Showing posts with label கண்ணதாசன் நூற்றாண்டு நினைவு வெண்பாப்போட்டியில் பரிசு பெற்றது. Show all posts
Showing posts with label கண்ணதாசன் நூற்றாண்டு நினைவு வெண்பாப்போட்டியில் பரிசு பெற்றது. Show all posts

Friday, 7 August 2026

கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு நினைவு வெண்பாப்போட்டியில் பரிசு பெற்றது,


ஃபேஸ்புக்கில் Tadrupa Events என்போர், கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி தினந்தோறும் ஒரு ஈற்றடியைக்கொடுத்து அதற்கு வெண்பா எழுதும் போட்டியை நடத்தி வருகின்றனர். இப்போட்டி ஒரு வருடத்திற்கு நடக்கவிருக்கிறது. 

42ம் நாள் (04-08-2026) அன்று நடந்த போட்டியில் கொடுக்கப்பட்ட "எப்படிச் சொல்வேன் இதை" என்ற ஈற்றடிக்கு எழுதப்பட்ட எனது வெண்பாவும் பரிசுக்குரியதாய்த் தேர்வானது.


எனது வெண்பா:
செப்பரிய பேரன்பைச் சிந்தை தனில்நிறைத்து 
ஒப்பற்ற இன்பம் உவந்தளித்தாய் - எப்பொழுதும் 
தப்பாமல் என்னுள்ளே தங்கிவிட்ட பேரன்பே 
எப்படிச் சொல்வேன் இதை.

LinkWithin

Related Posts with Thumbnails