tag:blogger.com,1999:blog-20660773927527072302024-03-18T09:47:02.182+05:30அமைதிச்சாரல்இதமாய்த் தண்மையாய்ப் பொழிந்தபடி..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger494125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-20547723452903241602024-03-13T11:48:00.002+05:302024-03-13T11:48:14.439+05:30"நல்லாச்சி" அணிந்துரை - கீதா சுதர்சனம்<div style="text-align: justify;">நல்லாச்சி நூலுக்கு எழுத்தாளரும், வெண்பா கற்றுத்தந்த குருவும், தோழியுமான கீதா சுதர்சனம் அளித்த அணிந்துரை. மிக்க நன்றி கீதா.</div><div style="text-align: justify;">**************************************************</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwM-7cyu1KKIoWhPRHjnVEIZ_ZAKLeWeUSIDTCkOxPwiKK-NsFvAeEVSd5EthOiUik6YOrePDSHdKR7Z6OfKlWOfzR5h3agXfpSI14KG4f6EHoVuwnxqATV6t17ACQKxN-Ag9SgjKG8kuTuba4jUr0_4TWt6DR-1tQh5HhzIKGYMW4T7a1h6IrxWgYmlc/s2048/Nallachi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1310" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwM-7cyu1KKIoWhPRHjnVEIZ_ZAKLeWeUSIDTCkOxPwiKK-NsFvAeEVSd5EthOiUik6YOrePDSHdKR7Z6OfKlWOfzR5h3agXfpSI14KG4f6EHoVuwnxqATV6t17ACQKxN-Ag9SgjKG8kuTuba4jUr0_4TWt6DR-1tQh5HhzIKGYMW4T7a1h6IrxWgYmlc/s320/Nallachi.jpg" width="205" /></a></div><div style="text-align: justify;"><br /></div><div><div style="text-align: justify;">குழந்தைகளுக்குத் தம் தாத்தா, பாட்டிகளுடன் இருக்கும் பிணைப்பு அலாதியானது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கூட்டுக் குடும்பமாக இருக்கும்போதும், தனிக் குடும்பமாக இருந்தால் அவ்வப்போது பார்க்கும்போதும், வெளியூரிலோ, வெளி நாட்டிலோ இருந்தால் விடுமுறை நாட்களில் சந்திக்கும் போதும் என்று, தாத்தா, பாட்டிகளுடனான நம் சிறு வயதுத் தொடர்புகள், நாம் வளர்ந்த பின்னும் நினைவில் நின்று நெகிழ/மகிழ வைப்பவை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கருவறையிலிருந்து வெளிவந்த கணம் முதல் சிறிது சிறிதாக விரிவடைகிறது குழந்தைகள் உலகம். அவ்வப்போது எழும் ஆர்வம் கலந்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள அவர்களிடமிருந்து கேள்விக் கணைகள் பிறந்த வண்ணம் இருக்கும். அவர்களே தேடி விடை காணும் வயது வரும் வரையில் தாய், தந்தையார் இல்லா நேரத்தில் அல்லது அவர்களுடன் இணைந்து தாத்தா, பாட்டிகள் வகிக்கும் பங்கு முக்கியமானது நம் நாட்டின் குடும்பக் கட்டமைப்பில்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வயல்வெளி, தோட்டம், துரவு, ஆடு, மாடு என்று ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆச்சியைக் காணப் பட்டணத்திலிருந்து வருகிறாள் பேத்தி. அவர்கள் இருவருக்குமிடையேயான பாசப் பிணைப்பை , அவர்கள் உரையாடல்கள் மூலம் வெளிப்படுத்துபவையே சாந்தி மாரியப்பனின் "நல்லாச்சி" கவிதைகள்!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இக்கவிதைகளில் சிலவற்றை முகநூலில் அவ்வப்போது கண்ணில் படும்போது படித்து இரசித்திருக்கிறேன் என்றாலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை இப்போது ஒரே மூச்சில் படித்து முடித்தது இனிய அனுபவம். படித்ததும் ஒரு குறும்படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. கிராமப் பின்னணியில் நல்லாச்சியும், பேத்தியும் உயிர்ப்புடன் கண்முன் வந்து நின்றனர். பேத்தியின் அறியாப் பருவக் கேள்விகளும், நல்லாச்சியின் சமயோஜிதமும், வெகுளித் தனமும் வெளிப்படும் பதில்களும் சில சமயம் புன்னகையையும் சில சமயம் நெகிழ்வையும் விளைவிக்கக் கூடியவை. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பல் கொட்டும் வயதான நல்லாவுடன் அவள் தாயும் இருக்கிறாள். தனக்கு முன், தன், பின்னிரு என்று நான்கு தலைமுறைகளை அரவணைத்துச் செல்லும் அன்பு ஆச்சியே நல்லாச்சி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கையை, நல்லாச்சி பேத்திக்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றுக்கு ஒப்பான நகர வாழ்க்கை அம்சங்கள் குறித்துப் பேத்தி பாட்டிக்குப் பாடம் எடுப்பதும், நெருங்கிய தோழிகள் போல அவ்வப்போது பிணங்கி இணைவதுமாக நேரம் நகர்கிறது இருவருக்கும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இட்லி, தோசை, தொப்பி என ஆச்சி மருதாணி வைக்க, நூடுல்ஸ் மெஹந்தியை பேத்தி ஆச்சிக்கு அறிமுகப்படுத்துகிறாள்!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">புள்ளிக் கோலம் போட ஆச்சி கற்பிக்க, பேத்தி அவளுக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தருகிறாள்!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பேத்தி பம்ப் செட்ட்டில் கொட்டும் நீரை சிறு அருவி என்றால் ஆச்சி அருவியை பெரிய பம்ப் செட் என்கிறாள்!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நகரம் சார்ந்த கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றும் பேத்தி, கோவில் யானை எப்படி முகக் கவசம் அணியும் என்று கவலைப் படுகிறாள். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆச்சி கிராமத்து அன்றாட நிகழ்வுகளை வைத்து நேரம் கணித்தால், பேத்தி குறும்பாக ஆச்சியின் அன்றாடச் செயல்களை வைத்து நேரம் கணிக்கிறாள்!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பேத்தி உறங்குவதற்காக ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்து, அதை விஞ்சும் வகையில் பேத்தி அளந்து விடும் கதைகளில் ஆச்சி முதலில் உறங்கி விடுகிறாள்! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மரம், செடி, கொடிகள், காய், கனிகள், பறவைகள், விலங்குகள் அனைத்தும் இவர்களுடைய நாடகத்தில் பங்கேற்கின்றன. தாத்தாவும் அவ்வப்போது மாட்டிக்கொண்டு விழிக்கிறார். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எம்பிக் குதித்தும் கைக்கெட்டா உயரத்தில் இருக்கும் செம்பருத்திப் பூவோடு பேத்தி காய் விட,</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">"ஒரு தேன்சிட்டோ</div><div style="text-align: justify;">மெல்லிய தென்றலோ</div><div style="text-align: justify;">கடந்து சென்ற நல்லாச்சியோ</div><div style="text-align: justify;">யாரோ ஒருவர்</div><div style="text-align: justify;">ஏதோவொன்று</div><div style="text-align: justify;">பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை</div><div style="text-align: justify;">பழம் பழம் பழம்"</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்த வரிகளில்தான் எத்துணை நயம்! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவ்வாறு பல அழகான நிகழ்வுகளை நெல்லை, குமரி வட்டார வழக்குச் சொற்களோடு பிணைத்து, பாட்டியாகவும், பேத்தியாகவும் மாறி மாறி சாந்தியின் கற்பனைக் குதிரை தாவியோடுகிறது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் வாசகர்கள் உய்த்துணரக் கொஞ்சம் விட்டுவைக்க வேண்டுமே என்று நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இறுதியில் சுட்ட கொழுக்கட்டை சாப்பிடுவாளா இல்லை சுடாத கொழுக்கட்டையா என்கிற வினாவுடன்</div><div style="text-align: justify;">"அவ்வைக் கிழவி நம்கிழவி</div><div style="text-align: justify;">அருமை மிகுந்த பழங்கிழவி "</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்ற பாட்டோடு</div><div style="text-align: justify;">அவ்வைப் பாட்டியும் இவர்கள் பேச்சில் புகுந்து புறப்படுகிறாள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதே சந்தத்தில் நம் நல்லாச்சிக்கும் ஒரு கவிதை சமர்ப்பித்து, சாந்தியின் முயற்சிக்கு என் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். </div><div style="text-align: justify;">***</div><div style="text-align: justify;">நல்லா என்றோர் நல்லாச்சி</div><div style="text-align: justify;">...நயமாம் அவளின் சொல்லாட்சி</div><div style="text-align: justify;">தள்ளா வயதில் தானிருந்தும்</div><div style="text-align: justify;">...தன்தாய் காக்கும் சேயாச்சி </div><div style="text-align: justify;">பொல்லாச் சனத்தின் கண்ணேறு</div><div style="text-align: justify;">..போக்கிப் பேத்தி காத்திடுவாள்</div><div style="text-align: justify;">நில்லாக் கணைகள் அவள்விடுக்க</div><div style="text-align: justify;">...நிறைவாய் விளக்கம் அளித்திடுவாள்; </div><div style="text-align: justify;">நல்லா ஆச்சி நலமுடனே</div><div style="text-align: justify;">...நீடு வாழ வாழ்த்துவமே! </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நல்லாச்சியும், பேத்தியும் தொடர்ந்து இன்னும் பேசத்தான் போகிறார்கள். அதனால் சாந்தியின் கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பாகமும் நிச்சயம் வெளிவரும் என்னும் நம்பிக்கையுடன்,</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கீதா சுதர்சனம்.</div></div><div style="text-align: justify;"><br /></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53342968218715102122024-02-27T10:30:00.001+05:302024-02-27T10:30:00.132+05:30"நல்லாச்சி" வாசிப்பனுபவம் - கல்பனா ரத்தன்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsHzywyIOQZpNzYoSQg4vfU5jASjJyGbXGbhOeoWyxstoTz_vcl276BP5dr_whk5BFx-Wn6pbFmUwdrDv2wTunBjwy1AezQ2GM1THYHCbXnya3cdyTTPI6ZPFJzQu4aQA7F5Vhb6FXOqi2toS0-WVeVFSBhY7K-uAf9zNR2RqjaALnRyc2a9zgb2Sec18/s2048/Nallachi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1310" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsHzywyIOQZpNzYoSQg4vfU5jASjJyGbXGbhOeoWyxstoTz_vcl276BP5dr_whk5BFx-Wn6pbFmUwdrDv2wTunBjwy1AezQ2GM1THYHCbXnya3cdyTTPI6ZPFJzQu4aQA7F5Vhb6FXOqi2toS0-WVeVFSBhY7K-uAf9zNR2RqjaALnRyc2a9zgb2Sec18/s320/Nallachi.jpg" width="205" /></a></div>"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பைப்பற்றி அன்புத்தோழி கல்பனா ரத்தனின் வாசிப்பனுபவம். நன்றி கல்பனா.<div>********************************************************<br /><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சாந்தி மாரியப்பன் மும்பையில் வசிக்கிறார். நாகர் கோவில் பூர்வீகம். சாரல் என்ற பெயரில் புகைப்படங்கள், சாரல் துளிகள் என கவிதைகள் அருமையாக பகிர்ந்திருக்கிறார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நல்லாச்சி இவருடைய கவிதைத் தொகுப்பு .</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பாட்டிக்கும் பேத்திக்குமான பாசப்பிணைப்பை, அன்பின் ஆழத்தை இந்தத் தொகுப்பில் காண்பது சிறப்பான ஒன்று.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அடுத்தது திருநவேலி, நாரோயில் பகுதிகளின் தமிழ். அங்குள்ள மண்வாசம் வீசும் பேச்சுத் தமிழ் உயிரோட்டமாக உள்ளது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பாட்டிக்கும் பேத்திக்கும் நடுவிலுள்ள தலைமுறை இடைவெளிகளை இருவரின் வேறுபட்ட மண் சார்ந்த, மனம் சார்ந்த மற்றும் இருவேறு கலாச்சாரங்களை அழகாக இணைத்துப் பின்னப்பட்ட கவிதைகள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தொகுப்பில் என்னைக் கவர்ந்தவை :</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">"நாலாம் பிறை கண்டால்</div><div style="text-align: justify;">நாய் படாத பாடு பட வேண்டியிருக்கும் "</div><div style="text-align: justify;">பேத்தியைக் கடிந்து கொண்டாள் நல்லாச்சி</div><div style="text-align: justify;">ஜன்னல் வழியே நிலா பார்த்த பொழுதில்.</div><div style="text-align: justify;">செய்வதறியாது கலக்கத்துடன் விழித்தது</div><div style="text-align: justify;">தடாகத்தில்</div><div style="text-align: justify;">தன் முகம் ரசித்துக்கொண்டிருந்த நிலா.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அழகிய கற்பனை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நல்லாச்சிக்கு அருவி பெரிய பம்ப்செட்டாகத் தெரிகிறது. ஆச்சிக்கு அருவி அதிசயமென்றால் பேத்திக்கு பம்ப்செட் அதிசயம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">**</div><div style="text-align: justify;">" இதென்ன? அதென்ன?</div><div style="text-align: justify;">வீதிகளை அளந்தபடி</div><div style="text-align: justify;">பேத்தி வீசும் கேள்விகளுக்கெல்லாம்</div><div style="text-align: justify;">பதிலளித்த நல்லாச்சி</div><div style="text-align: justify;">" இது யார்? என்ற கேள்விக்கு</div><div style="text-align: justify;">எப்படிப்பதிலளிப்பாள்</div><div style="text-align: justify;">தாத்தா கொணர்ந்த</div><div style="text-align: justify;">' இன்னொரு ' ஆச்சியென்று".</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கிராமங்களில் இயல்பாக அப்போது நடப்பதும், கிராமத்துப் பெண்மணிகள் தங்கள் வலிகளை மறைத்து வாழ்வதையும் ரொம்ப இயல்பாகக் கூறியிருக்கிறார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அரிசி மாக்கோலம் போட்டு எறும்புகளுக்கு உணவாகும் என்றவளிடம் கோலத்தில் நீர் தெளித்து எறும்புகள் விக்கலெடுத்தால் என்ன செய்யும் என்கிறாள் பேத்தி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தலைமுறை மாற்றங்கள் சிந்தனைகளிலும் வளர்ந்திருப்பது சிறப்பான ஒன்று.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எட்டாத உயரத்தில் உள்ள செம்பருத்தியிடம் காய் விடுகிறாள் பேத்தி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒரு தேன்சிட்டோ</div><div style="text-align: justify;">மெல்லிய தென்றலோ</div><div style="text-align: justify;">கடந்து சென்ற நல்லாச்சியோ</div><div style="text-align: justify;">யாரோ ஒருவர்</div><div style="text-align: justify;">ஏதோவொன்று</div><div style="text-align: justify;">பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை</div><div style="text-align: justify;">பழம் பழம் பழம்....</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அரிசி மரம் பார்க்கக் கிளம்பிய பேத்திக்கு அது நெற்பயிர் என விளக்கினாள் ஆச்சி.</div><div style="text-align: justify;">பேத்தியின் அடுத்த கேள்வி</div><div style="text-align: justify;">இதில் பச்சரிசிப் பயிர் எது?</div><div style="text-align: justify;">புழுங்கலரிசிப் பயிர் எது?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பேத்திக்கு ஒரு குழப்பம். வடாம் போட்ட நாளில் ஓடி வரும் காகங்களை விரட்டுறீங்கள். தலைவாழை விருந்து வைத்த நாளொன்றில் அதை முன்னோரென மதித்து வா என்கிறீர்கள்?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நியாயமான குழப்பம் தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பாட்டி பேத்திக்கு நிறைய அறிமுகப் படுத்துகிறாள். இயற்கையை, பம்ப்செட், பறவைகள், பூக்களை. மருதாணி, செவலைப்பசு, கொடுக்காப்புளி, சொக்கப்பனை, பொற்கொன்றை மரம், அவ்வைக் கொழுக்கட்டை, ஏழாங்கல், பல்லாங்குழி என ரசித்து மகிழ நிறைய இருக்கின்றன பேத்திக்கு</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பேத்தியிடமிருந்து ஆச்சியும் மெஹந்தி, ஈ பாஸ், மாஸ்க், டூத் ஃபேரி என நிறையக் கற்றுக் கொள்கிறாள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">80 கள் மற்றும் அதற்கு முன் பிறந்தவர்களின் பால்யங்கள் எவ்வளவு பசுமையாக இருந்திருக்கின்றன.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கிராமங்கள், வயல்வெளிகள், ஆடு, மாடு, கோழி, கிணறு, வாய்க்கால், சூரியகாந்தி,என இக்கால ஈராயிரக் குழந்தைகள் அறிந்திருக்காத விஷயங்கள், இழந்த சந்தோஷங்கள் எத்தனை?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பாட்டி பேத்தி என்பது வெறும் உறவு மட்டுமல்ல.. கடந்த தலைமுறையின் அடையாளங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அன்புப் பிணைப்பு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">படிக்கப் படிக்க பால்ய காலத்திற்குச் சென்று வந்த உணர்வு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வாழ்த்துகள் சாந்தி.</div></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-68549085062870555492024-02-21T10:30:00.001+05:302024-02-21T10:30:00.145+05:30"நல்லாச்சி" வாசிப்பனுபவம் - ராஜா ஹஸன்.<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLIgCfthWw2raY-8jWvkJZVTev5uIsuUYC0tyUVrVKEbCCM-QGNFhcF0xK_e338i49KcirGQCRFR7HCA-Ze3OEMS8b9WW8drb_A2jBwFaRJFS9c-shcACgTJxkxAo1dBUuNJkeaAX5o0jfcil15Q6yrU6xxqx3eIJ8mGjG1dysu3H_pdeFqVSXwOgE5U0/s2048/Nallachi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="color: black; font-size: medium;"><img border="0" data-original-height="2048" data-original-width="1310" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLIgCfthWw2raY-8jWvkJZVTev5uIsuUYC0tyUVrVKEbCCM-QGNFhcF0xK_e338i49KcirGQCRFR7HCA-Ze3OEMS8b9WW8drb_A2jBwFaRJFS9c-shcACgTJxkxAo1dBUuNJkeaAX5o0jfcil15Q6yrU6xxqx3eIJ8mGjG1dysu3H_pdeFqVSXwOgE5U0/s320/Nallachi.jpg" width="205" /></span></a></div><span style="font-size: medium;">"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பைப்பற்றிய சகோ.ராஜா ஹஸனின் வாசிப்பனுபவம். நன்றி சகோ.</span><div><span style="font-size: medium;">****************************************************************</span></div><div><span style="font-size: medium;"><br /></span><div style="text-align: justify;"><span style="font-size: medium;">தற்போது மும்பையில் வசித்து வரும் சாந்தி மாரியப்பன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் .இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. 'அமைதிச்சாரல்' என்ற வலைப்பூவில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி வருகிறார்.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">சாந்தி மாரியப்பன் எழுதிய இந்த 'நல்லாச்சி' கவிதைத் தொகுப்பை புரட்டியதில் கவிதைகள் கடினமான மொழியில் இல்லாமல் இலகுவாக வட்டார வழக்கில் இருந்தமை காரணமாக ஈர்ப்புடன் வாசிக்க ஆரம்பித்தேன்.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">பேத்தியுடன் நல்லாச்சி பாட்டியின் அனுபவங்களே கவிதை மொழியாக உருப்பெற்றிருக்கின்றன.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">பேத்தியை உறங்கச் செய்வதற்காக ஆச்சி கதை சொன்னால் பேத்தி அவிழ்த்து விடும் கதைகளில் ஆச்சியே உறங்கி விடுகிறார்.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">கூட்டுக் குடும்பத்தில் பெரியோர்களுடன் சிறியவர்கள் நடத்தும் சின்ன சின்ன உரையாடல்களை கவிதை நயத்தில் மிகவும் அழகுச் சரமாக தொகுத்திருப்பது சிறப்பு.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">பேத்திக்கும் பாட்டிக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பை இந்த கவிதை மூலம் நம்மை அறியச் செய்கிறார் நூலாசிரியர்.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">"மெஹந்தி இடத் தெரியாத நல்லாச்சியை</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">உள்ளங்கையில் சிவந்திருந்த</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">நூடுல்ஸ் வரிகளும் அன்னமும் சற்றே மிரளச் செய்திருந்தன</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">தொப்பி அணிந்த விரல்களும்</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">இட்லி தோசையிட்ட உள்ளங்கைகளுமாய் வாழ்ந்த அந்தக் கிராமத்து மனுஷி</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">சற்று அந்நியப்பட்டே நின்றிருந்தால் அச்சூழலில்"</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">கைகளில் இடப்பட்ட மருதாணியைப் பார்த்து நல்லாச்சி பாட்டி தன் உள்ளக்கிடக்கைகளை மெலிந்த நூடுல்ஸ் போன்ற வடிவங்கள் வியப்புக்குள்ளாக்குகின்றன.. என்ன ஒரு எளிமையான சிந்தனை கோலம்.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">பாட்டியிடம் பேத்தி தனக்கு இட்லி தோசை வரைந்து கூடுதலாய் விரல்களுக்கு தொப்பிகளும் வைக்குமாறு கேட்டுக் கொண்டாளாம்..</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">"மருதாணி பூங்கரங்களில் முத்தமிட்ட ஆச்சியின்</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">அன்பு சிவந்திருந்தது பேத்தியின் கைகளில் மருதாணி வாசத்துடன்." என்ன ஒரு அற்புதமான தருணம் .</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">இவ்வாறாக பேத்திக்கும் பாட்டிக்கும் இடையிலான ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு கவிதைகளின் தொகுப்பு மிகவும் அருமை.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">"கலகலக்கும் நகரத்து தீபாவளியை விட்டு</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">கிராமம் நோக்கி இம்முறை பேத்தி பயணப்பட்டதற்கு அதிரசத்தையும் கைமுறுக்கையும் தவிர நல்லாச்சி வீட்டில் பொறிந்திருந்த கோழிக்குஞ்சுகளும் தோட்டத்து மரத்தில் குடிவந்திருக்கும் கிளிகளும் காரணமென்பதை "</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">பாட்டியும் பேத்தியும் மட்டுமே அறிவர்.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு... என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சின்ன சின்ன சம்பவங்களில் பெரியவரான பாட்டியும் சிறிய பேத்தியும் உவகை கொள்வதைக், அருகில் இருந்தே நாம் கண்டு களிக்கும் வண்ணம் நூலாசிரியர் சூழல்களை நயத்துடனும் எளிய கவித்துவத்துடனும் படைத்திருக்கிறார். ❤️</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">கோவிட் நோய் தொற்று காலத்தில் ஈ- பாஸுடன் ஊர் வந்த பேத்தி, சமூக விலகல் அவசியம் என மாடுகளை விலகிக் கட்டச் சொன்ன பேத்தியின் கட்டளையை சிறப்பாக நிறைவேற்றிய பாட்டி ...அவள் கேட்ட ஒரு கேள்வியால் தடுமாறுகிறார்..</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">" கோவில் யானையை முகக் கவசம் அணியச் சொன்னால் என்ன செய்யும் எப்படி அணியும்?"</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">"வாசலுக்கு மங்கலமூட்டுவதோடு பிற உயிரினங்களுக்கும் உணவாகும்"</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">ஏனென்று கேட்ட பேத்திக்கு விளக்கியபடி அரிசி மாக்கோலமிடுகிறாள் நல்லாட்சி பேத்தியின் சிறு கை அள்ளிய நீரெல்லாம் கோலத்தின் வழி இழியக் கண்டு பதறிய ஆச்சியை அமர்த்தி நவில்கிறாள் பேத்தி.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">" எறும்புக்கு விக்கல் எடுப்பின் என் செயும்? ஆகவே நீரும் வைத்தேன்" ஞே..யென மயங்கிச் சாயும் ஆச்சியின் முகத்தில் ஆரேனும் நீர் தெளிப்பீராக..</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">இவை போல நல்லாச்சிக்கு அருவி விருப்பமென்றால் பேத்திக்கு பம்ப் செட் அதிசயம்.. பேத்திக்கு புலி பெரிய பூனையென்றால் நல்லாச்சிக்கு பூனை சிறிய புலி.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">பாட்டி பேத்திக்கு இடையிலான அனுபவங்களையே கருப்பொருளாக்கி அவற்றை மிகவும் எளிய மொழியில் வாசித்தவுடன் உணர்ந்து அனுபவிக்கச் செய்யும் நூலாசிரியரின் இந்த நல்லாச்சி கவிதைத் தொகுப்பு.. சிறப்பு.</span></div></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><span style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start;">'நல்லாச்சி' -கவிதைத் தொகுப்பு ஆசிரியர் -சாந்தி மாரியப்பன்</span><br style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start;" /><span style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start;">விலை- ரூபாய் 70</span><br style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start;" /><span style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start;">பக்கங்கள் -70</span><br style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start;" /><span style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start;">வெளியீடு -கோதை பதிப்பகம்</span><br style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start;" /><span style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; text-align: start;">முதல் பதிப்பு பிப்ரவரி 2024</span></span><br style="background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; text-align: start;" /></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-58693661653071986252024-02-19T12:46:00.003+05:302024-02-19T12:47:00.136+05:30"நல்லாச்சி" கவிதைத்தொகுப்பு வெளியீடு.<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixulsvjqlv9Mw8sAarDRQtZBOLKO0y1bztGdbIP-wY1GbsCrMSXZ6kWhHPz8hDivyYeKIqKciNmZG4z1jMern_ZKHeFrlOdTQR17RsjJVUzbcVFJVgUee3Y3J657GfsM9bE4vmOICPQorV0A-ZAc7Xrz9drf1Akt43zOtPCOXZgw14PKw71cxbsfOWrHc/s1600/Nallachi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1215" data-original-width="1600" height="243" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixulsvjqlv9Mw8sAarDRQtZBOLKO0y1bztGdbIP-wY1GbsCrMSXZ6kWhHPz8hDivyYeKIqKciNmZG4z1jMern_ZKHeFrlOdTQR17RsjJVUzbcVFJVgUee3Y3J657GfsM9bE4vmOICPQorV0A-ZAc7Xrz9drf1Akt43zOtPCOXZgw14PKw71cxbsfOWrHc/s320/Nallachi.jpg" width="320" /></a></div><div><br /></div><div style="text-align: justify;">"நல்லாச்சி" கவிதைகளை எழுத ஆரம்பிக்கும்போது ஆச்சி இப்படி அழுத்தமாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்வாள் என அறியவில்லை. சொல்ல நினைப்பவற்றை போகிற போக்கில் பேத்தியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வேடிக்கையும் விளையாட்டுமாகச் சொன்னபடி, அனைத்தும் அறிந்த அனுபவஸ்தியானாலும் பேத்தியின் முன் எதுவுமே தெரியாதவளாய் திருதிருவென விழித்துக்கொண்டு அவள் வந்தபோதே தெரிந்து விட்டது நல்லாச்சி தனிக்காட்டு ராணியாகத்தான் வலம் வரப் போகிறாளென. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சில வருடங்களுக்கு முன் துளித்துளியாக எழுத ஆரம்பித்தாலும் ஒருகட்டத்தில் சற்றேறக்குறைய தினமுமே அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சுடுபாதையில் குளிர்தருவாக அவளே ஆறுதலளித்தாள். முன்னட்டையை அலங்கரிக்கும் என் அம்மாவின் அம்மா "பொன்னம்மாச்சி" எனக்கு உந்துதலாக இருந்தாலும் என்னைச்சுற்றியிருந்த பல்வேறு நிஜமும் கற்பனையுமான ஆச்சிகளும் இந்நூலில் நடமாடுகிறார்கள். </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_s1MTEYQzkJfgwXk68eovyZPT3zY4awzjYgk5B3vvNRYgSYfOk0zjik5WZVUgWTgkuMXfWfyOfT9jUkldV6BX5KX3eyFM0Ntc5-GNetH9fng1l9CMjMDbmTEpIYX5F53BriqWX64mELkohQDDxNtXrDSdUoIcH64eKVprD1lRa0X9LBXTaj318OVF2bw/s5120/Nallachi%20Book%20releases.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2880" data-original-width="5120" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_s1MTEYQzkJfgwXk68eovyZPT3zY4awzjYgk5B3vvNRYgSYfOk0zjik5WZVUgWTgkuMXfWfyOfT9jUkldV6BX5KX3eyFM0Ntc5-GNetH9fng1l9CMjMDbmTEpIYX5F53BriqWX64mELkohQDDxNtXrDSdUoIcH64eKVprD1lRa0X9LBXTaj318OVF2bw/w400-h225/Nallachi%20Book%20releases.jpg" width="400" /></a></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எனக்கு இந்த வருட பொங்கல் பரிசாக அமைந்திருக்கும் "நல்லாச்சி" கோதை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. மிக்க நன்றி தேனாச்சி. பபாசியின் துணைத்தலைவர் திரு. புருஷோத்தமன் கைகளில் "நல்லாச்சி"யைக் கண்ட தருணம் மகிழ்வானது, மறக்க முடியாதது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எனது முதல் கவிதைத்தொகுப்பான "சிறகு விரிந்தது" வெளியான சமயம் என்னால் போக இயலாத சூழல், ஆகவே இந்தத்தடவை எப்படியும் சென்னை புத்தகத்திருவிழாவுக்குச் செல்ல வேண்டுமென்று கிளம்பி விட்டேன். ஜனவரி 16ம் தேதி மாலை எழுத்தாளர் கலாப்ரியா அண்ணாச்சியின் திருக்கரங்களால் "நல்லாச்சி" எனும் எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பு இனிதே வெளியிடப்பட்டது. தோழிகள் ஜெயந்தி நாராயணன், வல்லபா ஸ்ரீநிவாசன், திரு. ஸ்ரீநிவாசன் மற்றும் நட்புகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">புத்தகத்தை வாங்க கோதை பதிப்பகத்தின் 9080870936 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-58500411795531329512024-02-15T00:05:00.003+05:302024-02-15T00:05:27.400+05:30சங்க காலத்து வெயில் - கலாப்ரியா<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikJIVwBv8hUIZxE37fMj_CprniZdOL7YjD1eZBoK33OJNAeH-A6WpE-twzIAeQQUCJeaLQCPY1MCGF2MLv9TG8ONyisQtcYZktHMaBtECMdVKeR8j_5gUbV7oALrxof-Ih9f-0ZlI5VSKrinrw6EayN6Rrn9vZVYJ3Fj7UbuzQv49M8g-AXJahXLNKIXA/s275/sangakaalaththu-veyil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="275" data-original-width="275" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikJIVwBv8hUIZxE37fMj_CprniZdOL7YjD1eZBoK33OJNAeH-A6WpE-twzIAeQQUCJeaLQCPY1MCGF2MLv9TG8ONyisQtcYZktHMaBtECMdVKeR8j_5gUbV7oALrxof-Ih9f-0ZlI5VSKrinrw6EayN6Rrn9vZVYJ3Fj7UbuzQv49M8g-AXJahXLNKIXA/w320-h320/sangakaalaththu-veyil.jpg" width="320" /></a></div><br /><div style="text-align: justify;">நவீன கதைமுகங்களில் மிக முக்கியமானவர் ‘சோமசுந்தரம்’ என்ற இயற்பெயர் கொண்ட “கலாப்ரியா” அண்ணாச்சி. கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார். நவீன கவிதைகளின் குறிப்பிடத்தக்க படைப்பாளி. அப்போதைய கவிதைகளின் வெகுஜனப்போக்கை முற்றிலும் மாற்றியமைத்ததில், இன்றைய புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவரான இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. "சங்க காலத்து வெயில்" எனும் இந்நூல் உட்பட கவிதைத்தொகுப்புகள், கட்டுரைத்தொகுப்புகள், நாவல்கள், சிறுகதைத்தொகுப்பு என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கலாப்ரியாவின் கவிதைகள் முற்றிலும் சிறப்பானவை, தனித்துவம் கொண்டவை, பெரும்பாலான கவிதைகள் தன்னளவில் வெளிப்படையான காட்சிவடிவமும், அகத்தே உள்ளோட்டமாகக் காத்திரமான குறியீடும் கொண்டவை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“சித்தார்த்தா</div><div style="text-align: justify;">என்றழைத்த</div><div style="text-align: justify;">முதுகுரல் கேட்டுத்</div><div style="text-align: justify;">திரும்பிய புத்தன்</div><div style="text-align: justify;">சிரித்துக்கொள்கிறான்</div><div style="text-align: justify;">சொல்லைத் தாண்ட முடியாது</div><div style="text-align: justify;">ஞானத்தால் என்று”</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“கடலின் மேல்மட்டத்திற்கு</div><div style="text-align: justify;">வரும்போதெல்லாம்</div><div style="text-align: justify;">ஆகாயத்தின் உயரம்</div><div style="text-align: justify;">பார்த்துப் பயந்து</div><div style="text-align: justify;">வேகமாய் ஆழம் புதைகிறது</div><div style="text-align: justify;">மீன்”</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“நின்று பார்ப்பவனுக்குத்தான்</div><div style="text-align: justify;">சித்திரம் வரைந்து காட்டுகிறது</div><div style="text-align: justify;">இயற்கை”</div><div style="text-align: justify;">போன்ற கவிதைகளை உதாரணமாகச்சொல்லலாம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“இலக்கியவாதியின் சட்டி</div><div style="text-align: justify;">கையைச் சுடுவதே இல்லை</div><div style="text-align: justify;">அவன் கைகள்</div><div style="text-align: justify;">விட்டு விடுவதுமில்லை”</div><div style="text-align: justify;">என்ற கவிதையில்தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வென்றவர்களைப்பற்றி மட்டுமே இவ்வுலகம் எப்போதும் பேசும், ஆனால், தோல்வியுற்றவர்களை அது நினைவில் வைத்திருப்பதில்லை, சொல்லப்போனால், அவர்களைச் சித்திரத்திலிருந்தே முற்றிலுமாகத் துடைத்தெறிந்து விடுகிறது. அத்தகைய உலகில், இசை நிற்கிறபோது இசை நாற்காலி விளையாட்டிலிருந்து விலகும் நாற்காலியைக் குறித்து வருத்தம் யாருக்கேனும் உண்டா? என கவிஞர் வினவும்போது அந்த நாற்காலி சற்றே ஆறுதல் கொண்டிருக்கும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கலாப்ரியாவின் கவிதைகளில் காட்சிகளாய்த் திரண்டு விரிகிறது உலகம். தான் கண்டவற்றை, உணர்ந்தவற்றை அப்படிக்கப்படியே அதிகப்படியான வர்ணனைகள், வெற்று அலங்காரச்சொற்கள் ஏதுமின்றி எளிய வாக்கியங்களில் வாசகனுக்குக் கடத்துபவை அவரது கவிதைகள். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எளிய வரிகளுக்குப் பின்னால் ஒவ்வொரு திறப்பாகத் திறந்து கொண்டு புதிய தரிசனம் கிடைக்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“ஊர் திரும்பும்போது</div><div style="text-align: justify;">பார்வையில் பட்டால்</div><div style="text-align: justify;">மகிழ்ச்சியை வழங்கும்</div><div style="text-align: justify;">ஊரைப்பிரிகையில்</div><div style="text-align: justify;">வருத்தம் பகிரும்</div><div style="text-align: justify;">மைல் கற்களால்</div><div style="text-align: justify;">வேறென்ன செய்ய முடியும்</div><div style="text-align: justify;">நின்று கொண்டேயிருப்பதைத்தவிர” மேலோட்டமாக எளிதாகத் தோன்றும் இக்கவிதையின் மைல் கற்கள் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க அச்சித்திரம் மறைந்து, கவிதை சொல்லும் கதையால் மனம் அலைவுறுகிறது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“ரசிக்கப்படும் போதெல்லாம்</div><div style="text-align: justify;">செதுக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதன்</div><div style="text-align: justify;">பேர்தான் கலையோ” எனில் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். மானுட வாழ்க்கைக்குக் கலையும் இன்றியமையாதது.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-18426215124441223052024-02-06T14:25:00.003+05:302024-02-15T00:48:29.875+05:30ராஜவனம் - ராம்தங்கம்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTqU76zss4XRGRNFKUTlhW5i5RUgSCCIrj4oF-B09Sq-PahY_ccWWx9pnCBZtAkniajejnaV-Ezynllh7YVC3TAgG5RYO8P6qQpNY-PfCUsYGEvEUcOjEtNVB-K96mQLCDFBQdn2cfRS_-Sl8QPZBaXpabJHmfPxIoW_Qr1AjWC7qT6K73_BuyNZpXl6g/s2484/20240126_194856.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2484" data-original-width="1584" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTqU76zss4XRGRNFKUTlhW5i5RUgSCCIrj4oF-B09Sq-PahY_ccWWx9pnCBZtAkniajejnaV-Ezynllh7YVC3TAgG5RYO8P6qQpNY-PfCUsYGEvEUcOjEtNVB-K96mQLCDFBQdn2cfRS_-Sl8QPZBaXpabJHmfPxIoW_Qr1AjWC7qT6K73_BuyNZpXl6g/s320/20240126_194856.jpg" width="204" /></a></div><div><br /></div><div style="text-align: justify;">சிங்கப்பூரின் “மாயா இலக்கிய வட்டம்” நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்ற இக்குறுநாவலின் ஆசிரியர் ராம்தங்கம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். பரவலாகக் கவனம் பெற்று வரும் இளம் படைப்பாளி. சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத்தொகுப்புகள், வரலாற்று நூல்கள், பயண நூல்கள் என இவரது படைப்புகளும் பெற்ற விருதுகளும் ஏராளம். "திருக்கார்த்தியல்" என்ற தொகுப்புக்காக இவ்வாண்டின் சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதாளர்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">காடு எத்தனையோ ரகசியங்களைத் தன்னுள் புதைத்து ஒளித்து வைத்திருக்கிறது. புறத்தே அது ஒன்றாகக் காட்சியளித்தாலும் அகத்தே அது இருப்பது வேறொன்றாக. அதை அறிய, காடு நமக்குச் சொல்லவருவது என்னவென்று புரிந்து கொள்ள அதனிடம் சரணாகதி அடைவதன்றி யாதுளது? அப்படியொரு காடுதான் இங்கே ராஜவனமாகப் பரந்து செழிப்புற்றுள்ளது. கேரள மாநிலத்திலும் நெல்லை மற்றும் கன்யாகுமரி மாவட்டத்திலுமாகப் பரவியிருக்கும் மேற்கு மலைத்தொடரின் வனாந்திரத்தைக் கதைக்களமாகக்கொண்டுள்ள இந்நூலில் நுழைந்த சில நிமிடங்களிலேயே காடு நம்மைத் தன்னுடன் இணைத்துக் கரைத்துக்கொள்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொதுவாக வனாந்திரங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் சாகசப்பயணம் செய்வதில் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த நாட்டமுண்டு. குமரி மாவட்டத்தில் உள்ள காளிகேசம் அருவி, கீரிப்பாறை எஸ்டேட், கோதையாறு அருவி போன்ற இடங்களுக்கு இளைஞர்கள் குழுக்களாக தத்தம் வாகனங்களில் பயணம் செய்வதைக் கண்டிருக்கிறேன். கன்யாகுமரி மாவட்டத்தில் பாயும் நந்தியாற்று நதிமூலம் தேடி கோபாலும் அவனது நண்பர்களும் அப்படித்தான் பயணிக்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியின் வர்ணனைகளும், பட்டியலிடப்படும் கானுயிர்களும், தாவரங்களின் பெயர்களும் வியப்பூட்டுகின்றன.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கல்குளம் தாலுகா பகுதியில் பரந்திருக்கும் அக்காட்டை முற்ற முழுக்க அறிந்தவராயிருந்தால் மட்டுமே இத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க முடியும். எழுத்தாளர் ஜெயமோகனின் “காடு” நாவலிலும் அவரது பல சிறுகதைகளிலும் குமரி மாவட்டத்தின் காட்டைப்பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும் அது அளித்த தரிசனம் வேறு, ராம்தங்கத்தின் ராஜவனம் அளிக்கும் தரிசனம் முற்றிலும் வேறு. காடு பெருக, நிலைத்திருக்க யானைதான் முக்கியமான காரணம் என்பர். காட்டின் உண்மையான அரசன் என்றே அதைச் சொல்லலாம். அப்பேர்ப்பட்ட யானையைத் தந்தங்களுக்காக அழிக்கும் கொடூரர்கள் கையாளும் வழிமுறைகள், முக்கியமாகப் “பன்னிவெடி” பதற வைக்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">காட்டின் அபாயங்களைப்பற்றி அறிந்தும், அசட்டுத்துணிச்சலுடன் நதியின் பிறப்பிடத்தை அறியச்சென்ற கோபால் ஒரு கட்டத்தில் மறைந்த தன் தந்தையைப்பற்றி முழுதாக அறிந்து கொள்கிறான். காட்டுக்குள் அடியெடுத்து வைத்ததிலிருந்து அவரது ஆத்மார்த்தமான வழிகாட்டல் அவனுக்கு அமைகிறது. சுற்றுச்சூழல், வனவிலங்குகள், மற்றும் மலையில் வசிக்கும் காணிமக்களின் மேல் பெரும் பரிவு கொண்ட அவரது மறுபக்கம் காணிகளால் அவனுக்குக் காட்டப்படுகிறது. காணிகளுக்கு அப்பெயர் எப்படி வந்தது? அவர்களது வாழ்வியல், சடங்குகள், உணவுகள், சட்டத்துக்குப் புறம்பாக வனத்துள் நடைபெறும் அவச்செயல்கள் என பல தகவல்கள் அறியத்தரப்பட்டுள்ளன.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">குமரி மாவட்டத்தின் தமிழுக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏற்கனவே தமிழும் மலையாளமும் கலந்துதான் அது பேசப்படுகிறது எனினும், ஒவ்வொரு தாலுகாவிலும் ஒவ்வொரு மாதிரியாக என உச்சரிப்பும் வழக்கும் சில கிலோமீட்டர்களுக்குள்ளாகவே ஒவ்வொரு வகையாக மாறுபடும். நாவலின் கதைக்களமாகக் கல்குளம் தாலுகா அமைந்திருப்பதால் அம்மக்கள் பேசும் மலையகத்தமிழையே நாவலின் மக்கள் பேசும் வட்டார வழக்காக அமைத்திருப்பது பெருஞ்சிறப்பு. நாகர்கோவிலில் பள்ளியிலும் கல்லூரியிலும் உடன்பயின்ற தோழிகளின் தமிழை மீண்டுமொரு முறை கேட்டதுபோல் உணர்ந்தேன். கன்யாகுமரி மாவட்டத்தின் காணி மக்களின் மொழியும் சிறப்புற உறுத்தலின்றி அமைந்துள்ளது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சுமார் ஒன்றரை வருட தேடல், வாசிப்பு, பயணங்கள் போன்றவற்றால் இந்நூல் உருவானதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நூலை வாசிக்கும்போது அந்த உழைப்பு தெளிவாகப் புலப்படுகிறது. ராஜவனத்தில் உலாவுபவர் புத்துணர்ச்சியோடு வெளிவருவது உறுதி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வெளியீடு: வம்சி பதிப்பகம்.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71332382757995236962024-02-04T17:01:00.003+05:302024-02-04T17:01:56.757+05:30மரம் விடு தூது - ந. பரந்தாமன்<div><div dir="auto"><div class="x1iorvi4 x1pi30zi x1l90r2v x1swvt13" data-ad-comet-preview="message" data-ad-preview="message" id=":r404:" style="padding: 4px 16px 16px;"><div class="x78zum5 xdt5ytf xz62fqu x16ldp7u" style="display: flex; flex-direction: column; margin-bottom: -5px; margin-top: -5px;"><div class="xu06os2 x1ok221b" style="margin-bottom: 5px; margin-top: 5px;"><span class="x193iq5w xeuugli x13faqbe x1vvkbs x1xmvt09 x1lliihq x1s928wv xhkezso x1gmr53x x1cpjm7i x1fgarty x1943h6x xudqn12 x3x7a5m x6prxxf xvq8zen xo1l8bm xzsf02u x1yc453h" color="var(--primary-text)" dir="auto" style="display: block; line-height: 1.3333; max-width: 100%; min-width: 0px; overflow-wrap: break-word; word-break: break-word;"><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word;"><div dir="auto"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW3NSroQ2hOaLLGL2bePThikyJX_FVj3nfAgxBGSj1OmehXlcy5jnbudduUF37H92bWgoOjkS8MDajeQ__b5a6Q33-uEqjecW0TxZm674SsE8yY7LoKZmzEl_dOy-Ketp-H9khJEd2rGzwgQg-9pBkzaJuHe0U7unAY0pM3a2c7oLB0jppU2Uv_qKHwo8/s1637/422673738_6962538260466980_4305619342272555298_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1637" data-original-width="1080" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW3NSroQ2hOaLLGL2bePThikyJX_FVj3nfAgxBGSj1OmehXlcy5jnbudduUF37H92bWgoOjkS8MDajeQ__b5a6Q33-uEqjecW0TxZm674SsE8yY7LoKZmzEl_dOy-Ketp-H9khJEd2rGzwgQg-9pBkzaJuHe0U7unAY0pM3a2c7oLB0jppU2Uv_qKHwo8/w264-h400/422673738_6962538260466980_4305619342272555298_n.jpg" width="264" /></a></div><div style="text-align: justify;"><br /></div><div style="font-size: 15px; text-align: justify; white-space: pre-wrap;">சிப்பியின் மேல் எவ்வளவோ துரும்புகளும் மணற்துகள்களும் படிந்தாலும் ஏதோவொன்றுதான் நல்முத்தாக விளைகின்றது. காணும் காட்சிகள், தோன்றும் எண்ணங்கள் யாவற்றையும் கவிதைக்களமாய்க் காண்பது கவிஞனின் மனம். அவற்றில் கவிமனதில் ஆழமாய்ப்பதிந்து உயிர்த்து ஒரு சிலவே கவிதைகளாய்ப் பிறக்கின்றன. அப்படிப் பிறந்த 119 கவிதைகளை "மரம் விடு தூது" என்ற முத்துமாலையாய் நம் முன் வைத்திருக்கின்றார் புதுவையைச் சேர்ந்த கவிஞர் ந. பரந்தாமன்.</div><div style="text-align: justify;"><span style="font-size: 15px; white-space: pre-wrap;"><br /></span></div><span style="font-size: 15px; white-space: pre-wrap;">ஒவ்வொரு கவிதையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டுள்ளது. அன்றாட வாழ்வின் நுணுக்கமான கூறுகள், உணர்வு வெளிப்பாடுகள், அங்கலாய்ப்புகள் என அத்தனையும் ஒவ்வொரு கவிதையிலும் மிளிர்கின்றன. ஆறுதல், கட்டம் போட்ட நோட்டு போன்ற கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை.
"ஒரு கவிதை நூலை
வாசிக்கும்போது
இதுவரை காணாமல் போயிருந்த நான்
கிடைக்கப்பெற்றேன்" என்ற வரியில் கவிதைக்கும் வாசகனுக்குமுள்ள தொடர்பைக் கூறுகிறார்.
"அந்தோ
என் ஓய்வுக்காலம்
ஏதேனும் சட்டம் இயற்றப்படுமா
(முதிய)குழந்தைத் தொழிலாளர்
தடுப்புக்காக" என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. விருப்பப்பட்டுச் சுமக்கிறவர்கள் மத்தியில் வலிந்து சுமை ஏற்றப்பட்டுச் சுமக்கும் பலவீனமானவர்களும் இருக்கிறார்கள்தானே.
மொழிச்சிடுக்குகளுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் அதிகம் சிக்கிக்கொள்ளாமல் எல்லையற்ற சுதந்திரத்துடன் புரண்டோடும் இவரின் மொழி இன்னும் சற்றுக் கூர்மை பெறின் பெருங்கவனம் பெறும்.
"கவிஞன் மென்மையானவன்
அவன் எழுதும்
</span><div style="font-size: 15px; text-align: justify; white-space: pre-wrap;">தாளை விட.." எனக்கூறும் இந்த மென்மையான கவிஞனிலிருந்து வீரியமிக்க கவிதைகள் பிறக்கட்டும்.</div><div style="font-size: 15px; text-align: justify; white-space: pre-wrap;"><br /></div><div style="font-size: 15px; text-align: justify; white-space: pre-wrap;"><div style="font-size: medium; white-space: normal;"><span style="font-size: 15px; white-space: pre-wrap;">மரம் விடு தூது (கவிதைத்தொகுப்பு)</span></div><div>ஆசிரியர்: ந. பரந்தாமன்</div><div>வெளியீடு: படி பதிப்பகம் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்</div></div></div></div></span></div></div></div></div><div class="x1n2onr6" id=":r405:" style="font-family: inherit; position: relative;"><div class="x1n2onr6" style="font-family: inherit; position: relative;"><div class="x6s0dn4 x1jx94hy x78zum5 xdt5ytf x6ikm8r x10wlt62 x1n2onr6 xh8yej3" style="align-items: center; background-color: #d83f5e; display: flex; flex-direction: column; font-family: inherit; overflow: hidden; position: relative; width: 500px;"><div style="font-family: inherit; max-width: 100%; min-width: 500px; width: calc((100vh + -325px) * 0.666667);"></div></div></div></div></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40109869560494140722024-02-03T15:00:00.001+05:302024-02-03T15:00:00.144+05:30சாரல் துளிகள்<div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJfeWU5bztjRcwxoDpjWAAUjwuuRDD-oLHQ78V7RU-zpVe47ahvlMiiyJ3zEj9JnCnlIVhAUdqEhk-vMjboI72MWr-dkp5ibiogaU5_fl-nc07RZCE1MHu_SbZonKrdc7_fmir9AdTYaq-n_wZJol187m0eUbMlzVv1ooUJNMHzqHrFzGhyGoRXD-7aeg/s4168/waves.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2872" data-original-width="4168" height="275" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJfeWU5bztjRcwxoDpjWAAUjwuuRDD-oLHQ78V7RU-zpVe47ahvlMiiyJ3zEj9JnCnlIVhAUdqEhk-vMjboI72MWr-dkp5ibiogaU5_fl-nc07RZCE1MHu_SbZonKrdc7_fmir9AdTYaq-n_wZJol187m0eUbMlzVv1ooUJNMHzqHrFzGhyGoRXD-7aeg/w400-h275/waves.JPG" width="400" /></a></div><span style="text-align: justify;"><br /></span></div><span style="white-space: pre-wrap;"><div style="text-align: justify;">அலைகளற்ற கடலாய் நிச்சலனமாயிருக்கும் மனதில் பாளம் பெயர்த்து எழுந்தமையும் பழம்நினைவால் பிறக்கும் சுனாமியை ஆற்றுப்படுத்துகிறது அறிவின் கரம்.</div></span><div><span style="text-align: justify;"><br /></span></div><div style="text-align: justify;">விலக்கி விலக்கிப்போனாலும், குளத்துப்பாசி போல் நெருங்கிச்சூழ்ந்து வருபவை கழிவிரக்கமும், குற்றவுணர்வும், பழியுணர்வும். விலக்கிக் கரை சேர்பவர் சிலர், அமிழ்ந்து கிடப்பதே சுகமென எண்ணி மூழ்கிப்போகிறவர் ஒரு சிலர் எனில் மீட்க வருபவரையும் சேர்த்து மூழ்கடிக்கும் சிலருமுண்டு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உணர்ச்சி வேகத்தில் அறியாமல் உதிர்க்கும் சொற்களே கூட ஒருவரைச் சிக்க வைக்கும் தூண்டிலாகி விடுவதுண்டு. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அன்பே வலையாய் ஆதரவுச்சொற்களே இரையாய் அக்கறையே மாயையாய் விரித்து வைக்கும் வேடனிடமிருந்து, புலி வேடமிட்டு சாதுர்யமாய் நழுவித்தப்புகிறது மான்குட்டி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உணர்வு பூர்வமாகச் சிந்திப்பவரை விட அறிவு பூர்வமாக, தர்க்க பூர்வமாக, பகுத்தறிந்து சிந்தித்து முடிவெடுப்பவர் எவ்வகையான புதிய சூழலையும் சமாளித்து தீர்வு காண்பார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கூடவே செல்லும் எஸ்கலேட்டர் படிக்கட்டுகளாக நாம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம், ஆனால் உண்மையில், உபயோகித்தபின் அங்கேயே விட்டுச்செல்லப்படும் சாதாரண படிக்கட்டாகவோ அல்லது எட்டி உதைக்கப்படும் ஏணியாகவோதான் இருக்கிறோம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொங்கிப்பெருக்கெடுக்கும் வெள்ளமும் உள்ளமும் ஒன்றே. அத்தனைக்கும் பின் கசடற நிர்மலமாய் அமைதியாய் தெளிந்திருக்கும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div>பட்டத்தின் வாலைப்போல் சீராக இருப்பதைவிட்டு, அதன் நூல்கண்டைப்போல் ஏன் இந்த வாழ்க்கை தன்னைச் சிக்கலாக்கிக் கொள்கிறது? பொத்திப் பாதுகாக்கும் கரங்களை விடுத்து முரட்டுக் கரங்களையே ஏன் அந்த நூல்கண்டு சென்றடைகிறது? விலகிச்செல்வதைச் சீண்டாத கரங்கள், தம்மைச் சரணடைபவற்றைச் சிதைக்கும் கொடூரம் கொள்வது ஏன்? மாயக்கயிற்றால் விரல்களை ஆட்டிப்படைக்கும் மனமல்லவோ சூத்ரதாரி. திருத்தப்படாத தீர்ப்புகளுக்குப்பின் சிதைந்து கிடக்கிறது நூல்கண்டு.</div><div><br /></div><div>துரத்தித் துரத்திக் குரைத்துக் களைத்து விழும் நடுநிசி நாய்களைக் கண்டுகொள்ளாமல் தனக்கான உயரத்தில் கம்பீரமாகப் பெருஞ்சத்தத்துடன் பறந்து செல்கின்றன விமானங்கள். பதில் கிடைக்கப்பெற்றும் புரிந்து கொள்ளாத ஞமலிகள் அடுத்த விமானத்தைத் துரத்த ஆரம்பிக்கின்றன.</div><div><br /></div><div>குறை சொல்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் செவி சாய்த்துக்கொண்டேயிருந்தால் பறத்தல் முடங்கி சிறகுகள் கருகி இறுதியில் நடையற்றுக்கிடக்க நேரிடும்.</div></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-7300385103295710422024-01-24T22:01:00.001+05:302024-01-24T22:01:20.724+05:30நாழிக்கூழும் நாழி மிளகாயும் - சி. அன்னக்கொடி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuMFGl_3ozyLvTIpAmdso_oaejvn80CZhf0qYhyRRd8EyA1VfzL3zxVCjQvJWlnB_wRQ1X-n5fUPXmJtGrV3z4slHP2Usl673t020M6nxu8RqvJUdQQuXub4PolES0rltcO5Gb3rFX8tGQdFj-BpGeShCMMn34TIdFZT0MuqIEN_46G37vTDy7izjnxQY/s1619/420878454_6946969918690481_8237059792659843961_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1619" data-original-width="1080" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuMFGl_3ozyLvTIpAmdso_oaejvn80CZhf0qYhyRRd8EyA1VfzL3zxVCjQvJWlnB_wRQ1X-n5fUPXmJtGrV3z4slHP2Usl673t020M6nxu8RqvJUdQQuXub4PolES0rltcO5Gb3rFX8tGQdFj-BpGeShCMMn34TIdFZT0MuqIEN_46G37vTDy7izjnxQY/s320/420878454_6946969918690481_8237059792659843961_n.jpg" width="213" /></a></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மனிதனின் வாழ்வை சமுத்திரமெனக்கொண்டால், அவ்வாழ்வின் சில துளிகளை, கால் நனைத்து நிற்கும் நமக்கு ருசிக்கக்கொடுக்கும் அலைகள்தாம் சிறுகதைகள் எனக்கொள்ளலாம். சக மனிதர்களை அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள, அவர்களின் வாழ்வியலின் வண்ணச்சித்திரத்தின் ஒரு துளியையாவது அறிதல் வேண்டும். இங்கே, அப்படி துளித்துளியாய் வரைந்ததுதான் இந்த சிறுகதைத்தொகுப்பு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முற்றிலும் கிராமத்து வாழ்வைப் பேசும் கதைகளே இந்நூலில் செறிந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் அத்தனையும் ஒன்றுக்கொன்று இழைந்து வருபவையே. தொகுப்பை முற்றிலுமாக வாசித்து முடிக்கும்போது ஒரு கிராமத்துக்கே போய் யுகயுகமாக வாழ்ந்துவிட்டு வந்த உணர்வை அளிக்கிறது. வழக்கறிஞர் சி. அன்னக்கொடி அவர்களால் முற்ற முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் மொத்தம் இருபத்து மூன்று சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வீட்டிலுள்ள மனிதர்களிடம் பாசம் வைத்திருப்பதைப்போலவே, ஏன் அதற்கு ஒரு படி மேலாகவே தாங்கள் வளர்க்கும் ஆடுமாடுகளிடம் பாசம் வைத்திருப்பவர்கள் கிராமத்து சம்சாரிகள். அவ்வாறே அஃறிணைப்பொருட்களிடமும், பற்று மிகக் கொண்டவர்கள். தங்களுக்குச் சொந்தமானவற்றை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நகரத்து மக்களுக்கு உலக்கை ஒரு சாதாரணப்பொருள். அதுவே கிராமத்திலிருப்பவர்களுக்கோ ஒரு தெய்வத்துக்குச் சமமானது. விவசாயியின் குடும்பத்தில் தப்பித்தவறி சுளவு, உலக்கை, போன்றவற்றில் தெரியாத்தனமாகக் கால் பட்டு விட்டால் கூட தொட்டு வணங்கச்செய்வார்கள். அப்படியோர் உலக்கை ஒரு குடும்பத்தையே பிரிக்கவும் அதே போல் இணைக்கவும் செய்கிறது. எல்லாம் பற்று செய்யும் மாயம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உறவு முறைக்குள் இருப்பவர்களோ இல்லாதவர்களோ.. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் இடக்குப்பேச்சுகள் நம்மைப் புன்னகைக்க வைக்கின்றன. அப்பச்சிகளின் பெருமை பேசும் அப்பத்தாக்கள், அப்பத்தாக்களிடம் எசலும் பேரப்பிள்ளைகள், பெரியவர்களுக்குப் பட்டப்பெயர் வைக்கும் சிறிசுகள், முதலில் வைக்கப்பட்ட பெயர்களுக்காக வருந்தி, அதன்பின் மகிழும் சைக்கிள் தாத்தா, மகளைத் தேடியலைந்து வீட்டுக்குத் திரும்பும்போது அந்த வருத்தத்திலும், உப்புக்கண்டத்துக்காக ஒரு ஓரமாக மகிழும் தகப்பன், செத்துப்பிழைத்து பகை தீர்க்கும் கற்பகம் என நாம் காணும் சித்திரங்கள் அனேகம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தனித்தனிச் சிறுகதைகள்தாம் எனினும், மொத்தமாக வாசித்து முடியும்போது ஒரு உணர்வுக்குவியலான திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. வெள்ளந்தி மனிதர்கள்தான் எனினும் அவர்களுக்கேயுரிய சாமர்த்தியமும் சில கதைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. முக்கியமாக பொங்கக்கூட்டம், சகுனம் போன்ற சிறுகதைகள். திருடித்தின்பதுதான் ருசி என்பார்கள் சிறுவர்கள். அந்த சித்தாந்தம் பெரியவர்களுக்கும் உண்டு என்பதை கள்ளப்பனை, ஏப்பம் போன்ற கதைகளில் நிறுவி நம்மைப் புன்னகைக்க வைக்கிறார் ஆசிரியர். கத்தரிக்காய் ரசமும் மிக ருசிக்கிறது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கஷ்டப்பட்டு, கடன்பட்டு, கருமாயப்பட்டு விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் மனப்பொருமல் தூத்தலாய்த் தெறிக்கும்போது, நாமும் உச்சுக்கொட்டுகிறோம். பாசம், கருணை, பழி வாங்கல் என அந்த மனிதர்களின் உணர்வுகளுடன் நாமும் இரண்டறக்கலக்கிறோம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கரிசல் மண்ணின் வட்டார வழக்கில் அமைந்திருந்தாலும், தொகுப்பின் மொழி சற்றே மதுரை மண்ணின் வட்டார வழக்கையும் பிரதிபலிக்கிறது. வாசித்து நெடுநேரமான பின்னும் கதை மாந்தர்களைப்பற்றி நம்மைச் சிந்திக்க வைப்பது இந்நூலின் வெற்றி எனக்கொள்ளலாம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div>நூல் – நாழிக்கூழும் நாழி மிளகாயும்</div><div>ஆசிரியர் – சி. அன்னக்கொடி</div><div>வெளியீடு – கோதை பதிப்பகம்</div></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-84939601449518570672024-01-08T15:45:00.000+05:302024-01-08T15:45:38.036+05:30முஹூர்த்தக்கால் எனும் பந்தக்கால்..<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRByVqm4I5rbEodif0BxV0d0AB8KZrbzaRRt34IfbR56QnhebSMxE6LjGtvR-OfyM-vfsqrUC6uEPU2R-XU-nH5o6Gv0Z0Ico6xxgMcWK46rYQUBQ3hDfUcRN9EKI8bV7tyL1MQS5PlAemv1ii1HlMokI6ezxbz2gjLKj04J0bxES4YsTuajRpDhOr3Is/s864/Muhoorthakal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="767" data-original-width="864" height="355" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRByVqm4I5rbEodif0BxV0d0AB8KZrbzaRRt34IfbR56QnhebSMxE6LjGtvR-OfyM-vfsqrUC6uEPU2R-XU-nH5o6Gv0Z0Ico6xxgMcWK46rYQUBQ3hDfUcRN9EKI8bV7tyL1MQS5PlAemv1ii1HlMokI6ezxbz2gjLKj04J0bxES4YsTuajRpDhOr3Is/w400-h355/Muhoorthakal.jpg" width="400" /></a></div><div style="text-align: center;"><br /></div><div style="text-align: justify;">ஒரு வீட்டில் கல்யாணம் நடக்கப்போகிறதென்றால் தேதி நெருங்கும்போது, "காலு என்னைக்கி ஊணுதாவோளாம்?" என்று சொந்தக்காரர் சொக்காரன்மார் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வர். 'பந்தக்கால் எனும் முஹூர்த்தக்கால்' ஊன்றும் வைபவத்தைத்தான் அவர்கள் அப்படிக் கேட்பார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வீடு கட்டும்போது மற்ற எல்லா வாசல்களையும் விட நிலைவாசல் எனும் தலைவாசலை ஊன்றும்போது மட்டும் அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, மாவிலைத்தோரணம் கட்டி பூஜை செய்து ஊன்றுவது மரபு. அவ்வாறே திருமணப்பந்தலை அமைக்கத்தொடங்கும்போது ஊன்றப்படும் முதல் காலுக்கும் பூஜை செய்து ஊன்றும் வழக்கம் வந்திருக்கலாம். இப்படி முஹூர்த்தக்கால் ஊன்றி விட்டால் அதன்பிறகு திருமணம் முடியும்வரை எந்த துக்க நிகழ்வுகளிலும் மணவீட்டார் கலந்து கொள்ளக்கூடாது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சவுக்கு, மூங்கில் போன்ற நீண்ட கம்புகளையோ அல்லது பால்மரத்தின் நீண்டதொரு கிளையையோ எடுத்துவந்து, மேல்பிசிறில்லாமல் தேய்த்துவிட்டு, முழுவதும் மஞ்சள்பூசிக் காய விடுவார்கள். அதன்பின் நல்ல முஹூர்த்தநேரத்தில் குடும்பத்தில் மூத்தவர் அதில் மாவிலைக்கொத்தைக் கட்டுவார். பின் அதற்கு பூமாலை அல்லது மல்லிகைச்சரத்தின் ஒரு துண்டைச்சூட்டுவர். வெற்றிலைபாக்குடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கட்டும் வழக்கம் சில பகுதிகளில் உண்டாம். பின் மஞ்சள் குங்குமமிட்டு.. பெண்கள் குலவையிட கற்பூரம் காட்டுவார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அவருக்குப் பின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து மஞ்சள் குங்குமமிட்டு குலவைச்சத்தத்துடன் கற்பூரம் காட்டி வணங்குவார்கள். இது முடிந்ததும் வீட்டின் வடகிழக்கு மூலையில் பந்தக்காலை ஊன்றவோ அல்லது ஏதேனும் பிடிமானத்துடன் சேர்த்துக் கட்டவோ செய்வார்கள். பெரும்பாலும் இச்சடங்கு திருமணத்திற்கு நாலைந்து நாட்களுக்கு முன் மாப்பிள்ளை வீட்டில் "தாலிக்குப் பொன்னுருக்கு"ம்போது நிகழும். பெண் வீட்டில் நிச்சயதார்த்த தினத்தன்று நிகழும். ஒரு சிலர் திருமணம் நிகழும் தினத்தில் எல்லாச்சடங்குகளுக்கும் முன்னால் இதைச்செய்வதுமுண்டு. இம்மூன்று தினங்களிலும் செய்வதானால் இதற்கெனத் தனியாக முஹூர்த்தம் பார்க்க வேண்டாம் அல்லவா?. இதேபோல், திருமணச்சமையலுக்காகப் போடப்படும் கோட்டையடுப்புக்காக, ஒரு சில கற்களையும் பூஜை போட்டு எடுத்து வைத்துக்கொள்வதுமுண்டு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சமீபத்தில் மகளின் சக ஊழியரின் கல்யாணத்தில் கலந்து கொண்டபோது ஒரு நாற்காலியில் ஜவ்வரிசி மற்றும் அரிசி அப்பளத்துடன் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுங்கிளையொன்று கவனத்தை ஈர்த்தது. கிட்டே நெருங்கிப்பார்த்தால்... மாங்கிளை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அட!!.. முஹூர்த்தக்கால்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நடப்படும் முஹூர்த்தக்கால் பால்மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளையாக இருந்தால் அதை குளக்கரையிலோ அல்லது ஆற்றங்கரையிலோ நட்டு வைப்பது தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வழக்கம். அப்படி நடப்படும் கிளை செழித்து விருட்சமாகவே வளர்ந்து விடுவதுமுண்டு. மணமக்களும் அவ்வாறே வாழ்வில் செழித்து விளங்க வேண்டுமென்பதற்காகவே இப்பழக்கம் வந்ததாகவும் சொல்வார்கள். இதைச்சாக்கிட்டு ஊரெங்கும் மரங்கள் வளர்ந்து சுற்றுச்சூழல் பசுமையாக இருக்கவும், மழை பெய்யவும் உதவுவதாகவே நாம் எடுத்துக்கொள்வோம். இந்த முஹூர்த்தக்கால் நடும் வைபவம் வடநாட்டிலெல்லாம் இருக்காது என்றுதான் இவ்வளவு நாட்களாய் நினைத்துக்கொண்டிருந்தேன், மும்பையில் அதுவும் மராட்டியர்களிடமும் இந்த வழக்கம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எது எப்படியோ?!! உலகின் எந்தப்பகுதியாய் இருந்தால் என்ன? மனிதவாழ்வில் ஒவ்வொரு படிநிலைகளிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என இயற்கையோடு ஒன்றியே ஒவ்வொன்றையும் அமைத்திருப்பது விளங்குகிறது. ஒவ்வொன்றையும் கேள்வி கேட்கிறோம் என்ற பெயரில் இயற்கையிலிருந்து வெகு தூரம் விலகிச்செல்லும் போது அதற்கான விலையையும் கொடுக்க நேர்வதுதான் யதார்த்தம்.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-80260802466888338862023-12-04T10:00:00.000+05:302023-12-04T10:00:00.137+05:30லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையில் நாங்கள்..<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBt0iBudJqjNfBwgA8VrtHUna51bROScgRvFd2GQ2PZEIhJjlAfov2zLTv2znKdAYgaG1w09aaA2xymvIloiEJZi6MtsfOQ_AUiqnA9EZhxM85hF_NldiCL0t7zqUgm6nxCrr_AkGIcI0zprI7sWKJkcKnipr8ijMGGJfDYgsJJ1NQOcya-APBzWLIZOs/s1554/Ladies%20special%20cover%20photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1554" data-original-width="1080" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBt0iBudJqjNfBwgA8VrtHUna51bROScgRvFd2GQ2PZEIhJjlAfov2zLTv2znKdAYgaG1w09aaA2xymvIloiEJZi6MtsfOQ_AUiqnA9EZhxM85hF_NldiCL0t7zqUgm6nxCrr_AkGIcI0zprI7sWKJkcKnipr8ijMGGJfDYgsJJ1NQOcya-APBzWLIZOs/w139-h200/Ladies%20special%20cover%20photo.jpg" width="139" /></a></div><br /><div style="text-align: justify;">இந்தியாவில் "கொரோனா" கிருமி நுழைந்து அட்டகாசம் செய்தபோது, அதற்கான தடுப்பு முறைகளோ மருத்துவமோ கண்டறியப்படாத நிலையில் முதன்முறையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது அக்காலம் முழுவதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாதிப்புக்கு உள்ளானோம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எங்கள் வீட்டிலும் வீட்டுக்கு வெளியே கொரோனாவுடனும் உள்ளே மை ரங்க்ஸுக்கு வந்திருந்த ப்ரெய்ன் ட்யூமருடனும் என இரு முனைகளிலும் போராடிக்கொண்டிருந்தோம். அப்போராட்டத்தின் வெகு சில நினைவுகளை "லேடீஸ் ஸ்பெஷல்" பத்திரிகையில் பகிர்ந்திருக்கிறேன். </div><div style="text-align: justify;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLa3on6-eFL0TIxOO_YjZF-VDXSA241wZOaSzdGLtL5svn6Go_BXSm_Aetw5OgXC_xloa_ohDy9gWXe76KobJrfUDkpJsPyfOBtS5n4Y0LuKRcNkjsa9H_pfZ2EnoSJFKjwxsd5_Cejl8-8i7dYQA_zKId0GQv6cBYESnyvolbR730fA8Ga-TMHZ97Y_4/s1557/Ladies%20special%201.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1557" data-original-width="1079" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLa3on6-eFL0TIxOO_YjZF-VDXSA241wZOaSzdGLtL5svn6Go_BXSm_Aetw5OgXC_xloa_ohDy9gWXe76KobJrfUDkpJsPyfOBtS5n4Y0LuKRcNkjsa9H_pfZ2EnoSJFKjwxsd5_Cejl8-8i7dYQA_zKId0GQv6cBYESnyvolbR730fA8Ga-TMHZ97Y_4/w278-h400/Ladies%20special%201.jpg" width="278" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg136Qm2dElbhmpZ9IJ_HwFCLR2RUF9RbhWNw73ZS6phD8v5J3Q71Nrh3RGRKzXFCqsbS1amuec6yCSqw86DSuDkVvdwxv8oVBW0za201T87GEKDfyjALzEtYRWiMkZoBbkIb37zf3zkE-PEdi3oRX_FbaPdGjZH07MjD3Tv6Lhd5Dd6XOkKKhyRlNhVxM/s1636/Ladies%20special%202.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1636" data-original-width="1078" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg136Qm2dElbhmpZ9IJ_HwFCLR2RUF9RbhWNw73ZS6phD8v5J3Q71Nrh3RGRKzXFCqsbS1amuec6yCSqw86DSuDkVvdwxv8oVBW0za201T87GEKDfyjALzEtYRWiMkZoBbkIb37zf3zkE-PEdi3oRX_FbaPdGjZH07MjD3Tv6Lhd5Dd6XOkKKhyRlNhVxM/w264-h400/Ladies%20special%202.jpg" width="264" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRHkhxodvj7FXanDhU12DxgjvDK7TJ90geOujfkFoRwxMxMDFj0Vh8ihxxAfBGEUlKM3L2ERD9_X1z-sgLzaw_w1aa-jnA-WdUj6x4YF68EEzAj9ZmISVsikbi2eaEJnOlMhbuPYfvGrgZi8VdFFyDVdrWylkyvWR9HbBXjJwnt8P_QrIU4TjQkR-Oe2E/s1588/Ladies%20special%203.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1588" data-original-width="1079" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRHkhxodvj7FXanDhU12DxgjvDK7TJ90geOujfkFoRwxMxMDFj0Vh8ihxxAfBGEUlKM3L2ERD9_X1z-sgLzaw_w1aa-jnA-WdUj6x4YF68EEzAj9ZmISVsikbi2eaEJnOlMhbuPYfvGrgZi8VdFFyDVdrWylkyvWR9HbBXjJwnt8P_QrIU4TjQkR-Oe2E/w271-h400/Ladies%20special%203.jpg" width="271" /></a></div><br /><div style="text-align: justify;">முழுப் பத்திரிகையையும் வாசிக்க சுட்டியைச் சொடுக்குங்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><a href="https://drive.google.com/file/d/1Xz6ilyzQuiXEvGJLygBGBERFZPTdJwEf/view">https://drive.google.com/file/d/1Xz6ilyzQuiXEvGJLygBGBERFZPTdJwEf/view</a></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நன்றி கிரிஜா மேம், தேனக்கா..</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31755302414231564082023-12-03T01:58:00.002+05:302023-12-03T01:58:50.600+05:30சாரல் துளிகள்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-VvwXhSrwdOdTNylmHAAl7lPWIyz-xreZD_NUcYur2-FrsEV2Qix2a9R9kC6HqIjmQxCQ5HIbp85gWes1OwtXy1q4MBz3PyQ8tVUUXBM_Su7BmJeSB4aShhgyLesC6_o6f06bwYkqdEMF_uRupWj2dnAt3IrhSrIsMM0AQv_r_3kra7B8Tyv15YyqNAk/s3760/American%20bittern.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="3208" data-original-width="3760" height="273" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-VvwXhSrwdOdTNylmHAAl7lPWIyz-xreZD_NUcYur2-FrsEV2Qix2a9R9kC6HqIjmQxCQ5HIbp85gWes1OwtXy1q4MBz3PyQ8tVUUXBM_Su7BmJeSB4aShhgyLesC6_o6f06bwYkqdEMF_uRupWj2dnAt3IrhSrIsMM0AQv_r_3kra7B8Tyv15YyqNAk/s320/American%20bittern.JPG" width="320" /></a></div><br /><div style="text-align: justify;">உறுமீன் வரும்வரை காத்திருக்காத கொக்கு ஓடுமீன்களையெல்லாம் வேட்டையாடுகிறது.. பேராசையோ!.. கொடும்பசியோ!!..</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிஜத்தின் ஔியைத் தன்னுள் ஔித்தும் அளித்தும் விளையாடும் இருண்மை கொண்ட பிரதிகள்தானே நிழல்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">'எங்களை நம்புவதேயில்லை' என சடைத்துக்கொள்வதைத்தவிர வேறொன்றும் அறியாதவை மண்குதிரைகள். ஏனென்றும் புரிந்து கொள்வதில்லை, நம்பியவர் தத்தளிப்பதையும் கண்டுகொள்வதில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வாழ்வின் முக்கியமான கணங்களில் ஒரு திறப்பிற்காகக் காத்திருப்பதுவும், சூரியகிரகணத்தின் உச்சத்தில் நிகழும் வைர ஒளிச்சிதறலாய் ஒரு நொடியில் அத்திறப்பு நிகழ்ந்து முடிந்து விடுவதும் இவ்வாழ்வு நமக்களிக்கும் தரிசனம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பாரம் சுமக்கச் சோம்பல்படும் பொதிமாட்டுக்கு தினமும் வயிறு நிறையாது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">காற்றுக்காய் வாயைத் திறந்துதிறந்து மூடும் மீனைப்போல், மின்னிக்கொண்டு விரைகிறது ஏதோவொரு விமானம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பிறந்து விழுந்து எழுந்ததிலிருந்து மலர்களால் ஒத்தடம் கொண்டு, முட்களால் காயப்பட்டு, அடிபட்டு, மிதிபட்டு, நொந்து நூடுல்ஸாகி, தென்றலில் மிதந்து, புயலில் அலைக்கழிக்கப்பட்டு மறுபடியும் வீழும் வரையான சம்பவங்களின் கனமே 'அனுபவஸ்தர்' என்ற கிரீடமாக அழுந்தி அமைகிறது. கனக்கும்போது 'இறக்கி வைக்க மாட்டோமா' எனப் பரிதவிப்பதும், அழுந்தும்போது 'நமக்கு அமையுமா' என ஆவலுறுவதும் மனித மனங்களின் நிறம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">காண்பதெலாம் கவிதையாகும், கடப்பதெலாம் கதையாகும், கற்பனை தொட்டு அலங்கரித்தால் அத்தனையும் உயிர் கொளும். கருக்கள் சுமக்கும் படைப்பாளியோ பூரண கர்ப்பம் நித்ய ஜனனம்..</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அம்மையைத் தேடியலையும் பரிதவித்த கன்றுக்குட்டியின் குரலொலியை அமுக்கிவிடுகிறது நகரத்துத்தெருக்களின் வாகனச்சத்தம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பிற குடும்பங்களின் சலசலப்பை வேடிக்கை பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி சில கசடு படிந்த மனங்களுக்கு. உண்மையில் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது இம்மாதிரியான வேண்டப்பட்ட விரோதிகளிடம்தான்.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-44183161528891574282023-11-19T11:00:00.003+05:302023-11-19T11:00:00.136+05:30விடுதலை <div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: justify;"><span style="color: #120303;"> <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjxLEILG7KJUQP0HRD-ZpgjXfOwfH9Qt-hZTzBn_xlRpbb2JIyDPALysfFiU1CisZ9smtB7TYeFetTyZswzRyU8-5893j9miTsiSulx5KzLPlXVmSUXMiBrXRkRsm32CMi8FdAjXh42C6Y7IoztMPPrzuVR4j16E3wq926CMZAAPpFDobH56GlyjADkKA/s1071/Ripples.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="707" data-original-width="1071" height="211" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjxLEILG7KJUQP0HRD-ZpgjXfOwfH9Qt-hZTzBn_xlRpbb2JIyDPALysfFiU1CisZ9smtB7TYeFetTyZswzRyU8-5893j9miTsiSulx5KzLPlXVmSUXMiBrXRkRsm32CMi8FdAjXh42C6Y7IoztMPPrzuVR4j16E3wq926CMZAAPpFDobH56GlyjADkKA/s320/Ripples.jpg" width="320" /></a></div></span></div><div class="separator" style="clear: both; text-align: justify;"><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டு கை கால்களை நீட்டி சோம்பல் முறித்தான். புரண்டு தலையணைக்கருகில் வைத்திருந்த மொபைலை எடுத்து லேசாகக் கண்களைச்சுருக்கி, மணி என்னவென்று பார்த்தான். ஆறு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விடிந்து விட்டிருந்தாலும் மழைக்காலம் என்பதால் குளிருடன் லேசான இருளும் இன்னும் மிச்சமிருந்தது. இடுப்பில் நெகிழ்ந்திருந்த லுங்கியை இன்னும் சற்று நெகிழ்த்தி தோள் வரை ஏற்றிக்கொண்டு போர்த்திக்கொண்டான். போர்வையை விட இப்படிப்போர்த்திக்கொள்வதுதான் அவனுக்குப் பிடிக்கும். கதகதப்பாகவும் இருக்கும், வழக்கத்தை விட இன்னும் சற்று நேரம் உறங்குவான். இன்று கூட இன்னும் சற்று உறங்கலாம், "எழுந்து என்ன செய்யப்போகிறோம்? ஆபீஸ் போவதா பாழாய்ப்போகிறது?" தனக்குள் நினைத்தபடியே அப்படியே கிடந்தான். </span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">என்றைக்கு இந்த பாழாய்ப்போன கொரோனா கிருமி நாட்டுக்குள் நுழைந்ததோ அன்றைக்குப்பிடித்தது கேடு. முதல் தடவை லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது எல்லோரையும் போல அவனும் ‘அப்பாடா.. தினமும் அவதியவதியாய் ஆபீசுக்கும் வீட்டுக்கும் ஓடுவதிலிருந்து சற்று விடுதலை கிடைத்தது’ என மகிழ்ந்தவன்தான். அதன்பின் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என அறிவிக்கப்பட்டபோது, அதையும் ஒரு மகிழ்வுடனேயே எதிர்கொண்டான். ஆனால், எத்தனை பிரியமானவர்களானாலும், வீட்டுக்குள் அடைந்து கொண்டு எந்நேரமும் இருபத்து நாலு மணி நேரமும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் அன்பொழுகப் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது என்ற நிதர்சனம் அப்புறம்தான் அவர்களுக்கு உறைத்தது. லேசாகச் சீறினார்கள், கத்தினார்கள்.. பின் ஒருத்தரையொருத்தர் பிறாண்டிக்கொண்டார்கள். வீட்டிலும் ஆபீஸிலும் இருவரும் வேலை பார்த்துக்கிழிக்கும் லட்சணத்தை விமர்சித்துக்கொண்டார்கள். எதிர்பாரா விதமாய் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே போனபோது, இது வீடுமல்ல… தாங்கள் வாழ்வது வாழ்க்கையுமல்ல.. எனவும், மீள முடியாத நரகத்தில் மாட்டிக்கொண்டு அழுந்துவதாகவும் சுயபரிதாபப்பட்டார்கள். இத்தனை நாள் இனித்த சம்சாரம் இப்போது இருவருக்கும் கசந்தது, கசப்பை வார்த்தைகளால் துப்பிக்கொண்டார்கள். வழித்துப்போட்டுவிடவோ துடைத்துப்போட்டு விடவோ முடியாத காஞ்சிரக்கசப்பு வழிந்தது வார்த்தைகளில். </span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">உலகம் முழுக்கவே பொருளாதாரம் அடி வாங்கிக்கொண்டிருந்தபோது இவர்களது வாழ்வு மட்டும் விதி விலக்கா என்ன? அவன் வேலை பார்த்த கம்பெனி ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கமுடியாமல், ஆட்குறைப்பு என்ற பெயரில் அவன் சீட்டைக் கிழித்தது. கையிருப்பைக் கணக்கிட்டபோது எப்படியும் நாலு மாதங்களுக்குத் தாக்குப்பிடித்து விடலாமெனத்தெரிந்தது. அதற்குள் வேறு வேலை ஏதேனும் தேடிக்கொள்ள வேண்டும். வீட்டுக்கடனின் மாதத்தவணை, மகளின் படிப்பு, அம்மாவின் மருத்துவச்செலவு, எதிர்காலச்செலவுகள் என எல்லாமும் மனக்கண்ணெதிரே நின்று பயமுறுத்தின. இரவுகளில் தூக்கம் வராமல் தவித்தான். எப்படியோ ஒரு மாதம் ஓடி விட்டது.. ‘சீக்கிரத்திலேயே ஒரு வேலையைத்தேடிக்கொள்ளாவிடில் சீரழிவுதான்’ என நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தான். அருகில் தூங்கிக்கொண்டிருந்த மகளின் பூமுகத்தை ஒரு கணம் வாத்சல்யத்துடன் பார்த்து விட்டு, அவள் உறக்கம் கலையாமல் தலைமுடியைக் கோதினான், பின் நன்கு இழுத்துப்போர்த்தி விட்டு வெளியே வந்து வாசல் திண்ணையில் அமர்ந்தான்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">இரவில் கனத்த மழை பெய்திருக்க வேண்டும்.. எதிர் வீட்டுக்கூரையில் பதித்திருந்த ஓடுகளிலிருந்து வழிந்த தண்ணீர் மண்ணில் சொட்டிய இடங்களில் சிறு குழிகளைப்பறித்திருந்தது. சொட்டிய தண்ணீர் வெளியேற்றிய கருமண், பருக்கை மணல் நிரம்பிய குழிகளைச்சுற்றிப் படர்ந்து அழகிய கோலம் போல் தோற்றமளித்தது அவனுக்குப்பிடித்திருந்தது. இன்றைய தினம் இப்படியொரு அழகிய காட்சியுடன் விடிந்தது அவனுக்கு மனதுக்கு சொல்லவொண்ணா நிறைவாக இருந்தது. எதிர்வீட்டு முருங்கை மரத்தின் பழுத்த இலைகள் காற்றில் உதிர்ந்து மழையில் நனைந்து தரையுடன் ஒட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்தன. பழுத்த செம்பருத்தி இலையொன்று, ஒரு பூ உதிர்வது போல மேல்கிளையிலிருந்து சொட்டிய நீர்த்துளி பட்டு, மெல்லென ஆடி உதிர்ந்தது. இப்படியே இதைப்பார்த்துக்கொண்டே வாழ்நாளைக் கழித்து விட, முடிந்தால் அந்த இலையைப்போல் யாருக்கும் தெரியாமல் உதிர்ந்து விட முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும். எதற்கு இத்தனை பாடுகள்? </span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">சூடாக ஒரு காப்பி குடித்தால் நன்றாக இருக்கும் போலிருந்தது. இரவு சாப்பிடாததாலோ என்னவோ நெஞ்சுக்குள் காந்தியது. உள்ளே வந்தான்.. பல் தேய்ப்பதற்காகப் பாத்ரூம் பக்கம் போனவன், திரும்பி சோம்பல் முறித்து கொட்டாவி விட்டுக்கொண்டே அடுக்களைப்பக்கம் நகர்ந்தான். யானையெல்லாம் பல்லா தேய்க்கிறது? ஒரு நாள் பல் தேய்க்காமல் காப்பி குடித்தால் ஒன்றும் குறைந்து விடாது. அடுக்களைக்குள் எட்டிப்பார்த்தான், மனைவியையும் காணோம், அம்மாவையும் காணோம். திரும்பி ஹாலுக்கு வந்தான், டைனிங் டேபிளில் மகள் உட்கார்ந்திருந்தாள்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“ம்ம்ம்.. எஞ்செல்லக்குட்டி” கொஞ்சிக்கொண்டே வளைத்து அணைக்க வந்தவனின் கைகளைத் தடுத்தாள் மகள்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“எப்பா… ஹோம்வொர்க் பண்றேன், டிஸ்டர்ப் பண்ணாதே. ஆன்லைன் க்ளாஸ் முடிஞ்சப்புறம் கொஞ்சிக்கோ”</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“ஏதுடி இது? புது பென்சில் பாக்ஸ் மாதிரி இருக்கு? கடையெல்லாம் அடைச்சு மூடிக்கிடக்கே.. எங்க வாங்குன?”</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“சரியான மக்குப்பா நீ. ஆன்லைன்லதான் எல்லாமும் கெடைக்குதே, பெரீப்பா வாங்கிக்குடுத்தாங்க”</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“போன வாரம் பூப்போட்ட குடை, அதுக்கும் முன்னால ஸ்கூல் பேக்கு, இப்ப பென்சில் பாக்ஸா? ஹூம்… ஒனக்கென்னா!!! தாங்குகதுக்கு ஆளு இருக்கு. ஒங்காரியமெல்லாம் கரெக்டா நடந்துரும் போ. எங்க அண்ணன நல்லா கொள்ளையடி” பெருஞ்சிரிப்புடன் மகளின் முன்னுச்சி முடியைக் கலைத்தான்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“போப்பா… கண்ணு போடாத” என்றபடி பெண் திரும்பிக்கொண்டது.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“ஆச்சியையும் அம்மையையும் எங்கடீ?. ஒரு காப்பி போட்டுக் கேக்கலாம்ன்னா ஒருத்தரையும் காணோம்”</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“அம்மா மார்க்கெட்டுக்குப் போயிருக்காங்க, ஆச்சி இன்னா வந்தாச்சு” என்றபடி முகவாயை நீட்டி அவன் பின்னால் காண்பித்தது.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“துணி காயப்போட மாடி ரூமுக்குப் போனேன் மக்கா. மேலயும் கீழயும் ஏறி எறங்குறதுக்குள்ள காலு முட்டு ரெண்டும் கழந்துரும் போல இருக்கு. காயப்போட்டுட்டுப்போன்னு ஒம்பெண்டாட்டி… அந்தப்புண்ணியவதிட்ட சொன்னேன், காதுலயே வாங்காம போயிட்டா. மாமியார் சொல்லுக்கு கொஞ்சமாது மதிப்பிருக்கா? எனக்க சாஸ்தாவே… நீதான் இதெல்லாம் கேக்கணும்” நாற்காலியில் உட்கார்ந்து மூட்டுகளை நீவி விட்டுக்கொண்டாள் அவனது அம்மா.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“எம்மா… எம்மா.. காலைலயே ஆரம்பிக்காதீங்கம்மா. ஒங்க பஞ்சாயத்து பெரும்பஞ்சாயத்துல்லா.. தீத்து முடியாதும்மா” அவசரமாய் உதடுகளின் குறுக்கே விரலை வைத்துக்காட்டினான்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“பொண்டாட்டிய விட்டுக்குடுக்க மாட்டியே, இந்த அழகுசுந்தரிய கெட்டுனதுக்கே இந்தப்பாடு. ஒனக்கெல்லாம் இன்னுங்கொஞ்சம் அழகா, சம்பாதிக்கற பொண்டாட்டி வாச்சிருந்தா ஒன்னிய கையிலயே புடிக்க முடியாது போ. நேத்து என்ன செஞ்சா தெரியுமா?”</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“நீங்க சொல்றதத்தான் அவ கேக்க மாட்டான்னு தெரியுமில்லே, எதுக்கு வம்பு வளர்த்துதீங்க?. அவ கிட்ட ஒரு வேலையைச் சொல்ல வேண்டியது, அப்றம் அங்கியே நின்னு மேற்பார்வை பாத்துக்கிட்டு நொட்டை சொல்லிட்டே இருக்க வேண்டியது. மாமியா இப்படியிருந்தா எந்தப்பொம்பளைக்கும் கோவம் வரத்தாம்மா செய்யும். அவள நம்பி வேலையை ஒப்படைச்சுட்டு நகர்ந்துருங்க, சரியாச்செய்யலைன்னா அப்றம் திருத்தம் சொல்லுங்க. அத விட்டுட்டு எப்பமும் சண்டை போட்டுட்டே இருந்தா எப்படிம்மா?”</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“எலேய்.. போக்கத்துப்போயி ஒனக்க வீட்டுல வந்து கெடக்கேம்லா.. நீ இதுவும் பேசுவ.. இன்னுமும் பேசுவ. இதே.. ஒங்க மயினின்னா, எம் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேச மாட்டா தெரியுமா?”</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">அவனுக்குச் சிரிப்பாக வந்தது. அம்மை படுத்தும் பாடு தாங்காமல் புருஷனுக்குச் சாவி கொடுத்து அம்மையை இங்கே அனுப்பியதே அண்ணிதான். கொஞ்ச நாளாவது அண்ணி நிம்மதியாக இருக்கட்டுமென இவனும் போய்க் கூட்டி வந்து விட்டான். வந்த இரண்டாம் நாளிலிருந்தே மாமியாருக்கும் மருமகளுக்கும் முட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. நோய்த்தொற்றைப்பற்றிய பயமும், எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையின்மையும் மனித மனங்களை மிகவும் பலவீனமாக்கி விட்டிருப்பதும், கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்காதா!! வீட்டிலிருக்க மாட்டோமா!! என ஏங்கியது போய் இப்போது காற்று வாங்கக்கூட வெளியே செல்ல வழியில்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடப்பது அப்பலவீனத்தை இன்னும் பெருக்குவதும் அவனுக்கு ஆயாசமாக இருந்தது. பெருகிய பலவீனம் தற்கொலை எண்ணங்களைத் தோற்றுவித்தது. இப்படியே போனால் மனநோயாளியானால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை எனத்தோன்றியது. “இனிமேல்தான் ஆக வேண்டுமா?” என மனைவி கேட்பாள். சிந்தனை விளைவித்த சிரிப்பை அடக்கியதில் லேசாகப் புரையேறி இருமினான். நெஞ்செரிச்சல் அதிகப்பட்டது போல் தோன்றியது, நீவி விட்டுக்கொண்டான்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“எம்மா.. சூடா ஒரு கப் காப்பி தாருங்க, நெஞ்சுக்குள்ள என்னமோ போல இருக்கு, சூடா என்னமும் குடிச்சா கொள்ளாமாட்டு இருக்கும்”, </span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“இன்னா தாரேன்” அம்மா எழுந்து போய் பாலைச்சூடாக்க அடுப்பில் வைப்பது தெரிந்தது. தலை கனத்தது, டேபிளில் கவிழ்ந்து கொண்டான்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“சூடாட்டு குடி மக்கா, இப்பம் ஒரு நிமுசத்துல இட்லி அவிச்சுருதேன், சாப்புடு. அசிடிட்டியெல்லாம் ஓடிப்போயிரும். நேரா நேரத்துக்குச் சாப்பாடு குடுக்காம கொள்ளாம எம்புள்ளைக்கு வியாதிய வரவழைச்சுட்டாளே மகராசி” கையில் காப்பியைக் கொடுத்து விட்டு நகர்ந்தாள் அம்மா.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">வாங்கிக்கொண்டு ஒரு மிடறு உறிஞ்சியபடி திரும்பியபோது, கைகளில் கனத்த பைகளுடன் மூச்சு வாங்க அவன் மனைவி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். காப்பியை அப்படியே டேபிளில் வைத்து விட்டு விரைந்து போய் பைகளை வாங்கிக்கொண்டான். ‘அம்மா சொன்ன வார்த்தைகளில் எதெல்லாம் இவள் காதில் விழுந்திருக்குமோ!! இன்னிக்கு எப்படில்லாம் ஆடப்போறாளோ!!’ நெஞ்சத்துடிப்பு காது வரைக்கும் கேட்டது. பைகளை உள்ளே கொண்டு வைத்து விட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு முன்னறை நோக்கி நகர்ந்தான். உள்ளே அம்மாவுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் நடப்பது காதில் விழுந்தது.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">அலுப்பாக உணர்ந்தான், ‘போதும்டா சாமி’ என எரிச்சலாக இருந்தது. சோபாவில் மடங்கிப்படுத்துக்கொண்டான். ‘ஏ.. யப்பா!!.. இன்னும் மழை அடிக்கும் போலிருக்கு, என்னமா புழுங்கி வேர்த்து ஊத்துது’ புரண்டு அப்படியே கிடந்தான்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">‘ஃபேன் போட்டுக்கோ’ என்றது ஒரு மனம்</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">‘ஆம்மா.. நீ கெட்ட கேட்டுக்கு ஃபேன் ஒண்ணுதான் குறைச்சல்’ என கரித்துக்கொட்டியது இன்னொரு மனம். கண்ணைச்சுழட்டிக்கொண்டு வர அப்படியே மெல்ல.. மெல்ல.. அமிழ்ந்தான்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">டேபிளின் மேலிருந்த காப்பிக்கோப்பையை சற்று நேரம் கழித்துதான் அவன் அம்மா பார்த்தாள். ‘புள்ள சூடா கேட்டான், ஆறிப்போயிட்டுதே.. யெய்யா வேற காப்பி கொண்டாரட்டுமா? என குரல் கொடுத்தாள்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">பதில் வரவில்லை.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">அவனைத்தேடி முன்னறைக்கு வந்து மறுபடியும் கேட்டாள்</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">பதிலில்லை.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">தூங்கி விட்டானோ எனத் தோன்றினாலும் அவன் படுத்திருந்த கோணத்தில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள், அருகில் வந்து அவன் தோளைப்பற்றி உலுக்கினாள்… வியர்த்துக் குளிர்ந்திருந்தான்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">“ஏ எம்மா… எம்புள்ள என்னமோ போல கெடக்கானே, யாராச்சும் வந்து என்னன்னு பாருங்களேன்” அவள் போட்ட கூப்பாடில் அடுக்களையிலிருந்த அவன் மனைவி ஓடி வந்தாள், எதிர் வீட்டினர் வந்தனர், அடுத்த தெருவிலிருந்து அழைத்து வந்திருந்த டாக்டர் பார்த்தார். இசிஜி மெஷினை இணைத்தார், நீளநீளமான கோடுகளாக தாளில் வரைந்து தள்ளியது அது. பார்த்து விட்டு, அவன் கழுத்தில் இரு விரல்களால் லேசாக அழுத்தி சோதித்து விட்டு, “மாஸிவ் அட்டாக் மாதிரி தெரியுதும்மா, ஹி இஸ் நோ மோர்” என்று உதட்டைப்பிதுக்கி விட்டு போய் விட்டார்.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">அங்கமெல்லாம் பதற, கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த அவன் மனைவியை நோக்கி கையை நீட்டியபடி கத்தத்தொடங்கினார் அவன் அம்மா ”அடிப்பாவி.. டென்ஷனக்குடுத்துக்குடுத்து எம்புள்ளயக்கொன்னுட்டியே. மாரடைப்புல மனுசன் சாகறது என் பரம்பரைலயே கெடையாதே”</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">அவன் உடல் குளிர்ந்து சில்லிட ஆரம்பித்திருந்தது. நிகழ்கால எதிர்காலக் கவலைகளிலிருந்து ‘அவனுக்கு’ விடுதலை கிடைத்து விட்டது. “மல மாதிரி சப்போர்ட்டா இருந்தியளே, இப்பம் என்னை நட்டாத்துல விட்டுட்டியளே.. இனி எனக்கு ஆரு இருக்கா? ஓரோருத்தர் கிட்ட ஏச்சு வாங்க வெச்சுட்டுப்போயிட்டியளே” பெருங்குரலெடுத்து அவன் மனைவி அழுத குரல் வீடெங்கும் எதிரொலித்தது.</span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;"><br /></span></div><div class="separator" style="clear: both;"><span style="color: #120303;">தேற்றத்தான் அவன் இல்லை.</span></div></div></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42634487929341880512023-08-31T10:00:00.002+05:302023-08-31T10:00:00.128+05:30நினைவில் நின்றவர்கள் 4 - வெத்தலை ஆச்சி<div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வெற்றிலையின் காம்பையும் நுனியையும் கிள்ளி எறிந்து விட்டு, அதன் பின்பக்கம் கொஞ்சம் சுண்ணாம்பைத்தடவி ரெடியாக வைத்துக்கொள்வார். அதன் பின் ஒரு பாக்குத்துண்டை எடுத்து, தரையில் வைத்து கற்குழவித்துண்டால் ஒன்றிரண்டாக உடைத்து எடுத்து, அந்த பாக்குத்தூளை வெற்றிலையில் வைத்து மடக்கி வாயில் அதக்கிக்கொள்வார் பொன்னம்மா ஆச்சி. இதெல்லாம் பற்கள் நன்றாக இருக்கும்போது அவர் வெற்றிலை போட்டுக்கொண்ட அழகு. இப்போதோ இருக்கும் கடைவாய்ப்பற்களும் ஆடத்தொடங்கி விட்டன, அதற்காக வெற்றிலை போட்டுக்கொள்வதை விட்டு விட முடியுமா என்ன? வெற்றிலை பாக்கு என எல்லாவற்றையும் மொத்தமாகச் சதைத்து பல்லுக்குப் பதமாகப் போட்டுக்கொள்வார். தரையில் வைத்து இடிக்க வேண்டியிருக்கிறதே என மும்பையிலிருந்து ஒரு முறை இடி உரல் வாங்கிக்கொடுத்தேன். ஊஹூம்… “எல.. அது வாட்டமா இல்லல” என்று ஒதுக்கிப்போட்டு விட்டார். எந்த நேரமானாலும் சரி, ஆச்சி வெற்றிலை போட்டுக்கொள்ளப்போகிறார் என்றால், திருக்கழுக்குன்றம் கழுகு மாதிரி என் பெண்ணும் போய் ஒரு விள்ளல் வெற்றிலைக்கு கை நீட்டி நிற்பாள். என் அம்மாவின் அம்மாவான பொன்னம்மா ஆச்சிக்கு ‘வெத்தல ஆச்சி” என்று பெயரிட்டவள் என் மகள்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என் அப்பா அம்மா இரண்டு பேருக்குமே நெல்லை மாவட்டத்திலுள்ள “தெற்கு வள்ளியூர்”தான் சொந்த ஊர். இரண்டு பேரும் ஒரே ஊர்க்காரர்கள். சுற்றி வளைத்து சொந்தம் வேறு. அப்பா வீடு இருந்தது கீழத்தெரு என்றால் அம்மா வீடு இருந்தது பிள்ளையார் கோவில் தெரு என்றழைக்கப்பட்ட நடுத்தெரு. அப்போது நாங்கள் நாகர்கோவிலில் வசித்து வந்தோம். நினைத்துக்கொண்டால் எங்களைப்பார்க்க பொன்னம்மா ஆச்சி கிளம்பி வந்து விடுவார்கள். கிராமத்திலிருந்து யாராவது எங்கள் வீட்டுக்கு வந்தால் எங்களுக்கு ஒரே குஷிதான். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, சீம்பால், கோவில் கொடை கழிந்த மறுநாள் படைப்புச்சோறு என ஏதாவது கொண்டு வருவார்கள். முக்கியமாக ஆச்சி எங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் தினங்களில் படிக்க வேண்டாம், அந்தக்காலத்திலெல்லாம் மருமகன் முன் மாமியார் வர மாட்டார், அதே போல் மாமியார் வந்திருக்கிறார் என்றால் மருமகனும் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆச்சி எங்களைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஆனால் குரங்குச்சேட்டை செய்யும் எங்களை, கண்களாலேயே கண்டித்து அடக்கி வைக்கும் சாமர்த்தியம் இருந்தது அவரிடம். ரொம்பவும் ஆட்டம் போட்டால், “அதென்னங்கேன் ஒரே வாக்குல?” என்று ஒரு அதட்டுப்போடுவார். அவ்வளவுதான் கப்சிப்பென அடங்கி விடுவோம். கொள்ளை கொள்ளையாய்ப்பாசமுண்டு பேரக்குழந்தைகளிடம். ஆச்சிக்கு, மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் என ஐந்து குழந்தைகளிருந்தாலும் இரண்டாவது மகளான என் அம்மாவின் வீட்டுக்கு வரும்போதுதான் சற்று ரிலாக்ஸாக இருப்பார் எனத்தோன்றும். மற்ற பிள்ளைகளின் வீடுகளுக்குப்போனால் நாட்கணக்கில் மட்டுமே இருப்பவர் எங்கள் வீட்டுக்கு வந்தால் வாரக்கணக்கில் இருப்பார், அதுவும் என் திருமணத்திற்குப்பிறகு மாதக்கணக்கில் இருந்தார். அதென்னவோ?! எங்கள் வீடு அவருக்கு ரொம்பவும் சௌகரியமாக இருந்தது. எப்போது பார்த்தாலும் எசலிக்கொண்டே இருந்தாலும் என் இரண்டாவது தம்பி ஆச்சியை நன்கு கவனித்துக்கொள்வான். ஊரிலிருந்து நான் மும்பைக்குத்திரும்பும்போதெல்லாம், "அடுத்த தவண நீ வரேல்ல நான் இருப்பனோ இல்லியோ.. ஒங்கையால ஒரு கப்பு பாலு தந்துட்டுப்போ" என்பார். "இப்பிடியே சொல்லிச்சொல்லி பாலா குடிச்சு ஒடம்பத்தேத்து" என என் இரண்டாவது தம்பி வம்பிழுப்பான். இருவரும் எசலுவதை ரசித்தபடியே நாங்கள் கிளம்புவோம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆச்சி கடுமையான உழைப்பாளி, எனக்கு நினைவு தெரிந்தே முப்பது நாற்பது பசுக்கள், பத்து எருமைகள், அவைகளின் கன்றுக்குட்டிகள், இவை தவிர உழவு மாடுகள், வில்வண்டிக்கான காளைகள் என தொழுவும் முற்றமும் நிறைந்திருந்த காலம் அது. ஆயிரம்தான் உதவிக்கு ஆட்கள் இருந்தாலும், சளைக்காமல் தொழுவில் சாணியள்ளி தோட்டத்திலேயே ஒரு பக்கத்திலிருந்த உரக்குண்டில் போட்டு, மாடுகளைப்பராமரித்து, பால் கறந்து, என காலையிலிருந்து வேலை சரியாக இருக்கும். ஓரளவு சாணியுரம் சேர்ந்ததும், ஓலைப்பெட்டியில் அள்ளிச்சுமந்து போய் வயலில் போட்டு விட்டு வருவாராம். சாணிப்பெட்டி சுமந்தே ஒரு தடவை உச்சந்தலையில் கட்டி வந்து கஷ்டப்பட்டேன் என்றார். “ஒங்க ஆச்சி அப்படில்லாம் கூடமாட கை கொடுத்ததாலதான் நான் மேலும் மேலும் வயலு வாசல்ன்னு பெருகி வளந்தேன்” என பிற்காலத்தில் தாத்தா சொன்னபோது ஆச்சிக்கு நிச்சயம் பூரிப்பாகத்தான் இருந்திருக்கும். மனைவிகளை சுலபத்தில் கணவர்கள் பாராட்டாத காலமாயிற்றே அது. இது போக, வயலில் வேலை செய்பவர்களுக்கு மதியம் சோறு குழம்பு கறி என சமைத்து கொடுத்தனுப்ப வேண்டும். அடுக்களையிலேயே ஒரு பக்கத்தில் வைக்கோலால் மெத்தை போல் பரப்பி அதன் மேல் துணி விரித்து, அதன் மேல் வடித்த சோற்றை மலை போல் கொட்டி வைத்திருப்பார்கள். கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் நீரும் நன்கு வடிந்து விடும். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எனக்கு பன்னிரண்டு பதிமூன்று வயதிருக்கும்.. அப்போது அப்பாவைத்தவிர வீட்டில் எல்லோருக்கும் அம்மை வார்த்திருந்தது. மொத்தம் ஐந்து உருப்படிகள் படுக்கையில் கிடக்கிறோம். பெரிய பெரிய முத்துகளாக நீர்கோத்துக்கொண்டு படாத பாடு பட்டோம். அப்புறம், நாகர்கோவிலில் பெரிய வைத்தியரான கோபாலன் ஆசானைக் கூட்டி வந்து காண்பித்தார் அப்பா. வைத்தியரின் ஆலோசனைப்படி, பெரிய பெரிய வாழையிலைகளில் எண்ணெய் தடவி அதில்தான் என்னைக் கிடத்தியிருந்தார்கள். உடலெங்கும் அரித்துப்பிடுங்கும், இரவும் பகலும் தூங்க இயலாமல் தவிப்பேன். அழுது அரற்றும் என்னை, கையில் வேப்பிலைக்கொத்தை வைத்துக்கொண்டு உடலெங்கும் வருடி வருடி தூங்க வைப்பார். வைத்தியர் கொடுத்த எண்ணெய்யைத் தொட்டுப்போடுவார். நான் கொஞ்சம் கண்ணசரும் நேரம் என் தம்பி ‘ஆச்சி.. மேலு ஊறுது’ என ஆரம்பிப்பான். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இப்படியே விடிய விடிய எங்களுக்குப் பண்டுதம் பார்ப்பார். எங்கள் பக்கத்தில் உக்கார்ந்த மேனிக்கே அரைத்தூக்கம் தூங்குவார். பகலில் அடுக்களை வேலைகளினூடே எங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். முகக்கெட்டு இறங்கி, ஒவ்வொருத்தருக்கும் மூன்று தடவை தலைக்குத்தண்ணீர் ஊற்றி, அம்மன் கோவிலுக்குப் புட்டமது செய்து கொடுத்து எங்களை வீட்டுக்குள் அழைக்கும்வரை ஆச்சி பட்ட பாடுகளை இப்போது நினைக்கும்போது கையெடுத்து வணங்கத்தோன்றுகிறது. இடுப்பு வரை நீண்ட என் கூந்தல் சடை பிடித்துக்கிடந்ததை பாப் வெட்டி விடலாம் என அப்பா சொன்னபோது, “பொம்பளப்புள்ள முடிய வெட்டாண்டாம்’ எனத்தடுத்து விட்டு, ஒரு மாத காலம், தினம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்கெடுத்துக் காப்பாற்றி விட்டார். ஒரே ஒருத்தருக்கு பணிவிடை செய்வதற்கே மூக்கால் அழும் இந்தக்காலத்தில், மூன்று பெண்கள், அவர்களின் பிரசவங்கள், பேரக்குழந்தைகளின் நோக்காடுகள், பேத்திகளின் பிரசவங்கள் என அத்தனையையும் சமாளிக்க வேண்டுமென்றால் உடலில் மட்டுமல்ல மனதிலும் எக்கச்சக்க வலு இருந்தால்தான் செய்ய முடியும். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கைக்குழந்தைகளுக்கு ஆச்சி மருந்து புகட்டும் விதமே அலாதி. கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு பிள்ளையை இடது மடி மேல் வைத்துக்கொண்டு அதன் நீட்டிய கால்களின் மேல் தனது வலது காலைப்போட்டு மிண்டாமல் மிசுங்காமல் பிடித்துக்கொள்வார். அதன் வலதுகை ஆச்சியின் முதுகுப்புறம் கிடக்கும், தனது இடது கையால் பிள்ளையை வளைத்துப்பிடித்து அதன் இடது கையையும் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார். பிள்ளை ஒரு இஞ்ச் கூட அசைய முடியாமல் கிடந்து கத்தும். “கொக்கு வத்த.. குளம் வத்த..” என்று சொல்லிக்கொண்டே, கத்துவதற்காகத் திறக்கும் அதன் வாயில் சங்கில் கரைத்து வைத்திருக்கும் மருந்தைப் புகட்டி விடுவார். அழுது கொண்டேயானாலும் வேறு வழியில்லாமல் அது குடித்தே தீர வேண்டும். பின் நிமிர்த்தி உட்கார வைத்து, முதுகில் தட்டிக்கொடுத்து ஏப்பம் விடச்செய்வார். “மருந்து குடுக்கப்பட்ட ஆளுகள புள்ளேளுக்குப் பிடிக்காது, ஏசும்.. சண்ட புடிக்கும். அதுக்காக குடுக்காம இருக்கப்புடாது’ என்று அறிவுரைப்பார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆச்சி தன் வாழ்நாளில் என்றாவது நன்றாக ஆழ்ந்து உறங்கியிருப்பாரா என்பது சந்தேகமே. பாம்புச்செவி வேறு.. ஒரு சிறு அனக்கத்திற்கும் விழித்துக்கொண்டு விடுவார். என் கணவர் மேல் அதிகப்பிரியம் உண்டு. நான் ஏதாவது குற்றங்குறை சொன்னாலும் அவருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு என்னைச் சமாதானம் செய்வார். ‘ரெண்டியரும் பாம்பேல ஒருத்தர் மொகத்த ஒருத்தர்தான் பாத்துக்கிட்டு கெடக்கணும், சண்ட போட்டுட்டு செவத்தையா பாத்துக்கிட்டு கெடப்பீங்க? ஒத்துமையா இருக்கணும்” என இருவருக்கும் பொதுவாக அறிவுரை சொல்வார். “எல.. அவேன் வெளில வாசல்ல போகப்பட்டவன், ஆயிரம் சடவு இருக்கும். என்னமும் சடைஞ்சு வந்தா, ஒரு சொல்லு சொன்னா.. நீதான் பொறுத்துப்போணும். சடவாறினா கொஞ்ச நேரத்துல தன்னால அமுந்துருவான்’ என வாழ்க்கைப்பாடம் எடுப்பார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொதுவாக, வயதானவர்களுக்கு குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் வழக்கம் வரும். மற்றவர்கள் தங்களை ஒதுக்குகிறார்களோ என நினைத்துக்கொள்வதால் வரும் விளைவு அது எனச்சொல்வார்கள். வெத்தலை ஆச்சிக்கு அந்தப்பழக்கமே கிடையாது. அவர் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு, வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும் கவனிப்பாரே தவிர கேட்காமல் அறிவுரை சொல்வதோ, பிறரிடம் மல்லுக்கட்டுவதோ அறவே கிடையாது. காலையுணவு ஆனதும், வாசல் நடைக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு போக வர இருப்பவர்களை வேடிக்கை பார்ப்பதிலேயே அவரது பொழுது போய் விடும். நாங்கள் மும்பையிலிருந்து ஊருக்குப்போகும்போது, அந்தத்திண்ணையில்தான் காத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். போனதும், ‘எல.. சோமாயிருக்கியா?” என கைகளைப்பிடித்துக்கொண்டு விசாரிப்பார். அப்புறம் கொள்ளுப்பேரக்குழந்தைகளிடம் ஒரு நிமிடம் கொஞ்சல்.. அவ்வளவுதான். ஆனால், நாங்கள் அந்த வீட்டில் இருக்கிறோம் என்ற அந்த உணர்வே அவரை நிரப்பி விடும். நாங்கள் மும்பைக்குக் கிளம்பிய அடுத்த நாளே, ‘ நான் ஊருக்குக் கெளம்புதேன்’ என்று அவரும் தெற்கு வள்ளியூருக்குக் கிளம்பி விடுவார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உட்கார வைத்து சொல்லிக்கொடுத்ததில்லையே தவிர, அவரைப்பார்த்துக் கற்றுக்கொண்ட ஏராளமான விஷயங்கள் வாழ்வில் கை கொடுத்திருக்கின்றன. சில சமயங்களில், இந்த விஷயத்தை ஆச்சி எப்படி சமாளித்திருப்பார் என நினைக்கும்போதே அதற்கான தீர்வும் கிடைத்து விடும். படு சிக்கனப்பேர்வழி. வெறும் இரண்டு பக்கெட் தண்ணீரை வைத்துக்கொண்டே அத்தனை பாத்திரங்களையும் சுத்தமாகக் கழுவி வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து விடுவார். “அடுப்படி சுத்தமா இருந்தாத்தான் சீதேவி தங்குவா” என்பார். தீபாவளி வந்தால், அண்டா அண்டாவாக கை முறுக்கும், அதிரசமும் முந்திரிக்கொத்தும் செய்து, பெண்கள் வீட்டுக்குக் கணிசமாகக் கொடுத்து விடுவார். ஆச்சி கொடுத்து விடும் முறுக்கே எங்களுக்கு ஒரு மாத காலத்துக்கு வைத்துத்தின்னும் அளவுக்கு வரும். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அந்தக்காலத்து மனுஷி, வயதில் பெரியவர் அதனால் ரொம்பவும் பயந்துகொண்டு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஆச்சியிடம் கிடையாது, ஒரு ஃப்ரெண்டிடம் பேசுவது போல் பேசுவோம். கடைசித்தம்பியின் திருமணம் முடிந்த இரண்டொரு நாளில் மறுவீடு கிளம்பினோம். வேன் கிளம்பிய சிறிது நேரத்தில் தம்பி மனைவிக்கு தூக்கம் சொக்கியது, தூங்கித்தூங்கி விழுவதும் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு, ‘ஐயோ.. எல்லோர் முன்னாலும் தூங்குகிறோமே’ எனவுமாக அவஸ்தைப்பட்டாள். நாங்களெல்லாம் இதைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தோம். அவர்களுக்குப் பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் சட்டென்று சற்று முன்னால் நகர்ந்து, புதுப்பெண்ணின் தலையை புதுமாப்பிள்ளையின் தோளில் சாய்த்து, “இனும தூங்கு, தூத்துடி வந்ததும் எழுப்புதோம்” என்று இதமாகச்சொன்ன மாடர்ன் ஆச்சி அவர்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தாயம், பல்லாங்குழி விளையாடுவதில் சமர்த்தர். பல்லாங்குழி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எங்கள் குழிகளிலிருந்த முத்துக்கள் எல்லாமே ஆச்சியின் கைவசமாகி விடும். மூன்று நான்கு குழிகள் தர்க்கத்தில் கிடக்கும் எங்கள் பக்கம் அடுத்த ரவுண்டில் மிச்சம் மீதியிருப்பதையும் பறி கொடுத்து விட்டு கஞ்சி காய்ச்சிக்கொண்டிருக்கும். தன்னைப்புரட்டிப்போட்ட வாழ்க்கையையும் ஆச்சி அப்படித்தான் வெற்றி கொண்டார். மூன்று பெண்பிள்ளைகளுக்குப் பிறகு ஆண் வாரிசு இல்லையே என கவலைப்பட்ட தாத்தாவுக்கும் ஆச்சிக்கும் வெகு காலத்திற்குப்பிறகு, கிட்டத்தட்ட மூத்தமகளுக்குத் திருமண வயது வந்த பிறகு இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தனர். இந்த இடைவெளியில் ஆச்சி சந்தித்த கசப்பான அனுபவங்கள் எக்கச்சக்கம். ஆச்சியின் அம்மாவே அவருக்கு சக்களத்தி கொண்டு வர முயன்ற சம்பவமும் நடந்தது. தனக்குத் துரோகமிழைத்த அன்னையின் இறுதி மூச்சு நிற்கும் வரை அவரிடம் ஆச்சி பேசவுமில்லை, அவரது முகத்தைப் பார்க்கவுமில்லை. தன் அன்னையை பொன்னம்மா ஆச்சி மன்னித்தாரா இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆனால், தங்கள் வாழ்வில் நடந்த அந்த அனுபவங்களின் சிறு சாயல் கூட எங்கேயும் எச்சந்தர்ப்பத்திலும் பிரதிபலிக்க ஆச்சி விட்டதில்லை. தாத்தாவை எங்கேயும் யாரிடமும் விட்டுக்கொடுத்ததில்லை. அவர்களின் இறுதி மூச்சு வரைக்கும் எப்போதும்போல் அன்யோன்யமாகவும் கேலியும் கிண்டலுமாகத்தான் அவர்கள் வாழ்வு நிறைந்தது. "என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மைய்யி.." என்ற பாட்டு தாத்தாவுக்கு ரொம்பப்பிடிக்கும். அதில் வரும் "நாக்கு செவந்த புள்ள பொன்னம்மா.." என்ற வரியை தன் பேரனோடு சேர்ந்து கொண்டு பாடி ஆச்சியை வம்பிழுப்பார். கருத்த முகத்தில் நாணத்தின் செம்மை படர "சும்மாருங்க.." என ஆச்சி சிணுங்கும் அழகே அழகு. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div>எந்தச்சூழலுக்கும் தன்னைப் பொருத்திக்கொள்பவர். இல்லையென்றால், எல்லாப்பிள்ளைகளுக்கும் திருமணமாகிப்போய், தாத்தாவும் போய்ச்சேர்ந்த பின் கடல் மாதிரியான அத்தனை பெரிய வீட்டில் தன்னந்தனியாக இருக்கும் நெஞ்சுரம் வாய்த்திருக்குமா என்ன? ஊரெங்கும் சுற்றிச்சூழ சொந்தக்காரர்கள் இருப்பதும் இரண்டு தம்பிகளின் வீடுகளும் எதிரிலும் பக்கத்திலுமே இருப்பதே பெரிய பலமாக உணர்ந்தவர், ‘எண்ணைக்காது காலைல வாசநட தொறக்கலைண்ணா ஒரு எட்டு வந்து பாத்துரு” என தன் தம்பியின் மனைவியிடம் சொல்லித்தான் வைத்திருந்தார். ஆனால், அதற்கு அவசியமே இல்லாது, ஒரு நாள் காலையுணவை தானே சமைத்து உண்டபின் தம்பியின் வீட்டுக்கு வந்து பாடு பேசிக்கொண்டிருந்தவர், “வீட்டுக்குப்போறேன்’ என எழுந்தவர் சுருண்டு விழுந்து அந்த நிமிடத்திலேயே மாஸிவ் ஹார்ட் அட்டாக்கில் போய் விட்டார். ‘கெடைல விழாம போயிரணும்’ என அவர் விரும்பிய வண்ணமே இறப்பும் அமைந்தது. </div><div><br /></div><div>காலம் முழுக்க ஓடியாடி உழைத்த அந்த ஜீவன் விடைபெற்றுப் புறப்பட்ட போது கொட்டுமேளத்துடன் கோலாகலமாக வழியனுப்பி வைத்தனர் எனக் கேள்விப்பட்டேன். கேள்விப்பட்டேன்தான்... கடைசி முறையாக அந்த முகத்தைப் பார்க்கக் கொடுப்பினையில்லை. ஆச்சியை எப்போது நினைத்தாலும் அந்த மலர்ந்த முகம்தான் ஞாபகத்துக்கு வர வேண்டுமென்பதற்காகத்தான் ஒரு வேளை நேரில் செல்ல வாய்க்கவில்லையோ என்னவோ?!!</div></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4092953931731306702023-08-24T10:00:00.001+05:302023-08-24T10:00:00.142+05:30கனிவு - வண்ணதாசன்(புத்தக மதிப்புரை)<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4CsGYFAVA0NPtUP6dfVTzXbUAd7q5AyECUlXL1Bik7hLl8dCR-Cl8dk30mKM8dKSHWIDtbznhfHVxxNt0tKYunoX2RsFA83rlBIhQxLmi23aEHKKq2mM4LKwJB3EQ9CdtPZXg34JsyWrReg-jS5G6BKD2sLdt9a6sw3VXhXdoKVxmOiny17LZ62HK61w/s241/kanivu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="241" data-original-width="164" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4CsGYFAVA0NPtUP6dfVTzXbUAd7q5AyECUlXL1Bik7hLl8dCR-Cl8dk30mKM8dKSHWIDtbznhfHVxxNt0tKYunoX2RsFA83rlBIhQxLmi23aEHKKq2mM4LKwJB3EQ9CdtPZXg34JsyWrReg-jS5G6BKD2sLdt9a6sw3VXhXdoKVxmOiny17LZ62HK61w/s1600/kanivu.jpg" width="164" /></a></div><br /><div style="text-align: justify;">அன்பு ஒன்றே நிலையானது, எதிர்பார்ப்புகளற்ற அன்பு என்பது கொடுத்துக்கொடுத்து வளர்வது. அப்படிப்பட்ட அன்பினால் நிரம்பியவர்கள்தான் வண்ணதாசனின் மனிதர்கள். அந்த மனிதர்களின் வாழ்வியல் சித்திரங்களின் ஒரு துளியே “கனிவு” என்ற இந்த சிறுகதைத்தொகுப்பு. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் உதயம், இதயம், தாய், குங்குமம், குமுதம், இந்தியா டுடே, சுபமங்களா மற்றும் காலச்சுவடு இதழ்களில் வெளியானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஒன்றான 'கனிவு' என்பதே இத்தொகுப்பின் பெயராகவும் அமைந்துள்ளது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மனம் நொந்து இருப்பவர்கள், வயதானவர்கள், நோயாளியாய் படுக்கையில் இருப்பவர்கள், இவர்களின் கைகளை ஆதரவாய்ச் சற்று நேரம் பற்றியிருப்பதை விடப் பெரிய ஆறுதலை நம் வார்த்தைகள் தந்து விடாது. கவலை, துக்கம், கண்ணீர், சந்தோஷம் என எந்த வகையான உணர்வுகளுக்கு ஆட்படும்போதும் ஒரு கரம் வந்து நம் விரல்களைக் கோர்த்துக்கொள்ளுமேயானால் அதை விடப் பேறு என்ன உண்டு?! வண்ணதாசனின் மனிதர்களுக்கோ இவை எதுவுமில்லாவிட்டாலும் சக மனிதகர்களின் கைகளைப் பிடித்திருப்பதே ஒரு பெரும் ஆறுதலளிக்கிறது, ‘பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி’ என்ற கண்ணதாசனின் வரிகளைப்போல.. சும்மா அருகிலிருப்பதே பெரும் நிறைவாய்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மொத்தம் பதினாறு கதைகளைக்கொண்ட இத்தொகுப்பில் வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு வாழ்க்கை ஆனால் அனைவருக்கும் ஒரே முகம். அன்பின் முகம். அன்பு கனிந்த குரல். இனிமேல் நவ்வாப்பழம் என்றதும் ஈஸ்வரியையும் ஆலங்கட்டி மழை என்றதும் பரமாவையும் நினைவிற்கு இழுத்து வந்து விடும் அந்தப் பசலிக்கொடி. வாழ்விலும் நீந்திக் கரையேறக் கற்றுக்கொடுக்கும் மகாதேவன் பிள்ளை போன்ற ஒருவர் எல்லோர் வாழ்விலும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அளவுக்கதிகமாக எது கிடைத்தாலும் சில சமயம் மூச்சு முட்ட வைக்கும். தைப்பூச மண்டபம் முங்க வெள்ளம் கரை புரண்டு வரும் தாமிரபரணி, கரையிலிருப்பவற்றைச் சேதப்படுத்துவது போல அளவுக்கதிகமான அன்பும் ஒருவரை மூச்சு முட்டச்செய்து விடக்கூடாது. ஊற்றெடுத்து நிரம்பித்தளும்பும் தனலட்சுமியின் அன்பும் அதனாலேயே அவரது துக்கம் படர்ந்து பரவுவதும் அப்படிப்பட்டவையே. காலம் முழுக்க உலகுவின் நிம்மதி பறிபோனதற்குக் காரணம் புரிந்து கொள்ளப்படாத அவரது தூய அன்பா! அல்லது அவரது அன்பை இன்னொரு பெண்ணுடன் பகிர விரும்பாத அவரது மனைவியின் அன்பா?! என்னதான் சிறகுகள் விலாப்புறத்திலிருந்து முளைத்துப் பறக்க எத்தனித்தாலும் இக்காரஸ் போல கரிந்து கீழே விழுபவர்கள்தான் அனேகம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“ஆம்பூர் தர்மசங்கரய்யர் பார்த்ததையும் நான் பார்த்ததையும் வடக்கின் இளம் குருத்துகள் பார்த்திருக்க முடியாது”</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“ஒப்புக்கொள்கிறேன், இந்த டில்லிச்சிறுமி பார்க்கிறதை உங்களைப்போன்ற பேர்கள் பார்த்திருக்கவும் அதே நேரத்தில் முடியாது”</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“கனிவு” சிறுகதையில் சங்கரய்யரின் பேத்திக்கும் பெரிய ஆயானுக்கும் நடக்கும் இந்த உரையாடலில்தான் எத்தனை அர்த்தமும் நெருக்கமும் பொதிந்துள்ளது. அதுதானே அவரை தனது இருண்ட பக்கங்களை அவளிடம் திறந்து காட்டுமளவுக்குத் துணியச்செய்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வண்ணதாசன் எனும் எழுத்தாளருக்குள் இருக்கும் கல்யாண்ஜி என்றொரு கவிஞரும் அவ்வப்போது தரிசனமளிக்கிறார். படிமங்களும் குறியீடுகளும் நிரம்பிய இந்த சிறுகதைத்தொகுப்பு இனியதொரு வாசிப்பனுபவத்தைத்தருகிறது. அவரது கதைகளிலும் கவிதைகளிலும் தவறாமல் இடம் பெறும் வாதாங்கொட்டை மரத்தையும் காய்களையும் இலைகளையும் போல நீங்காத இன்னொரு இடத்தைப் பிடிப்பது பேரன்பு. பாலத்தைப்பார்த்தாலே ஆற்றைப் பார்த்தாற்போலதான் என்பது போல் இப்போதெல்லாம் வாதாங்கொட்டை மரத்தையும் மரமல்லிப்பூக்களையும் பார்த்தாலே பேரன்பின் அடையாளமான வண்ணதாசன் ஐயாவைப் பார்த்தது போன்றுதான் என்றே எனக்குத்தோன்றுகிறது.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25574167569227067652023-08-19T10:00:00.002+05:302023-08-19T10:00:00.148+05:30நினைவில் நின்றவர்கள் 3 - குட்டன்<div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இரண்டு வயதுக்குழந்தையாக இருந்த பருவத்தில் அவனுக்குத்தெரியாமல் வீட்டில் எங்கேயும் முந்திரிப்பருப்போ, அல்லது காஜுகத்லியோ ஒளித்து வைத்து விட முடியாது. குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்தாலும் திறந்து அதன் தட்டுகளில் ஏறி தேடி எடுத்துக்கொண்டு விடுவான் குட்டன்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இவனுக்கும் எங்களுக்கும் ஏதோவொரு ஜென்மத்தில் ரத்த பந்தம் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில், எங்கோ ராஜஸ்தானைப்பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் குடும்பமும், தமிழ்நாட்டில் பிறந்த எங்கள் குடும்பமும் மஹாராஷ்ட்ராவில் சந்தித்து, தாயும் பிள்ளையுமாகப் பழகியிருக்க முடியுமா? கருவில் அவன் உருவான நாளிலிருந்தே அவனுக்காக அனைவரும் காத்திருந்தோம். அவன் பிறப்பதற்கு முன்பே ஆண்குழந்தைதான் பிறக்கப்போகிறது என அனைவருக்கும் தெரியும். ஆணாக இருந்ததால்தான் பூமியைப் பார்ப்பதற்கே அனுமதிக்கப்பட்டது அந்தக்கரு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வீட்டில் பணிப்பெண் இருந்தபோதும், சுகப்பிரசவமாக வேண்டுமென மாங்கு மாங்கென வேலைகளைச்செய்வாள் அவன் அம்மா. தாய் சுறுசுறுப்பாக இருந்தால்தான் குழந்தையும் சுறுசுறுப்பாக இருப்பானென யாரோ கொளுத்திப்போட்டு விட, மதிய வேளைகளில் தூக்கத்தை வெல்ல, எங்கள் ஃப்ளோரில் நீள் செவ்வகத்துண்டையொத்த நடைபாதையில் இந்தக்கோடிக்கும் அந்தக்கோடிக்குமாய் நடையாய் நடப்பாள், படிக்கட்டுகளில் ஏறியிறங்கி விட்டு மூச்சு வாங்க அமர்ந்திருப்பாள். அந்த கூற்றில் உண்மை இருக்கிறதோ என்னவோ? வெடிவாலாக வந்து பிறந்தான் பயல். குரங்குச்சேட்டையும், செல்லக்குறும்பும் சொல்லி முடியாது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சிறுகுழந்தைகள் மெல்ல மெல்ல தவழ ஆரம்பிக்கும்போது, தன்னைத்தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்குப்போக, வீட்டு வாசற்படியைத்தாண்ட இனிமேல் பெரியவர்களின் உதவி தேவையில்லை எனக் கண்டுகொள்கிறது. இவனும் அப்படித்தான்.. வீட்டுக்குள்ளேயே மெல்ல மெல்ல தவழ்ந்து கொண்டிருந்தவன் ஒரு நாள் வீட்டுக்கு வெளியே செல்லும் வழியையும் கண்டு கொண்டான். கொஞ்சம் அசந்தாலும் வெளியே பாய்ந்து விடுவான். மொத்தம் எட்டு வீடுகளைக்கொண்ட எங்கள் ஃப்ளோரில் எந்த வீட்டுக்கதவு திறந்திருக்கிறதோ அங்கு நுழைந்து விடுவான். கிருஷ்ணனைத்தேடியலையும் யசோதை போல் அவன் அம்மா, “கோல்யா.. கோலு” எனக்கூப்பிட்டபடி இவனைத்தேடியலைவாள். கொழுக்மொழுக்கென மைதா உருண்டை போல் இருப்பதால் ‘கோலு’ என்ற செல்லப்பெயர்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்னதான் தினமும் பார்த்து வந்தாலும் தவழ ஆரம்பித்தபின் எங்களுடன் ‘பச்சக்’ என ஒட்டிக்கொண்டான். எங்கள் வீட்டின் ஃபோயர் பகுதி சீலிங்கில் ஒட்டி வைத்திருந்த வண்ணவண்ண சீரியல் லைட்டுகள் மின்னி ஒளிரும்போது தரையிலும் எதிரொளிக்கும். அதோடு விளையாடுவது அவனது தினசரி பொழுதுபோக்கு. ‘ஆ..’வென வாய்பிளந்து அதையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருப்பவன் அதைப்பிடிக்கவும் முயல்வான். கையில் அகப்படாத கோபத்தில் ஓவென கச்சேரி வைக்கத்துவங்குவான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி அத்துடன் சர்க்கரை சேர்த்த ஜூஸ் என்றால் மிகப்பிரியம் அவனுக்கு. மதியம் பள்ளி விட்டு வீடு வரும் என் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும்போது ஒரு நாள் அவனுக்கும் கொடுத்தேன். பயலுக்கு ருசி நாக்கில் ஒட்டிக்கொண்டது. அவன் அம்மாவின் அனுமதியுடன் தினமும் கொடுத்தேன். “அண்ணி,.. வீட்ல தக்காளிக்கூடையைக் கண்டாலே கை நீட்டி என்னவோ சொல்றான், கூடையை இழுத்துப்போடறான். நீங்க பழக்கி வெச்சுட்டீங்க இப்ப என்னைப்படுத்தறான்” என அவன் அம்மா செல்லமாய் அலுத்துக்கொண்டாள். சிரித்துக்கொண்டேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“பன்ட்டி ஔர் பப்லி” என்றொரு ஹிந்திப்படம் ரிலீசாகியிருந்தது. ஐஸ்வர்யா ராய், பின்னாளில் கணவராகப்போகும் அபிஷேக் பச்சனுடனும், மாமனாராகப்போகும் அமிதாப் பச்சனுடனும், தங்களுக்குள் பின்னாளில் இப்படியொரு உறவு ஏற்படப்போகிறது என்பதை அறியுமுன் நடிகர்களாக மட்டுமே இருந்த காலகட்டத்தில் “கஜ்ரா ரே.. கஜ்ரா ரே..” என்றொரு பாடலுக்கு ஆடி, அது வைரலாகப் பரவியிருந்த சமயம். குடியிருப்புகளில் நடைபெறும் விழாக்களில் இந்தப்பாடலுக்கான ஆடல் கண்டிப்பாக இடம்பெறும். அந்தப்படியே என் மகளும், கோலுவின் சகோதரியும் இன்னுமொரு சிறுமியுமாக மேடையில் ஏறிய அடுத்த நிமிடம் இவன் வாயைத்திறந்து சைரன் ஒலிக்க விட்டான். மேடையில் அவர்களுடன் ஆட வேண்டுமென்று ஒரே பிடிவாதம். எந்த சமாதானமும் எடுபடவில்லை. கடைசியில் அவன் அம்மா, மேடையில் ஏற்றி விட்டு விட்டார். அந்த நடனத்தில் “வாவ்.. வாவ்.. வாவ்” என்று புகழ்வது போல் ஒரு வரி வரும். சரியாக அந்த வரி வரும் வரை சும்மா நின்று கொண்டிருந்தவன், “வாவ்.. வாவ்..” என அபிநயித்து விட்டுப் பெருமையுடன் பார்த்தான். ‘குழந்தை செம ஸ்மார்ட்” என வியந்து வெடித்துச்சிரித்தது கூட்டம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நம்மூர் அயிட்டங்கள் எல்லாமும் பிடிக்குமென்றாலும் தயிர்சாதமென்றால் வெளுத்து வாங்குவான். அக்கா.. அக்கா.. என என் மகளுடன் இழைவான், ஆனால், என் கணவரிடமோ அல்லது என் மகனுடனோ அதிகம் ஒட்ட மாட்டான். அப்படிப்பட்டவன் ஒரு நாள் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் மகள் அவனிடம், </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“டேய்.. ஒரு துண்டு குட்றா” என கவுண்டமணி செந்திலிடம் கெஞ்சுவது போல் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">திரும்பி முதுகைக்காட்டிக்கொண்டு அமர்ந்து தின்னத்தொடங்கினான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என் மகள் மறுபடியும், “தின்னத்தா.. தின்னத்தா..” என பழைய பல்லவியைப் பாடத்தொடங்கினாள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொடியன் எழுந்து நேராக என் மகனிடம் சென்று அமர்ந்தான், பாக்கெட்டுக்குள் கையை விட்டு கை நிறைய அள்ளினான், பலவந்தமாக என் மகனுக்கு ஊட்டினான். முழுவதும் ஊட்டி முடித்து விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி “அக்கா.. உனக்கு வேணுமா? இந்தா” என்றவன் பாக்கெட்டில் ஒட்டியிருந்த அணுவிலும் சிறிய ஒரு துகளை விரல் நுனியால் ஒற்றியெடுத்து “இந்தா” என நீட்டினானே பார்க்க வேண்டும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கோகுலத்துக்கிருஷ்ணனுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல இவனது லீலைகள். ஒரு நாள், பெட்ரூமின் சன்ஷேடில் இறங்கி கமுக்கமாக அமர்ந்து கொண்டான். வீட்டில் ஆள் அனக்கத்தைக்காணோமேயென, எங்கள் வீட்டுக்கு வந்திருக்கலாமென அவன் அம்மா வந்து தேடினார். “இங்கே வரலை..” என்றதும் அவன் போக சாத்தியமுள்ள எல்லா வீடுகளுக்கும் போய்த் தேட ஆரம்பித்தார். எங்கேயும் கிடைக்கவில்லை என்றதும் பயம் பற்றிக்கொள்ள அழ ஆரம்பித்தார். ஆண்கள், வீட்டின் அருகிலிருந்த சாக்கடைப்பக்கம், குடியிருப்பின் நிலவறை தண்ணீர் டாங்க் எனத் தேட ஆரம்பித்தார்கள். அழுதழுது அவன் அம்மாவின் முகம் வீங்கியது. “புள்ளய கவனிக்கறத விட உனக்கு என்ன பெரிய சோலி?” என வயதான பெண்கள் கடிந்து கொண்டார்கள். இந்த களேபரத்தின்போது, அவன் அக்கா எதற்கோ பெட்ரூம் சன்ஷேட் பக்கம் எட்டிப்பார்க்க.. பயல் பொங்கும் சிரிப்பைக் கையால் பொத்தி அடக்கிக்கொண்டு குலுங்கிச்சிரித்துக்கொண்டிருந்தான். அப்புறமென்ன? ஆளும் பேருமாக வந்து அவனை வீட்டுக்குள் இழுத்துப்போட்டார்கள், எல்லோரும் போனபின் அவனை அன்னை வெளுத்தெடுத்தாள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">காலையில் விடிந்ததிலிருந்து இரவு பொழுது அடைவது வரை எங்கள் வீட்டிலேயே கிடப்பதால் அவன் அம்மா, “க்ருஷ்ணனை யசோதா வளர்க்கறது போல, இவனை நீங்க வளர்க்கறீங்க” என்று சொல்வாள். இப்போதும் அவனைப்பற்றி என்னிடம் குறிப்பிடும்போது, “அவன் முதலில் உங்க புள்ள, அப்புறம்தான் என் பையன்” என்றுதான் குறிப்பிடுவாள். ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும். “அண்ணி.. அண்ணி..” எனக்கூப்பிடும் குரல் கேட்டு கதவைத்திறந்தேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பொட்டுத்துணியில்லாமல் இவன் நிற்கிறான், ‘இவனை என்ன செய்ய?’ என்ற முகபாவத்துடன் அவன் அம்மா அருகில் நிற்கிறாள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“என்னடா?.. தூக்கம் வரலையா? எங்க வீட்ல தூங்கறியா? உள்ளே வா. ஊஞ்சல்ல படுத்துக்கறியா? இல்லே ஏசில படுத்துக்கறியா” என அழைத்தேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">‘உம்புள்ள பண்ணியிருக்கற காரியத்தப்பாரு..” என்றபடி அவனைத் திரும்பி நிற்கச்செய்தாள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“ஐயோ..” என முதலில் கத்தி விட்டேன். வடிவேல் ஒரு படத்தில் கட்டியிருப்பாரே அதைப்போல், பின்பக்கம் இடுப்புப்பகுதி முழுவதும் பெரிய பேண்டேஜால் மூடியிருந்தது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“என்ன பண்ணினான்?”</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“கதவு சுவரில் அடிச்சுக்காம இருக்க, காந்தம் கொண்ட ஸ்டாப்பர் பதிச்சுருப்போமில்லே. அது மேல போய் குதிரை உட்காரப்பாத்திருக்கான். வழுக்கி விழுந்து கூரான பாகம் கிழிச்சுருச்சு. இப்பத்தான் அவங்க பெரியப்பாட்ட போய் ட்ரெஸ்ஸிங்க், டெட்டனஸ் ஊசி எல்லாம் போட்டுட்டு வந்தோம்.. நீங்களும் பாத்து ரசிங்க” என்றாள். அந்த பெரியப்பா, தம்பி பிள்ளைக்கு வைத்தியம் பார்க்கவே குழந்தை மருத்துவராகியிருப்பார் போலிருக்கிறது. அந்தத்தழும்பு ரொம்ப நாளைக்கு மறையாமல் இருந்ததால், அவனுக்கு, “ஹாரி பாட்டர்” என்று செல்லப்பெயரும் வைத்தோம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஹனுமான் என்றால் கொள்ளைப்பிரியம் அவனுக்கு. ஒரு சமயம் அவனது பிறந்த நாளுக்காக, ப்ளாஸ்டிக்கில் செய்த கதாயுதத்தை தெரியாத்தனமாகப் பரிசளித்து விட்டேன். அன்றே, பெரியப்பாவின் மகன் மீது அதைப் பிரயோகித்து, “ஆன்ட்டி, நல்லா ஸ்ட்ராங்கா உள்ள பொருளாத்தான் வாங்கித்தந்திருக்கா, இங்கே பாரு, நெத்தி எப்படிப்புடைச்சுருக்குன்னு” என்று எனக்கு நற்பெயர் வாங்கித்தந்தான். இரண்டு நாட்களுக்கு அவன் பாட்டியின் கண்ணில் அகப்படாமல் தலைமறைவாகத் திரிந்தேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பின்னொரு நாள், அவன் அப்பாவை காலையில் போய் எழுப்பியிருக்கிறான். எழவில்லை, கதாயுதத்துடன் நான் சின்னதொரு விசிலும் வாங்கிக்கொடுத்திருந்தேன். காதருகே கொண்டு சென்று அதைப் பிரயோகித்தான். ‘உய்ங்ங்’ என காது பாடினாலும் பொத்திக்கொண்டு, அவர் பாட்டுக்கு புரண்டு படுத்துக்கொண்டு விடவே, ‘மடேர்’ என்று கதாயுதத்தால் முதுகில் ஒன்று போட்டிருக்கிறான். ‘ஐயோ.. அம்மா..’ என அலறியடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தார். இந்த வீரதீர பராக்கிரமசாலி வெற்றியுடன் அறைக்கு வெளியே நடை போட்டான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பிள்ளைகளின் மேற்படிப்புக்காக, நாங்கள் நவிமும்பைக்குக் குடிபெயர்ந்தோம். அன்றைக்கு அவன் அழுத அழுகை இருக்கிறதே.. அப்பப்பா.. மனதைக்கல்லாக்கிக்கொண்டுதான் கிளம்பினோம். அதன் பின் அங்கே போய் விட்டுத்திரும்பும்போதெல்லாம் கண்கள் கலங்க, உதடு பிதுங்க காரின் கதவைப்பிடித்துக்கொண்டு, பாவம் போல் நிற்பான். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“எங்க வீட்டுக்கு வரியா?” என்று ஒரு முறை கேட்டேன். டக்கென்று பின்சீட்டில் ஏறிக்கொண்டான். அவன் அம்மாவிடம் அனுமதி கேட்கக்கூட இல்லை. விஷயமறிந்து அவன் அம்மா அவசர அவசரமாக மாற்றுடைகளைக்கொண்டு வந்தாள். நவிமும்பையின் அருகிலிருக்கும் பறவைகள் சரணாலயமான “கர்நாலா”வில் நிறைந்திருந்த குரங்குகளையும் அவற்றின் சேட்டையையும் ரொம்பவே ரசித்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இந்த விஷமக்கொடுக்கும் ஒரு விஷயத்திற்குப் பயப்படும். அவன் அம்மா செய்யும் ‘கிச்சடி’ என்ற அயிட்டம்தான் அது. ஒரு கிண்ணத்தில் எடுக்கும்போதே நைசாக நழுவி எங்கள் வீட்டுக்கு ஓடி வந்து, “படார்..’ என கதவையும் அடைத்துக்கொண்டு விடுவான். பின்னாலேயே ஓடி வரும் அவன் அம்மா கோபத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நிற்பாள். “பிடிக்கலைன்னா விடு, இங்கே சாப்பிடட்டும்” என என் பிள்ளைகளுடன் சாப்பிட வைப்பேன். தென்னிந்திய உணவுகளென்றால் அவனுக்குக் கொள்ளைப்பிரியம். “பேசாமல், தென்னிந்தியாவிலேயே அவனுக்குப் பெண் பார்த்துடுங்க அண்ணி. எனக்கு பெண் பார்க்கற தொந்தரவு மிச்சம்” என்பாள் அவன் அம்மா.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">என்னதான் அடிபட்டாலும், எத்தனை பெரிய காயமென்றாலும் லேசில் அழ மாட்டான். குழந்தையாக இருந்த சமயம், “தூ.. த்தீ.. தம்பா” என்று சொல்லிவிட்டு டேபிள், டீப்பாய், ஜன்னல் என எங்கிருந்தாலும் கீழே குதித்து விடுவான். ‘ஒன்.. ட்டூ.. த்ரீ.’ சொல்கிறானாம். இந்த விளையாட்டு ஒரு நாள் விபரீதமாக முடிந்தது. வழக்கம்போல் “தூ.. த்தீ.. தம்பா..” என்று குதித்தவன் விழுந்தது கண்ணாடி டீப்பாயின் மேல். அதன் விளிம்பு நெற்றிப்பொட்டில் வெட்டி முகமே தெரியாத அளவுக்கு ரத்தம் சொட்டுகிறது. பக்கத்து வீட்டு அக்கா படிகாரம் கொண்டு வந்து காயத்தின் மேல் வைக்கிறார்கள். யாரோ ஈரத்துணியைக்கொண்டு வந்து முகத்தைத்துடைக்கிறார்கள். அவன் அம்மா அழுது அரற்றிக்கொண்டு, குழந்தைகள் சிறப்பு மருத்துவரான அவன் பெரியப்பாவுக்குப் போன் செய்கிறாள். நான் அவனை மடியில் வைத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறேன். ஆட்டோ கொண்டு வர யாரோ ஓடுகிறார்கள். இவ்வளவு களேபரத்துக்கும் அவனென்னடாவென்றால், “அப்படி ஓரமாப்போய் விளையாடுங்க” என்ற முகபாவத்துடன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்படிப்பட்ட குழந்தையுடன்தான் விதி மிக மோசமாக விளையாடியிருக்கிறது. கோவாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து ஒரு பக்க இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து ஓரளவு குணமான சமயம் மறுபடி விழுந்து இன்னொரு பக்க இடுப்பெலும்பிலும் முறிவு ஏற்பட்டது. தகடு வைத்து சிகிச்சை செய்த சில காலத்தில் அதில் சீழ் வைக்கவே கிட்டத்தட்ட இடுப்பு எலும்பு வளையம் முழுவதுமே பாதிக்கப்பட்டு மறுபடியும் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. எழுந்து நிற்கவியலாமல் சில காலத்துக்கு சக்கர நாற்காலியின் துணையை நாட வேண்டிய சூழல். அவனைச்சரி செய்து விட வேண்டுமென்பதற்காக, டில்லி, சென்னை, மும்பை என பெரிய பெரிய டாக்டர்களிடமெல்லாம் சிகிச்சைக்காகக் கூட்டிச்சென்று ஓரளவு தேற்றிக்கொண்டு வந்து விட்டார்கள். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வலியையும் வேதனையையும் பொறுத்துக்கொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுக்கும் தயாரான என் வளர்ப்புப்பிள்ளை, எழுபது சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றான். இன்னொரு முறை தப்பித்தவறி விழுந்தால், பெரிய அசம்பாவிதம் நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தார்கள். மூன்று அறுவை சிகிச்சைகளைச் சந்தித்து, செயற்கை இடுப்பு வளையம் பொருத்தப்பட்ட குழந்தைக்கு வாழ்வே போராட்டமாய், எந்த நொடியில் நிரந்தரமாகச் சக்கர நாற்காலியில் அமர நேரிடுமோ என்ற பயத்துடன் அமைவதென்பது பெருங்கொடுமை. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மெதுவாக சுவரைப்பிடித்துக்கொண்டும், பிடிக்காமல் லேசாகத் தடுமாறியும் நடந்தவன் நல்லதொரு பிஸியோதெரப்பிஸ்ட்டின் வழிகாட்டுதலில் படிப்படியாக முன்னேறி இப்போது சைக்கிள், டூ வீலர் ஓட்டுமளவுக்கு குணமாகி இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பி விட்டான். எனினும் இடுப்பு எலும்பு முழுவதையுமே நீக்கி செயற்கை இடுப்பு வளையம் பொருத்தப்பட்டிருப்பதால் அவன் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அத்தனை இடர்களையும் கடந்து, கேலிகளையும் கிண்டல்களையும் புன்முறுவலோடு எதிர்கொண்டு, எதிர்மறைப் பேச்சுகளைப் புறங்கையால் ஒதுக்கித்தள்ளி இன்று அவன் நிமிர்ந்து நிற்கிறானென்றால் அது அவனுடைய தன்னம்பிக்கையாலும் அவனுக்காக எதையும் செய்யத்தயாராயிருக்கும் பெற்றோரின் அன்பினாலும் மட்டுமே. இதோ அடுத்தபடியாக தனது கனவான 'C.A' படிக்க நுழைவுத்தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறான். நிச்சயம் அந்தத்துறையிலும் பெயரெடுக்கும் அளவுக்குச் சாதிப்பான்.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-89955287777053845992023-08-12T11:30:00.001+05:302023-08-12T11:30:00.137+05:30நினைவில் நின்றவர்கள் 2- பில்டர்<div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLpDBflwA2UquFMJKubaDYGaCsFmLPJ4zwcp9hC3l8IXhyYV2c2I6DEfFk5M2M-rQjlR8TihkTyAIuGiWgDi0vQ0X7NovleGShe2IADgmfblS8GNnfY1nfaj2RExtvF_-SQNBNxZ7fkjOKxQIesLBNswhIwNen2SRikayONCtfqgJIvBC4T9AOJqOeukk/s365/builder.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="365" data-original-width="333" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLpDBflwA2UquFMJKubaDYGaCsFmLPJ4zwcp9hC3l8IXhyYV2c2I6DEfFk5M2M-rQjlR8TihkTyAIuGiWgDi0vQ0X7NovleGShe2IADgmfblS8GNnfY1nfaj2RExtvF_-SQNBNxZ7fkjOKxQIesLBNswhIwNen2SRikayONCtfqgJIvBC4T9AOJqOeukk/s320/builder.jpg" width="292" /></a></div><div><br /></div><div>மும்பையின் புறநகர்ப்பகுதியான கல்யாணில், அபார்ட்மெண்ட் எனப்படும் நவீன கூட்டுக்குடித்தனத்தில் எங்கள் வீடு இருந்தது. அபார்ட்மெண்டில் தேர்தல் முறையிலோ அல்லது வாய்மொழி முறையிலோ தலைவர், உபதலைவர், காசாளர், செயலாளர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். தேர்ந்தெடுக்கப்படும் நாளன்று காரசாரமான விவாதங்களும், ஒருவரையொருவர் மட்டந்தட்டி கீழிறக்கிக்கொள்ளும் அவலங்களும் நிகழும். ஒவ்வொரு பில்டிங்கிலுமே பெரிய ஆள் அல்லது அப்படி தன்னை நினைத்துக்கொள்ளும் ஒரு சில்வண்டும் அதற்கு ஜால்ரா தட்டும் ஒரு கூட்டமும் கண்டிப்பாக இருக்கும். </div><div><br /></div><div>அன்றும் அப்படித்தான் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வழக்கம் போல் பெண்கள் கருத்துக்கூறாமல், “அதெல்லாம் ஆம்புளைங்க பாத்துப்பாங்க” என ஒதுங்கி அவரவர் வீடுகளுக்குள் பதுங்கி விட்டனர். இறுதியாக காசாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அடிதடி நிகழாத குறையாக வாக்குவாதம் வலுத்துக்கொண்டிருந்தது. இதற்கு முன்பு இருந்த காசாளருக்கு ஆதரவாக ஒரு சிலரும், எதிராகப் பலரும் வாதித்துக்கொண்டிருந்தனர். “புது பில்டிங்குன்னுதான் பேரு, இப்பவே பல்லிளிக்குது, நிறைய ரிப்பேர் வேல இருக்குது, மக்கள் கொடுத்த பராமரிப்புக்காசை பழைய காஷியர் என்ன பண்ணினார்? இனிமேயும் அந்தாளை நீடிக்க விடக்கூடாது’ என ஒரு கூட்டமும், “சார் பெரிய பில்டராக்கும்.. இதெல்லாம் அவருக்கு தூசு மாதிரி. அவரு நெனைச்சா ஒரு நிமிஷத்துல எல்லா ரிப்பேர் வேலையையும் முடிச்சுருவாரு, ஆனா பாருங்க, அவரு இப்ப பயங்கர பிஸி” என ஜால்ரா கூட்டமும் கத்திக்கொண்டிருக்க நடுவாந்திரமாக அமர்ந்திருந்தார் அவர்.</div><div><br /></div><div>மும்பையின் பெருந்தலைகள் அணியும் வெள்ளை குர்த்தா பைஜாமா, தலையில் மராட்டியர்கள் அணியும் வெள்ளைத்தொப்பி, வாயில் அவ்வப்போது அடக்கிக்கொள்ளும் வெற்றிலை, சில சமயங்களில் கீழுதட்டின் உள்ளே இழுவிக்கொள்ளும் தம்பாக்கு என பக்கா மராட்டிய மண்ணின் மைந்தர். எப்போதுமே வானத்தைப்பார்த்துதான் மிதப்பாக நடப்பார், “என் தகுதிக்கு நான் எங்கே எப்படியிருந்திருக்க வேண்டியவன்!! என் கெரகம் இந்தக் கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேய்ன்” என்ற மனப்பான்மையோடே அலைவார். தானொரு பில்டர் எனவும் கோடிக்கணக்கில் மதிப்புள்ள ப்ரொஜெக்டுகளில் வேலை செய்வதாகவும் அடிக்கடி சொல்லிக்கொள்வார். என் கணவர் வேலைக்குக் கிளம்பும் அதே சமயத்தில்தான் அவரும் கிளம்புவார். “நமஸ்தே சாப்ஜி” என புல்லட்டைத்துடைத்துக்கொண்டே அவர் குரல் கொடுப்பார், “நமஸ்தே நமஸ்தே” என ஸ்கூட்டரைத்துடைத்துக்கொண்டே என் கணவர் பதில் குரல் கொடுப்பார். என் கணவர் மத்திய அரசு அதிகாரி எனத் தெரிந்து கொண்டதிலிருந்து தனி மரியாதை பொங்கி வழிந்தது. அடுத்து வந்த கூட்டத்தில் என் கணவரை காஷியராகவும் ஆக்கினார்.</div><div><br /></div><div>கோடிகளில் புரள்வதாகப் பேசுவாரே தவிர ஆளைப்பார்த்தால் அப்படிச்சொல்ல முடியாது, அவரும் சரி, அவரது குடும்பமும் சரி .. ரொம்பவும் எளிமையான தோற்றத்தில் இருப்பார்கள். வசதி படைத்த பிற வீடுகளைபோல் இண்டீரியர் டெக்கரேஷனும் எதுவுமே கிடையாது. “அங்கே அத்தனை கோடி மதிப்பில் ஒரு குடியிருப்பு கட்டறேன், இங்கே இத்தனை பெரிய குடியிருப்பு கட்டறேன்” என வாய்ப்பேச்சுக் கேட்கும்போதெல்லாம் “இத்தனை பெரிய ஆள், இப்படியொரு சாதாரண குடியிருப்பில் அதுவும் சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் ஏன் இருக்க வேண்டும்? இவருக்கு இருக்கும் வசதிக்கு பங்களாவிலேயோ வில்லாவிலோ இருக்கலாமே?” எனத்தோன்றும். ஆனால் உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டுவதுதான் மும்பை வாழ்க்கை. கொஞ்சம் சம்பாத்தியம் இருக்கிறதென்று வெளியே காட்டிக்கொண்டால் அப்புறம் அண்டர்க்ரவுண்ட் ஆட்களின் தொல்லை ஆரம்பித்து விடும். ஒரு வேளை அதனால்தான் சிம்பிளாக இருக்கிறாரோ என நாங்களே சமாதானமாகிக்கொள்வோம்.</div><div><br /></div><div>குடியிருப்பின் நுழைவுப்பகுதியில் கொஞ்சம் காலியிடம் இருந்தது, அதில் பிள்ளைகள் விளையாட ஊஞ்சல், சீசா போன்றவை அமைக்கலாமென்று குடியிருப்பின் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. ‘நம்ம பில்டிங்க்லயே பில்டர் இருக்கறச்சே வேலைய வெளியாள் கிட்ட ஏன் கொடுக்கணும்? சல்லிசா முடிச்சுத்தரட்டுமே. அவர் பிள்ளைகளும்தானே விளையாடப்போகுது?” என ஆளுக்காள் அபிப்ராயப்பட்டார்கள், அவரிடம் சொன்னபோது, “அதுக்கென்ன பேஷா செஞ்சுட்டாப்போச்சு, இப்ப மெட்டீரியல் வெலையெல்லாம் ஏறிக்கிடக்கு, சிமெண்டுக்கு தட்டுப்பாடும் இருக்குது, மழைக்காலம் முடிஞ்சு புள்ளையார் சதுர்த்தி, தீபாவளின்னு எல்லாம் முடியட்டும், உடனே வேலையை ஆரம்பிச்சுரலாம். என் கிட்ட இருக்கற வேலையாட்களையே கொண்டு வரேன்” என்றார். மக்களெல்லாம் ஏதோ உடனேயே வேலை முடிந்து விட்டாற்போல் அவ்வளவு சந்தோஷப்பட்டனர்.</div><div><br /></div><div>தீபாவளி முடிந்தது.. வேலை ஆரம்பிப்பதாகக் காணோம். ‘ஆட்களெல்லாம் ஊருக்குப்போயிட்டாங்க, ஜனவரி வாக்கில் திரும்ப வருவாங்க, உடனே ஆரம்பிச்சுரலாம்” என்றார் பந்தாவாக. இப்படியே மாதங்கள் கடந்தன. இதற்கிடையே, எங்கள் குடியிருப்பின் வாட்ச்மேன் பொழுது போகாமல் தோட்டம் போட்டு வைக்க, அங்கே தானாய் முளைத்தது ஒரு அரசங்கன்று. உடனே மக்கள் இங்குள்ள வழக்கப்படி அரசங்கன்றைச் சுற்றி வந்து பூஜை செய்வதும், விளக்குப்போடுவதும், வீட்டிலிருந்து சுவாமி படங்களைக் கொண்டு வந்து வைத்துப்பூஜிப்பதுமாக ஒரு தெய்வீகச் சூழல் அமைந்தது. “அச்சச்சோ!!.. கோவில் மாதிரியே இருக்கே, இந்த இடத்துலயா விளையாட்டுத்திடல் அமைக்கணும்!! கூடாது கூடாது. ப்ரோஜெக்டைக் கேன்சல் பண்ணுங்க” என்றார் பில்டர். “ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன்னு சொன்னாளாம். இன்னா அன்னான்னு கடைசில ஒரு வேலையும் செஞ்சு குடுக்காம ஏமாத்திட்டாரே. இவரு நெஜமாவே பில்டருதானா?” என சிலர் பொருமியது பலர் காதில் விழவேயில்லை.</div><div>ஒரு சில வருடங்களில் பில்டிங்கில் மண்தரையாக இருந்த இடங்களில் மழை காரணமாக சகதியாகிறது, ஆகவே அதை சிமெண்ட் போட்டு பூசி விடலாம் என்றொரு யோசனை ஆலோசிக்கப்பட்டது. அப்போதும் அந்த வேலையையும் பில்டரிடமே கொடுக்கலாம் என்று பேசப்பட்டது. அதிசயமாக பில்டர் அந்த வேலையை உடனே ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல் உடனே வேலையை ஆரம்பிக்கவும் செய்தார். “எனக்கு மணல், சிமெண்ட் எல்லாம் சல்லிசான விலையில் கிடைக்கும், அதனால பட்ஜெட்டுக்குள்ளேயே வேலையை முடித்து விடலாம், ஒண்ணும் கவலைப்படாதீங்க” என்று வாயாலேயே வெல்லப்பாயாசம் காய்ச்சினார். வேலையும் முடிவடைந்து, பில்லை குடியிருப்பில் ஒப்படைத்தார். அப்புறம் விசாரிக்கும்போதுதான் தெரிந்தது, சலுகை விலையில் சிமெண்ட் எதுவும் கிடைக்கவில்லை, மார்க்கெட் விலையில்தான் கிடைத்தது என்று. வேலையிலும் தரமில்லை.. நம்பி கொடுத்த குடியிருப்பு வாசிகள் நொந்து கொண்டனர். ஆனால், இதுவும் பில்டருக்கு சாதகமாகத்தான் அமைந்தது. அவரது புதுக்காரை நிறுத்த இடம் வசதியாக அமைந்து விட்டதே.</div><div><br /></div><div>அந்தக்குடியிருப்பில் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி மட்டுமே உண்டு. பில்டர்தான் முதன்முறையாக குடியிருப்பில் கார் வாங்கியவர். செகண்ட் ஹேண்ட் வண்டிதான் எனினும், தினமும் காலையில் அதற்கு நடைபெறும் சவரட்சணை இருக்கிறதே.. அடடா!!! காணக்கண்கோடி வேண்டும். இண்டு இடுக்கு விடாமல் முதலில் துடைப்பார், பின் ஈரத்துணியால் கண்ணாடிகள், காரின் முன் பின், பக்கவாட்டுப்பகுதிகள் என எல்லாவற்றையும் துடைத்துத்துடைத்து மெருகேற்றுவார். அதன் பின் வண்டியினுள் உட்கார்ந்து இஞ்சினை ஸ்டார்ட் செய்து ஐந்து நிமிடம் ஓட விடுவார். அப்புறம் ரிவர்ஸ் கியரைப்போட்டு பத்தடி பின்னால் ஓட்டுவார், பின் முதல் கியரைப்போட்டு முன்னால் ஓட்டி வண்டியை ஏற்கனவே நின்றிருந்த இடத்தில் நிறுத்தி விட்டு வண்டியை விட்டு இறங்குவார். பின் வண்டியைப்பூட்டிக்கொண்டு பைக்கில் ஏறி கிளம்புவார். தினமும் இப்படித்தான் நடக்குமே தவிர ஒரு நாளாவது குடும்பத்தோடு வெளியே போனதாகவோ, இல்லையெனில் அவர் வெளியே காரில் போனதாகவோ நாங்கள் அந்த குடியிருப்பில் இருந்த வரைக்கும் சரித்திரம் பூகோளம் எதுவும் கிடையாது. பந்தாவுக்காக வாங்கிய கார், ரோட்டில் என்றைக்குமே ஓடவில்லை.</div><div><br /></div><div>பழைய குடிநீர்க்குழாய்களை மாற்றி பெரிய புதுக்குழாய்களைப்பதித்தல், தண்ணீர் டேங்க் ரிப்பேர் என எந்த சிவில் வேலையானாலும், ‘நானாச்சு’ என்று ஒப்புக்கொள்வதும், அதன் பின் வேறொருவரிடம் மாற்றி விட்டு, கை கழுவி விடுவதும் அவருக்கு வாடிக்கை. எப்படியோ வேலை முடிந்தால் சரி என மக்களும் பெரிதாக ரியாக்ட் செய்வதில்லை. ஆனால் என்னவோ தானே எல்லா வேலைகளையும் செய்து தருவதாகப் பீற்றிக்கொள்வார். குடியிருப்பில் கூட்டம் நடக்கும் தினங்களில் தனது பரிவாரம் சூழ வந்து அமர்வதும், வாய்ச்சவடால் விடுவதும், அவரது எதிராளிகளும் ஆதரவாளர்களும் ஒருத்தருக்கொருத்தர் சண்டையிட்டுக்கொள்வதை வேடிக்கை பார்த்து விட்டு, கடைசியில் கிளம்பிச்செல்வதும் வாடிக்கை. குடியிருப்பில் வருடாவருடம் நடக்கும் பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்கு கணிசமான தொகையை அன்பளிப்பாகக் கொடுத்து வந்ததால், பணம் மக்களின் வாயை அடைத்திருந்தது. தவிர, இத்தனை வருடங்களில் அவரது பந்தா காட்டும் குணம் மக்களுக்கு நன்கு புரிந்து போயிருந்ததால் அவர்கள் அதைப் பெரிதாக எண்ணாமல் ‘இவர் இப்படித்தான்’ என்ற முடிவுக்கு வந்திருந்தனர். அதற்கும் வந்தது ஒரு நாள் ஆப்பு. </div><div><br /></div><div>தரைத்தளத்திலிருந்த பில்டருக்கும் நான்காவது மாடியிலிருந்த இன்னொருவருக்கும் ஒத்துப்போகவே போகாது. அடிக்கடி வாய்த்தகராறு நடக்கும். நான்காவது மாடியிலிருந்தவர் கட்டடம் கட்டுபவர்களுக்கு சிமெண்ட், மணல், வீடுகளில் பதிக்கும் குடிநீர்க்குழாய்கள் போன்றவற்றை சப் காண்ட்ராக்ட் முறையில் சப்ளை செய்பவர். சரி,.. ஒரே துறையில் இருப்பவர்களிடம் தொழில்முறை போட்டி பொறாமை இருப்பது சகஜம்தானே என எவருமே அத்தகராறுகளைப் பெரிதாக எண்ணுவது கிடையாது. எப்போதுமே குடியிருப்பின் மாதாந்திரக்கூட்டத்தின் போதுதான் குடியிருப்பு வாசிகளிடையே இருக்கும் வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் சண்டையாக வெடிக்கும். “உன்னைப்பத்தித் தெரியாதா?” என ஆரம்பித்து ஒவ்வொருவரும் எதிராளியின் ஏழு தலைமுறை வரைக்கும் கிழித்துத் தோரணம் கட்டுவர். </div><div><br /></div><div>அப்படியான ஒரு கூட்டத்தின்போதுதான், தனது வீட்டுக்கான மாதாந்திர பராமரிப்புத்தொகையை சப் காண்ட்ராக்டர் சரிவரக்கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டின் மேல் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது பார்த்து பில்டர் ஏதோ வார்த்தையை விட்டு விட, சப் காண்ட்ராக்டர் பாய்ந்து குதறி எடுத்து விட்டார். அவர் சொன்ன வார்த்தைகளில் ஒரு சில மட்டும் குடியிருப்பு வாசிகளின் காதுகளில் நன்கு விழுந்தன.</div><div><br /></div><div>“நீயெல்லாம் என்னத்த பில்டரு? உன் பந்தாவையெல்லாம் மூட்டை கட்டி சாக்கடைல போடு. மொதல்ல நீ ஒரு குடிசை வீடாவது யாருக்காவது கட்டிக்குடுத்திருக்கியா? வீடு கட்டுறதைப்பத்தி உனக்கு ஆனா ஆவன்னாவாவது தெரியுமா? என்னைய மாதிரி நீயும் செங்கல் சப்ளை பண்ற சாதாரண சப் காண்ட்ராக்டர்தானே?”</div><div><br /></div><div>நாலாவது மாடிக்காரர் அடுக்கிக்கொண்டே போனார். பில்டர் அது வரை நிர்மாணித்திருந்த சாம்ராஜ்யத்தின் செங்கற்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழத்தொடங்கின. அதன்பின் அடிக்கடி வெளியே தலைகாட்டுவதேயில்லை. நாங்கள் அந்தக்குடியிருப்பிலிருந்து வேறு பெரிய ஃப்ளாட்டுக்கு மாறிய ஒரு சில வருடங்களிலேயே அவரும் வேறு குடியிருப்புக்குக் குடிபெயர்ந்து விட்டார் எனக்கேள்விப்பட்டோம். புது இடத்தில் என்னவெனச்சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ.. யாருக்குத்தெரியும்!</div></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-6980596097068541542023-08-03T15:55:00.003+05:302023-08-03T15:55:25.670+05:30நினைவில் நின்றவர்கள் 1 - வெங்கிடு<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGtSjFBznYnZhrRES_n_EzG0iJn5dtJ8tdJsM5DLnbwo-hxgvFmMJhDryRZErtIqfzZ5041dBiJi_RwyTuAl2smVbynsRZI2bCrMOD-wDcDcv3goCMfZwamqN1i5Mld2GwWf6TKEw55MprxLM-dPLhiUJdqolYeElh0ZIp1WcBJfQTkNYhKGkwMd-EETM/s394/kid.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="394" data-original-width="256" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGtSjFBznYnZhrRES_n_EzG0iJn5dtJ8tdJsM5DLnbwo-hxgvFmMJhDryRZErtIqfzZ5041dBiJi_RwyTuAl2smVbynsRZI2bCrMOD-wDcDcv3goCMfZwamqN1i5Mld2GwWf6TKEw55MprxLM-dPLhiUJdqolYeElh0ZIp1WcBJfQTkNYhKGkwMd-EETM/s320/kid.jpg" width="208" /></a></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கட்டைகுட்டையான உருவம், உருண்டையான சதுர முகம், எண்ணெய் தேய்த்துப் படிய வாரிய க்ராப்புத்தலை, அரைக்கைச் சட்டை, நிக்கர் , மென்மையான அதிராத பேச்சு, நாஞ்சில் நாட்டுப் பிள்ளைமாருக்கேயுரிய பொது நிறம்.. இப்படித்தான் எனக்கு அறிமுகமானான் வெங்கிட்டு என்ற வெங்கடாச்சலம். பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனக்கு நான்காம் வகுப்பு படிக்கும் வெங்கிட்டு விளையாட்டுத்தோழன் என்றால் இப்போது சிரிப்புத்தான் வருகுது. என் தம்பியின் தோழனாகத்தான் எங்கள் வீட்டுக்கு வந்தான். ஆராம்புளி மாமாவின் கடைக்குட்டிப்பிள்ளையான வெங்கிட்டுக்கு, மூன்று அண்ணன்களும் இரண்டு அக்காக்களும் உண்டு. அத்தனை பேருமே சாதுவான குணம் கொண்டவர்கள். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வெங்கிட்டுக்கு விளையாட்டில் புத்தி போன அளவுக்குப் படிப்பில் போகவில்லை. விளைவு,.. ஒவ்வொரு பரீட்சை முடிவிலும் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்படும்போது எப்படியும் இரண்டு மூன்று சிவப்புக்கோடுகள் அதிலிருக்கும். எப்படியாவது அவனுக்குப் படிப்பில் ஆர்வத்தை உண்டுபண்ணி விட வேண்டுமென்று வீட்டார் முயன்றனர். பலன்தான் கிட்டவில்லை. பரீட்சை முடிவுகள் வெளியாகும் சமயமெல்லாம் அண்ணன்கள் ஒவ்வொருவரும் முறை வைத்துக்கொண்டு அவனை உதைப்பார்கள். “ஐயோ.. அப்பா” என எட்டூருக்குக் கேட்கும் அளவுக்குக் கத்துவானே ஒழிய அந்த அடியெல்லாம் அவனுக்கு உறைக்கவே உறைக்காது. அடித்து ஓய்ந்து அவர்கள் அந்தப்பக்கம் நகர்ந்ததும் இவன் இந்தப்பக்கம் விளையாட ஓடி விடுவான். இத்தனை அடி வாங்கியும் ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே.. ம்ஹூம்.. சரியான கல்லுளி மங்கன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எங்கிருந்துதான் கிடைக்குமோ தெரியாது, நாய், பூனை என ச்சின்னக்குட்டிகளாகக் கொண்டு வருவான். அதுவும் கண் கூட திறக்காத சின்னக்குட்டிகள். பொத்திய கைகளுக்குள் ‘வீச்.. வீச்’ என முனகியபடி அம்மாவின் மடியில் கிடப்பதைப்போன்ற சொகுசுடன் மூக்கை உரசியபடி கிடப்பதைப் பார்க்கவே அவ்வளவு ஆசையாக இருக்கும். “எக்கா.. உங்கூட்டுல வளக்கேளா?” என்று கேட்டபடி கொண்டு வந்து நீட்டுவான். அம்மைக்கோ வளர்ப்புப்பிராணிகள் என்றாலே ஆகவே ஆகாது. ‘அதான் ஏற்கனவே நாலெண்ணத்தைப் போட்டு வளக்கேனே.. காணாதா? இன்னும் புதுசா வேற வேணுமா? நம்மால ஆகாது, கொண்டுக்கிட்டுப்போச்சொல்லு” என்று மறுத்து விடுவாள். அந்த ‘நாலெண்ணம்’ என்பது ஏற்கனவே இருக்கும் வளர்ப்புப்பிராணிகளான நானும் என் தம்பிகளும் என்பதை அறிக.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“ஏன் வெங்குட்டு.. உங்கூட்டுல வளக்கலாம்லா?. நாங்க அங்க வந்து வெளையாடிக்கிடுவோம்லா?” என்றால் “அம்மை உட மாட்டாக்கா” என பாவம்போல் பதிலளிப்பான். கொண்டு வந்ததற்காக அன்று சாயந்திரம் வரைக்கும் வைத்து விளையாடி விட்டு, அவ்வப்போது அம்மையிடம் கெஞ்சிக்கூத்தாடி அதற்குப் பால், சோறு என ஊட்டி விடுவோம். சாயந்திரம் அவன் திரும்பிப்போகும்போது கையோடு அந்தக்குட்டியைத் தூக்கிச்சென்று விடுவான். ‘குட்டியை என்ன செஞ்சே வெங்கிட்டு?’ எனக்கேட்டால், “அதுக்க தள்ளை இல்லாத்த நேரத்துல போயி மத்த குட்டிகளுக்க கூடயே விட்டுட்டேன்” என்பான். “ அடப்பாவி.. அம்மை கிட்டேருந்தா பிரிச்சிக்கொண்டு வந்தே? அது பாத்தா கடிக்குமே” என்ற நம் பதற்றம் அவனை ஒன்றும் செய்யாது. கமுக்கமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டுப்போய் விடுவான். அப்படியென்றால் அடுத்த சில தினங்களிலேயே இன்னொரு குட்டியைக் கொண்டு வரப்போகிறான் என்று அர்த்தம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வளர்ப்புப்பிராணிகள் மேல் பாசம் அதிகம். நாய்க்குட்டிகளைக் கொண்டு வந்து பொறுமையாக உண்ணி பிடுங்குவான், குளிப்பாட்டி அதன் வாலில் ரிப்பன் கட்டி விடுவான், கழுத்தில் பட்டை கட்டவில்லையென்றால் முனிசிபாலிட்டியில் பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள் என்று யாரோ பயமுறுத்தியதற்காக கடையிலிருந்து பட்டை வாங்கி வந்து கட்டி விட்டிருந்தான். எல்லாம் நாலைந்து நாட்கள்தான், “இத எனக்கு வளக்குறதுக்குத் தாயெம்டே” என்று யாராவது கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு தூக்கிக் கொடுத்து விடுவான். நாயோ பூனையோ.. அதன் பல் பட்டாலும் சரி, நகத்தால் கீறி விட்டாலும் சரி, எதையுமே காட்டிக்கொள்ள மாட்டான். வலித்தால் கூட ஆள் நடமாட்டமில்லாத முட்டுச்சந்தில் போய் நின்று அழுவானே தவிர பிறர் முன் தன்னுடைய பலவீனத்தை ஒருபோதும் காட்டிக்கொள்ள மாட்டான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒரு தீபாவளி சமயம்.. காலையில் எண்ணெய் தேய்த்துக்குளித்து முடித்து பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தோம். பெண் குழந்தைகளுக்கு மத்தாப்பு, தரைச்சக்கரம் போன்ற சாத்வீகமான பட்டாசுகளைத்தான் தருவார்களே தவிர வெடிக்கும் பட்டாசுகளைத் தர மாட்டார்கள். நான் சண்டை போட்டு ஒரு சரம் லஷ்மி வெடியை வாங்கி வைத்துக்கொண்டு வெடிக்க வைக்க முயன்று கொண்டிருந்தேன். எப்படியென்றால்,.. ஒரு தாளைக் கிழித்து அதன் மேல் வெடியை வைத்து விட்டு தாளைக் கொளுத்தி விட்டு ஓடி வந்து விடுவேன். தீ கொஞ்சங்கொஞ்சமாகப் பரவி வெடியின் திரியைத்தொடும், அப்புறமென்ன? டமாலென வெடிக்கும். வெடியைக் கையில் வைத்துக்கொண்டு பற்ற வைத்து ஆகாயத்தில் வீசியெறிந்து சாகசம் செய்யும் ஆண்பிள்ளைகள் நடுவே நாங்களும் சளைத்தவர்களில்லை எனக்காட்டும் வீர வேடிக்கைதான் அது. அப்போதுதான் இவன் வந்தான், “ எக்கா.. நீ என்ன லெச்சுமி வெடிய இப்படி வெடிக்கே? நாம்லாம் அணுகுண்டையே கைல வெச்சு வெடிப்பேம் தெரியுமா?” என்றான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“ஆமாடே.. நீ சூரப்புலிதான். இந்தா இந்த பொட்டு வெடிய மொதல்ல பயப்படாம வெடி பாப்பம்”</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“எக்கா, நா வெளையாட்டுக்குச் சொல்லல நானெல்லாம் அணுகுண்டு வெடிக்க பயப்படவே மாட்டேன். ஒண்ணு வெடிச்சுக் காட்டட்டுமா" என்று உதார் வேறு விட்டுக்கொண்டே ஒரு அணுகுண்டைக் கையில் எடுத்தான். சரி,.. ஊதுவத்தியைக் கொடுத்து விட்டு நாம் ஓட்டம் பிடித்து விடலாம் என்று நம்ம்ம்ம்பி கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பினேன். 'பட்ட்டார்' என்றொரு சத்தம் காதைப்பிளந்தது. திடுக்கிட்டுத்திரும்பினால் கொதகொதவென்று வெந்த கையுடன் நிற்கிறார் அண்ணாத்தை. என்னடாவென்றால் அணுகுண்டை கையிலிருக்கும்போதே பற்ற வைத்து தூக்கி எறிந்து ஆகாயத்தில் வெடிக்க வைக்கலாம் என்று நினைத்தாராம். ஃப்ளாப் ஆகிவிட்டதாம். கூலாகச் சொல்கிறார். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"> நன்றாக நாலு திட்டு திட்டிவிட்டு, தரதரவென்று வீட்டுக்குள் இழுத்து வந்து குளிர்ந்த தண்ணீரில் கையை விடச்சொல்லி, பின் இங்க்கையும் நிறைய ஊற்றி, "வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட காமி. மருந்து இருந்தா போட்டு விடுவாங்க. இல்லைனா ஆசுத்திரிக்குப் போ" என்று சொல்லி அனுப்பினேன். இத்தனை களேபரத்திற்கும் பிள்ளையாண்டன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே!! மூச்.. அத்தனை வேதனையையும் எப்படித்தான் அடக்கிக் கொண்டிருந்தானோ. இப்பொழுது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. பின் அவன் அம்மாவிடம் விசாரித்தபோதுதான் அவன் இந்தச்சம்பவத்தை வீட்டில் சொல்லவேயில்லை எனத்தெரிந்தது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“சாப்புடச்செல கைல சோறு பட்டா காந்தும்லாடே? வீட்டுல சொல்லாம முடியுமா?”</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“செண்டக்கா கிட்ட ஊட்டி விடச்சொன்னேன், சோலி முடிஞ்சது” என்று கூலாகச் சொல்லி விட்டுப் போய்க்கொண்டே இருந்தான். கடைக்குட்டி என்ற சலுகையைப் பயன்படுத்தி இரண்டு நாட்களாகச் செல்லங்கொஞ்சியே சமாளித்திருக்கிறான் பயல். அப்புறம் எங்கள் வீட்டிலிருந்த மருந்தைப்போட்டு விட்டது தனிக்கதை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒரு சமயம் எங்கிருந்து கிடைத்ததோ.. ஒரு ஜோடி புறாக்களைக் கொண்டு வந்து தந்தான் வளர்ப்பதற்காக. வீட்டில் புறாக்கூண்டு கிடையாது. அதனாலென்ன? ஒரு அட்டைப்பெட்டியைக் கவிழ்த்துப்போட்டால் போகிறது என்று நானும் அவைகளை வளர்க்கத் தீர்மானித்தேன். அவைகள் வீட்டுக்குள் தத்தித்தத்தி நடமாடுமே தவிர பறக்காது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“இது என்ன சாப்பிடும்டே?” எனக்கேட்டபோது, கொஞ்சம் தலையைச்சொறிந்து கொண்டே யோசித்து விட்டு “சோறு போடலாம்க்கா” என்றான். இவன் சொன்னானென நானும் அரிசி, பயிறு, சோறு போன்றவைகளைப் போட்டு வைத்தேன். அவுக் அவுக்கென கொத்தித்தின்று விட்டு இரண்டும் கண்ணயர்ந்தன. ராத்திரியானதும் தரையில் ஒரு நியூஸ்பேப்பரை விரித்து அதில் இந்தப் புறாக்களை விட்டு அட்டைப்பெட்டியால் மூடி வைத்தேன், விடிந்ததும் பார்த்தால் ஒன்றுதான் இருக்கிறது, இன்னொன்றைக்காணவில்லை. “பூச்ச என்னமும் தூக்கிட்டுப்போயிருக்கும்” என்று அசால்ட்டாக கூறி விட்டு மீதமிருந்த புறாவைத்தூக்கிக்கொண்டு போனான். சாயந்திரமே இரண்டு முயல் குட்டிகளுடன் வந்தான். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“எடே.. மொதல்ல இத கொண்டுக்கிட்டுப்போ.. பாவம் போல இருக்கு, பூச்ச தூக்கிட்டுப்போயிற்றுன்னாக்க பாவம்லா”</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“கெடக்கட்டும்க்கா.. இது குட்டி போட்டு பெருகும். அந்த மாமா வீட்டுல பஞ்சுருண்டை மாதிரி எவ்ளோ கெடக்கு தெரியுமா? நெறைய்ய மொசக்குட்டி இருந்துதுன்னா வெளையாட எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமா?” என்றபடியே கீழே விட்டிருந்த முயல் குட்டியைப் பிடிக்கத்துரத்தினான். அது இவனுக்குப்பயந்து கொண்டு பாத்ரூம் தண்ணீர் வெளியே வருவதற்கென சுவரில் பதிக்கப்பட்டிருந்த குழாய்க்குள் போய்ப்பதுங்கிக்கொண்டது. தரையில் மண்டி போட்டுப் படுத்துக்கொண்டு நாக்கை லேசாகத்துருத்திக்கொண்டு, கையை நீட்டி குழாய்க்குள் விட்டு முயல் குட்டியைப் பிடித்து இழுத்தான். அது பிய்ந்து கையோடு வந்தது.. பயந்து அலறினேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“எக்கா.. அதும் வாலுதான் பிஞ்சு வந்துட்டுது, வளந்துரும்” என்றபடி இன்னும் கொஞ்சம் கையை நீட்டி அதன் காதுகளைப் பிடித்து இழுத்தான். காதும் பிய்ந்து வந்து விடுமோ எனப்பயந்தேன். அப்படியாகாதாம்.. முயலைக் காதைப் பிடித்துதான் தூக்க வேண்டுமாம், பாடமெடுத்தான் பயல். ‘மொதல்ல இதக்கொண்டுட்டுப்போயி எங்கிருந்து கொண்டாந்தியோ அங்கியே விட்டுரு’ என்று துரத்தி விட்டேன். கவலையே படாமல் முயல்குட்டிகளைத் தூக்கிக்கொண்டு போனான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“கேரம் போடு கொண்டு வந்துருக்கேன், வெளையாடலாமா?” என்றபடி நிற்பான் ஒரு நாள். காய் அவனுக்கு சாதகமாக விழவில்லையெனில், “போர்டு சரியில்லக்கா, பவுடரு போட்டுக்கிடுதேன்” என்றபடி அத்தனை காய்களையும் கலைத்து எடுத்து வெளியே வைத்து விட்டு, சாக்பவுடரைக்கொட்டி பூசி மெழுகி, தரையெல்லாம் இழுகி வீட்டிலுள்ளவர்களிடம் திட்டு வாங்கி வைப்பான். தோற்பது போல் ஆட்டம் செல்கிறது எனில், “அம்ம சாப்பிடக்கூப்ட்டா.. வீட்டுக்குப்போறேன்” என்று ஆட்டையைக் கலைத்து விட்டு கேரம் போர்டை இடுக்கிக்கொண்டு ஓடியே போய் விடுவான். அவன் கள்ள ஆட்டம் ஆடுவது எங்களுக்குத்தெரியும் என்பதை நாங்களும் காட்டிக்கொள்வதேயில்லை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எனக்குத்திருமணம் நிச்சயமான சமயம், இனிமேல் எப்போதும் போல் பார்க்க முடியாது, விளையாட முடியாது என்பது அவனை அதிகம் பாதித்தது. இருந்தாலும் பக்கத்து ஊருக்குத்தான் போகிறேன் என்பதில் கொஞ்சம் சமாதானமடைந்தான். “ எக்கா.. முயல் குட்டி கொண்டுட்டு வாரேன், ஒனக்க மாப்பிள்ளை வீட்டுல வெச்சு வளக்கியா?” என்றபடி நின்றான் ஒரு நாள். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“டே.. நான் இங்கியே இருக்கப்போறதில்ல, பாம்பேக்குப் போயிருவேன். அப்பம் அத இங்க உள்ளவங்க யாரு பாக்கப்போறா? இங்க கெடக்கப்பட்ட ஆடு, மாடு, கோளி, நாயி இதுகளத்தாம் பாப்பாங்க, நான் கொண்டுட்டுப்போற மொசக்குட்டி, புறா இதெல்லாமா பாப்பாங்க?” என்றேன்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">யோசனையுடன் நின்றவன், “இங்க இம்புடு கெடக்கா.. அப்பம் நீ பாம்பேக்கு கொண்டுட்டுப்போ” என்று நிலையாக நிற்க ஆரம்பித்தான். “ஆமா… இவ்ளோ ஆசப்படுதவன் ஒங்க வீட்ல இதெல்லாம் வெச்சு வளக்கலாம்ல்லா?” என்றதற்கு “அம்ம, அண்ணம்ல்லாம் ஏசுவாங்க” என்று பாவம்போல் கண்ணீர் மல்க நின்றான். அந்த ஈரமனசுதான் வெங்கட்.. கல்யாணமான பின் அவனை அடிக்கடி பார்க்க வாய்க்கவேயில்லை, அம்மாவிடம் அடிக்கடி அவனை விசாரித்துக்கொள்வேன், ட்யூஷன் போகிறானாம், ஆனால் சுட்டுப்போட்டாலும் படிப்பு மட்டும் ஏறாமல் அப்படியே நிற்கிறதாம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒரு முறை ஊருக்குப்போயிருந்த போது, மடித்துக்கட்டிய லுங்கியும் அரும்பிய மீசையுமாக வளர்ந்திருந்தான் பயல்,.. அதே மென்மையான குரல், பச்சைப்பிள்ளை போன்ற முகம்.. “இப்பமும் நாக்குட்டி, பூச்சக்குட்டின்னுதான் திரியுதியா, இல்லே ஒழுங்கா படிக்கியா?” எனக்கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டான். ஆனால், எனக்குத்தான் சின்னஞ்சிறு முயல்குட்டியைத் தொலைத்து விட்டாற்போன்ற உணர்வு. வெங்கிடு வளராமலேயே இருந்திருக்கலாம்.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-70512792775300408462023-07-02T00:21:00.001+05:302023-07-02T00:21:58.495+05:30கூட்டாஞ்சோறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;"><div class="separator" style="clear: both;">வீட்டுக்குப் பக்கத்தில் எங்கேயாவது ஒரு நாள் பயணமாக சுற்றுலாவோ, பக்தி உலாவோ சென்று வர வேண்டுமா? ஒன்றிரண்டு குடும்பங்கள் மட்டும் கூடிக்களிக்கும் தினங்களா? எங்கேயாவது தோட்டம், அருவிக்கரை போன்ற இடங்களுக்கு வேண்டிய பொருட்களையெல்லாம் கொண்டு சென்று அங்கேயே சூடாகச் சமைத்துச் சாப்பிட்டு பொழுதைக்கழித்து வர விரும்புபவர்களா? புது மணமக்களுக்கான விருந்தா?... முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னெல்லாம் மக்களின் ஒரே விருப்பமாக கூட்டாஞ்சோறும் இருந்து வந்துள்ளது. </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY9mye4x4ZYN7vjBz7fkH20ioDUR3hs-nX6wVnku8yd2U6EbleatfwZv7NM0G1alAVeCQwOvf5msCzWQTVp9Ix4Eo3ePLXiG9Xme03jJ_4osLUzyUGMCsTNU5w_QZnqnKhOQwdyB2JruCfXGoLJGMvCu26PlZT3qCv6IdzYP0qVMbl6lxEsANPWWsQ-gg/s2048/356241699_6202795639774583_5225007174251651744_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1476" data-original-width="2048" height="289" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY9mye4x4ZYN7vjBz7fkH20ioDUR3hs-nX6wVnku8yd2U6EbleatfwZv7NM0G1alAVeCQwOvf5msCzWQTVp9Ix4Eo3ePLXiG9Xme03jJ_4osLUzyUGMCsTNU5w_QZnqnKhOQwdyB2JruCfXGoLJGMvCu26PlZT3qCv6IdzYP0qVMbl6lxEsANPWWsQ-gg/w400-h289/356241699_6202795639774583_5225007174251651744_n.jpg" width="400" /></a></div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">சில சமயங்களில் கிளம்புவதற்கு முதல்நாள் இரவில் வீட்டுப்பெண்கள் கண் விழித்து ஆளுக்கொரு வேலையாகச்செய்து கூட்டாஞ்சோற்றைக் கிளறி தூக்குவாளிகளில் அடைத்து மேலாக வாழையிலை போட்டு மூடியால் இறுக மூடி விடுவர். தொட்டுக்கொள்ள கூழ்வற்றல், வெங்காய வடகம், பப்படம், ஊறுகாய், துவையல்கள் என பக்கவாத்தியங்களும், எல்லோருக்குமாக அளவாக நறுக்கப்பட்ட வாழையிலைத்துண்டுகளும் கூடவே பயணிக்கும். பயணம் போன இடத்தில் கொஞ்சம் சடவாறிவிட்டு, பக்கவாத்தியங்களுடன் மெயின் அயிட்டமான கூட்டாஞ்சோற்றையும் வெளுத்துக்கட்டுவர். பேச்சும் சிரிப்புமாகக் கலகலவென உணவுநேரம் அமையும்போது கணக்கேயில்லாமல் கவளங்கவளமாக உணவு உள்ளே போகும். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">காலப்போக்கில், "எங்க போனாலும் இந்த அடுப்பங்கரையையே கெட்டிக்கிட்டு அளணுமா?" என பெண்கள் முணுமுணுக்கத் தொடங்க, 'போற எடத்துல என்னமும் கௌப்புக்கடையில சாப்புட்டுக்கலாம்' என மக்களின் மனநிலை கொஞ்சங்கொஞ்சமாக மாறத்தொடங்கி விட்டது. ஆனாலும் எப்போதாவது நினைவின் ருசி மேலோங்கும்போது 'சாப்புடணும் போல இருந்திச்சின்னு அவ்வோ கேட்டா' எனவோ 'பிள்ளேளுக்கு ஒரு நல்ல சோறுகறி வச்சிக்குடுக்காண்டாமா?' எனவோ சொல்லிக்கொண்டு சமைத்துப் பரிமாறப்படுகிறது. </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">நல்ல புழுங்கலரிசியில் சமைக்கப்பட்ட கூட்டாஞ்சோறு இன்னும் ருசி மிகுந்தது. ஆனால், எங்கள் வீட்டில் புழுங்கலரிசியில் சமைத்தால் அதை நான் மட்டுமே சாப்பிட வேண்டியிருக்கும். ஆகவே பச்சரிசியில் செய்தேன். </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI4DCqFDi2j__TLFoYEk8NZE9pErUVatj7C7pivZBd5KnCRPae03a84TFXdyd0syjfJs30uybFSKJVk6lf_RdwTuhIz1YiqZ5HdouQgf0dW2UFTNmYUHOOXy-ZYoaP1snK8z2VPsL7QB57ptUDg2J5x51_x-vFvWQiSiGZ1vWODYbvvU35lSoofKxTl-E/s2048/355697885_6202795479774599_7917113904747626354_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="2048" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI4DCqFDi2j__TLFoYEk8NZE9pErUVatj7C7pivZBd5KnCRPae03a84TFXdyd0syjfJs30uybFSKJVk6lf_RdwTuhIz1YiqZ5HdouQgf0dW2UFTNmYUHOOXy-ZYoaP1snK8z2VPsL7QB57ptUDg2J5x51_x-vFvWQiSiGZ1vWODYbvvU35lSoofKxTl-E/w400-h400/355697885_6202795479774599_7917113904747626354_n.jpg" width="400" /></a></div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">எந்த அரிசியானாலும் அதோடு நாலுக்கு ஒரு பங்கு துவரம் பருப்பைக் கலந்து வையுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்றிவிட வேண்டாம்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">1 முருங்கை, 2 கத்தரி, கைப்பிடி சீனியவரை, 2 பெரிய வெங்காயம், 10 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 4 பச்சை மிளகாய்கள், பாதி மாங்காய், 2 உருளைக்கிழங்குகள், பாதி வாழைக்காய், 1 கேரட் என இவையெல்லாவற்றையும் பெரிய துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">எலுமிச்சையளவு புளியை ஊற வைத்து நன்கு கசக்கிப்பிழிந்து ஒரு தம்ளர் அளவில் புளித்தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">கொத்தமல்லித்தழையை நறுக்கியும், கறிவேப்பிலை இணுக்கை உருவியும், கைப்பிடி முருங்கைக்கீரையை ஆய்ந்தும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். முருங்கைக்கீரை கிடைக்காத சமயங்களில் நான் வெந்தயக்கீரையை நறுக்கிச் சேர்ப்பதுண்டு.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">ஒரு தம்ளர் அரிசிக்கு அரை தம்ளர் அளவு தேங்காய்த்துருவல் எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கூடுதலானாலும் பாதகமில்லை. அத்தோடு ஒரு பல் பூண்டு(விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்) ஒரு ஸ்பூன் சீரகம், காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">முன்னேற்பாடுகள் தயாரெனில் இனி களம் புகலாம்..</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பிலேற்றி சூடானதும் அரிசிபருப்பை இரண்டே இரண்டு முறை களைந்து போடவும்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">சோறு அரைவேக்காடானதும், நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை மொத்தமாக அதனுடன் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நடுத்தரமான தீயில் வேக விடவும். பெரிய துண்டங்களாகச் சேர்ப்பதால் எல்லாம் ஒரே சமயத்தில் வெந்து விடுகிறது.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">காய்கள் முக்கால் வேக்காட்டை நெருங்கும்போது புளித்தண்ணீரைச் சேர்த்து அடிமேலாகக் கிளறி விடவும். பச்சைவாடை போய் சாதமும் வெந்திருக்கும் பொழுதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் முருங்கைக்கீரையையும், கொஞ்சம் காயப்பொடியையும் சேர்த்து காய்கள் உடையாமல் ஒருசேர கிளறி விட்டு மூடி சிறு தீயில் வேக விடவும். முருங்கைக்கீரை இளசாக இல்லையெனில் புளித்தண்ணீர் ஊற்றும்போதே அதையும் சேர்த்து விடவும். கீரை வேகாமல் இருந்தால் ஜீரணமாகாது. </div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">எல்லாம் ஒன்று சேர வெந்ததும் லேசாகத் தளர்வாக இருக்கும்போதே இறக்கி வைத்து நறுக்கிய கொத்துமல்லி இலையையும் கொஞ்சம் தாராளமாக நெய்யையும் ஊற்றவும். கடைசியாக கடுகு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு தாளித்துக்கொட்டி லேசாகக் கிளறி, கூட்டாஞ்சோற்றின் ஒவ்வொரு அணுவிலும் தாளிதத்தின் ருசி பரவச்செய்யவும். நேரமாக ஆக சோறு இறுகிக்கொள்ளும். பருப்பு வெந்து ரொம்பவும் குழைந்து விடாமல் லேசாக முழித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் எனக்குப் பிடிக்கும்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">இதைச் சூட்டோடு சாப்பிடுவது ஒரு ருசியெனில், வெச்சு சாப்பிடுவது தனி ருசி. ஒரு நாளைக்கு மேல் தாங்காது ஆகவே சீக்கிரம் தீர்த்துக்கட்டி விடவும்.</div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;">ஊரிலிருந்து போன வருஷம் கொண்டு வந்த நார்த்தங்காய்களை நானே ஊறுகாய் போட்டேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். நார்த்தங்காய் ஊறுகாயெல்லாம் கடைசியாக அம்மை கையால் 1989க்கு முன்னால் சாப்பிட்டது.</div></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqda9A6QZka8FIp5wGgO0LYh_afuJxfmA1KSx4fBgXhC5UWgRwfdN5uUNhhW4wUfYZaceZCG2JjXOCE7jYsagAriAyzGw9muWzTFlW6LEp9w0bjf2iLylhA9okMOQTdX2JNDeDwElIDe4/s1600/kootanchoru2.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="277" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqda9A6QZka8FIp5wGgO0LYh_afuJxfmA1KSx4fBgXhC5UWgRwfdN5uUNhhW4wUfYZaceZCG2JjXOCE7jYsagAriAyzGw9muWzTFlW6LEp9w0bjf2iLylhA9okMOQTdX2JNDeDwElIDe4/w400-h277/kootanchoru2.JPG" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br /></div>
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-12029568561659847782023-07-01T23:49:00.001+05:302023-07-01T23:49:37.199+05:30அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31- அருணா சீனிவாசன்(புத்தக மதிப்புரை)<div style="text-align: justify;">வீடோ நாடோ.. அங்கே நிர்வாகம் நன்றாக இருக்கிறதென்றால் அது தானும் முன்னேறி பிறரையும் முன்னேற்றும். சிதிலமடைந்த நொடிந்த நிறுவனங்களை வாங்கி நல்ல முறையில் நிர்வகித்து லாபம் கொழிக்கச்செய்வதையெல்லாம் நாமும் கண்கூடாகக் காண்கிறோம். ஒரு நல்ல நிர்வாகி எப்படியிருக்க வேண்டும்? என்னென்ன உத்திகளைக் கடைப்பிடித்தால் வெற்றி காணலாம் என்பதற்கான பல வழிகள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_w0wQEHWyK7IarApbkBcyoK1TFkkEFWHALbo1fH5IamEwpDuYHVWi9cEN6EJbuIKkSnaj5e7jnFhfuXyR1_R-YPd3pLCaN-1X9bs0MsXawnM3VQxephuT66tzFsTGB69jMCIHcA6IGu7ZThfoGtV3wF5kc25pSkd_GHDs5Cc2mVP53KfxVUqATZkW5sA/s1600/355358973_6187238397996974_5220868973667683322_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1084" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_w0wQEHWyK7IarApbkBcyoK1TFkkEFWHALbo1fH5IamEwpDuYHVWi9cEN6EJbuIKkSnaj5e7jnFhfuXyR1_R-YPd3pLCaN-1X9bs0MsXawnM3VQxephuT66tzFsTGB69jMCIHcA6IGu7ZThfoGtV3wF5kc25pSkd_GHDs5Cc2mVP53KfxVUqATZkW5sA/w271-h400/355358973_6187238397996974_5220868973667683322_n.jpg" width="271" /></a></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. நம் செயல்களுக்கு முதலில் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். நிர்வாகத்தின் பாலபாடம் என்றே இதைச்சொல்லலாம். ஒரு காலத்தில் பள்ளிகளில் இதிகாசங்கள், நீதிக்கதைகள் போன்றவை வாழ்க்கை நெறிகளின் முக்கியத்துவத்தைப் பயிற்றுவிக்கும் முகமாகக் கற்பிக்கப்பட்டன. அவற்றில் சொல்லப்பட்ட பல கருத்துகள் இன்றும் நமது நிர்வாகவியலில் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன. அப்படி ராமாயணம், மஹாபாரதம், நீதிக்கதைகள் போன்றவற்றில் சொல்லப்பட்ட பல கருத்துகளை ஆசிரியர் அருணா சீனிவாசன் விவரித்துள்ளார். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வேறு வேறு யுக்திகளைக்கையாள்வதோடு காரண காரியங்களை ஆராய்ந்து இடம் பொருள் மற்றும் ஏவல் அறிந்து செயல்படுவது நிர்வாக இயலில் முக்கிய பாடம். ஒரு காரியம் ஒருவனால் சாதிக்கப்பட வேண்டுமெனில் அந்தக்குறிக்கோள் அவன் மனதில் துளிர் விட வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கு உதவக்கூடிய இது போன்ற பல வழிமுறைகளைப்பற்றிப்பேசுகிறது அருணாவின் இந்தப்புத்தகம். இதிகாசங்களிலிருந்தும், நீதிக்கதைகளிலிருந்தும், நீதி நூல்களிலிருந்தும், சொந்த அனுபவங்களிலிருந்தும் மட்டுமல்ல.. ஸ்டீபன் ஆர். கோவே, ஸ்பென்சர் ஜான்ஸன், சி.கே. ப்ரஹலாத், கேரி ஹேமல், டேவிட் ஃப்ரீட்மேன், கர்ட் காஃப்மேன், பீட்டர் ட்ரக்கர், பில் கேட்ஸ் போன்ற பல மேனாட்டு நவீன நிபுணர்களின் கருத்துகளிலிருந்தும் நமக்குப் பாடம் கிடைக்கிறது. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பல வழிமுறைகளும் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, ஒருவரது சுயமுன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது சுவாரஸ்யமான ஒன்று.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஆன்மீகமும் வணிகமும் ஒன்றோடொன்று பிணைந்தவையே என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் என்பார்கள். இச்சிந்தனையும் குறைந்த வளங்களில் உற்பத்தி அதிகரிக்கும் திறனும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சி முகாம்களில் வலியுறுத்தப்படுகின்றன. ஆலன் ஹால்க்ரோ முன்வைக்கும் வடிகால் கருத்து பல நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. எந்த வேலை செய்பவராக இருந்தாலும் அவரை ஒரு மனிதராகப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் வெகு விரிவாகவும் அற்புதமாகவும் திருக்குறளின் உதாரணத்தோடு அலசப்பட்டுள்ளது. ஒரு செயலில் இறங்கும்போது தன்னை முழுக்க முழுக்கத்தயார் படுத்திக்கொண்டுதான் இறங்க வேண்டுமென்பதில்லை, 70% தயாராக இருந்தாலே போதுமானது எனச்சொல்லப்பட்டுள்ளது. உண்மைதானே?.. அலை ஓய்ந்தபின்தான் கடலில் இறங்குவேன் என்றிருப்பது நடக்கிற காரியமா?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அறிவு ரீதியான மூளை வளர்ச்சி, மனரீதியான வளர்ச்சி, ஆன்மீக ரீதியான எண்ண வளர்ச்சி(INTELLIGENT, EMOTIONAL, SPIRITUAL QUOTIENTS). வேலை செய்யுமிடத்தில் இக்குணங்கள் அல்லது இவற்றில் சில வெளிப்படும்போது எம்மாதிரியான தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பது சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஆங்கில வார்த்தைகளோடு அவற்றின் தமிழ்ப்பதமும் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பஞ்சதந்திரக்கதைகள், பாட்டி சொன்ன கதைகளில் பொதிந்திருக்கும் வாழ்முறை நெறிகளை சிற்சில மாற்றங்களுடன் இன்றும் நிர்வாகவியல் பாடங்களாகக் கடைப்பிடிக்கலாம். இன்றைய வர்த்தக உலகில் அடிப்படையாகச் சமாளித்துப் பிழைக்க வேண்டுமென்றால் மாற்றங்கள், சிரமம், குழப்பம், பிரளயம் என எல்லாவற்றையும் எதிர்கொள்வது மட்டுமன்றி அவற்றை நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என நிர்வாகவியல் நிபுணர் டாம் பீட்டர்ஸ் சொல்லியிருப்பதை சிற்சில உதாரணக்கதைகளுடன் நிறுவியிருப்பது அழகு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நேரத்தை நிர்வாகம் செய்வது குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை வாசிக்கும்போது உண்மையிலேயே நமக்குள் ஓர் உந்து சக்தி பிறக்கிறது. ஒரு நிர்வாகிக்கு மாறுபட்ட கோணங்களிலிருந்து காணப்பழகுவதன் அவசியமும், ஊழியர்களின் சுய மதிப்பீடு உயரும்போது செயல்திறன் எவ்வாறு அதிகரிக்கும் என்ற உத்தியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ‘பேட்டி லெவிட்டான்’ என்ற பெண் எப்படி நேர்மறை எண்ணங்களை தன்னுள் ஊன்றியே கான்ஸரிலிருந்து குணமடைந்தார் என வாசிக்கும்போது எண்ணம் போல் வாழ்வு என்ற கூற்று ஞாபகத்துக்கு வருகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முழுமையான தரக்கட்டுப்பாட்டை நிறைவேற்ற தரப்பகுதிகள்(QUALITY CIRCLES) என்ற உத்தி ஏன் எப்படி அமைக்கப்பட்டுப் பயன்படுகிறது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். இது ஜப்பானியர்கள் அவர்களின் பாரம்பரியச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவாக்கி உபயோகிக்கும் அனேக நிர்வாக உத்திகளில் ஒன்று. பள்ளிகளில் தொழில்முறை நிர்வாகம் ஏன் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதை வாசித்தபின்பு அனைவரும் யோசிக்க ஆரம்பிப்பது கட்டாயம். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பழமொழிகள், திருக்குறள்கள், பஞ்ச தந்திரக்கதைகள், சொந்த அனுபவங்கள் என பலவும் எடுத்தாளப்பட்டுள்ளன. நூலில் சொல்லப்பட்டுள்ள ‘ஐந்து மருமகள் கதை’யை வாசித்தீர்களானால் கூட்டாக வேலை செய்ய வேண்டியதன் அருமை விளங்கும். அன்றைய தமிழக அரசர்கள்.. குறிப்பாக ராஜராஜச்சோழனின் நிர்வாகத்திற்கும் இன்றைய நவீன நிர்வாகவியலுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன. மேலும் கற்றுக்கொள்ளப்பட வேண்டியவைகளும் ஏராளம் உண்டு எனும்போது பெருமிதம் ஏற்படுகிறது. சிறிய வணிக நிறுவனங்களின் தனிச்சிறப்பு என்ன? அவை வளர்ந்தபின்னும் ஏன் அதே உத்திகளையே பயன்படுத்துகிறார்கள்? நான் என்ற உணர்வு ஏற்படுத்தும் அறிகுறிகளின் FLOW THEORY BY MIHALY CSIKSZENTMIHALYI பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? சின்ன நல்ல காரியமும் நேர்மறை அலைகளை எழுப்பி ‘தான்’ என்ற நிலையிலிருந்து எப்படி பொது நலம் நோக்கி நகர்த்துகிறது? நூலை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நிர்வாகவியலோடு சுயமுன்னேற்றத்திற்கான பல கருத்துகளும் அக்காலத்திற்கு மட்டுமல்ல இக்காலத்திற்கும் பொருந்திப் பிரதிபலிப்பதை இந்நூலில் காணலாம். அவ்வகையில் இப்புத்தகம் மேலாண்மைக்கல்வி கற்பவர்கள், சிறு நிறுவனத்தார் மற்றும் வணிகர்களுக்கு மட்டுமல்ல தனி மனிதர்களுக்கும் பயன்படக்கூடியதே. </div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-30307684591432051642023-05-06T14:37:00.001+05:302023-05-06T14:37:17.800+05:30ஈற்றடிக்கு எழுதிய பாக்கள்.<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdjmW1rQUizlx8I1nkfSIsMekuMAvRMJUKSjtvxsa084p5Rhb0tU0DtS5tisZL5_MSuVGl8BBS4efkxhWQ1repe_GuX-O9xtNNoahfpYuItfvZntX4BX7xWgGUo08Xq8RTnrKL-5i2GMzQluFyytnoNMRHrZDf_yz68dKO4QLYFOPcLRn1dCZWhKK8/s3759/Aster1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2945" data-original-width="3759" height="251" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdjmW1rQUizlx8I1nkfSIsMekuMAvRMJUKSjtvxsa084p5Rhb0tU0DtS5tisZL5_MSuVGl8BBS4efkxhWQ1repe_GuX-O9xtNNoahfpYuItfvZntX4BX7xWgGUo08Xq8RTnrKL-5i2GMzQluFyytnoNMRHrZDf_yz68dKO4QLYFOPcLRn1dCZWhKK8/s320/Aster1.JPG" width="320" /></a></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">துளிர்க்கும் முகையால் களிக்கும் களிறு</div><div style="text-align: justify;">குளிர்பனி தூங்கி ஒளிமர மொத்த</div><div style="text-align: justify;">தளிர்நிறை காவில் களியாடும் உள்ளத்(து)</div><div style="text-align: justify;">ஒளியில் விரியும் உலகு</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நெளிகயிறு பாம்போ விளிகுரல் பேயோ</div><div style="text-align: justify;">இளிவரல் அஞ்சி ஒளிப்பர் கிலியை</div><div style="text-align: justify;">தெளிந்த மனத்திற்குத் தீங்கில்லை உள்ளத்(து)</div><div style="text-align: justify;">ஒளியில் விரியும் உலகு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பிறப்பும் இறப்பும் பிறவியில் நேராம்</div><div style="text-align: justify;">சிறப்பும் சறுக்கலும் அஃதே அறிவாய்</div><div style="text-align: justify;">தெளிந்த மனத்திற்குத் தீங்கில்லை உள்ளத்(து)</div><div style="text-align: justify;">ஒளியில் விரியும் உலகு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கல்வி கெடுப்போன் கெடுமதி கொண்டோன்</div><div style="text-align: justify;">கலப்பட ஔடதம் காய்கனி செய்வோனை</div><div style="text-align: justify;">சற்றுமா ராயாமல் சுற்றம் பிழைப்போனை</div><div style="text-align: justify;">எற்றோமற் றெற்றோமற் றெற்று.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">குடிநீர் குலைப்பார் ஒருக்காரே குப்பை</div><div style="text-align: justify;">மடிப்பிள்ளை பெண்ணெனில் மாய்த்திடும் பற்றிலர்</div><div style="text-align: justify;">சற்று மறியா செழுமரம் சாய்ப்போரை</div><div style="text-align: justify;">எற்றோமற் றெற்றோமற் றெற்று.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கச்சிதமாய் கூண்டிலிட்டு காய்பழ மும்வைத்து</div><div style="text-align: justify;">மிச்சமீதி சேவை முடித்துத் திரும்புகையில்</div><div style="text-align: justify;">நச்சென்று தாழ்ப்பாளும் நைத்தது கண்டு</div><div style="text-align: justify;">கீச்சுக்கீச் சென்னும் கிளி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இச்சகத்து னக்கோர் இணையுண்டோ வென்றவர்</div><div style="text-align: justify;">அச்சமின்றிப் பொய்யுரைத்த அச்சிறு சச்சரவு</div><div style="text-align: justify;">மிச்சமற்றுப் போமோ மயங்கி விடையற்று</div><div style="text-align: justify;">கீச்சுக்கீச் சென்னும் கிளி.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40399110913025437322023-04-28T22:30:00.001+05:302023-04-28T22:30:00.134+05:30கொடுக்கு.<div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0zFpBPP8BWoJVS6m0upq7QOmpQnjv3zlD4kX__Zhkr624-xO-RDuTD6hIHB3NLca5TlkfVrbyed5DpzkhSxoll62odfZOdewif_u-pDCJW7vW0Hy_ZnWrapQi136MTMxkvZut7iLxxRgBAS3E0TVlomXrKq3hS7Bt9ecqgCq-9Mmo5W6nrzSZCT-1/s425/first-aid-for-thel-kadi-in-tamil.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="425" data-original-width="425" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0zFpBPP8BWoJVS6m0upq7QOmpQnjv3zlD4kX__Zhkr624-xO-RDuTD6hIHB3NLca5TlkfVrbyed5DpzkhSxoll62odfZOdewif_u-pDCJW7vW0Hy_ZnWrapQi136MTMxkvZut7iLxxRgBAS3E0TVlomXrKq3hS7Bt9ecqgCq-9Mmo5W6nrzSZCT-1/w200-h200/first-aid-for-thel-kadi-in-tamil.jpg" width="200" /></a></div><br /><div>“அவன் அப்புடித்தான், தேளு கொட்டுன மாதிரி என்னமும் சொல்லிருவான்.. கொஞ்ச நேரத்துல மறந்துட்டு எப்பமும் போல சாதாரணமா பேசுவான், நாம்தான் கெடந்து தவிக்கணும்” அரைத்து வைத்த மசாலாவைக் குழம்பில் கலக்கியபடியே ராஜீவின் அம்மா சாதாரணமாகச் சொன்னாள். கேட்டுக்கொண்டு மௌனமாக நின்றிருந்தாள் கௌசி.</div><div><br /></div><div>அவளுக்குத் தேள் கொட்டிய நேரடி அனுபவம் கிடையாதே தவிர, பக்கத்து வீட்டு மகேஸ்வரிக்கு நெறி கட்டிக்கொண்டு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டாள் என்பதை அருகிலிருந்து கவனித்திருக்கிறாள். கொடுக்கைத் தூக்கிக்கொண்டு தன்பாட்டில் போய்க்கொண்டிருக்கும் தேள், தன் பாதையில் ஏதோவொன்று வந்ததும், இடைஞ்சலாக எரிச்சலாக உணர்ந்தோ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவென பயந்தோ, சுளீரெனக் கொட்டி விஷத்தையெல்லாம் கொடுக்கு வழியே வழிய விட்டுவிட்டு அதன் பாட்டுக்குப் போகும். அதற்கு ஆயுள் மீதமிருந்தால் யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து கொள்ள வாய்க்கும். இல்லையெனில் விறகுக்கட்டையோ செருப்போ.. ஏதாவதொன்றால் ஒன்று போட்டு அதைச் சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.</div><div><br /></div><div>ராஜீவும் அப்படித்தான்,.. நன்றாகத்தான் பேசிக்கொண்டிருப்பான், திடீரென குத்தலாக ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டு, சொன்ன வார்த்தை எதிராளியைக் காயப்படுத்துமே என்ற உணர்வின்றி சாதாரணமாக இருப்பான். கேட்டவருக்குள் அந்த வார்த்தை விஷம் போல் சுறுசுறுவெனப் பரவும். நேரமாக ஆக அதன் வீரியம் மனதுக்குள் கூடிக்கொண்டே போக, முகம் சுண்டிப்போய் இருப்பவர்களின் உணர்வை சுண்டுவிரல் நகத்தின் அளவு கூட மதிக்காமல், அவன் பாட்டுக்கு, “ இப்ப என்ன நடந்துருச்சு?” என்ற பாவனையில் இருப்பான்.</div><div><br /></div><div>திருமணமான புதிதிலேயே அவள் மாமியார் சொல்லிவிட்டாள். “எங்கிட்ட இருக்கப்பட்ட கொரங்குப்புத்தியெல்லாம் எம்புள்ளை கிட்டயும் உண்டு, பாத்துப்பொழைச்சுக்கோ” என. ‘சும்மா ஒரு இதுக்காகச் சொல்றாங்க’ என அவளும் அதைப்பெரிதாக நினைக்கவில்லை. முதலிரண்டு மாதங்கள் புதுக்கல்யாண ஜோரில் நகர, அதைப்பற்றியெல்லாம் சிந்திக்க அவளுக்கு நேரம் வாய்க்கவுமில்லை. நாட்கள் வாரங்களாகி மாதங்களாக நகரத்தொடங்கிய போதுதான் முட்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தான். முதல் முத்தம், முதல் காதலைப்போல முதல் முள்ளையும் மறக்க முடியாதுதான் போலும். அவளாலும் மறக்க முடியவில்லை.</div><div><br /></div><div>“மழை வராப்ல இருக்கு,.. காய்ஞ்ச துணியெல்லாம் எடுத்துரு கௌசி..” மாமியாரின் சொல் கேட்டு ஓடுவதற்குள் மழை வலுத்து விட துணியெல்லாம் நனைந்து ஓரிரண்டு துணிகள் காற்றில் பறந்து விழுந்து விட்டிருந்தன. அப்படி விழுந்திருந்தவற்றில் அவனது வெள்ளைச் சட்டையும் ஒன்று. விழுந்த இடம் செம்மண்ணும் மாட்டுச்சாணமும் மணலுமாக விரவி அமைக்கப்பட்டிருந்த கீரைப்பாத்தியில். ஓடிச்சென்று துணிகளை அள்ளி வந்தவள் செம்மண் அப்பி சாணிக்கறை படிந்திருந்த சட்டையின் நிலை கண்டு, சட்டென பக்கெட்டில் விழுந்து கொண்டிருந்த மழைத்தண்ணீரில் அலசிக் கொண்டிருந்தபோது வந்தான்.</div><div><br /></div><div>“என்னா?.. எஞ்சட்டையை நாசமாக்கியாச்சா?.. காஞ்ச ஒடனே எடுக்காம மழை வலுக்கற வரைக்கும் என்ன செஞ்சுட்டிருந்தே? ஒனக்கெல்லாம் தெண்டச்சோறுதான் போட்டுக்கிட்டிருக்கு..” </div><div><br /></div><div>“என்னது?.. என்ன சொன்னீங்க? திருப்பிச்சொல்லுங்க”</div><div><br /></div><div>“ஆங்.. சொன்னாங்க.. சோத்துக்கு உப்பில்லைன்னு”</div><div><br /></div><div>போய் விட்டான்.</div><div><br /></div><div>அவளுக்குப் பொங்கிப்பொங்கி வந்தது. “என்ன வார்த்தை சொல்லி விட்டான்!! தண்டச்சோறா? நானா? பெண்டாட்டியைக் காப்பாத்த வேண்டியது ஒரு புருஷனின் கடமையில்லையா? அப்படியும் நானென்ன சும்மா உட்கார்ந்தா சாப்பிடுகிறேன்? காலைல எழுந்ததிலிருந்து இரவு படுக்கப்போகும் வரைக்கும் இந்த வீட்டுக்காக உழைச்சுக்கொட்டியதெல்லாம் கணக்கிலயே வராதா? ஆபீஸ் போய் உழைச்சு சம்பளம் வாங்கினாத்தான் மதிப்பா?” முகத்தில் அறைந்த மழைத்துளிகள் அவளின் கண்ணீரையும் சேர்த்துக் கரைத்துக்கொண்டு இறங்கின. மெல்ல மெல்ல கோபம் நுரைத்துக்கொண்டு எழும்பியது. துணிகளை அள்ளிக்கொண்டு கிணற்றடிக்குப்போனவள் நனைந்து கொண்டே துவைக்க ஆரம்பித்தாள். கணவனின் மேல் வந்த கோபம், ஒரு வேலைக்குப்போய் செட்டிலாகும் வரை காத்திருக்காமல் சீக்கிரமே திருமணம் செய்து வைத்து விட்ட பெற்றோரின் மீது திரும்பியது. அவர்கள் மேலுள்ள கோபம், தன் மீது எழுந்த சுயஇரக்கத்தால் வந்த கையாலாகாத கோபம் என எல்லாவற்றையும் துணிகளின் மேல் காட்டி அறைந்து துவைத்தாள். </div><div><br /></div><div>அழுந்தத் துடைத்துக்கொண்டு நுழைந்தாலும் முக வாட்டம் காட்டிக்கொடுத்து விட்டது. </div><div><br /></div><div>“அழுதியா என்ன?” மாமியார் கேட்டாள்.</div><div><br /></div><div>“இல்ல”</div><div><br /></div><div>“அவன் என்னமும் சொன்னானா?”</div><div><br /></div><div>‘ஒங்க காதுலயும் விழற மாதிரிதானே பேசுனாரு. அப்புறமென்னா கேள்வி?’ பதில் சொல்ல மனது துடித்தாலும் “ப்ச்.. ஒண்ணுமில்ல” என்றாள்.</div><div><br /></div><div>“அது கொடுக்குக்குப் பதிலா நாக்கை வச்சிருக்கப்பட்ட தேளு” என்றாள் மாமியார்.</div><div><br /></div><div>இவளுக்கு மறுபடி கண் கலங்கிற்று.. அதெப்படி என்னைப்பார்த்து அப்படியொரு வார்த்தை சொன்னான்!!!</div><div><br /></div><div>“சரி,.. விடு, அதையே நினைச்சுட்டிருக்காதே. மனுஷன் வாயில் இருந்து வர்ற ஒவ்வொரு சொல்லுக்கும் கோவப்படணும்ன்னு ஆரம்பிச்சா, ஆயுசு அதுலயே கரைஞ்சுரும். போ.. போயி முகத்தைக் கழுவி பொட்டு வெச்சுக்கிட்டு வெளக்கேத்து”</div><div><br /></div><div>இரவு சாப்பிடும்போதாவது தான் சொன்ன வார்த்தைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்பானென எதிர்பார்த்தாள். ஆனால், எதுவுமே நடக்காதது போல் அவன் பாட்டுக்குச் சாப்பிட்டுக் கை கழுவ எழுந்து போனான். அவள் தன் தட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இப்படியொரு வார்த்தையைக் கேட்ட பிறகும் மானங்கெட்டுப்போயி இந்தச்சோத்தைச் சாப்பிடணுமா? சீ… அதுக்கு பட்டினி கிடக்கலாம்’</div><div><br /></div><div>தட்டிலிருந்தவற்றை வழித்து நாய்க்குப்போட்டு விட்டு, இரண்டு செம்பு தண்ணீரைக் குடித்தாள். இனி வரவிருக்கும் தினங்களை நினைத்துக் கலவரமாக இருந்தது. ‘இப்போதே இப்படியிருக்கிறானே.. இன்னும் வரும் காலங்களில் எப்படி இருப்பானோ”. அன்றிரவு அவள் தலையணை முதல் முறையாகக் கண்ணீரில் நனைந்தது. ஆணோ பெண்ணோ.. அவரவர் துக்கத்தை ரகசியமாய் இறக்கி வைக்கும் சுமைதாங்கிகளல்லவா தலையணைகள். அழுதழுது தூங்கிப்போனாள்.</div><div><br /></div><div>வீங்கிய முகத்துடன் காலையில் எழுந்து வந்தவளை மாமியார் கூர்ந்து பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவளாகச் சொல்லட்டும் என்று விட்டு விட்டாள். அவனோ எதுவுமே நடக்காதது போல் பேப்பரில் மூழ்கியிருந்தான். நேரமாக ஆக கௌசிக்குள் அவன் வார்த்தையின் விஷம் பரவ ஆரம்பித்தது. வீட்டில் யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது,.. முக்கியமாக அவன் தன்னுடைய அழுகையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவளுக்குள் ஆங்காரத்தை வளர்த்தது. மனம் கொதித்துக்கொண்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக வீட்டுக்காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.</div><div><br /></div><div>அவனும் மாமியாரும் சாப்பிட்டானதும், பாத்திரங்களை ஒழித்து சிங்க்கில் போட்டு விட்டு, துலக்க ஆரம்பித்தாள்.</div><div><br /></div><div>“கௌசி”</div><div><br /></div><div>“இதோ வரேன் அத்தை..” கைகளைக் கழுவிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.</div><div><br /></div><div>“நீ சாப்பிடலை?” </div><div><br /></div><div>“இல்ல.. பசிக்கல..”</div><div><br /></div><div>“மொகமெல்லாம் வாடிக்கெடக்கு. என்னத்த பசிக்கலங்கற? காலைலயும் சாப்பிடல, நேத்து நைட்டும் சாப்பிட்ட மாதிரி தெரியல. உள்ளதச்சொல்லணும், என்ன நடந்துது?”</div><div><br /></div><div>அவள் மௌனமாக ஜன்னலை வெறித்தாள்.</div><div><br /></div><div>“கேக்கறேன்ல?.. சொல்லு”</div><div><br /></div><div>“உங்க பிள்ளை கிட்ட எதுவுமே கேக்க மாட்டீங்களா? எல்லாத்துக்கும் நாந்தான் பதில் சொல்லணுமா?” மெல்லிய குரலில் பதில் வந்தது கௌசியிடமிருந்து.</div><div><br /></div><div>“என்னடா டேய்?.. இவ என்ன சொல்றா?”</div><div><br /></div><div>“எனக்குப் புரியலைம்மா… எனக்குத் தெரியல” என்றான். </div><div><br /></div><div>“கௌசிய என்னமும் திட்டினியா?”</div><div><br /></div><div>“அய்யோ?!!.. நானா? திட்டினேனா?” அப்பாவியாய் முகத்தை வைத்திருந்தான் ராஜீவ்.</div><div><br /></div><div>“இல்ல, பொய் சொல்றார். திட்டினாரு… தண்டச்சோறுன்னு திட்டினாரு” அழுகையும் பரிதவிப்புமாய் கிட்டத்தட்ட கதறினாள் கௌசி.</div><div><br /></div><div>அவளைக் கூர்ந்து பார்த்தான் ராஜீவ். “நேத்து சொன்னதுக்கு இன்னிக்கு வரைக்கும் மூஞ்சைத் தூக்கி வெச்சிட்டிருப்பியா?. நேத்து சொன்னது நேத்தோட போச்சு”</div><div><br /></div><div>“சொன்னது சாதாரண வார்த்தையா இருந்தா மறந்திருப்பேன், இது என் தன்மானத்தை உரசிப்பார்க்கற வார்த்தையா இல்லே இருக்கு?”</div><div><br /></div><div>“இதோ பாரு,.. உன்னைப் புண்படுத்தற நோக்கத்தோட நான் சொல்லல. சட்டுன்னு வாயில வந்துட்டுது. குடும்பத்துல இதெல்லாம் சகஜம், சின்னச்சின்ன விஷயங்களப் பெருசாக்காதே” சற்றே கடுமையாகச் சொன்னான்.</div><div><br /></div><div>இடைமறித்தார் அவனது அம்மா.</div><div><br /></div><div>“இருடா…. இந்த வார்த்தை சின்ன விஷயமில்லை. வீட்ல இருந்தா தண்டச்சோறுன்னு அர்த்தமா?. இங்க பாரு,.. வீட்ல இருக்கப்பட்ட பெண்கள் அவங்க செய்யற ஒவ்வொரு வீட்டுவேலைக்கும் சம்பளம் நிர்ணயிச்சா உன்னால கொடுத்து மாளாது பார்த்துக்கோ. படிப்பை முடிச்சுட்டு நீ மூணு வருஷம் வேலையில்லாம வீட்ல சும்மாதான் இருந்தே, அப்ப நானோ உங்கப்பாவோ உன்ன ஒரு பொழுது.. ஒரு வார்த்தை சொல்லியிருப்போமா? நீ மட்டும் ஏண்டா இப்படி மத்தவங்களைக் கொட்டற புத்தியோட இருக்கே? அதென்ன நாக்கா இல்லே தேள் கொடுக்கா?”</div><div><br /></div><div>“நான் யாரையும் எதுவும் சொல்லலை தாயே, சொன்ன வார்த்தைக்கு என்னை ரெண்டு பேரும் மன்னிச்சுக்கிடுங்க.” எழுந்து போக யத்தனித்தான். அவன் குரலும் முகபாவமுமே தனது தவறை அவன் இன்னமும் உணரவில்லை, ஒத்துக்கொள்ளவில்லை எனக்காட்டியது. அவனது அம்மாவிற்கு கவலை ஆரம்பித்தது.</div><div><br /></div><div>"இங்க பாரு.. ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கோவப்பட ஆரம்பிச்சா, அப்றம் அந்தக்கோபத்துக்கே மதிப்பிருக்காது" என ஆரம்பித்த அம்மாவைக் கையமர்த்தியவன், "ஒரு வார்த்தை கூட பொறுத்துக்கலைன்னா அப்றம் என்ன இருக்கு? இஷ்டமிருந்தா இங்க இருக்கட்டும், இல்லைன்னா அவ அம்மா வீட்டுக்கே போயிரட்டும்" எனச்சொல்லி விட்டு பேப்பரில் மூழ்கி விட்டான்.</div><div><br /></div><div>என்ன ஆனாலும் சரி,.. அம்மா வீட்டுக்கு மட்டும் போகக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். 'அம்மா வீட்டுக்குப்போய் மூலையில் முடங்கி மூக்கைச்சிந்திக்கிட்டிருப்பேன்னு நினைச்சீங்களா? வெளில போ.. போன்னு துரத்திட்டேயிருந்தா நான் வெளிய போயிருவேன்னு நினைப்பா?. எங்கியும் போக மாட்டேன், இங்கியே உங்க கண்ணெதிர்லயே இருந்துக்கிட்டு என்ன செய்யப்போறேன்னு பாருங்க. வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும்ன்னு சொல்லுவாங்க. நீங்க எங்கே யாருக்கு அடங்கறீங்கன்னு பார்க்கறேன்' என மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.</div><div><br /></div><div>வெளிப்பார்வைக்கு எப்போதும்போல் இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் உள்ளே கனன்று கொண்டுதான் இருந்தது. கால் வயிறு ஆகாரத்துடன் நிறுத்திக்கொண்டாள். மீதியைப் பிறர் கவனிக்காத போது நாய்க்குப்போட்டாள். நாட்கள் தேயத்தொடங்கின,.. போலவே அவளும் தேய்ந்து மெலிந்து கொண்டிருந்தாள். ஆரம்ப நாட்களில் தெரியாவிட்டாலும் நாட்கள் செல்லச்செல்ல அவளது மெலிவு கண்கூடாகத் தெரிந்தது. விசாரித்த மாமியாருக்கும் நாத்தனாருக்கும் மழுப்பலான பதிலைச்சொன்னாள். விரைவில் அக்கம்பக்கத்தினர் விசாரிக்க ஆரம்பித்தனர். பின், ஊராரும் உற்றாரும் விசாரித்தனர். "என்னடே.. உங்க வீட்லயே உம்பொண்டாட்டி மட்டும் எலும்பும் தோலுமா இருக்கா.. அவளுக்கு ஒழுங்கா சோறு கீறு போடறீங்களா இல்லியா?"</div><div><br /></div><div>தர்ம சங்கடத்துடன் திருதிருவென விழித்தான்.</div><div><br /></div><div>"மாந்தையன் மாதிரி முழிக்காதே. என்ன ஏதுன்னு பார்த்து சரி பண்ற வழியைப் பாரு. அவ அப்பா அம்மா கேட்டா என்னன்னு பதில் சொல்லுவே? கெட்டிக்குடுத்து வரச்சிலே விக்ரகம் மாதிரி இருந்த புள்ளைய இப்பிடி ஆக்கி வெச்சிருக்கீங்களே, ஒங்களுக்கெல்லாம் கூறுவாடு இருக்கா? வச்சுக்காப்பாத்த வக்கு இல்லேன்னா நீயெல்லாம் எதுக்குடே பொண்ணு கெட்டுதே?" எதிர் வீட்டு மாமா கோபாவேசமாகப் பேசிக்கொண்டே போனார்.</div><div><br /></div><div>கதவண்டையில் நின்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். நாலு பேர் நடுவில் திட்டு வாங்கிக்கொண்டிருக்கும் அவன் முகத்தைப்பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. நசுங்கிக்கிடக்கும் தேளைக் கண்டுவிட்டதுபோல் அசூயையுடன் குரூரப் புன்னகையில் நெளிந்தது அவள் முகம். </div><div><br /></div><div>டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட <a href="https://solvanam.com/2023/04/23/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/" target="_blank">சொல்வனம் </a>மின்னிதழுக்கு நன்றி. சிறுகதையின் ஒலிவடிவத்தை சொல்வனத்தின் <a href="https://www.youtube.com/watch?v=bcM85rnWe9Y&t=49s">யூட்யூப் சேனலில்</a> கேட்கலாம்.</div></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-77283340672156881432023-04-25T19:37:00.000+05:302023-04-25T19:37:22.733+05:30கொல்லாம்பழம் அல்லது கொல்லமாவு..<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgl7vnvukSG4f8Xp0eIIb0_Ddrm81uYA1Huusd1r_T29POq4TMhjYqY1wmXkQ_tjA2u4AQwQk5IrVwIKZTy6kqRzUt3_jJnc8vM-SZsauDywXk-_mrn7LcvcbofnT8ybuqbK-XgSpua7BYHREBL8uIX6UMyNooZHE3XA-F6Kn0sVdZcwxnSv5HcyNm/s1858/cashew%20apple.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1616" data-original-width="1858" height="278" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgl7vnvukSG4f8Xp0eIIb0_Ddrm81uYA1Huusd1r_T29POq4TMhjYqY1wmXkQ_tjA2u4AQwQk5IrVwIKZTy6kqRzUt3_jJnc8vM-SZsauDywXk-_mrn7LcvcbofnT8ybuqbK-XgSpua7BYHREBL8uIX6UMyNooZHE3XA-F6Kn0sVdZcwxnSv5HcyNm/s320/cashew%20apple.jpg" width="320" /></a></div><br /><div style="text-align: justify;">தமிழகத்தின் பிற பகுதிகளில் 'முந்திரிப்பழம்' என அழைக்கப்பெறும் இப்பழத்தை அந்தக்காலத்திலெல்லாம் கேரளா மற்றும் லிட்டில் கேரளாவான கன்யாகுமரி மாவட்டத்தில் கொல்லாம்பழம் எனவும் கொல்லமாவு எனவும் கூறுவோம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அப்போதெல்லாம் ஒரு பெரிய கடவம் நிறைய பழங்களை தெருவில் விற்றுக்கொண்டு வருவார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தளதளவென, கொழுகொழுவென நிறைந்திருக்கும் பழங்கள், 'என்னை வாங்கேன்' என நம்மைக் கூப்பிடும். ஒவ்வொரு பழமும் நல்ல பெரிய சாத்துக்குடி சைஸில் இருக்கும். வெட்டி உப்புப்போட்டுப் பிசிறி சிறிது நேரம் ஊற விட்டு பின்னர்தான் சாப்பிடுவோம். இல்லையெனில் தொண்டை 'காறும்'.. அதாவது நமைச்சல் உண்டாகும். அவ்வளவாக இனிப்பில்லையென்பதால் சர்க்கரை தூவி உண்ணலாமா? என்றால்... அது அவ்வளவு ருசியாய் இராது. உப்பிட்ட பழமே உள்ளளவும் நினைப்பிலிருக்கும்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பள்ளிக்கூடங்களுக்கு வெளியேயும் வைத்து விற்றுக்கொண்டிருப்பார்கள். உப்பு தொட்டுத் தின்னப் பொறுமையில்லாத பிள்ளைகள் அப்படியே கடித்து சாறு வழிய உண்பர். வீட்டுக்குத் தெரியாமல் கொல்லாம்பழம் சாப்பிட்டவனை அவன் சட்டை காட்டிக்கொடுத்து விடும். சட்டையில் சாறு வழிந்த இடமெல்லாம் கறையாகிக்கிடக்கும். துவைத்தாலும் போகாத கறையைக்கண்டு எரிச்சலடையும் தாய்மார் அதன்பின் பிள்ளைகளைத் துவைப்பார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கொத்துக்கொத்தாய் பூத்திருக்கும் பூக்களிலிருந்து முதலில் முந்திரிப்பருப்பு இருக்கும் பகுதி வரும். அதன்பின் பூக்காம்பு தடித்து பச்சை வண்ணத்தில் துலங்கி வரும். பின், நாளாக ஆக மரம் முழுக்க கெம்புக்கற்களும் புஷ்பராகக்கற்களும் தொங்குவது போல் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் கனிந்து கொத்துக்கொத்தாய்க் கிடக்கும். கொல்லாம்பழத்திலிருந்து வாற்றியெடுக்கப்படும் "ஃபென்னி" என்னும் மதுவகை கோவாவில் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எதற்கும் எங்கேயும் முந்திக்கொண்டு நிற்பவனை, 'முந்திரிக்கொட்டை' என ஏன் அதட்டுகிறோம் என்பது இப்பழத்தைப் பார்த்தாலே புரிந்து விடும். சாறு நிரம்பியிருக்கும் முந்திரிப்பழம் உண்மையில் பழமல்ல, அது பொய்க்கனி வகையைச்சேர்ந்தது. பூவின் காம்புப்பகுதி பருத்து சாறு நிரம்பி பழம் போல் தோற்றமளிக்கிறது. பொய்க்கனியில் கீழே சிறுநீரகவடிவில் ஒட்டிக்கொண்டிருக்கிறதே முந்திரிக்கொட்டை.. அதுதான் உண்மையான கனி. அதனுள்தான் நாம் மிகவும் விரும்பியுண்ணும் முந்திரிப்பருப்பு இருக்கிறது. பழத்தின் கேரளப்பெயருக்கோ தமிழகப் பெயருக்கோ சற்றும் சம்பந்தமில்லாமல் 'அண்டிப்பருப்பு' என்போம் நாங்கள். சுருக்கமாக அண்டி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முந்திரிக்கொட்டையிலிருந்து முந்திரிப்பருப்பை மிகவும் கவனமாகப் பிரித்தெடுக்க வேண்டும். கத்தி அல்லது அரிவாள்மணையால் நறுக்கும்போது வெளியாகும் திரவம் பட்டு தோல் புண்ணாகி விடும் எனக் கேட்டதுண்டு. முந்திரிக்கொட்டைகளை முழுதாகப்போட்டு வறுத்தெடுக்கும்போது வெளியாகும் புகை நச்சு நிரம்பியது எனச் சொல்லப்படுகிறது. நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் கிராமங்களிலிருந்து சாக்கு சாக்காய் கொண்டு வந்த முந்திரிப்பருப்பை சிலர் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் வாங்கியதில்லை. சித்தப்பா கேரளாவின் கரியவட்டத்திலிருந்த க்வாட்டேழ்ஸில் வசித்தபோது வீட்டைச்சுற்றிலும் கொல்லாந்தோப்புகள்தான். அத்தனையும் அரசால் பாட்டத்துக்கு விடப்பட்டவை ஆகவே ஒரு பழம் கூட பறித்து விட முடியாது. ஆனாலும் கண்ணெதிரே எப்போதும் பார்த்துக்கொண்டே இருந்ததாலோ என்னவோ.. தின்ன வேண்டுமென்ற ஆசையே வந்ததில்லை.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNa_3uC2NFdJg3TyioQuPBI0iJlbmyMitIRJOFqeoaOK9fa6-tNt4PvWRthDN00fpm3_QagPu9Dv2Ki1r7BXrtrhza4wRM1pSl7ZLpcozwt7D_TpH0DwCYc1wZnxklBg9SthD_PEE0At8NTljiBtG4FlAeWok9ljivbpNMklTakzzP8MEgA-SU_LbW/s2048/cashew%20apple%20chopped.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="2048" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNa_3uC2NFdJg3TyioQuPBI0iJlbmyMitIRJOFqeoaOK9fa6-tNt4PvWRthDN00fpm3_QagPu9Dv2Ki1r7BXrtrhza4wRM1pSl7ZLpcozwt7D_TpH0DwCYc1wZnxklBg9SthD_PEE0At8NTljiBtG4FlAeWok9ljivbpNMklTakzzP8MEgA-SU_LbW/s320/cashew%20apple%20chopped.jpg" width="320" /></a></div><br /><div style="text-align: justify;">மும்பைக்கு வந்த இத்தனை வருடங்களில் இப்போதுதான் இதை சந்தையில் கிடக்கக் கண்டேன். அப்புறமென்ன?.. வாங்கி கண்டந்துண்டமாக வெட்டி உப்பில் ஊறப்போட்டாயிற்று. உப்பில் பழம் ஊற.. பழையநினைவுகளில் மனது ஊற.. சுவையாகத்தான் இருக்கிறது எல்லாமும்.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-58073595988243670442023-04-04T10:00:00.001+05:302023-04-04T10:00:00.178+05:30சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை (அம்பை) - புத்தக மதிப்புரை<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCmZsnCRVydENSHo1E-3jqP-1emp-24Z-FdteV8d2rM4L70zVCmkxxgtL0f7b7TSyk1cwsJ4LzKV9lCPFr0tT3TN6xfMbBwl-oNn_zmI0ht4DTD0JbJL_Ffs7eHpyo1KFAxpOqOv-fD1pTzlDrPG4QpPo4Cs0Wsscn7eEQin6evSStf4rRSjSWvuE/s815/sivappukazuthudan%20oru%20pacchaiparavai%20-%20Ambai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="815" data-original-width="526" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimCmZsnCRVydENSHo1E-3jqP-1emp-24Z-FdteV8d2rM4L70zVCmkxxgtL0f7b7TSyk1cwsJ4LzKV9lCPFr0tT3TN6xfMbBwl-oNn_zmI0ht4DTD0JbJL_Ffs7eHpyo1KFAxpOqOv-fD1pTzlDrPG4QpPo4Cs0Wsscn7eEQin6evSStf4rRSjSWvuE/w259-h400/sivappukazuthudan%20oru%20pacchaiparavai%20-%20Ambai.jpg" width="259" /></a></div><br /><div style="text-align: justify;">அம்பையின் எழுத்தை நான் முதன்முதலில் வாசித்தது “அழியாச்சுடர்கள்” தளத்தில்தான். ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதை மூலம் எனக்கு அவர் அறிமுகமானார். தொடர்ந்து அவரது எழுத்துகளில் சிலவற்றைத் தேடித்தேடி வாசித்தேன். அவற்றில் ஒன்றுதான் சாகித்ய அகாடமி விருது பெற்ற “சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை” என்ற இந்த சிறுகதைத்தொகுப்பு.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அம்பை தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல, மேகங்களும் பறவைகளும் கதைகளாய் ஆண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகக் குதித்து வருவதைப்போன்றே, பல்வேறு வடிவங்களில் வண்ணங்களில் உலகம் துண்டு துண்டாகப் பெண் எழுத்தாளர்களின் ஜன்னல்கள் வழியாகவும் குதித்து வருகிறது. அம்பை குறிப்பிட்டிருக்கும் விதவிதமான வடிவங்களில் அமைப்புகளில் இருக்கும் புற ஜன்னல்களைப்போலவே, பெண்களின் மனதிலும் நிறைய அக ஜன்னல்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக, அவள் காண்பதை, அவள் உணர்வதை அவள் கண்ணோட்டத்தின் வழியாகவே அம்பை தன் எழுத்துகளின் மூலம் வெளிக்கொணர்கிறார். </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இத்தொகுப்பிலிருக்கும் பெரும்பான்மையான சிறுகதைகள் மும்பையைக் கதைக்களமாகக்கொண்டவை. பல்வேறு பகுதிகளிலிருந்தும் எக்கச்சக்கமான கனவுகளைச்சுமந்து கொண்டு மக்கள் மும்பைக்கு வருகின்றனர். அம்மக்களின் கனவுகளை உண்டு செரித்தும் எரித்துச்சாம்பலாக்கியும் அதையே அடித்தளமாகக்கொண்டு இப்பெருநகரம் தன் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டே போகிறது. போனால் போகிறதென்று ஒரு சிலரின் கனவை நனவாக்கியும் வைக்கிறது. இதில் மும்பைக்குப் பதிலாக எந்தப்பெருநகரத்தின் பெயரையும் எழுதிக்கொள்ளலாம். அந்நகரத்திலும் ஒரு மரத்தை அடையாளம் கண்டு கொண்டு, எரிவதற்கு முன் அம்மரத்தின் அருகே இருந்த தன் வீட்டை நினைத்துக் கண் கலங்கியபடி ஒரு கம்லி இருப்பாள். தன் தந்தை வேலை செய்த ஆலையை நினைத்துப்பாடியபடி ஒரு கம்மு இருப்பாள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">நோய்மை பீடித்தவர்களுக்கு எவ்வளவு துன்பமோ அவ்வளவே துன்பத்தை, அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் தரும். தனக்குப் பிரியமானவர்கள் தன் முன்னே துடிப்பதைக் கண்டும் ஒன்றும் செய்யவியலாத கையறு நிலைக்குப் பெயரே நரகம். மறதி நல்லதுதான், ஆனால் அதுவே ஒரு நோயாகும்போது வாழும் ஒவ்வொரு நொடியும் நோயாளியும் சார்ந்தவர்களும் செத்துச்செத்துதான் பிழைக்கின்றனர். விதி வசமாக நோயாளி இவ்வுலகில் இல்லாமல் போய்விட்டாலும் அவர்களை நினைவூட்டுவது போல் ஏதேனும் சம்பவிக்கும்போது தாங்கவியலாமற் போகின்றது. தொண்டை புடைத்த காகம் தன் தந்தையை நினைவூட்டியபோது தாங்கவியலாமல் கதவைச்சாத்திய கல்யாணியும் நாம்தான். வாத நோய் முடக்கிப்போட்ட காமும்மா எழுதிய நூலைத்தேடி டெல்லி வரை போகும் அனன்யாவும் நாம்தான். மாமியாரைப்பார்த்துக்கொள்ள இயலாமல், அதே சமயம் அவளை முதியோர் இல்லத்திலும் விட முடியாமல் தவித்து, கடைசியில் தீக்கு தன்னைத்தின்னக்கொடுக்கும் ஊர்மிளாவும் நாமேதான். தேன்மொழி என்ற பச்சைப்பறவையின் கூவல் தொண்டையில் அடைபட்டிருப்பது குறித்துத் தவித்து, அதன் ஒலியைக் கேட்க முயன்று, பின் ஒலியே அப்பறவைக்கு ஓர் ஆக்கிரமிப்பாக இருப்பதை உணர்ந்து வீடு நீங்கும் கூங்கா பாபாவாகிய வசந்தும் நாம்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டிக்கான சிகிச்சை பலனின்றி இறந்த கணவனுக்குப் பின் தானும் காலாவதியாகும் முடிவுக்குப்போகும் கமலாவின் மகன் ஆதிக்கும், கடைசி காலத்தில் மறதியால் அவதிப்பட்டு இறந்த தந்தைக்குப்பின் தங்கள் தாய்க்கு ஒரு துணை வேண்டுமென்று சுயம்வரம் ஏற்பாடு செய்யுமளவுக்கு பரந்த மனம் கொண்டு, அதே தாய் தனது கல்லூரிக்கால நண்பனுடன் சேர்ந்து வாழ முடிவெடுப்பதை ஒப்புக்கொள்ள இயலாமல் தவிக்கும் பிள்ளைகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அவரவர் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சுயநலத்தின் கைப்பாவைகள்தான் அவர்கள். “உயிரை நீடிக்கறதுல என்ன பிரயோசனம்?” எனக்கேட்டு தந்தையின் ட்ரக்கியோஸ்டமியை நிறுத்தும் ஆதியும், பிறகு சிக்கல் வராமலிருக்க “அவரவர் சொத்துகள் அவரவர் குழந்தைகளுக்குத்தான் எனப் பத்திரப்படுத்தி விட்டு மறுமணம் செய்து கொள்” எனும் சாந்தியின் குழந்தைகளும் தாய் எனும் பெண்ணின் உணர்வுகளைப்புரிந்து கொள்ள எவ்வனத்தின் எப்பொய்கையில் மூழ்கி எழ வேண்டியிருக்குமோ!</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பதின்மூன்று சிறுகதைகளைக்கொண்ட இத்தொகுப்பில் “சிங்கத்தின் வால்” என்ற கதை பிரமிக்கச்செய்கிறது. இந்தியச்சமூகத்தில் பெண்கள் குடும்ப அமைப்புக்குள் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளையும், அவர்களின் அறிவு புறக்கணிக்கப்படுவதையும், அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்கங்களையும் திணிக்கப்படும் கற்பிதங்களையும் அதை அவர்கள் தாங்களாகவே ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் நெருக்கடிகளையும் பற்றிப் பெரிதும் பேசுகின்றன அம்பையின் எழுத்துகள். அம்பையை வாசித்தல் என்பதும் பெண்ணை, அவள் உலகை, இன்னும் நுணுக்கமாக அணுகி அவள் நோக்கிலேயே புரிந்து கொள்ளலேயாம்.</div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31532264639246906672023-03-15T10:00:00.001+05:302023-03-15T10:00:00.424+05:30சாரல் துளிகள்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1boyPyGbDpeR4CjHUwQvTIx8oOU8Hc6NcbLQMifRbQ4sKxL4Uronrsl3l2KMKAQjfk9-_CyU6lqzBCKO10fhMt9jmp_-93xrRmit0HUTqyuGJEnlL7d2pjuAHqUCjVdNzbCanYk4kvQcDWnAvFuUOZg7AVLqU3pmTP5wx4SAB7LyOvcRT8s5eM3Xf/s1080/Memories.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1066" data-original-width="1080" height="316" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1boyPyGbDpeR4CjHUwQvTIx8oOU8Hc6NcbLQMifRbQ4sKxL4Uronrsl3l2KMKAQjfk9-_CyU6lqzBCKO10fhMt9jmp_-93xrRmit0HUTqyuGJEnlL7d2pjuAHqUCjVdNzbCanYk4kvQcDWnAvFuUOZg7AVLqU3pmTP5wx4SAB7LyOvcRT8s5eM3Xf/s320/Memories.jpg" width="320" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">எண்ணுந்தோறும் புதிதாய் முளைத்துப் பெருகும் நட்சத்திரங்களுக்கு, தேர்வடம் பிடிக்கும் மக்களின் முகங்கள். எப்படியும் நிலையம் சேர்ந்துவிடும் நிலா.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அங்கிங்கெனாதபடி வியாபித்து தீரா வினை தீர்த்து அருள்புரியும் சொள்ளமாடனுக்கொரு திருநீற்றுக்கொப்பரை காணிக்கையாய் இன்னும் வரவில்லையாம், கழுத்து வரை குறையுடன் குமுறும் மாடனுக்கு மற்றதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">'என்னை நினைவிருக்கிறதா?' எனக்கேட்ட, சிதைந்த பெருந்தேர் வடங்களில் ரதவீதிகளின் வாசனை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">சொற்களுக்கப்பாற்பட்ட வெறுமை, மௌனத்தைக்கொண்டு தன்னைப் போர்த்திக்கொள்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">அத்தனைக்கும் பிறகும் மீதமிருக்கும் வாழ்வின் கட்டங்களில் இன்னும் எத்தனை ஏணிகளும் பாம்புகளுமோ! வீழவும் மீளவும் எத்தனை தாயங்களோ! பகடைகளும் காய்களும் உருள்கின்றன அதனதன் விதிப்படி.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div>முகம் வருடி, கூந்தல் கலைக்கும் மந்தமாருதம் வேண்டிய ஜன்னல் பயணத்தில், குப்பையும் புழுதியும் நாற்றமுமாக மூச்சடைக்க வைக்க, இடைவெளியின்றிச் சாத்தப்பட்ட ஜன்னலுக்கு இப்பக்கம் வெறும் பார்வையாளனாகக் கடந்து போக வேண்டியிருப்பதெல்லாம் தற்செயலோ!! முற்செயலோ!!</div><div><br /></div><div><div>விதவிதமாயும் புதிது புதிதாயும் ஏமாறுவதில்தான் மனிதனுக்கு எத்தனை உற்சாகம். 'இனிமேல் ஏமாற மாட்டேன்' எனக்கூறிக்கொண்டே அடுத்த ஏமாற்றத்துக்குத் தயாராகிறான் அவன்.</div></div><div><br /></div><div>நான்தான் செய்தேன், என்னால்தான் நடந்தது, என்னைத்தான் அணுகினர் என புகழுக்குப்போட்டியிடும் அதே மனிதர்கள்தான் இகழ் நேரிடும்போது கல்லெறி பட்ட காக்கைக்கூட்டமாய்ப் பறந்து அகன்று விடுகின்றனர்.</div><div><br /></div><div>அத்தனை பேரையும் உறங்க வைத்து விட்டு, சாலை உறங்குகிறது. கலைக்க மனமில்லாத வழிப்போக்கன் சுருண்டு படுத்துக்கொள்கிறான் மரத்தடியில்.</div><div><br /></div><div><div>அற்ற குளம் போல் வெறிச்சோடிக்கிடக்கிறது நட்சத்திரங்களற்ற வானம். கால்களால் தடவித்திரியும் ஒற்றைக்கொக்கைப் போல் தனிமையில் திரிகிறது நிலா.</div></div></div>சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com2