Wednesday 20 January 2010

ஏம்ப்பா.... இப்படி??????.

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள்ளாம் ஆரம்பிக்கப்போவுது.இவ்வளவு நாள் சரியா படிக்காதவங்க கூட,இப்போ ராத்திரி, பகலா விழுந்து, விழுந்து படிக்க ஆரம்பிச்சிருப்பாங்க..அம்மாக்களெல்லாம் ஹார்லிக்ஸும், மசாலா டீயும் போட்டுக்கொடுத்துட்டு, ஏதோ அவுங்க பரீட்சை எழுதப்போவது போல, டென்ஷனோட கூடவே முழிச்சிருப்பாங்க!!!. பாத்துப்பாத்து சமைச்சு கொடுப்பாங்க...

"கீரை சாப்புடு.... பழம் சாப்புடு.... பாவம்.. ராப்பகலா முழிச்சு புள்ளைக்கு உஷ்ணம் ஏறிப்போச்சு..படிச்சு,படிச்சு, புள்ளைக்கு தொண்டை கட்டிப்போச்சுன்னு சொல்லி சுக்கு காப்பி போட்டு கொண்டு வந்து, பக்குவமா ஆத்தி, புள்ளை இருக்கிற இடத்துக்கே, கையில கொண்டாந்து கொடுப்பாங்க..

புள்ளைங்களை பச்சத்தண்ணியில, குளிக்கக்கூட விட மாட்டாங்க.. ஜலதோஷம் பிடிச்சுக்குமாம்...லேசா ஒரு தும்மல் போட்டாக்கூட 'புள்ளையை சரியா கவனிக்கிறதை விட வேற என்ன வேலைன்னு'அம்மாவுக்கு திட்டு விழும்...பொதுப்பரீட்சை வருதுன்னு புள்ளையை பொத்தி பொத்தி, பாத்துக்குவாங்க..

பரிச்சை ஆரம்பமானதுலேர்ந்து,புள்ள படிக்கிது,அதோட கவனம் செதறக்கூடாதுன்னு சொல்லி,இவங்க கவனமா பாத்துப்பாங்க.பரிச்சைக்கு வேண்டிய எல்லாம் சரியா கொண்டு போவுதான்னு ஒன்னுக்கு ரெண்டு தரம் சரிபாத்து வைக்கிற பெற்றோர்கள் நிறையா பேர் இருக்காங்க.

அவுங்க மனசுலேயும் லேசா கலக்கம் இருக்கத்தான் செய்யும்.அவுங்க கலக்கம் பரிச்சையை நெனைச்சு இல்ல.. ரிசல்ட்டை நெனைச்சுதான்..ஊர்ல உள்ள, இல்லாத பொல்லாத நெனைப்பெல்லாம் அப்பத்தான் ஓடிவரும்."யப்பா!... கொலசாமி.... எம்புள்ளைக்கி நல்ல படிப்பையும், புத்தியையும் கொடுப்பா"ன்னு,ஆயிரத்தெட்டு வேண்டுதல் வெப்பாங்க.ரிசல்ட் வர்ற அன்னிக்கு புள்ளையை விட, டென்ஷன் படற பெத்தவங்க எக்கச்சக்கம். எல்லாம்...... இந்த பாழாப்போன அறிவு, அன்னைக்குன்னு சில புள்ளைங்களுக்கு மழுங்கிப்போயிருதே....அதை நெனைச்சுத்தான். அங்கன,.. அந்தப்பையன் அப்படி பண்ணிக்கிட்டான், இங்கன, இந்தப்பொண்ணு இப்படி பண்ணிக்கிட்டா அப்டிங்கிற ரிசல்ட்டும் சேர்ந்தே இல்ல வருது..

ஏஞ்சாமி....படிப்ஸ் பார்ட்டிங்களை விடுங்க...அவுங்க பாஸாகிடுவாங்க... கொஞ்சம் முயற்சி செஞ்சா தேறுறவங்க, கடைசி நேரத்துல, விழுந்து விழுந்து படிச்சிட்டு ஓடுறவங்க இவுங்கள்ளாம் கொஞ்சம் யோசிக்கலாமில்ல...பெத்தவங்க கண்ணீருக்கு யாருப்பா பதில் சொல்றது.. இப்பல்லாம், அனேகமா புள்ளைங்க இஷ்டப்படற படிப்பைத்தானே படிக்கிறாங்க....அப்படி இல்லையா... மொதல்லே அப்பா.. அம்மா.... கிட்டே உட்கார்ந்து பேசுங்க... புரிய வையுங்க..."ஃப்யூச்சர்ல என்னவா ஆகப்போறோம்கிறதை எட்டு, அல்லது ஒன்பதாம் வகுப்பு வரும்போதே முடிவு செஞ்சுக்கோங்க,அதுக்கேத்த மாதிரி உழைங்க" அப்டின்னு நான் இல்லை,.. ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்.

அவரவருக்கான அரிசியை ஆண்டவன் அளந்து வெச்சிருப்பான், அதனால தயவு செஞ்சு மனச அலைபாய விடாதீங்க.

அப்பா... அம்மாக்களும் கொஞ்சம் யோசிக்கணும். பரிச்சை கிட்டே வந்த பிறகு, பசங்களை ஓட ஓட விரட்டுவதை விட,மொதல்லேயே அவங்க கிட்ட உக்காந்து பேசுங்க... ஏதாவது பிரச்சினை இருந்தா, அவங்களுக்கு அதை தீர்க்க உதவி செய்யுங்க.. இதில் முக்கியம், தீர்க்கிறேன் பேர்வழின்னு நீங்களே பிரச்சினையா மாறிடாதீங்க...

அவங்களுக்கு, தேவையானத வாங்கி கொடுப்பது மட்டுமில்லை... வீட்டுல படிக்கிறதுக்கான அமைதியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொடுங்க.உங்களோட நிறைவேறாத ஆசைகளை உதாரணமா கலெக்டர், இஞ்சினியர், டாக்டர்ன்னு இருந்தா அவுங்க மேல திணிக்காதீங்க. ரிசல்ட் பற்றிய பயம் அவங்களுக்கு வராம பாத்துக்கோங்க..படிக்கிறப்ப லேசான கண்காணிப்பு தேவை...பாடங்களை கரெக்டா முடிக்க முடியலையா... டைம்டேபிள் போட்டு படிக்கச்சொல்லுங்க...

ஓரொருத்தருக்கு, ஓரொரு மாதிரி படிக்கிற பழக்கம் இருக்கும். "நான் விடியக்காலையில எந்திரிச்சு படிச்சேன். நீயும் அப்டித்தான் படிக்கணும்"ன்னு எல்லாம் வற்புறுத்தாதீங்க. அவங்களுக்கு, தன்னம்பிக்கை வர்றமாதிரி பேசுங்க..என்ன மார்க் வாங்கினாலும், அப்பா...அம்மா... நம்மள வெறுக்க மாட்டாங்கன்னு நம்பிக்கை வெச்சாலே , அந்தப்புள்ளை, தவறா முடிவெடுக்காது.


11 comments:

sathishsangkavi.blogspot.com said...

பெற்றோர்கள் அனைவரும் அறிய வேண்டிய பதிவு...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

முதல் வரவா.. நன்றி.

நானும் ஒரு பெற்றோர் என்பதால் இதை பகிர்ந்துகிடணும்ன்னு தோணிச்சுப்பா.

pudugaithendral said...

சூப்பர்,இதைபேரண்ட்ஸ் கிளப்பில் போடலாமா???

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புதுகைத்தென்றல்

ஆஹா... தாராளமா போட்டுக்கலாமே..

ஹுஸைனம்மா said...

என்ன எங்க பாத்தாலும் பரிட்சை பத்தி பதிவு? ஓ... மார்ச் நெருங்குதோ!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

அதுவும்தான்... ஆனா இந்த ஆதங்கம் எனக்கு ரொம்ப நாளா இருக்குப்பா..இப்பத்திய குழந்தைகளும், எவ்வளவுக்கு எவ்வளவு தன்னம்பிக்கையோட இருக்காங்களோ.. அவ்வளவு சீக்கிரம் உடைஞ்சும் போயிடறாங்க.

Unknown said...

ஹாய் வந்திடுச்சா எக்ஸாம்
நாங்களும் எழுதணும்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கர்,

முதல் வரவா...நன்றிப்பா.

நல்லா எழுத வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நல்லதொரு பதிவு அமைதிச்சாரல். வெகு அழகா அமைதியா எழுதிட்டீங்க. இத்தனை வருடங்களும் கழிந்த பின்னும்,
எங்கள் குழந்தைகள் பரீட்சைக்காகப் படித்ததையும் நல்ல ரிசல்ட் வர
வேண்டி தவித்ததையும் மறக்கவே முடியவில்லை. இத்தனைக்கும் எங்கள் குழந்தைகளை அவர்கள் வழியில் விட்டு விடுவோம்.
இன்றளவும் மிரட்டும் ரிசல்ட்களையும்,
இந்த 20 வருடங்களில் மாறியிருக்கும் உத்திகளையும்,
அடைய வேண்டிய இறுதிக்கட்டங்களையும் பார்க்கும் போது உண்மையாகவே மிரளுகிறேன்.

வெகு நல்ல பதிவு .மனம் நிறைந்த பாராட்டுகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

நலமா.. பாராட்டுகளுக்கு நன்றிம்மா.

பரீட்சையை விட ரிசல்ட்தான் எல்லோரையும் பயமுறுத்துது.. இல்லீங்களா..

நாளுக்கு நாள் மாறும் உத்திகளில் எதைக்கடைப்பிடிப்பது என்பதில் இறுதியாக, நமக்கு குழப்பம்தான் மிஞ்சுகிறது போலிருக்கிறது.

எல் கே said...

//உங்களோட நிறைவேறாத ஆசைகளை உதாரணமா கலெக்டர், இஞ்சினியர், டாக்டர்ன்னு இருந்தா அவுங்க மேல திணிக்காதீங்க. ரிசல்ட் பற்றிய பயம் அவங்களுக்கு வராம பாத்துக்கோங்க..ப//

ithuthan mukkiam.. let them choose their path

LinkWithin

Related Posts with Thumbnails