Thursday 12 December 2013

முதலீடும் வட்டியும்..

பூரியா சப்பாத்தியா என்ற குழப்பத்திற்கு விடை தேடி முடிக்கையில் உப்புமா வந்து உட்கார்ந்து கொள்கிறது காலை உணவாக.

கற்பித்தலின் மூலம் கற்றுக்கொள்வதை விட பார்த்தும் கேட்டும் உணர்ந்தும், ஏற்படும் அனுபவத்தால் கற்றுக்கொள்வதே அதிகமும் வழி காட்டுகிறது.

சுமையாய் நினைக்காத வரை கனம் உணரப்படுவதில்லை.

நமது போதனைகளிலிருந்து கற்றுக்கொள்வதை விட நம்மிடமிருந்தே அதிகமும் கற்றுக்கொள்கின்றன குழந்தைகள்.

பக்குவப்பட்டவனை எதுவும் பாதிப்பதில்லை.

‘வாழ்க்கை என்பது இப்படித்தான்’ என்ற பக்குவம் எல்லா மனிதர்களுக்குமே வந்து விடுகிறது. சிலருக்குச் சீக்கிரமாக.. சிலருக்கு வாழ்வு முடியும்போது.

வாழ்வின் ஆரம்ப காலங்களில் செய்யும் முதலீட்டுக்கான வட்டியே பிற்பாதியில் கிடைக்கிறது. நல்லதை முதலீடு செய்து மகிழ்ச்சியைப் பெறுவோம்.

பிறரின் கண்ணீருக்குக் காரணமாக இருப்பவன் இறுதியில் அவர்களை விட அதிகமாகக் கண்ணீர் விட நேரிடும்.

கண்ணீர்ப்பூக்களைப் புன்னகைப்பூக்களாக மாற்ற வல்லது அன்பு.

ஆரம்பகால உற்சாகம் அடுத்து வைக்கும் அடிகளிலும் குன்றாதிருப்பதே வெற்றியை நோக்கி நம்மை வேகமாக இட்டுச்செல்லும்.

18 comments:

ராமலக்ஷ்மி said...

அத்தனை துளிகளும் அருமை. இறுதி இரண்டும் மிகப் பிடித்தன. படம் அழகு.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையான சிந்தனைத்துளிகள்.. பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான மொழிகள்
மனதில் பதிந்துவைத்துக் கொண்டு
அன்றாட வாழ்வில்
கடைபிடிக்க முடிந்தவைகளும் கூட
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

உஷா அன்பரசு said...

அட.. முதல் துளி கவிதை மாதிரி இருக்கே..!

திண்டுக்கல் தனபாலன் said...

Good...

(From Android)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துமே அருமைதான்.

//‘வாழ்க்கை என்பது இப்படித்தான்’ என்ற பக்குவம் எல்லா மனிதர்களுக்குமே வந்து விடுகிறது. சிலருக்குச் சீக்கிரமாக.. சிலருக்கு வாழ்வு முடியும்போது.//

;) அதே அதே !!

//வாழ்வின் ஆரம்ப காலங்களில் செய்யும் முதலீட்டுக்கான வட்டியே பிற்பாதியில் கிடைக்கிறது. நல்லதை முதலீடு செய்து மகிழ்ச்சியைப் பெறுவோம்.//

சபாஷ் ! ;)

//கண்ணீர்ப்பூக்களைப் புன்னகைப்பூக்களாக மாற்ற வல்லது அன்பு.//

சூப்பர் ! ;)

கரந்தை ஜெயக்குமார் said...

///ஆரம்பகால உற்சாகம் அடுத்து வைக்கும் அடிகளிலும் குன்றாதிருப்பதே வெற்றியை நோக்கி நம்மை வேகமாக இட்டுச்செல்லும்.///
அருமை

ADHI VENKAT said...

அத்தனையுமே அருமை...

ஸாதிகா said...

பத்துத்துளிகளும் முத்துத்துளிகள்/

வெங்கட் நாகராஜ் said...

அத்தனை துளிகளும் அருமை....

பாராட்டுகள்.

'பரிவை' சே.குமார் said...

துளிகள் அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள் அக்கா.

கீதமஞ்சரி said...


சிந்தனைத் துளிகள் அனைத்தும் அருமை.

\\சுமையாய் நினைக்காத வரை கனம் உணரப்படுவதில்லை\\

அதிகம் கவர்ந்த துளியிது.
பாராட்டுகள் அமைதிச்சாரல்.

Asiya Omar said...

மிக அருமை.அத்தனையும் முத்துக்கள்.

கோமதி அரசு said...

வாழ்வின் ஆரம்ப காலங்களில் செய்யும் முதலீட்டுக்கான வட்டியே பிற்பாதியில் கிடைக்கிறது. நல்லதை முதலீடு செய்து மகிழ்ச்சியைப் பெறுவோம்.//

அருமை.
முத்துக்கள் அத்தனையும் அருமை.

மாதேவி said...

அனைத்தும் அருமை.

தி.தமிழ் இளங்கோ said...

நன்றி! சகோதரி ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மாதேவி said...

உங்களுக்கும்குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துகள்!

LinkWithin

Related Posts with Thumbnails