Sunday 14 February 2010

அன்பெனும் மழையில்...happy valentine's day

உனக்கான என்னை
நீயும்
எனக்கான உன்னை
நானும்
கண்டு கொண்டதில்
ஆரம்பித்தோம்
நமக்கான நாம்.

**********************

ஊடலுக்குப்பின்
காதல்
இது பழமொழி
ஊடலுக்குப்பின்
ஊடல்
இது
காதலர் மொழி

**********************

இன்னும்
எத்தனைமுறை வேண்டுமானாலும்
விழுவேன்
தாங்கிக்கொள்ள
உன் கரம் இருந்தால்.

**********************

தினமும் பார்த்துக்கொள்ளவில்லை
பரிசுகள் என்னும்
உரமிடவுமில்லை
ஆனாலும் செழிக்கிறது
நாம் வளர்த்த பயிர்
அன்பெனும் மழையில்.

**********************
உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.

**********************

காதலர்களுக்குத்தான்
காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.

28 comments:

Paleo God said...

::))
super.

எல் கே said...

கவிஞர் அமைதிசாரல் வாழ்க

கண்மணி/kanmani said...

//எனக்கான என்னை
நானும்//
எனக்கான உன்னை என வரனும்

கண்மணி/kanmani said...

:))

தமிழ் உதயம் said...

கவிதையில் சொல்லப்பட்ட அத்தனையும் நிஜம்

ஹுஸைனம்மா said...

//காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.//

அதானே!!

மதுரை சரவணன் said...

arumai . naalla irukku. anaiththum kaviththuvam patukirathu. vaalththukkal.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

நன்றி. வரவுக்கும் கருத்துக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

தொண்டர்களை கூட்டலை, விழா நடத்தலை, அட்லீஸ்ட் பணமுடிப்பும் கொடுக்கலை.இதெல்லாம் இல்லாம என்ன பட்டமளிப்பு . முதல்ல இதெல்லாம் ஏற்பாடு பண்ணுங்க :-)))))

சாந்தி மாரியப்பன் said...

அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் டீச்சரம்மா... :-))))

திருத்திட்டேன். நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

சிரிப்பாணிக்கு நன்றி கண்மணி மேடம்.:-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ் உதயம்,

முதல் வரவுன்னு நினைக்கிறேன்.

தமிழே பாராட்டிடுச்சா!!!... ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மதுரை சரவணன்,

முதல்வரவுக்கு நன்றி.

பாராட்டுகளுக்கு நன்றி.

எல் கே said...

//தொண்டர்களை கூட்டலை, விழா நடத்தலை, அட்லீஸ்ட் பணமுடிப்பும் கொடுக்கலை.இதெல்லாம் இல்லாம என்ன பட்டமளிப்பு . முதல்ல இதெல்லாம் ஏற்பாடு பண்ணுங்க :-))))) //

அதுக்கு எல்லாம் நீங்க காசு தந்தா , ஏற்பாடு பண்ணிடலாம் (பாதி பேரு அப்படித்தானே பண்றாங்க) உங்க வசதி எப்படி :D:D:D:D:D:D:D

ப்ரியமுடன் வசந்த் said...

தினமும் பார்த்துக்கொள்ளவில்லை
பரிசுகள் என்னும்
உரமிடவுமில்லை
ஆனாலும் செழிக்கிறது
நாம் வளர்த்த பயிர்
அன்பெனும் மழையில்.
//

க்ளாஸ்...!

சாந்தி மாரியப்பன் said...

// (பாதி பேரு அப்படித்தானே பண்றாங்க)//

நான் மீதி பேரில் ஒருத்தியாக்கும் :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

நன்றிப்பா.

துபாய் ராஜா said...

ஒத்துக்கிறோம் நீங்களும் ரவுடிதான்.. :))

அம்பிகா said...

கவிதை நல்லாயிருக்குங்க.

அம்பிகா said...

கவிதை நல்லாயிருக்குங்க.

கண்ணகி said...

காதலர்களுக்குத்தான்
காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.

அழகான வரிகள் சாரல்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய் ராஜா,

ஜீப்புல இடம் கிடைச்சிடுச்சா... ஆஹா!!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

இரட்டிப்பு நன்றிப்பா...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

பாராட்டுகளுக்கு நன்றிங்க.

சந்தனமுல்லை said...

அட...நீங்களும் கவிதாயினியா...கண்டுக்கொண்டதில் மகிழ்ச்சி1 :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முல்லை,

இது சும்மா.. அப்பப்ப எடுக்கும் அவதாரம் :-))

நசரேயன் said...

//சந்தனமுல்லை said...
அட...நீங்களும் கவிதாயினியா...கண்டுக்கொண்டதில் மகிழ்ச்சி1 :-)
//

அல்லோ அவங்க எல்லாம் ரவுடியாகி ரெம்ப நாளாச்சி

LinkWithin

Related Posts with Thumbnails