதுல திறமைசாலியோ அதைப் படிக்க அனுமதிக்கப்படாம, பெற்றோர்களோட விருப்பத்தை நிறைவேத்த நிர்ப்பந்திக்கப் படறாங்க. எல்லாத்துலயும் முதலிடம் வந்தேயாகணும்ன்னு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமுதாயத்துலேர்ந்து வர்ற எதிர்பார்ப்புகளை நிறைவேத்த முடியாம திணறிப் போற குழந்தைகள் எக்கச்சக்கம்.
பாவம்.. குழந்தைகள். எத்தனைதான் பாரம் சுமப்பாங்க??
குழந்தைத் தொழிலாளர்கள் கூடாதுன்னு எத்தனை முறை எச்சரிக்கை செஞ்சாலும், சட்டம்,அபராதம், தண்டனைன்னு அரசாங்கம் எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் அந்தக் கொடுமை ரகசியமாத் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. ஏன்னா, அவங்களுக்குக் குறைவான கூலி கொடுத்தாப் போதுமில்லே.. ஆனா, அதுக்குப் பதிலா விலையுயர்ந்த அவங்களோட குழந்தைப் பருவத்தை பறிச்சுக்கிறோம்ன்னு யாருக்குமே தோணறதில்லை.

வீட்டோட நிலை காரணமா குழந்தைங்க பள்ளிக்கு அனுப்பப் படாம வேலைக்கு அனுப்பப்படுறதா காரணம் சொல்லப்படுது. பள்ளியில் சேர்க்கப்படற பத்துக் குழந்தைங்கள்ல நாலுபேர் ஆரம்பப் பள்ளியோட நின்னுடறாங்க, பத்துல அஞ்சு பேர் அஞ்சாம் வகுப்பைக் கூடத் தாண்டறதில்லை. பத்துல ஏழு பேர் மேல் நிலை வகுப்போட நின்னுடறதா புள்ளி விவரம் சொல்லுது. இப்படி பள்ளிப் படிப்பை நிறுத்தும் குழந்தைகளில் மூன்றில் ரெண்டு பங்கு அளவு பெண்குழந்தைளாக இருப்பது இன்னொரு கொடுமை. சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை நூறு சதவீதம் ஒழிச்சு அவங்களைப் பள்ளிக்கு அனுப்பினா நிச்சயமா அடுத்து வர்ற தலைமுறைகளும் பயனடையும். இதுக்கு பெற்றோர், ஆசிரியர், சமுதாயம்ன்னு எல்லோரோட ஒருங்கிணைஞ்ச முயற்சியும்  நிச்சயமாத் தேவை.

இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும் அஸ்திவாரமாகவும் இருக்காங்க. அப்படிப்பட்டத் தூண்களைப் பலமுள்ளதா ஆக்க வேண்டியதும், அவங்க எதிர் கொள்ள வேண்டியிருக்கற பாதையை இடைஞ்சல்கள் இல்லாமச் சீர்திருத்திச் செப்பனிட்டுக் கொடுக்கறதும் நம்ம கடமைதானே?. இதைச் செஞ்சாத்தானே குழந்தைகள் தினம் கொண்டாடுறதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இப்படியொரு நல்ல சூழல்ல வளர்ற குழந்தைகளுக்கு வருஷம் முழுக்கக் குழந்தைகள் தினக் குதூகலமும் கிடைக்கும்.
வர்ஷா வடிவமைச்ச லோகோ..
ஊக்குவிக்கப்படற குழந்தைகள் நிச்சயம் சாதிப்பாங்கங்கறதுக்கு டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்த   வர்ஷா குப்தா ஒரு நல்ல உதாரணம். இந்தியாவின் இசைக் கருவிகளை நினைவூட்டும் விதமா கூகிளின் லோகோவை வடிவமைக்கிறதுக்காக நடந்த போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிச்சிருக்காங்க மூணாம் வகுப்பு படிக்கும் இந்த ஏழே வயசான குட்டிப்பெண். பரிசா ஒரு மடிக்கணினியும், அவங்க படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் மதிப்புல தொழில் நுட்ப வசதிகளும் கிடைச்சிருக்குது.அவங்க வடிவமைச்ச லோகோதான் இன்னிக்கு கூகிளின் முகப்பை அலங்கரிச்சுட்டிருக்குது.

நல்ல வாய்ப்புகளும் உற்சாகமும் கிடைச்சா எந்தக் குழந்தையும் சாதிக்கும். குழந்தைகளைக் கொண்டாடுவோம். அவங்களை வாழ்த்துவோம். அவங்களுக்காக ஒரு நாலஞ்சு வரிகளை எழுதியிருக்கேன். 


எங்களுக்கே என்றதோர் உலகம்
அதில்
ஆட்சியாளர்கள் மட்டும்
நாங்களில்லை..

கிட்டிப்புள்ளென்றும் பம்பரமென்றும்
கிராமமென்றும் கிணறென்றும்
டோரிமானென்றும் நிக்ளோடியனென்றும்
விளங்கவியலா விசித்திரச் சொற்களால்
குழம்புவதும் குழப்புவதுமே
எங்களது வாடிக்கையாகிப் போய்விட்டது..

துரத்தித் திரிந்த தும்பிகளையும்
பூவரச இலை பீப்பீயையும்
நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து
விவரிக்கும்போது
பனையோலைக் காற்றாடிகளுடன்
ஓட ஆரம்பித்திருக்கிறோம் நாங்கள்
சென்ற தலைமுறையின்
மனதெங்கும் அப்பிக் கிடக்கும்
செம்மண் புழுதியில்..

கணினி ஜன்னலில் முகம் புதைத்து
ஆசுவாசமுறும்
கூண்டுக்கிளிகளை
நோக்கி நகைக்கின்றன
அந்தக் காலச் சுதந்திரக்கிளிகள்..

டிஸ்கி: ஷைலஜா மேடம் அழைச்ச தொடர்பதிவுக்குப் பொருத்தமா அமைஞ்சுட்டதால, வல்லமையின் குழந்தைகள் தினச் சிறப்பிதழுக்காக எழுதியதையே இங்கே தொடர்ந்துட்டேன். இந்தத் தொடர்பதிவைத் தொடர.. 

பெண் பதிவிகளில்,

ஆண் பதிவர்களில்,
ஆகிய நால்வரையும் அழைக்கிறேன். 

பெண்களில் இருவர், ஆண்களில் இருவர்ன்னு அழைக்கணும், முடிஞ்சா இடுகையுடன் ஒரு கவிதையும், ஒரு புதிரும் இணைச்சா நலம். 

குழந்தைங்க அப்றம் குழந்தையுள்ளம் கொண்டவங்க அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

73 comments:

raji said...

குழந்தைகள் சம்பந்தப் பட்ட பல விஷயங்களையும் எடுத்துகிட்டு ஒரு அற்புதமான உபயோகமுள்ள கட்டுரை தந்துருக்கீங்க சாந்தி.முக்கியமா குழந்தகளுக்கு டிவி யின் தாக்கம் மற்றும் தற்போதைய அவங்களோட கல்வி முறை பத்தி சொல்லியிருக்கறது பாராட்ட வேண்டிய விஷயம்.வல்லமையில் படித்தேன்.இப்போது மீண்டும் படித்து கருத்துரை இடுகிறேன்.பகிர்விற்கு நன்றி :)

Tamilthotil said...

"இதற்கெல்லாம் நம்ம கூட்டுக் குடும்ப கலாச்சாரம் அழிஞ்சுட்டு வர்றதும் பள்ளிகள்லயும் மாரல் வகுப்புகள் நடக்கறதில்லைங்கறதும் ஒரு முக்கியக் காரணம்."

நல்லா சொல்லியிருக்கிங்க...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மழலை உலகம் மகத்தானது தான்.

சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் நீங்களே சொல்லி விட்டீர்கள். என் எழுத்துலக குருநாதர் திரு ரிஷபன் வேறு எழுதப்போகிறார் என்றும் சொல்லி விட்டீர்கள். பிறகு நான் என்னத்தைச் சொல்ல? இருப்பினும் முயற்சிக்கிறேன். அழைப்புக்கு மிக்க நன்றி.

எனக்கு எழுதக் கொஞ்சம் நீண்ட அவகாசம் தேவைப்படும். டிஸம்பர் 15 வரை பல்வேறு சொந்த வேலைகள் உள்ளன. வீட்டில் பேரன் பேத்தி என எல்லோரும் வந்து போக உள்ளனர். ஜே ஜே என்று இருக்கும். கணிணியை எனக்குத்தரவே மாட்டார்கள். மேலும் அவர்களுக்கான கதைகள் வேறு நான் நிறைய தயார்செய்து சொல்ல வேண்டும்.

அவர்களும் குழந்தைகள் தானே ...
அதனால் பொருத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன் vgk

கோமதி அரசு said...

நல்ல வாய்ப்புகளும் உற்சாகமும் கிடைச்சா எந்தக் குழந்தையும் சாதிக்கும். குழந்தைகளைக் கொண்டாடுவோம். அவங்களை வாழ்த்துவோம்.//

உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம் சாந்தி.

குழந்தைகள் தினத்தில் நல்லதொரு பதிவும், கவிதையும் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

பாராட்டி வளர்க்கும் குழந்தை பாரட்டை பெறுகிறது என்பது உண்மை.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை குழந்தைகள் தின நாளில்
குழந்தைகள் குறித்து அனைவரும்
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்களை விரிவாகவும் அழகாகவும்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 1

ராமலக்ஷ்மி said...

//வீட்டோட நிலை காரணமா குழந்தைங்க பள்ளிக்கு அனுப்பப் படாம வேலைக்கு அனுப்பப்படுறதா காரணம் சொல்லப்படுது. பள்ளியில் சேர்க்கப்படற பத்துக் குழந்தைங்கள்ல நாலுபேர் ஆரம்பப் பள்ளியோட நின்னுடறாங்க, பத்துல அஞ்சு பேர் அஞ்சாம் வகுப்பைக் கூடத் தாண்டறதில்லை. பத்துல ஏழு பேர் மேல் நிலை வகுப்போட நின்னுடறதா புள்ளி விவரம் சொல்லுது. இப்படி பள்ளிப் படிப்பை நிறுத்தும் குழந்தைகளில் மூன்றில் ரெண்டு பங்கு அளவு பெண்குழந்தைளாக இருப்பது இன்னொரு கொடுமை. சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை நூறு சதவீதம் ஒழிச்சு அவங்களைப் பள்ளிக்கு அனுப்பினா நிச்சயமா அடுத்து வர்ற தலைமுறைகளும் பயனடையும். இதுக்கு பெற்றோர், ஆசிரியர், சமுதாயம்ன்னு எல்லோரோட ஒருங்கிணைஞ்ச முயற்சியும் நிச்சயமாத் தேவை.//

மிக அருமை. இந்தக் கருத்தையொட்டி நானொரு கதை சமீபத்தில் எழுதினேன். அதை வலைப்பூவில் பகிரும் போது இந்த இடுகையின் தொடர்ச்சியாகவே பதிகிறேன்.

மழலைகள் உலகைப் பற்றி ஒரு முழுமையான ஆய்வு. நன்றி சாந்தி பகிர்வுக்கும் அழைத்திருக்கும் அன்புக்கும்.

Unknown said...

நல்ல கட்டுரை நல்லா சொல்லி இருக்கீங்க சார்.

சக்தி கல்வி மையம் said...

இந்த குழந்தைகள் தினத்தில், அவர்களைப் பற்றி ஒரு அற்புதமான பதிவும், கவிதையும் தந்திருப்பது மகிழ்ச்சி..

வாழ்த்துக்கள்..

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரி இத்தனை அழகாக அற்புதமாக எம் கடந்தகால
குழந்தைப்பருவ அனுபவத்தையும் நிகழ்கால குழந்தைப் பருவத்தையும்
இன்றைய குழந்தைகள் வளரும் விதம் ,அவர்களை இந்தச் சமூகம் வழிநடத்தும் விதம் அப்பப்பா எல்லாவற்றையும் சிறப்பாகச் சொல்லிவிட்டு இந்த அம்பாளடியாள
எழுதச் சொன்னால் எவ்வாறு எழுதுவேன் !......கவிதைவேற பட்டிதொட்டி எல்லாம்
ஒரு சுற்றுச் சுற்ற வைத்துவிட்டது . இதற்குமேல் என் பணி சிறப்பாக அமைய என்னை வாழ்த்துங்கள் .இன்றைய உங்கள் ஆக்கத்திற்கும் உலகிலுள்ள அனைத்துக்
குழந்தைகளுக்கும் இந்த அம்பாளடியாளின் மனம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து தொடர்பதிவுக்கு அழைத்த உங்கள் அன்பிற்கும் இப் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி தொடர்கிறேன் என் பணியை ......

Anonymous said...

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்... குழந்தைகளை இந்த நல்ல கட்டுரை மூலம் கௌரவிததுக்கு நன்றி...வாழ்த்துகள்...

ஷைலஜா said...

நன்றி அமைதிச்சாரல் என் அழைப்பினை ஏற்று உடன் பதிவும் அளித்ததற்கு பதிவின் விஷயங்கள் மிக நன்று

இராஜராஜேஸ்வரி said...

.இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும் அஸ்திவாரமாகவும் இருக்காங்க./

அஸ்திவாரத்தை பலப் படுத்துவோம்..

இராஜராஜேஸ்வரி said...

இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும் அஸ்திவாரமாகவும் இருக்காங்க.

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

குறையொன்றுமில்லை. said...

நல்ல வாய்ப்புகளும் உற்சாகமும் கிடைச்சா எந்தக் குழந்தையும் சாதிக்கும். குழந்தைகளைக் கொண்டாடுவோம். அவங்களை வாழ்த்துவோம்.//

வெங்கட் நாகராஜ் said...

குழந்தைகள் தினத்தன்று நல்லதோர் பகிர்வு...

ஹேமா said...

சாரல்...எல்லாத்தையுமே நீங்க அழகா கவிதையோட சொல்லிட்டீங்க.அன்பான இனிய வாழ்த்துகள் செல்லக் குழந்தைகளுக்கு !

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

குழந்தைகள் தின வாழ்த்துகள்...

துரைடேனியல் said...

Kulanthaigal
Iraivan
Namakku thantha
Poonthottigal
Poo valarkkaavittaalum paravaayillai
Thottigalai udaikkaamal irunthaal sari.

Unknown said...

அருமையாக பல விஷயங்கள் சொல்லி அசத்தியிருக்கிங்க... வாழ்த்துக்கள்..

மனோ சாமிநாதன் said...

அருமையான, சிந்திக்க வைக்கும் பதிவு!!

kothai said...

மிகவும் நன்றாக தங்கள், மழலை கட்டுரை அமைந்துள்ளது. முத்தாய்ப்பாக
வர்ஷா அமைத்த கூகுள் லோகோ மனதிற்கு இதமான தகவல்.

ஸ்ரீராம். said...

வர்ஷாவின் கற்பனை பிரமாதம். கூட்டுக் குடும்ப முறைகள் வழக்கொழிந்து போனதில் இது மாதிரி நஷ்டங்கள் நிறைய. அதிகமான எதிர்பார்ப்பும், போட்டியும் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் ஸ்ட்ரெஸ் கூட அதிகம். நல்லதொரு அலசலாக பதிவிட்டிருக்கிறீர்கள்.

pudugaithendral said...

சொல்லியிருப்பது எல்லாம் ரொம்ப சரிப்பா. பாவம் பசங்கன்னு நினைக்கும் அதேவேளையில் நல்லது எது கெட்டது எதுன்னு புரிஞ்சிக்கிற தன்மையையும் பசங்கள் வளத்துக்கணும். சில விஷயங்களை யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது. அனுபவம் தான்.

அருமையான பதிவு

பால கணேஷ் said...

மிகவும் அருமையான, என் மனதிற்கு உவப்பான கருத்துக்கள். அதுவும் இன்றைய குழந்தைகள் ஓடி விளையாடும் வாய்ப்பை டிவியும் கம்ப்யூட்டரும் பறித்துக் கொண்டதை நீங்கள் சொல்லியிருப்பது... பிரமாதம். நல்ல பகிர்விற்கு நன்றி அமைதிச்சாரல்!

ADHI VENKAT said...

நல்லதோர் பதிவு. குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்.

அம்பாளடியாள் said...

உங்கள் அழைப்பை ஏற்று தொடர்பதிவு வெளியிட்டுள்ளேன் .அதற்கு உங்கள் மேலான கருத்தினையும் ஊக்குவிப்புகளையும் எதிர்பார்க்கின்றேன் .மிக்க நன்றி முடிந்தால் அவசியம் வாருங்கள் .

Menaga Sathia said...

அழகா எழுதிருக்கீங்க,டைமிங்கான நல்லதொரு பதிவு..வாழ்த்துக்கள் அக்கா!!

உணவு உலகம் said...

// அதிலும் முக்கியமா தொலைக்காட்சி குழந்தைகள் மனசுல ஏற்படுத்தும் தாக்கம் ரொம்பவே அதிகம்//
நிதர்சனம்.

உணவு உலகம் said...

அழகா சொல்லியிருக்கீங்க.

Asiya Omar said...

நல்ல மகத்தான பகிர்வு.அருமை.

பாச மலர் / Paasa Malar said...

மழலைகள் மனநிலை விளக்கும் அழகான கவிதை...வாழ்த்துகள் சாரல்

RVS said...

அந்தக் கடைசி கவிதை ஹைலைட்டான ஒன்று. ரசித்தேன். உங்க பாணியில் சொல்வதென்றால் “ஜூப்பரு”. :-)

ரிஷபன் said...

சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை நூறு சதவீதம் ஒழிச்சு அவங்களைப் பள்ளிக்கு அனுப்பினா நிச்சயமா அடுத்து வர்ற தலைமுறைகளும் பயனடையும். இதுக்கு பெற்றோர், ஆசிரியர், சமுதாயம்ன்னு எல்லோரோட ஒருங்கிணைஞ்ச முயற்சியும் நிச்சயமாத் தேவை.

வைர வரிகள். என்னையும் அழைத்த தங்கள் பேரன்பிற்கு நன்றி. இது தொடர்பாக பல பதிவுகள் படித்து பிரமித்து போனேன். ஒவ்வொருவரும் மிக அழகாய் எழுதி என்னை மிரட்டி விட்டார்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லாஜி,

வாசிச்சு கருத்திட்டு நீங்களும் தொடர்ந்ததுக்கு ரொம்ப நாளு கழிச்சு நன்றி சொல்லிக்கறேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ் ராஜா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வை.கோ ஐயா,

வாசிச்சதுக்கும் பதிவைத்தொடர்ந்ததுக்கும் ரொம்ப நன்றிகள் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நட்சத்திரமே,

தொடரப்போகும் உங்க கதைக்காக வெயிட்டிங்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமேஷ் பாபு,

ரொம்ப நன்றி சகோ :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கருன்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பாளடியாள்,

பதிவைத் தொடர்ந்த உங்க அன்புக்கும் நன்றிகள் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரெவெரி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷைலஜா மேடம்,

இடுகையை வாசிச்சதுக்கும், இதுக்கு வாய்ப்பளிச்சதுக்கும் உங்களுக்கு என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கும் குழந்தைகளை வாழ்த்தினதுக்கும் மிக்க நன்றிகளோட நானும் சேர்ந்து அவங்களை வாழ்த்தறேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

ரொம்ப நன்றிம்மா வாசிச்சதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

மிக்க நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

இன்னிக்கு உங்க தொடர்பதிவையும் வாசிச்சேன்ப்பா.. அந்தக் குழந்தைகளை எப்படி ஆறுதல் படுத்துவது..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

தொடர்ந்து நீங்க கொடுத்துவரும் ஆதரவுக்கு மிக்க நன்றி :-)

சிவகுமாரன் said...

அருமையான கட்டுரை.
அந்தக் கவிதை அபாரம்.
இழுந்துபோன இளமையையும் ,
பிள்ளைகளுக்கு நாம் தராது போன குதூகலத்தையும் நினைவுபடுத்திய வரிகள் அட்டகாசம்.

ராமலக்ஷ்மி said...

அழைத்த அன்புக்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டு தொடர் சங்கிலியில் இணைக்கிறேன் இந்தப் பதிவை: இன்னொரு வசந்தா

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரெவெரி,

வாசிச்சதுக்கு நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துரை டேனியல்,

அருமையா சொன்னீங்க.. வாசிச்சதுக்கு நன்றிகள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சினேகிதி,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோம்மா,

வாசிச்சதுக்கு நன்றிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோதை,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

வாசிச்சதுக்கு நன்றிகள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

உண்மைதான்,.. ஏட்டறிவையும் கேட்டறிவையும் விட சிலசமயம் பட்டறிவுதான் பயனளிக்குது :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

உண்மைக்குமே யாரோட ரிமோட் யாருகிட்ட இருக்குன்னே தெரிய மாட்டேங்குது.. அந்தளவுக்கு இப்பல்லாம் டிவி மக்களை ஆட்டிப் படைக்குது..

வாசிச்சதுக்கு நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

அதுவும் இப்பத்திய கால கட்டத்துல ரொம்பவே கவனமா இருக்க வேண்டியிருக்கு.

வாசிச்சதுக்கு நன்றிகள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பாளடியாள்,

தொடரை அருமையாத் தொடர்ந்ததற்கு மொதல்ல நன்றிகளும் பாராட்டுகளும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

வாசிச்சதுக்கு நன்றிகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

வாசிச்சதுக்கு நன்றிகள்.

மகளுடைய திருமண விழாவிற்கு முன்கூட்டிய வாழ்த்துகளும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

ரசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

வாசிச்சதுக்கும் கவிதையை ரசிச்சதுக்கும் நன்றிகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

எத்தனை இருந்தாலும் உங்க எழுத்தின் ருசி தனியாக்கும் :-))

வாசிச்சதுக்கு நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவகுமாரன்,

வாசிச்சதுக்கும் கவிதையை ரசிச்சதுக்கும் ரொம்ப நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவகுமாரன்,

வாசிச்சதுக்கும் கவிதையை ரசிச்சதுக்கும் ரொம்ப நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

தொடர்ந்ததுக்கும் அருமையான சிறுகதையை வாசிக்கத் தந்ததற்கும் ரொம்ப நன்றிகள்..

LinkWithin

Related Posts with Thumbnails