Saturday, 30 May 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

இதே ஈற்றடிக்கு எழுதிய இன்னும் சில பாக்களுடன் பிரசுரமான வெண்பாவும்..

பொன்னிறக் காலைப் பொழுதும் பொலிவான
கன்னல் நிகர்த்த கிளிமொழியும் - வன்னமிகு
அன்னத் திரளும் அடர்வனமும் சூழ்ந்திட
என்னே இயற்கை எழில்.

பச்சை வயலும் பனிமுகில் சூழ்மலையும்
இச்சை தரும்பூ வினங்களும் - நச்சியே
கொன்றை பொலிவதைக் கண்ணாரக் காணீரோ
என்னே இயற்கை எழில்.

வெள்ளி அருவி விரிந்து விழப்பொழிந்து
துள்ளி வருமே துணையுடனே - தெள்ளிய
அன்னம் அசைந்து அலைமேல் மிதக்குதே
என்னே இயற்கை எழில்.

கானப் புனலும் கதிரவன் பொன்னொளியும்
வானவில் ஏற்றிய வண்ணமும் - வானோங்கி
தென்னையும் புன்னையும் தானுயர்ந்து நோக்கிட
என்னே இயற்கை எழில்.

மின்னும் பனிமலை மேவிய புல்வெளியில்
மின்மினிப் பூஞ்செறிவு முன்றிலாய்- நன்றாக
முன்னே விரிந்த முழுமை யினைக்காண
என்னே இயற்கை எழில்.

வெண்பாவை வெளியிட்ட அமுதசுரபி இதழுக்கு நன்றி.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails