Thursday 3 February 2011

ஷிர்டி சாயிபாபா..

"பாபா.." இந்தப்பெயரை உச்சரிக்காத வட இந்தியர்கள்.. அதுவும் மராட்டிய மக்கள் இருக்க வாய்ப்பில்லை. 'பாபா..' என்ற சொல்லுக்கு, அப்பா.. தந்தை, தாத்தா இப்படி பல அர்த்தங்கள் இருக்கு. 'ஆயி.. பாபா..'ன்னுதான் இங்கே அம்மா அப்பாவை அழைக்கிறாங்க. மகான்களையும் அப்படியே அவங்க வயசை உத்தேசிச்சு, 'தந்தையே..' என்ற பொருள்பட 'பாபா..'ன்னு வடக்கர்கள் அழைக்க, நாமும் அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டோம். காலப்போக்கில் மகான்கள் என்றாலே பாபான்னு ஆகிடுச்சு.

'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இவரது பிறந்த தினம் 1838-ல் செப்டம்பர் மாசம் 28ஆம் தேதின்னு உத்தேசமா சொல்லப்படுது. தன்னோட பதினாறாம் வயசுல இவர் ஷிர்டிக்கு வந்திருக்கார். மூணு வருஷத்துக்கப்புறம் திடீர்ன்னு காணாமப்போயி ஒரு வருஷத்துக்கப்புறம் திரும்பவும் வந்து ஷிர்டியில் நிரந்தரமா தங்கிட்டார். அதாவது அவர் இறந்த, 1918ஆம் வருஷம் அக்டோபர் 15ஆம் தேதிவரையிலும் .

ஷிர்டிக்கு திரும்பி வந்தப்புறம், ஒரு வேப்பமரத்தடியை தன்னுடைய வசிப்பிடமா ஆக்கிக்கிட்டு, சில சமயங்களில் அங்கியே உக்காந்து தியானம் செய்ய ஆரம்பிச்சுடுவாராம். கொஞ்ச காலத்துக்கப்புறம் அங்கிருந்த மசூதியில் தங்க ஆரம்பிச்சுருக்கார். ரொம்ப எளிமையான வாழ்க்கைமுறையை கடைப்பிடிச்ச அவர், தன்னோட மற்றும் தன்னைச்சார்ந்தவர்களோட உணவுத்தேவைகளை யாசகம் கேட்டு பூர்த்தி செஞ்சுக்கிட்டிருந்திருக்கார். பசித்தீயை அணைக்கிறதுக்காக அவர் ஏத்தி வெச்ச 'துனி'ன்னு சொல்லப்படும் தீ இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்குது. அந்த சாம்பல் பிரசாதமாவும் கொடுக்கப்படுதாம்.
( துனியிலிருந்து வரும் புகை..நன்றி.. தென்றல்).

பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையானவர். கஃபன் என்றழைக்கப்படும் உடம்பைச்சுற்றிய காவித்துணி, தலையை மூடியிருக்கும் இன்னொரு காவித்துணி இவ்வளவுதான் அவரோட சொத்து. இந்து முஸ்லிம் ஆகிய ரெண்டு மதங்களுக்கும் பொதுவானவர் இவர். இதுக்கு, இந்தக்கோயிலுக்கு வர்ற கூட்டமே சாட்சி. தான் தங்கியிருந்த மசூதிக்கு 'த்வாரகாமாயி'ன்னு பேர் சூட்டியிருக்கார். அதேசமயம் அந்த மசூதியில் ரெண்டு மத சம்பிரதாயங்களின்படியும் பூஜைகளும் நடக்குது. இறைவனே தலைவன், ஒருவனே தேவன் என்ற பொருள்படும் பாபாவின் திருவாய்ச்சொற்களான 'அல்லா மாலிக்'.., மற்றும் 'ஸப்கா மாலிக் ஏக் ஹை.' இங்கே ரொம்பவும் புகழ்வாய்ந்தது.

பாபா மசூதியில் தங்கியிருந்தப்ப, ஒவ்வொரு நாள் இடைவெளிவிட்டு இங்கேயிருக்கும் சாவடிக்கு தங்கறதுக்காக போவாராம். அதை நினைவுகூரும் விதமா, பால்கி எனப்படும் பல்லக்கு சேவை நடக்குது. பல்லக்கில் பாபாவின் உருவப்படத்தை வெச்சு, சமாதி மந்திரிலிருந்து த்வாரகாமாயிக்கு கொண்டுபோயிட்டு அங்கிருந்து சாவடிக்கு போவாங்க. அப்புறம் மறுபடி சமாதி மந்திருக்கு திரும்பிவந்து ஆரத்தி எடுப்பாங்க இதுக்கு ஷேஜ் ஆரத்தின்னு பேரு.
எங்கே எந்த சன்னிதி இருக்குன்னு இப்ப தெளிவா புரிஞ்சுபோச்சு..

கோயிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கியிருக்காங்க. முதல்ல போனப்ப, கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் நாலு நுழைவாசல்கள் இருக்குது. கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. அங்கியே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு,  நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க. நுழைவாசலில் ஆண்களுக்கு மட்டும் தடவல் சோதனை உண்டு.

லேண்டி பாக் பக்கத்துல இருக்கிற ரெண்டாம்கேட் வழியா நுழைஞ்சோம். 'பாக்& பகீச்சா'ன்னு சொன்னா தோட்டம்ன்னு அர்த்தம். இந்த லேண்டி பாக்கும், அதுல இருக்கிற கெணறும் பாபா தன் கையாலயும், ஊழியர்களின் உதவியாலயும் உருவாக்கினது. கெணத்தை வலைபோட்டு மூடிவெச்சிருக்காங்க. அங்கே ஒண்ணுசேர்ந்தாப்ல வளந்திருக்கும் வேப்ப+அரசமரத்து அடியில பாபா ஏத்திவெச்ச அகல் இப்பவும் எரிஞ்சுக்கிட்டிருக்காம், நம்மூர்ல அணையாவிளக்குன்னு சொல்றோமில்லையா, அதேமாதிரி இதை இங்கே நந்தாதீப்ன்னு சொல்றாங்க.

தரிசனத்துக்காக வரிசையில் நின்னு நுழைஞ்சோம். அதிகம் கூட்டமில்லை, படிகள் வழியா ஏறி, இறங்கி, யூ டர்ன் எடுத்துன்னு எப்படியோ, போயிக்கிட்டே இருக்கோம். ஒவ்வொருத்தர் கையிலும் காணிக்கையா கூடைகள். அதுல பூ, மாலைகள், சரிகைச்சால்வை, சாதாரண சால்வை, அப்புறம் பேடா பாக்கெட் இல்லைன்னா உலர்பழங்கள் இல்லைன்னா கடிஷக்கர்ன்னு இங்கே சொல்லப்படும் சீனி உருண்டைகள். இந்த சால்வைகளை பாபாவுக்கு சாத்திட்டு வீட்டுல பிரசாதமா வெச்சுப்பாங்களாம்.  கடைசியில் ஒருவழியா பாபாவுக்கு முன்னாடி வந்தே வந்துட்டோம் ஜஸ்ட் பத்து நிமிஷத்துல. நீளமான ஹால். அந்தக்கோடியில் தகதகன்னு மார்பிள் மேடையில் மினுங்கும் சிம்மாசனத்தில் பாபா.

பாபாவின் சமாதி இருக்கறதால சமாதி மந்திர்ன்னு அழைக்கப்படும் இந்த இடத்தில் முரளீதரன் அதாவது நம்ம குழலூதும் கண்ணனுக்கு கோயில் அமைக்கணும்ன்னு நாக்பூரைச்சேர்ந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்ற பணக்காரர் ஏற்பாடு செஞ்சுருக்கார். சிலைகளும் ரெடியாகி வந்துட்டதாம். ஆனா, பாபா.. தானே முரளிதரனாக ரூபமெடுத்துக்காட்ட எல்லா தெய்வங்களும் ஒன்னுதான்னு தெளிஞ்ச கோபால்ராவ், அந்த இடத்தை பாபாவுக்கே கொடுத்துட்டாராம். சிலைகள் இப்போ கோயிலின் மியூசியத்தில் இருக்குன்னு கேள்வி.

மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான வெள்ளிக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம்.  இந்த சிலை திரு. பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டதுன்னு கூகிளார் சொல்றார். சமாதி மேடையின் முன்னால் அழகான வெள்ளி வேயப்பட்ட ரெண்டு தூண்கள். அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே வெள்ளி தகதகன்னுது.

பக்தர்கள் கொண்டுவர்ற மாலைகளை பாபாவுக்கு போட்டுட்டு, ஏற்கனவே சாத்தியிருக்கற மாலைகளில் ஒன்னை உருவி பிரசாதமா தர்றாங்க. தடுப்புக்குள்ளாற மெதுவா நகர்ந்து முன்னாடி போய் நின்னதும், சும்மா அந்த முகத்தைப்பாத்துட்டே நின்னேன். ஒண்ணுமே நினைக்கவோ வேண்டிக்கவோ தோணலை.. அதான் நிஜம். திருப்பதி மாதிரி இங்கியும் ஜருகண்டி இருக்குது.. ஆனா, இன்னும் தள்ளிவிட ஆரம்பிக்கலை. சும்மா வாய் வார்த்தையாலயே, பஸ் கண்டக்டர் மாதிரி, 'ச்சலா.. ச்சலா... ப்பூடே ச்சலா..' அவ்ளோதான். 'ஏம்மா, கருவாட்டுக்கூடை.. முன்னாடி போ' நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை :-))))). தரிசனம் முடிச்சுட்டு திரும்பும்போது பாபாவை பார்த்தமாதிரிக்கே ரிவர்ஸில் நடக்கறாங்க சிலபேர். திருப்பதியிலும் இதை பாத்திருக்கேன்.

தரிசனம் முடிச்சுட்டு வெளியே வந்தப்ப லேசா இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. அதனால, ஓட்டமும் நடையுமா எல்லா சன்னிதிகளையும் வெளியில நின்னே கன்னத்துல போட்டுக்கிட்டோம். பாபா தங்கியிருந்த வேப்ப மரத்தடியிலும் ஒரு சிலைவெச்சு சின்னதா கோயில் கட்டியிருக்காங்க. அவர் வளர்த்த குதிரைக்கும் அங்கியே சமாதி இருக்குது. த்வாரகாமயியையும், மியூசியத்தையும் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. ம்யூசியமாவது ஏற்கனவே பார்த்ததுதான்.பாபாவின் வாழ்க்கை நிகழ்வுகளையும் அவருடைய ஆடைகளையும் பார்வைக்கு வெச்சிருக்காங்க. த்வாரகா மயியை அடுத்ததடவைக்கு ரிசர்வ் செஞ்சாச்சு. அவர் உபயோகப்படுத்தின பொருட்களெல்லாம் அங்க இருக்குதாம். இந்தக்கோயிலைப்பத்தின விவரங்கள் அனைத்தும் இங்கே இருக்குது. தேவையானதை க்ளிக் செஞ்சு தெரிஞ்சுக்கோங்க.

கோயிலுக்குள்ள சாயிபஜன் நடந்துட்டே இருக்குது. அது கோயில் முழுக்க ஒலிக்கிறமாதிரி அங்கங்க ஒலிபெருக்கிகள் வெச்சிருக்காங்க. புத்தக ஸ்டால் ஒண்ணும் பார்த்தேன். அனேகமா கோயில்களைப்பத்தினதாத்தான் இருக்கணும். நிக்க நேரமில்லை..  செல்ஃப் ட்ரைவிங் வேற.. இப்ப கிளம்பினாத்தான் ராத்திரி ஒரு மணிக்காவது வீடுபோய் சேரமுடியும். மறு நாளிலிருந்து காலேஜ், ஆபீஸ்ன்னு ஆணிகள் ஆரம்பிச்சுடுதே. 

நாலாவது கேட் கிட்ட இருந்த பிரசாத ஸ்டாலில் லட்டுபிரசாதம் வாங்கிட்டு, அங்கியே பக்கத்தில் இளநி குடிச்சுட்டு புறப்பட்டோம். இதான் பாதைன்னு நெனச்சு அஹமதாபாத் ரோட்டில்போய், அப்புறம் ட்ராபிக் கான்ஸ்டபிள் கிட்ட கேட்டு இன்னொரு பக்கம் பிரிஞ்ச மண்சாலையில் திரும்பி, இது சரியான பாதைதானான்னு இருட்டுல குழம்பி, அப்புறம், சரியானதுதான்னு தெளிஞ்சு கடைசியா நாசிக் நெடுஞ்சாலையை பிடிச்சோம். இருட்டுல ஹேர்பின் மலைப்பாதைகளை திக்திக்ன்னு பயத்தோட கடந்து வீட்டுக்கு வந்தப்ப ராத்திரி ஒரு மணியை தாண்டிடுச்சு. அவசர ஓட்டமா இருந்தாலும் மனசுக்கு திருப்தியான தரிசனங்கள்.. இன்னொரு தடவை எப்போ வாய்க்குமோ!!! 

படங்கள் தந்துதவிய கூகிளாருக்கும், கூடவே வந்த உங்களுக்கும் நன்றி..



44 comments:

எல் கே said...

//அணையாவிளக்குன்னு சொல்றோமில்லையா, அதேமாதிரி இதை இங்கே நந்தாதீப்ன்னு சொல்றாங்க.//

நம்ம ஊர்லயும் நந்தா விளக்குன்னு சொல்றது உண்டு

துளசி கோபால் said...

முதல்பாராவில் வருசக் குழப்பம் இருக்கு பாருங்க.

சரித்திரம் முக்கியம்ப்பா

துளசி கோபால் said...

முதல் பகுதின்னு மாத்திக்குங்க ப்ளீஸ்.

சென்னையில் கூட ஒரு கோவில் பார்த்தேன் போற போக்கில் வெளியே இருந்து. வருசப்பிறப்பு அன்னிக்கு. இங்கேயும் சவுக்குக் கட்டைகள் கட்டி லைன் போட்டு வச்சுருந்தாங்க.

நல்ல கூட்டம்தான்.

Unknown said...

நாங்களும் வருடாவருடம் கன்னியாகுமரியிலிருந்து ஷிர்டி போய்க்கொண்டே இருக்கிறோம். சிக்னாப்பூரைப்போல் ஷிர்டி ல பில்டப் ஒன்றும் கிடையாது. அந்த வகையில் அது நல்ல கோயில்தான்.

வெங்கட் நாகராஜ் said...

எங்களையும் உங்களுடன் சுற்றுலாவில் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி. ஷிர்டி சாய்பாபா பற்றிய விவரங்கள் நன்று.

வேங்கை said...

அருமையான பதிவு

இங்க சென்னைல 2 இடம் ல இருக்குங்க ஆனால் நான் கோவளம் தாண்டி இருக்கும் பாபா கோவிலுக்கு தான் போய் இருக்கேன் ரொம்ப நல்லா அமைதியா இருக்கும்.......................

Anonymous said...

தெளிவா எழுதியிருக்கீங்க சாரல்! நிறைய தகவல்களும். அவரோட பிறந்த வருஷம் மட்டும் சரி பண்ணிடுங்க!

ஹுஸைனம்மா said...

ஷிர்டி பத்தி இப்பத்தான் விவரமாப் படிக்கிறேன்.

//'துனி'ன்னு சொல்லப்படும் தீ இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்குது//
எப்படின்னு விவரமாச் சொல்லிருக்கலாம்.

//ஒண்ணுசேர்ந்தாப்ல வளந்திருக்கும் வேப்ப+அரசமரத்து அடியில//

இதோட படமும் போட்டிருக்கலாம்!!

அடுத்த பயணங்களும் இதுபோல இனிமையாக அமைய வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

ஷிர்டி சாய்பாபா பற்றிய விவரங்கள் நன்று.

Unknown said...

very Nice!

Ganesan said...

அமைதியான சாரல் மழை விழும் போன்ற பதிவு , பாபாவின் கருணை மழை பொழிகின்ற உணர்வு படிக்கும் பொழுது ஏற்பட்டது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நம்மூர் நந்தாவிளக்குகளுக்கு அரசர்களெல்லாம் மானியமும் கொடுத்திருக்காங்க இல்லியா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

என்னதான் தூக்கக்கலக்கம்ன்னாலும் கவனமா தட்டச்சியிருக்கணும் நான்.. திருத்திட்டேன் :-))

மும்பையிலும் சாயிபாபா கோயில்கள் எக்கச்சக்கமா இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இனியவன்,

ஏன்னா, இவர் மனிதர்களுக்கிடையே வாழ்ந்து மகானானவர். அதனால ரொம்பப்பெரிய பில்டப்புகளுக்கு வாய்ப்பில்லை. ஆனாலும் ஒரு சில அற்புதங்களை சொல்லத்தான் செய்யறாங்க. நம்பறது நம்ம இஷ்டம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

கூடவே வந்ததுக்கு உங்களுக்கும் நன்றி :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேங்கை,

சென்னைல இருக்குன்னு டீச்சரும் சொல்லியிருக்காங்க :-)). சீக்கிரமே அவங்க பதிவில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் நமக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

திருத்திட்டேன்ப்பா.. சுட்டியமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

இங்கியும் அணையாவிளக்கு தத்துவம்தான். அதாவது அப்பப்ப துனி எரிவதற்கான எரிபொருளை போட்டுக்கிட்டே இருப்பாங்க போலிருக்கு. கேமராவை உள்ளே கொண்டுபோக விடாம பிடுங்கிக்கிட்டாங்க. இல்லைன்னா இங்கியும் போட்டோ செஷன் நடத்திட்டு வந்திருப்பேன் :-))). லேண்டிபாக்கையும் வேலிவழியா பாத்ததோட சரி. நேரமில்லாம ஓடிவரவேண்டியதாப்போச்சு.

இன்னொரு தடவை போனா, விட்ட எல்லாத்தையும் மறுபடி பார்க்கணும்ன்னு ஆசை :-))

MANO நாஞ்சில் மனோ said...

சுவாரஸ்யமா இருக்கு....

வல்லிசிம்ஹன் said...

இங்கே நல்ல கோவில்கள் ஷீர்டி பாபாவுக்குக் கட்டப் பட்டிருக்கின்றன சாரல். அதில் மாமல்லபுரம் பக்கம் இருக்கும் கோவில் தான் புதியது என்று நினைக்கிறேன். அப்படியே ஷீரடியை மாடலாக வைத்துக் கட்டி இருக்கிறார்கள். கடலைப் பார்த்து அமர்ந்திருக்கும் பாபாவின் முகத்தில் நிரந்திர அமைதியான சிரிப்பு. நன்றாக மெயிண்டெயின் செய்கிறார்கல். சென்னைத் தொழிலதிபர் ஒருவரால் கட்டப் பட்டது. இங்கே தட்சிணை கொடுக்கும் வழக்கமெல்லாம் கிடையாது. எனக்கு மிகவும் பிடித்த கோவில். வெகு அழகாக எழுதி இருக்கிறீர்கள் சாரல். துளசி சொல்வது மைலாப்பூரில் இருக்கும் முதல் முதலாகக் கட்டப்பட்ட பாபா மந்திர்.

ஆச்சி ஸ்ரீதர் said...

வியாழக் கிழைமையில் தங்கள் பதிவை படித்ததில்,ஷிரடிக்கு போயிட்டுவந்த திருப்தி அடைந்தேன்.முன்பெல்லாம் தென்னகத்தில் சாய் பாபா அவ்வளவு பிரபலம் இல்லை,தற்போழுது எப்படியோ நிறைய சாய் பாபா பக்தர்கள் உருவாகிவிட்டர்கள்.பகிர்வுக்கு நன்றி.

ADHI VENKAT said...

திருப்தியான பயணமா இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு சாரல். எங்க வீட்டுக்கு அருகில் நான்கு வருடம் முன்னர் அழகான கோவில் பாபாவுக்கு. அடிக்கடி செல்வதுண்டு. அங்கு // பசித்தீயை அணைக்கிறதுக்காக அவர் ஏத்தி வெச்ச 'துனி'// உள்ளது. அதன் அர்த்தம் இப்போ புரியுது. நன்றி.

குறையொன்றுமில்லை. said...

பாபா பத்திய விவரங்கள் நல்லா சொல்லி இருக்கின்ங்க

கோமதி அரசு said...

சாயிபாபாவின் தர்பார் காட்சி, துவாரகமாயி சாவடி ஊர்வல தரிசனம்,
அருமருந்தாய் ஊதி பிரசாதம் எல்லாம்
கிடைத்த திருப்தி கிடைத்தது உங்கள் பயணக் கட்டுரையில்.

நன்றி அமைதிச்சாரல்.

G VARADHARAJAN said...

good guidelines in your story, i am also visited last yer middle very excellent place.thanks for your response.

g.varadharajan
pudukkottai

குறையொன்றுமில்லை. said...

நீங்க ஷீர்டி பத்தி விளக்கமா அழகாச்சொல்லி இருக்கீங்க.

Unknown said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

Asiya Omar said...

உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சில் மனோ,

இடுகையை ரசித்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

மும்பையில் பகுதிக்கு நாலஞ்சு கோயில்களாவது இருக்கும். குடியிருப்பு காலனிகளுக்கு அவர் பெயரை சூட்டும் அளவுக்கு பாபா பக்தர்கள் இங்கே எக்கச்சக்கம். நம்ம பக்கத்துல இப்பத்தான் பரவ ஆரம்பிச்சிருக்கு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க திருமதி ஸ்ரீதர்,

தெற்கேயிருந்து வடக்கே நிறையப்பேர் இடம்பெயருகிறார்கள் இல்லியா, அவங்க கொண்டுவந்ததாக்கூட இருக்கலாம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

நீங்க திருப்தின்னு சொன்னதே எனக்கு திருப்தியாயிருக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

ரொம்ப நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வரதராஜன்,

வாய்ப்பு கிடைச்சா இன்னொருதடவையும் போயிட்டுவாங்க :-)). ரொம்ப அமைதியான இடம் அது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாரத்..பாரதி,

வணக்கங்களை பாபாவுக்கு சமர்ப்பிச்சிட்டேன் :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

இதோ வரேன் :-))

மாதேவி said...

ஷிர்டி பயணம் இனிது.

இங்கு யாழ்ப்பாணத்தில் சிறிய ஷிர்டி பாபா கோவில் ஒன்று இருக்கிறது. அண்மையில் சென்றிருந்தேன்.

நானானி said...

ஷீரடி தரிசனம் நினைப்பிலிருக்கு.
பாபாதான் மனசு வைக்கணும்.
மும்பைக்கு மகனைப் பார்க்க வரும்போது போகணும்.
மிக்க நன்றிம்மா!

சிறியவன் said...

என்ன அய்யா சொல்றீங்க 2008 சமயத்துல தங்கத்தில பாபா சன்னதியைப் பார்த்ததாத்தான் எனக்கு ஞாபகம், நீங்க வெள்ளிங்கறீங்க !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

நானானிம்மா,

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நாளு கழிச்சும் நன்றி சொல்லலாம்தானே :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிறியவரே,

உங்க புண்ணியத்துல மறுபடியும் சாயிபாபாவை என்னோட இடுகையில் தரிசிச்சேன்..

தங்கமா வெள்ளியான்னு குழப்பம் வர வேணாம்ன்னுதான் போட்டோவை கூகிளாண்டவர் கிட்டேருந்து சுட்டுட்டு வந்து போட்டுருக்கேன். பார்த்து உங்க சந்தேகத்தை நிவர்த்தி செஞ்சுக்கோங்க. தங்க முலாம் பூசிய வெள்ளியாவும் இருக்க வாய்ப்பிருக்கு :-))

LinkWithin

Related Posts with Thumbnails