ஃபேஸ்புக்கில் Tadrupa Events என்போர், கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி தினந்தோறும் ஒரு ஈற்றடியைக்கொடுத்து அதற்கு வெண்பா எழுதும் போட்டியை நடத்தி வருகின்றனர். இப்போட்டி ஒரு வருடத்திற்கு நடக்கவிருக்கிறது.
42ம் நாள் (04-08-2026) அன்று நடந்த போட்டியில் கொடுக்கப்பட்ட "எப்படிச் சொல்வேன் இதை" என்ற ஈற்றடிக்கு எழுதப்பட்ட எனது வெண்பாவும் பரிசுக்குரியதாய்த் தேர்வானது.
எனது வெண்பா:
செப்பரிய பேரன்பைச் சிந்தை தனில்நிறைத்து
ஒப்பற்ற இன்பம் உவந்தளித்தாய் - எப்பொழுதும்
தப்பாமல் என்னுள்ளே தங்கிவிட்ட பேரன்பே
எப்படிச் சொல்வேன் இதை.

No comments:
Post a Comment