நம்ம தென்றல் தொடர்பதிவுக்கு கூப்பிட்டு கொஞ்ச நாள் ஆயிடுச்சு. இனியும் தள்ளிப்போட்டேன்னா.. புயலாயிடுவாங்க. ஆகவே..
ஆட்டம் ஆரம்பம்.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
அமைதிச்சாரல்.
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
கிட்டத்தட்ட மாதிரிதான். தமிழ்ப்படுத்தியிருக்கேன்.. பேரு யோசிக்கும்போது காசை சுண்டிவிட்டேன். பூ விழுந்தா பூப்பாதை(சொந்தப்பேரு),தலை விழுந்தா சிங்கப்பாதை(புனைப்பேரு). அது என்னடான்னா ஓடிப்போயி சிஸ்டம் இருக்கிற டேபிளுக்கு கீழே போயி தூங்கிடுச்சு. என்னடா செய்யறதுன்னு யோசிச்சேன்.எனக்கு மழை பிடிக்கும்.. அதுவும் அடிச்சிப்பெய்யுற மழையை விட மெல்லிய சாரல் ரொம்பப்பிடிக்கும். அதனால அந்தப்பேரு.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
பொழுதுபோகாத ஒரு நாள்லதான் கூகிள்ல தமிழ்வார்த்தைகள் வர்றதை கண்டுபிடிச்சேன்.. அது என்னடான்னா துளசிதளத்துக்கு கொண்டுபோய் விட்டது. 'வாங்களேன்.. கேக் சாப்புடலாம்'ன்னு கூப்பிட்டு துளசியக்கா விருந்து வெச்சாங்க. அப்புறம் அங்கியே செட்டிலாயிட்டேன்.. மறுபடி கண்டுபிடிக்கத்தெரியாம ரெண்டுமூணு நாள் முழிச்சது தனிக்கதை. கடைசியில் கூகிள் அண்ணாச்சி கண்டுபிடிச்சுக்கொடுத்தார். மொதல்ல தமிழ்மணம் இருக்கிறது தெரியாது.. இடுகைகளுக்கு பின்னூட்டம் வரும்ன்னும் தெரியாது.. ஏன்னா.. நான் எப்பவும் ஹோம்பேஜ்ல போயில்ல நிப்பேன்.. கடைசியா பொடி எழுத்துக்கள்ல .. comments ன்னு எழுதப்பட்டிருப்பதை கண்டுபிடிச்சேன். அவங்களோட தமிழக சுற்றுலாப்பதிவுகளை படிக்கும்போதுதான், பின்னூட்டம் போட ஆரம்பிச்சேன்.அப்ப 'ஐம்கூல்' என்ற பேர்ல பின்னூட்டம் போடுவேன். கொஞ்சம் கொஞ்சமா தமிழ்மணம் பக்கமும் வர ஆரம்பிச்சேன். ரொம்ப நாளுக்கப்புறம் சொந்தவூடு கட்டலாம்ன்னு முடிவெடுக்கும்போதுதான் கெட்டப்பை கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு இந்தப்பேரு. இன்னும் கொஞ்சம் இங்கே சொல்லியிருக்கேன்.அக்காவுக்கு லாரி அனுப்ப யோசிக்கிறவங்க அது நெறைய ரோஜாப்பூவை அனுப்பிவையுங்க, முட்களை எம்பக்கம் அனுப்பிவிடுங்க :-)))
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
மொதல்ல நான் பிரபலம் இல்லைன்னு உங்ககிட்ட சொல்லிக்கிறேன்.. இதுலேர்ந்தே தெரியும்.. நான் ஒண்ணும் செய்யலைன்னு.. பதிவை ஆரம்பிச்சு குடிபோகும்போது நாலஞ்சு பெரியவங்களுக்கு அழைப்பு வெச்சதை இதுல சேர்த்துக்கக்கூடாது :-))).
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நம்ம வலைப்பக்கத்துக்கு வந்தவங்களுக்கு தெரியும். அங்க ஓரளவு, சொந்தக்கத, சோகக்கதையெல்லாம் இருக்கும்ன்னு.. என்னுடைய அனுபவங்களில் எனக்கு படிப்பினை கிடைச்சிருந்தா அதப்பத்தி எழுதலாம்தானே.. மத்தவங்களாவது உஷாரா இருந்துப்பாங்கல்ல. ஏதாவது சுவாரஸ்யமா இருந்தா அதை நண்பர்களோட பகிர்ந்துக்கப்பிடிக்கும். அதனால எழுதுறதுண்டு..பதிவின் தலைப்பிலேயே சொல்லிட்டேனே "நினைத்ததெல்லாம் கிறுக்குவேன்" அப்படீன்னு. விளைவுகள்??? அப்படீன்னா என்னங்க :-))))
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நிறைய சம்பாதிச்சிருக்கேன்..அதவெச்சு,மும்பையின் கொலாபாபகுதியில் வில்லா வாங்கிப்போடணும்ன்னு திட்டம்.எவ்வளவுன்னு சொன்னா ஐ.டி.லேர்ந்து ஆட்கள் வந்துடுவாங்க.:-))))). இப்படீல்லாம் சொல்லுவேன்னு நினைச்சீங்களா... நான் சம்பாரிச்சது ஓரளவு தன்னம்பிக்கையை.. நிறைய நட்புகளை, கொஞ்சூண்டு எழுத்தை.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒண்ணு உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச 'அமைதிச்சாரல்'.
தனியா தொகுக்க வசதியா 'கவிதை நேரமிது'
பேரண்ட்ஸ் கிளப்பிலும் இருக்கேன்.
எனக்கு கொஞ்சம் பாட்டுக்கிறுக்கு உண்டு. அதுக்காக ஆரம்பிச்சது குயில்களின் கீதங்கள். கொஞ்சம் டெக்னிக்கல்கோளாறுகளால் அப்டேட் செய்யாம இருக்கு.. (தமிழ்மணத்தில் இணைக்க முடியலை)
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபமும் பொறாமையும் ஒரு நாளும் இருந்ததில்லை.. பிரமிப்பு மட்டுமே உண்டு.. அந்த லிஸ்டில் நிறைய பேர் இருக்காங்க.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதல்பின்னூட்டம் போட்ட சகோ எல்.கே,ராமலஷ்மி மேடம், துளசியக்கா, வல்லிம்மா,முத்தக்கா, அப்புறம் இப்ப பின்னூட்டத்துல பாராட்டுற நீங்க வரைக்கும் பெரிய லிஸ்டே இருக்குதே.. எதைன்னு சொல்ல!!! என் உடன்பிறப்பு ஒருத்தர், 'அமைதிச்சாரல்ன்னு பேரு வெச்சிக்கிட்டு அட்டூழியம் செஞ்சுக்கிட்டிருக்கே.. நல்லா எழுதறேக்கா' ன்னு தொலைபேசினார். இன்னிவரைக்கும் அது பாராட்டா.. உள்குத்தான்னு தெரியலை? :-)))))))))
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
நானே என்னைப்பத்தி என்ன சொல்றது..என் எழுத்துக்கள் சொல்லட்டுமே..(அப்படி ஒண்ணு நான் போடுற மொக்கையில் இருக்கா என்ன???)
:-))))))
இதை தொடர நான் அழைப்பது,
என்றும் அன்புடன்..
அமைதிச்சாரல்,
அமைதிச்சாரல்,
அமைதிச்சாரல்,
அமைதிச்சாரல்.