Thursday 13 October 2016

படமும் பாடலும் - 3

படம் அளித்த தூண்டுதலால் எழுதப்பட்ட பாக்கள் இங்கேயும் தொடர்கின்றன. 

பொற்புறுத்தப் போதுமில்லை பொற்சரிகை நான்வேண்டேன் 
பெற்றவரு டன்மக்கள் பாங்குடனே வசித்திடவே
சிற்றலகாற் சேர்த்திட்ட சிறுதுரும்பும் சுள்ளிகளும்
மற்றதெலாந் திரட்டியேநான் மணிவீடு கட்டுகிறேன் (கலி விருத்தம்)

2) மூவகை மாவொடு முச்சரக் கிட்டரைத்து
தூவலா யிஞ்சியுடன் தேங்காயுந் தான்கலந்து
ஆவலாய்ச் சுட்டதை சட்னியோ டுண்ணவே
தேவமிழ் தன்ன அடை (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)
அரிசி, உளுந்து, பருப்பு இம்மூன்றையும் சேர்த்தரைத்த மாவோடு நல்லமிளகு, மிளகாய், சீரகம் என்ற மூன்று சரக்குகளையும் சேர்த்து இட்டு அரைத்து தேங்காய், இஞ்சி இரண்டையும் துருவித்தூவிக் கலந்து ஆவலுடன் சுட்டதை சட்னியுடன் உண்டால் தேவாமிர்தமாக அடை ருசிக்கும்.

3)அடைமழை மாசுகம் சூடாய்ப் பருப்பு
வடையுடன் டீயும் பெறின்.
புசித்தும் அடக்கவொண்ணா ஊறுநீர் நாவே
ருசிப்பாய் தினமும் வடை

வடையுடன் சட்னியை வாயிட சொர்க்கம்
தடையின்றி மண்ணில் வரும். (ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்)

4) ஊறிய நற்பயிறு முப்பொடு தேங்காயும்
தேறிய தக்காளி தக்க மசாலுடன்
சீறிய தண்ணீரில் வெந்த உசலுக்கு
மாறிய பன்னே ருசி (ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)


LinkWithin

Related Posts with Thumbnails