Monday 20 December 2010

இசை மழையில்...

மெல்லிய மாலை நேரம்.. இருள் கவிந்தும் கவியாமலும் ஒரு பிஞ்சுப்பொழுது, அரவங்கள் அடங்கத்தொடங்கும் முன்னிரவு,.. கனமான இருட்டைப்போர்த்தி உறங்கும் அமைதியான இரவு.. எந்நேரமென்றாலும் இசையையும் பூசிக்கொண்டவுடன் அழகாகவே ஆகிவிடுகின்றன.   ஊரே உறங்கும் ஜாமத்தில் அமைதியான சூழலில் நமக்கு பிடிச்ச பாடல்களை நமக்கு மட்டும் கேட்கும்படியான ஒலியில் ரசிப்பது ஒரு தனியின்பம்.. ..

அதிலும் பெண்குரல்களில் பாடல்கள் கேட்பதென்பது இன்னும் அழகான அனுபவம். மூளையின் ஞாபகஅணுக்களில் உறைந்திருக்கும்,  தாலாட்டுப்பாடல்களை நினைவுபடுத்துவதால் கூட இருக்கலாம். காதுல மாட்டுன ஹெட்போனோட நம்மையறியாமலேயே தூங்கிப்போவோம். தேனின் எந்தத்துளி மிகவும் இனிப்பானது என்று அடையாளப்படுத்த முடியாது.. அதுமாதிரிதான் பாடல்களும்.. பெண்குரல்களில் ஒலிக்கும் பிடித்தமான பத்து பாடல்களை தொகுத்து வழங்கி தொடர்கிறேன் சகோ எல்.கே அழைத்த இந்த தொடர்பதிவை.. இந்த கொண்டாட்டமான இடுகைக்கு இன்னுமொரு விசேஷம் இருக்குது கடைசி பத்தியில்...

இசையின் பெருமையை இதைவிட அழகாக விளக்கிவிடமுடியுமா!!! இளையராஜாவின் இசையில் கங்கை அமரனின் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சுஜாதா.

1.ஒரு இனிய மனது.. சுஜாதா.
http://www.youtube.com/watch?v=_JVxurtGIhI&feature=related

ஒருவித குழந்தைத்தனமான குரல், ஸ்ரீதேவிக்கு நல்லாவே பொருந்திப்போகுது..
2.மலர்களில் ஆடும் இளமை எஸ்.பி. ஷைலஜா.
http://www.youtube.com/watch?v=L3UY8SQi378

கவிஞரின் வரிகளும் ஜென்சியின் காந்தக்குரலும்.. லாங்ட்ரைவ் செய்யும்போது கேக்க இன்னும்அருமையா இருக்கு..
3.அடிப்பெண்ணே.. ஜென்சி.
http://www.youtube.com/watch?v=cmQZ9GMt71M&feature=related

ஜானகியம்மாவின் எல்லாப்பாடல்களுமே பிடிக்கும். குழந்தைக்கும், குடுகுடு பாட்டிக்கும் ஏத்தமாதிரியான மேஜிக் குரல் அவரோடது. அதென்னவோ முன்னிரவுகளில் இவரோட பாடல்கள் இன்னும் கொஞ்சம் ஜெகஜ்ஜாலம் காட்டுது :-)). இந்த ரெண்டு பாட்டுகளும் சும்மா சாம்பிளுக்காக..
4.புத்தம் புது காலை--- எஸ். ஜானகி
http://www.youtube.com/watch?v=pwr17VHk8GY&feature=related

சின்னச்சின்ன-- எஸ். ஜானகி
5.http://www.youtube.com/watch?v=h4QtTt3iYOk&feature=related

இனிமையும், சின்னதா ஒரு கம்பீரமும் இழைஞ்சுருக்கும் இவரோட குரலில் எல்லாப்பாடல்களுமே அருமையானவை.லிஸ்ட் போடறதாயிருந்தா ஒரு இடுகை பத்தாது :-)))
6. நாளை இந்த வேளை பார்த்து.. பி. சுசீலா.
http://www.youtube.com/watch?v=Znr9PHjFkks

இந்தப்பாடலை முணுமுணுக்காதவர்களே இருக்கமுடியாது. கண்ணதாசனின் சாகாவரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒண்ணு.
7.நினைக்கத்தெரிந்த மனமே... பி.சுசீலா.
http://www.youtube.com/watch?v=-lTpkK9ZOj0&feature=channel

பஞ்சாமிர்தத்தில் மறைஞ்சு நின்னு லேசா தலைகாட்டுமே, அப்படியானதொரு தேனின் தித்திப்பு இவங்க குரலில். அதில் இந்தப்பாடல் ரொம்பவே விசேஷம்.
8.மேகமே.. மேகமே.... வாணி ஜெயராம்.
http://www.youtube.com/watch?v=0CBlDFmDnac&feature=related

தமிழில் சித்ராவின் ஆரம்பக்கட்டப்பாடல்களில் அசத்தலான இதுவும் ஒண்ணு.
9.பூவே பூச்சூடவா... சித்ரா.
http://www.youtube.com/watch?v=TCjh5h-ZaRI


10.கண்ணாமூச்சி ஏனடா... சித்ரா.
http://www.youtube.com/watch?v=cb5444i2bwg&feature=fvw

வடக்கே திரையிசையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர். இசையென்பது மொழிக்கெல்லாம் அப்பாற்பட்டது.. இவரோட குரலும் அப்படித்தான்
11.ஆராரோ.. ஆராரோ..... லதா மங்கேஷ்வர்.
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=19803&br=medium&id=3700&songname=Aaraaro&page=movies

ஒவ்வொரு வரிகளா மேற்கோள் காட்டத் தேவையில்லாதபடிக்கு எல்ல்லோருடைய சின்னச்சின்ன ஆசைகளையும் சேர்த்துவைத்திருக்கிறது இந்தப்பாடல்.
12.சின்னச்சின்ன ஆசை... மின்மினி
http://www.youtube.com/watch?v=Czhkrwzqvww

பத்துன்னு சொல்லிட்டு பன்னிரண்டு பாடல்களை தொகுத்திருக்கேன்.. ஆட்டம்... பாட்டுன்னு கொண்டாட்டமா இருக்கிற இது என்னோட 100- ஆவது இடுகை.








56 comments:

ராமலக்ஷ்மி said...

இசை மழையாய் பொழிந்திருக்கும் நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்:)!

Unknown said...

வடை எனக்கே....

Unknown said...

மெல்லிய மாலை நேரம்.. இருள் கவிந்தும் கவியாமலும் ஒரு பிஞ்சுப்பொழுது, அரவங்கள் அடங்கத்தொடங்கும் முன்னிரவு,.. கனமான இருட்டைப்போர்த்தி உறங்கும் அமைதியான இரவு.. எந்நேரமென்றாலும் இசையையும் பூசிக்கொண்டவுடன் அழகாகவே ஆகிவிடுகின்றன.//
அட அட என்ன ஒரு கவிதை நயமான வார்த்தை பயன்பாடு..

கலக்கறீங்க

எல் கே said...

தொடர்ந்ததற்கு நன்றி. அருமையான தொகுப்பு. நூறுக்கு வாழ்த்துக்கள் விரைவில் ஆயிரம் பதிவை எட்ட வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

100க்கு வாழ்த்துக்கள் .

ஹுஸைனம்மா said...

பெண்குரல் பாடல்களுக்குத் தனி சிறப்புதான் சாரலக்கா. நீங்க சொன்னதுபோல, ராத்திரியில கேட்டுகிட்டே படுத்தா சொக்கித்தான் போகும்!!

நல்ல பாடல்களுக்கும், 150க்கும் வாழ்த்துகள்!!

வெங்கட் நாகராஜ் said...

வாவ்.... அத்தனையும் நல்ல பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.


உங்களது நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள். மேலும் பல நூறு இடுகைகள் இந்த வலைப்பூவில் வரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

ஸாதிகா said...

100க்கு வாழ்த்துக்கள்.பாட்டுத்தொகுப்பு அருமை.

Anonymous said...

அருமையான பாடல்கள்!
நூறுக்கு வாழ்த்துக்கள் சாரல் :)

Unknown said...

visit "kinarruth thavalai" at asokarajanandaraj.blogspot.com

Chitra said...

இன்னிசை கச்சேரியுடன், நூறாவது இடுகை - தூள் கிளப்புது! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

ராமலக்ஷ்மி said...

@ siva,

sorry. நூறாவது பதிவின் கமகம வடை எனக்கே:))!

அம்பிகா said...

நல்ல இனிமையான பாடல்களின் தொகுப்பு.அருமை.
சதமடித்ததுக்கு வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

ராமலக்ஷ்மி said...
இசை மழையாய் பொழிந்திருக்கும் நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்:)!//

Repeeeeeettttt..

Vidhya Chandrasekaran said...

அருமையான பாடல் தேர்வு.

நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்..

ADHI VENKAT said...

100க்கு வாழ்த்துக்கள். அனைத்துப் பாடல்களுமே இனிமையானவை.

ஹேமா said...

சாரல்...மிகவும் சந்தோஷம்.100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள் தோழி.பாட்டுத் தேர்வுகள் ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறது !

Gayathri said...

வாழ்த்துக்கள் கலக்குங்க
இன்னுமின்னும் நெறைய எழுதி சாதனை செய்ய என் வாழ்த்துக்கள்

Unknown said...

முதலில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

Unknown said...

இரவை பற்றிய நீங்கள் சொல்லியிருக்கும் வார்த்தைகள் மிகவும் சரி.

Unknown said...

எல்லாமே இனிய பாடல்கள். ரொம்ப நல்லா தொகுத்துள்ளீர்கள்.
best one ஒரு இனிய மனது.. சுஜாதா.

நானானி said...

இசைச்சாரலின் பொழிவு அத்தனையும் அரு...மை!
இரவின் இனிமையில் சுகராகம் கேட்பதுவும் சுகம்!!

நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!!இன்னும் பல நூறுகாணவும் அதுவே!!!

ஆமினா said...

பாடல் தொகுப்பு அருமை!!

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!!!

எம் அப்துல் காதர் said...

எல்லா பாட்டும் அருமையான தொகுப்பு சரளாக்கா.!! 100-வது பதிவுக்கு வாழ்த்துகள்!!!

நசரேயன் said...

100க்கு வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

எஸ்.பி.ஷைலஜா, மின்மினி இவர்கள் இருவரையும் மறுபடி நினைவூட்டியதற்கு நன்றிகள்...

நீச்சல்காரன் said...

சச்சினுக்குப் போட்டியாக நூறு அடித்த உங்களுக்கு வாழ்த்துக்கே போட்டியாக ஒரு வாழ்த்து சொல்லிக்கிறேன்.
[im]http://2.bp.blogspot.com/_e_TNZOEzeAo/TRAO3YBWf2I/AAAAAAAAAc8/rTRxWv5v5hI/s1600/wishes.gif[/im]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

இன்னிக்கு உங்களுக்கே வடை..பாயாசம் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவா,

ஆஹா!!.. இன்னிக்கும் வடை போச்சா :-)))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு..

வாழ்த்துக்களுக்கு நன்றி..

கோமதி அரசு said...

சாரல் மழையில் நனைய ஆசை எல்லோருக்கும் உண்டு.

நீங்கள் தொகுத்த இசை சாரலில் நனைய வைத்து விட்டீர்கள்.

உங்கள் 100வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் பாஸ்

[im]http://4.bp.blogspot.com/_TWFTNARrwjI/TRD2uWn9AaI/AAAAAAAAElI/K005SDd9wcE/s1600/am.JPG[/im]

ப்ரியமுடன் வசந்த் said...

நாளை இந்த வேளைபார்த்து ஓடி வா நிலாவும், நினைக்கத்தெரிந்தமனமேவும் எனக்கும் பிடித்தபாடல்கள்..!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கிணற்றுத்தவளை,

உங்க பக்கமும் எட்டிப்பார்த்தாச்சு :-))

முதல்வரவுக்கு நன்றி.. அடிக்கடி வாங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

இன்னும் நிறைய பாடல்களை சேர்க்கலாம் போலிருக்கு. ஆனா பத்துக்குத்தான் அனுமதியாம் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இர்ஷாத்,

ரிப்பீட்டெல்லாம் ஆகாது.. நீங்களேதான் பின்னூட்டம் போடணுமாக்கும் :-)

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

இன்னும் எக்கச்சக்கம் இருக்குப்பா :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க காயத்ரி,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாரத் பாரதி,

ஸ்ரீதேவிக்கு ரொம்பவே பொருந்துது அந்தக்குரல் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

எல்லாம் உங்க ஆசீர்வாதம் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்துல் காதர்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

பாட்டுகளைப்பத்தி ஒண்ணூம் சொல்லலியே :-))

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரபாகரன்,

கொஞ்சமா பாடினாலும் நிறைவான பாடல்கள் இவங்களோடது..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நீச்சல்காரன்,

உங்களுக்கும்,

[im]http://countrystitchin.files.wordpress.com/2008/08/thankyou-5.jpg[/im]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதி அரசு,

ரொம்ப நன்றிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

[im]http://www.zwani.com/graphics/thank_you/images/7.jpg[/im]

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. நல்ல செலக்ஷன்ஸ்..

ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும்.....
புத்தம் புது காலை...பொன்னிற வேளை...
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா... (ரொம்ப ரொம்ப பிடிக்கும்)
பூவே பூச்சடவா... எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா....(இதுவும் பிடிச்ச பாடல்)
கண்ணாமூச்சி ஏனடா....என் கண்ணா... (ரொம்ப............பிடிக்கும்)


அருமையான இசை விருந்து குடுத்திடீங்க.. உங்க 100 வது பதிவிற்கு..!
மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..! :-))

LinkWithin

Related Posts with Thumbnails