Thursday 19 November 2015

ஃபுட்டோக்ராபி..

உணவைத்தயாரிப்பது ஒரு கலை என்றால் அதை பார்வைக்கு அழகாக அலங்கரித்து வைப்பது இன்னொரு கலை. பார்க்க அழகாக இருந்தாலே அது சாப்பிடவும் தோன்றும். அப்படி சாப்பிடத்தூண்டும் அழகுடன் இருக்கும் உணவை படம் பிடிப்பதுவும் ஒரு கலையே. ஃபுட் ஃபோட்டோகிராஃபி எனப்படும் அவ்வகைப் படங்களில் ஒரு சில உங்கள் பார்வைக்கு. ஏற்கனவே பகிரப்பட்டிருந்த முதல் பாகம் காண சாட்டையைச்சொடுக்குங்கள்.



பால்யம் திரும்புகிறதே..

அம்ச்சி மும்பையின் வடாபாவ்.

 ஸ்வீட் ஹார்ட்ஸ்.

 நொறுக்ஸ்..

பழம் நல்லது.

கிச்சாவின் ஸ்னாக்ஸ் :-)

பல்லை உடைக்காத மைசூர்பாக்
 அடேங்"கப்பா" (தாளித்த கப்பைக்கிழங்கு)
 ஜலேபி.

கோத்தம்பிர் வடி.

தில் குட் க்யா.. கோட் கோட் போலா.

Thursday 12 November 2015

சாரல் துளிகள்

1. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பசிமுகம் பார்க்கப் பொறாத தாய் ஒருத்தி இருக்கிறாள். அவள் வீட்டில் எந்நேரத்திலும் நிரம்பி வழிகிறது அட்சய பாத்திரம், அவள் அன்பைப்போல்.

2. உலகில் அதிகமாகக் கவி பாடப்படுபவர்களில் குழந்தை, நிலா, அன்னை இம்மூவரும் முக்கியமான இடங்களை வகிக்கிறார்கள்.

3. ஒரு செயலை, "ஏன் செய்தாய்?" என்று கேட்பதற்குப் பத்து பேர் இருப்பதைப் போலவே "ஏன் செய்யவில்லை?" என்று கேட்டுத் திட்டுவதற்கும் பத்து பேர் இருப்பார்கள் என்பது உலக நியதி.

4. தவழ்ந்தபடி தரையை ஆராய்ந்து கொண்டிருந்த குழந்தையின் பார்வையில் பட்டிருக்க வேண்டாமென்று, அப்புறமாய் வருத்தப்பட்டுக் கொண்டது கட்டெறும்பு.

5. யாரோ தன் குழந்தையைக்
கொஞ்சிக்கொண்டே செல்கிறார்கள்.
தன்னைத்தான் கொஞ்சுவதாக
மகிழ்ந்து மிழற்றுகிறது
பிச்சைக்காரியின் இடுப்பிலிருக்கும்
சிறு மழலை.

6. இன்னொரு வீட்டில் கொழுந்து விட்டெரிந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தவனின் ஆடையில் தீ எப்பொழுதோ பற்றிப்பரவ ஆரம்பித்திருந்தது.

7. அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை
என்கிறது உன் தரப்பு
வாழ்வென்பது திருப்பங்களாலும் ஆனது
என்பது என் கட்சி
இரண்டையும் கேட்டுக்கொண்டு
மௌனமாய்த் தீர்ப்பெழுதிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை
இரண்டும் ஒன்றுதானென்று.

8. அடுத்தடுத்த விவாதங்களின்போது மாற்றி மாற்றிச் சொல்லி குழப்பி விட்டாலும் முதன்முறை கேட்கும்போது பெரும்பாலும் மிகச்சரியாகவே பதிலளித்து விடுகிறது மனது.

9. அடமாய் ஒளித்து வைத்திருக்கிறது ஆழ்குளம்,
வெளிவர வேண்டிய ஏற்பாடுகளை அந்தத் தாமரை மொட்டு ரகசியமாய் செய்து கொண்டிருப்பதை அறியாமல்.

10. மிகப்பத்திரமாக வைத்து விட்ட திருப்தியிலேயே வைத்த இடமும் பொருளும் நினைவிலிருந்து அகன்று விடுகின்றன.

Tuesday 10 November 2015

தீப ஒளியில்..

புற இருளை அகற்ற அகல் ஏற்றுதல் போல் அக இருளகற்ற ஞானதீபம் ஏற்றுவோம். 








அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts with Thumbnails