Thursday 20 October 2011

மீண்டும் துளிர்த்தது..


படம் கொடுத்த இணையவள்ளலுக்கு நன்றி.
சூட்கேஸையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கிய கீதா, மக்கள் வெள்ளத்தினூடே நீந்தி வேகமாக வந்து கொண்டிருந்த ரமேஷைக் கண்டதும் தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகளைக் கேட்ட வாக்காளர் போல் மலர்ந்தாள்.

“ஹாய்… பிரயாணம் நல்லாயிருந்ததா?..” சூட்கேஸை அவன் எடுத்துக் கொண்டான்.

“ஓயெஸ்.. ரொம்ப நல்லாருந்தது. ஃப்ளைட் ரத்தானாலும் ட்ரெயின்ல இடம் கிடைச்சது நல்லதாப் போச்சு. நேத்திக்கு செம மழை இல்லே?. ப்பா!!..  ஆமா, நீரஜ் எங்கே?..”

“ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறேன். நீங்க போயி அம்மாவைக் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டு சார் காலையிலயே கிளம்பிப் போயிட்டார்..”

“ம்..” என்று யோசனையுடன் தலையாட்டிக் கொண்டாள், டிடிஆரிடம் தன்னுடைய டிக்கெட்டை நீட்டியபடியே.

“வேலை ரொம்ப அதிகமோ.. ஒரு வாரத்துல இன்னும் ஸ்லிம்மாகி கல்யாணத்தப்ப இருந்த மாதிரியே தெரியுறியே..” குறும்புடன் கேட்டபடியே கையிலிருந்த சூட்கேஸை காரின் டிக்கியில் போட்டான். வேண்டுமென்றே போலியான மரியாதையுடன் அவள் ஏறுவதற்காக காரின் முன் கதவைத் திறந்து விட்டு, தன் வயிற்றில் கையை மடித்துப் படிய விட்டுக் கொண்டு லேசாக தலை வணங்கினான்.

சற்றுப் பூசினாற்ப் போல் ஆகி விட்டிருந்ததைத்தான் கேலி செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவள், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவனை குறுகுறுவென்று ஏற இறங்கப் பார்த்தாள்.

“நீங்க மட்டும் என்னவாம்?.. என்னைப் பிரிஞ்ச சோகத்துல இன்னும்தான் இளைச்சுப் போயிருக்கீங்க..” என்றபடி அவன் தொப்பையைச் சுட்டிக் காட்டியவள், “ஒரு வாரமா நான் இல்லைன்னதும் அப்பாவும் புள்ளையும் ஹோட்டல், சினிமான்னு ஜாலியா இருந்திருப்பீங்களே..” என்றபடி கதவைச் சாத்திக் கொண்டாள்.

ஜன நெரிசலில் திருவாரூர்த் தேர் போல் மிக மெதுவாக ஊர்ந்து, ரயில் நிலையத்தின் பார்க்கிங் ஏரியாவிலிருந்து வெளி வந்த கார், சாலையை அடைந்ததும் வெண்ணையாய் வழுக்கிக் கொண்டு பறந்தது.

அது வரையில் போக்குவரத்தில் கவனமாக இருந்தவன், அப்போதுதான் அவள் கேட்டதே காதில் விழுந்தாற் போல், “ம்… என்னவோ கேட்டியே?.. என்னது?..” என்றான்.

“தெரியுமே.. முக்கியமானதெல்லாம் காதுல விழாதே”

“சரி.. சரி.. நம்ம சண்டையை அப்புறம் வெச்சுக்கலாம்.. கான்ஃபரன்ஸ் நல்லபடியா நடந்துதா?..”

“ம்.. சூபர்ப். எங்க கிளையைப் பத்தி நான் கொடுத்த ப்ரசண்டேஷன் ஹெட் ஆபீஸ்ல இருக்கறவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. எங்க வேலை மேல ரொம்ப திருப்தி அவங்களுக்கு.. அனேகமா இந்த வருஷத்திய சிறந்த கிளைக்கான ட்ராபி எங்களுக்குத்தான் கிடைக்கும்..”

“உனக்கும் சீக்கிரமே ப்ரமோஷனும் கிடைக்கும்ன்னு சொல்லு..”

முதல் நாள் சூறைக் காற்றுடன் பெய்திருந்த மழை வழியெங்கும் நிகழ்த்தியிருந்த திருவிளையாடல்களால் சிற்சில இடங்களில் மெதுவாக ஊர்ந்தும், சில இடங்களில் விழுந்திருந்த மரங்களை நகராட்சியினர் அப்புறப் படுத்திக் கொண்டிருந்ததால் பாதையை மாற்றிக் கொண்டும் செல்ல வேண்டியிருந்தது.

வீட்டுக்குப் போய் ‘அக்கடா’ என்று படுக்கையில் விழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. மழையின் காரணமாக அவர்கள் திரும்பி வருவதாயிருந்த விமானம் ரத்தாகி விட, அலுவலகத்தார் எங்கெங்கோ அலைந்து யார் யாரையோ பிடித்து ரயிலில் டிக்கெட் ஏற்பாடு செய்து தந்திருந்தார்கள். அதுவுமே ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்ததில் அவள் மிகவும் களைத்திருந்தாள்.

வீட்டினுள் நுழைந்ததுமே, ஒரு வாரமாக அவள் இல்லாத வீட்டின் அலங்கோலங்கள் அவளுக்கு மலைப்பைக் கொடுத்தன. டீபாயெங்கும் சிந்தியிருந்த உணவுத் துணுக்குகளும், படிந்திருந்த வட்ட வட்டமான காபிக்கோப்பை அடையாளங்களும், இறைந்திருந்த பத்திரிகைகளும் அவளை வரவேற்றன. அறை முழுதும் ஓட்டிய ஒரு பார்வையிலேயே வீடு முழுசும் எப்படியிருக்குமென்று புரிந்து போயிற்று. டிவியின் மேல் படிந்திருந்த தூசியை விரலால் வழித்தெடுத்தவள், ஒரு பெருமூச்சையும் அதனுடன் சேர்த்து எறிந்தாள்.

குளித்து ஃப்ரெஷ்ஷாகி ஹாலில் வந்து அமர்ந்தவளின் பார்வை கடிகாரத்தைத் தொட்டுத் தடவியது. இரவு ஒன்பது மணியாகியிருந்தது. கவலையுடன் வாசலைப் பார்த்தாள்.

“ஏங்க.. இந்தப் பிள்ளை, யார் வீட்டுக்குப் போனான்.. உங்க கிட்ட ஏதாச்சும் சொன்னானா?..”

“ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறேன்னான். யார் என்னன்னு கேட்டுக்கலை..”

“நானில்லாத இந்த ஒரு வாரத்துலயாவது பொறுப்பு வந்து, அவன் கிட்ட மாற்றம் இருக்கும்ன்னு நினைச்சா அப்படியேதான் இருக்கான். ஏங்க!!.. நீங்க அவன் கிட்ட பேசிப் பார்க்கக் கூடாதா?..”

“நீயாச்சு.. உன் பிள்ளையாச்சு.. பஞ்சாயத்துக்கு நான் வரலைப்பா.. ஆளை விடு..” என்றபடி கார்கள் விர்ர்ரிக் கொண்டிருந்த ஏதோவொரு சானலில் மூழ்கி விட்டான்.

“ம்க்கூம்.. என் பிள்ளையா?.. ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்சு கப்போட வரச்சே.. உங்க பிள்ளைன்னு மார் தட்டிக்குவீங்கல்ல.. இனிமே அப்படிச் சொல்லுங்க.. அப்ப பேசிக்கறேன் உங்களை..”

பத்து மணிக்கப்புறம் வந்த நீரஜ், “ஹாய் மா. எப்போ வந்தீங்க?. சச்சின் வீட்ல சாப்பிட்டுட்டேன். எனக்காகக் காத்திருக்காம தூங்குங்க..” என்றபடி அவனது அறையை நோக்கி நகர்ந்தான்.

“இருடா பெரிய மனுஷா… கொஞ்சம் பாலையாவது சாப்ட்டுட்டுப் படு..” என்றபடி அடுக்களைக்குள் சென்று, பதமாகக் காய்ச்சிய பாலை, பிள்ளையின் கையில் நீட்டும்போது, சிகரெட்டின் நிகோடின் வாசனையும், சூயிங்கம் வாசனையும் கலந்து வீசும் மணம் எங்கிருந்தோ வருவதை உணர்ந்தாள். அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

‘சே.. சே.. இருக்காது..’ என்று செய்து கொண்ட சமாதானத்தில் ஒரு கூடை மண்ணை அள்ளிக் கொட்டி விட்டுச் சென்றது, “குட் நைட் .. மா” என்றபோது அவன் வாயிலிருந்து வந்த அதே வாசனை.

என்ன செய்வதென்று புரியவில்லை அவளுக்கு. பயணக் களைப்பால் உடல் ஓய்வுக்குக் கெஞ்சிய போதிலும் இரவு முழுவதும் பொட்டு உறக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள். ‘என் பிள்ளையா இப்படி?..’ என்ற ஒற்றைக் கேள்வி அவளைத் தூங்க விடாமல் செய்திருந்தது. அதிகாலையில் லேசாகக் கண்ணயர்ந்தவள், வழக்கமான நேரத்தில் விழிப்புத் தட்டவும், அதற்கு மேல் படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்து பால்கனிக்கு வந்தாள்.

‘இன்னிக்குக் காப்பிய தோட்டத்துல உக்காந்து குடிச்சா என்ன?..’ என்று தோன்றவும், கையில் காபியுடன் தோட்டத்திலிருந்த நாற்காலிகளை விடுத்து, ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். அது அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம். வழக்கமான இரும்பு, மரம் போன்ற சமாச்சாரங்களை விடுத்து, ஃபைபரால் செய்யப்பட்ட ஊஞ்சல் அவள் சொல்லியிருந்தபடி மாமரக் கிளையில் தொங்க விடப் பட்டிருந்தது. காபியையும் செய்தித்தாளையும் முடித்து விட்டு, தோட்டத்தைச் சுற்றி வாக்கிங் புறப்பட்டாள்.

மரத்தையே பெயர்த்தெடுத்து வீசிய சூறைக்காற்று, இலவம் பஞ்சை விட்டு வைக்குமா என்ன?.. வானரர்கள் புகுந்த கிஷ்கிந்தையாய்ச் சிதறிக் கிடந்தது அவளது தோட்டம். ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து கிடந்ததில், அது தக்காளியா கத்தரியா என்று பகுத்தறிய முடியாதபடி பின்னிக் கிடந்தன வாடி வதங்கிய இலைகளுடன் இருந்த செடிகள். செவ்வரளியின் கிளைகள் முறிந்து தொங்கின. வாசற்பக்கமிருந்த முல்லைக் கொடியை பெயர்த்தெடுத்து வீசிய காற்று அதை கரும்பின் மேல் படர விட்டிருந்தது. புறக்கடையில் அவள் ஆசையாக கேரளாவிலிருந்து கொண்டு வந்து நட்டு வளர்த்து வந்த செவ்வாழை மரம், அவள் ஊருக்குக் கிளம்பும்போது, இப்பவோ அப்பவோ என்று குலை தள்ளத் தயாராக இருந்தது. இப்போது இரண்டு சீப்பு பிஞ்சுகளும் தரையில் புரள, எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் போல் குனிந்து கிடந்தது.

சிறு பெருமூச்சுடன் தோட்டத்தைச் சுற்றி வந்தவளின் கண்கள், தோட்டம் பராமரிப்பில்லாமல் காய்ந்த சருகுகள் கூட்டப்படாமல் கிடந்ததை கவனிக்கத் தவறவில்லை. முதல் நாள் பெய்த மழையைத் தவிர்த்து, அவை தண்ணீர் கண்டு குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது ஆகியிருக்கும் என்பதை லேசாக காயத் தொடங்கியிருந்த இலைகள் காட்டிக் கொடுத்தன.

“வாடிம்மா.. ஊர்லேருந்து வந்தாச்சா?..” என்றபடி கையில் ஒரு சிறு ப்ளாஸ்டிக் கூடையுடன் நுழைந்தாள் பக்கத்து வீட்டு ஜமுனா மாமி. கீதா வீட்டுப் பூக்களின் ஒரு பகுதி, மாமியின் வீட்டுப் பூஜையறையை அலங்கரிப்பது வழக்கம். வரும் போதெல்லாம் முதல் நாளே பறித்துச் சென்று அழகாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்தை, கீதாவுக்கு கொண்டு வந்து கொடுப்பாள். பிரதியுபகாரமாக இல்லை.. ‘இவளும் என் பொண்ணாட்டம்தானே..’ என்ற நினைப்பால்.

“நீ ஆத்துல இல்லைன்னா நேக்கு என்னவோ வெறிச்சோட்ன மாதிரி இருக்குடி. ஆமா, காப்பி குடிச்சயா?.. புள்ளாண்டான் ஏந்துக்கலையா இன்னும்?.. நீ இல்லைன்னா, ரெண்டு பேருக்குமே துளிர் விட்டுடுது. அதென்ன!!.. ஒரு நாளைப்போல தெனமும் கொட்டமடிக்கறது? நன்னால்லை பார்த்துக்கோ.” பதிலை எதிர்பாராமல் மாமியின் கையும் வாயும் வேகமாகத் தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தன. கூடை நிரம்பியதும், “வரேண்டிம்மா.. மாமா ஏந்து குளிக்கப் போயிட்டார். அடுப்பில் பாலை வெச்சுட்டு வந்த்ருக்கேன்” என்றபடி போய் விட்டாள். அவள் அப்படித்தான்.

அன்றும் மறு நாளும் அலுவலகத்துக்கு விடுமுறையாக இருந்தது அவளுக்கு வசதியாய்ப் போய் விட்டது. பக்கத்திலிருந்த நர்சரியில் சொல்லி தோட்டத்தை சீரமைக்க ஆள் கிடைக்குமா என்று விசாரித்து வந்தாள். வந்தவனின் உதவியுடன் முறிந்து கிடந்த கிளைகளைக் கழித்து, காய்ந்த செடிகளை அப்புறப் படுத்தி, குப்பை கூளங்களையெல்லாம் சுத்தப் படுத்தி நிமிர்ந்த பின் தான் ஆசுவாசமாக இருந்தது.

மண்ணைக் கொத்திச் சீரமைத்து சமப் படுத்தி விட்டு, “நாளைக்கு உரம் கொண்டாந்து போடறேன்” என்று சொல்லிப் போனவன், கொண்டு வந்து கொட்டிய இயற்கையுரத்தை அவனது உதவியுடனேயே தோட்டத்திற்குப் போட்டாள்.

அதன் பின்னான வார நாட்கள் வழக்கம் போல் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாய் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. நீரஜ் இப்போதெல்லாம் விட்டேத்தியாய் இருப்பதாய்ப் பட்டது. படிப்பிலும் முன் போல் அக்கறை காட்டுவதாய்த் தெரியவில்லை. ‘சரி,.. இளம் பருவம். அப்படித்தான் இருக்கும். அவன் போக்குல விட்டுத்தான் பிடிக்கணும்’ என்று எண்ணினாலும், ‘தும்பை அறுத்துக்கிட்டு காளை ஓடிருமோ?’ என்று கவலையாகவும் இருந்தது.

வழக்கம் போல் காலை நடைக்கு தோட்டத்தைச் சுற்றி வந்த அவளது கால்கள், அவளுக்குப் பிரியமான மருதாணிச் செடியின் அருகே வந்து நின்றன. ஒரு வாரமான இடை விடாத உழைப்பும், காட்டிய கவனமும், கொட்டியிருந்த உரமும் அவளது தோட்டத்தை பழைய பொலிவான நிலைக்கு மெதுவாகத் திரும்பக் கொண்டு வந்து கொண்டிருந்தன. மருதாணியின் இலைகளை மெல்ல வருடிக் கொண்டிருந்தபோது, மகனைப்பற்றிய தனது கவலையை நினைத்து அவளுக்கே சிரிப்பு வந்தது. ‘அலுவலகத்தில் அத்தனை பேரை சமாளிக்கிறேன். ஒரு சின்னப் பையனை எப்படிச் சமாளிப்பதுன்னு கவலைப் படுறேனே!!.. இதெல்லாம் ஆரம்பத்துலயே கவனிச்சுட்டா சரி செஞ்சுக்க முடியாதா என்ன?. ஒரு வாரமா நல்லாக் கவனிச்சதும், இனி பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா!!..”

இப்படியொரு தீர்வு மனதில் பிறந்ததும், மனசு லேசாகி உலகமே அழகாக மாறி விட்டது போலிருந்தது, அவளுக்கு. பன்னீர் ரோஜாவை முகர்ந்து கொண்டே ஏதோவொரு பிடித்தமான பாடலை அவள் முணுமுணுக்க, அவளுக்குப் போட்டியாக இனிமையாக குரலெழுப்பியது கொன்றைப் பூக்களைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த ஒரு தேன்சிட்டு.


டிஸ்கி: வல்லமையில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதையை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.



49 comments:

துளசி கோபால் said...

அருமை.

நிறைய சொல்லணுமுன்னு என்னென்னவோ மனசுலே வந்து போறது. அப்பாலிக்கா வர்றேன். வீட்டுலே படங்கள் மாட்ட உதவிக்கு ஆள் வந்துருக்கார்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல கதை...
அருமையா எழுதியிருக்கீங்க...
வல்லமைக்கு வாழ்த்துக்கள்.

ரசிகன் said...

வளரிளம் பருவத்து குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிரமம், அப்படி வளர்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அவ்வாறான எல்லா பெற்றோர்களுக்கும் நம்பிக்கை தரும்படியான நல்ல கதை. சிறப்பாக படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி கதை விவரிப்பு, ஒரு குடும்பத்தலைவியின் பொறுப்புகள் கவலைகளை அழகா சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு.

ஹுஸைனம்மா said...

ரொம்ப நல்லாருக்குப்பா கதை. இந்த மாதிரி சூழ்நிலைகள் வருமோன்னு டீனேஜ் பிள்ளைங்க வச்சிருக்க பெற்றோர்களின் மனசுல கண்டிப்பா ஒரு பயம் இருந்துட்டே இருக்கும். அதுக்கு இந்தக் கதை தரும் நீதி ஒரு ஆறுதல் டானிக்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

// இனி பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா!!..”//

அருமையாய் உள்ளது.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
vgk

Yaathoramani.blogspot.com said...

வாழ்விற்கான பாடங்கள் எங்கும்
பரந்து விரிந்துதான் கிடக்கின்றன
அதனை அறிந்து கண்டெடுக்கத்தான்
நிறைய திறமையும் பக்குவமும் வேண்டும்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 1

ஹேமா said...

சாரல்...அருமையான கதை.மனதை உற்சாகப்படுத்துகிறது.தோல்வி மனப்பான்மைதான்
நமக்கு முதல் எதிரி !

RAMA RAVI (RAMVI) said...

//ஒரு வாரமா நல்லாக் கவனிச்சதும், இனி பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா!!..”//

அருமையான வரிகள்.

அழகான கதை. வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

ஒரு தாயின் பரிதவிப்பு.

உணவு உலகம் said...

பிள்ளைகளைக் கவனிக்காத பெற்றோருக்கு எச்சரிக்கை.

வெங்கட் நாகராஜ் said...

கதை நல்லா இருக்கு... குழந்தை வளர்ப்பு பற்றி நல்லா புரிந்து வைத்திருக்கீங்க...

Veena Devi said...

அழகான , நல்ல கருத்தை சொல்லும் கதை .. ஒவ்வொரு தாயின் உணர்வுகளையும் அப்படியே எழுத்தில் சொல்லிட்டீங்க

ராமலக்ஷ்மி said...

//இனி பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா!!..”//

அருமை. துளிர்க்கும் நம்பிக்கைதான் வாழ்வைச் சோலையாக்கும்.

அழகான நடையில் சிறப்பான கதை. வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

ரொம்ப அருமை. ஆரம்பித்த இடமும் சரி, நடுவில் கண்டுபிடிக்கப் பட்ட பிரச்னையும், மன உளைச்சலும் கடைசியில் கிடைக்கும் தீர்வும் மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

ஸ்வர்ணரேக்கா said...

கதையும் நல்லாயிருக்கு, அதை சொன்னவிதமும் நல்லாயிருக்கு..

உயிரோட்டமான கதை...

i like this very much Charal...

ஸ்வர்ணரேக்கா said...

வல்லமையில் வெளியானதற்கும் வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

வானரர்கள் புகுந்த கிஷ்கிந்தையாய்ச் சிதறிக் கிடந்தது அவளது தோட்டம். ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து கிடந்ததில், அது தக்காளியா கத்தரியா என்று பகுத்தறிய முடியாதபடி பின்னிக் கிடந்தன /

அருமையான வர்ணணை.

இராஜராஜேஸ்வரி said...

இப்படியொரு தீர்வு மனதில் எழுந்ததும், திடீரென்று உலகமே அழகாக மாறி விட்டது போலிருந்தது, அவளுக்கு. பன்னீர் ரோஜாவை முகர்ந்து கொண்டே ஏதோவொரு பிடித்தமான பாடலை அவள் முணுமுணுக்க, அவளுக்குப் போட்டியாக இனிமையாக குரலெழுப்பியது கொன்றைப் பூக்களைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த ஒரு தேன்சிட்டு./

முத்தாய்ப்பான முத்தான வரிகளுக்கு பாராட்டுகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

படங்கள் மாட்டி முடிச்சுட்டு வந்து சொல்லுங்க, காத்திருக்கோம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரசிகன்,

கண்ணாடிப் பாத்திரத்தை எண்ணெய் தடவிய கைகளால் பிடிச்சிருப்பது போன்றது இந்த வளரிளம் பருவத்து குழந்தைகளை வளர்ப்பதுன்னு எங்கியோ படிச்ச ஞாபகம் :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

லயிச்சு வாசிச்சதுக்கு நன்றிம்மா :-)

Asiya Omar said...

மிக நல்ல கதை,லயிச்சு எழுதியிருக்கீங்க..அருமையான எழுத்து நடை..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

டீனேஜ் பிள்ளைகள் இருக்கும் வீடுகள்ல தினம் தினம் புதுப்புது சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்ங்கறது என்னவோ உண்மைதான். ஆனா, சிறு வயசிலேயே நல்லது கெட்டதை புகட்டிட்டா கவலைப்பட ஏதுமில்லைங்கறதும் உண்மைதானே :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வை.கோ ஐயா,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

ரொம்ப சரியா சொல்லிட்டீங்க..

வாசிச்சதுக்கு நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

எதிரியும் அதுதான், முட்டுக்கட்டையும் அதுதான் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமா,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

நாணயத்தோட ரெண்டு பக்கங்களும் நல்லா இருந்தாத்தானே அது செல்லுபடியாகுது. இல்லைன்னா அது வெறும் காகிதமோ உலோகத்துண்டோதான். அதுமாதிரிதானே குடும்பமும் :-))

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மித்ரா அம்மா,

ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நம்பிக்கையில்தானே வாழ்க்கையே ஓடுது :-))

ராஜி said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

ராஜி said...

தமிழ்மணம் 3

மாதேவி said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,,
மழைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இணைப்பைக் கொடுத்து நல்லதொரு குடும்பத்தலைவியையும் அடையாளம் காட்டி இருக்கிறீர்கள். பிள்ளையின் நிகோடின் வாசனையில் ஒரு துணுக் இருந்தாலும்,அதை அம்மா சமாளிக்கப் போகும் விதத்தை எண்ணி மிக சந்தோஷம். வெரி பாசிடிவ் . வாழ்த்துகாள் மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

கொஞ்சம் உக்காந்து யோசிச்சா, எந்தப் பிரச்சினையானாலும் தீர்வு கிடைக்காம இருக்காதுங்கறது என் கருத்து.

வாசிச்சதுக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்வர்ணா,

உங்களுக்குக் கதை பிடிச்சிருக்குங்கறது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குங்க :-))

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

இனிய வாழ்த்துகளூடன் லீவு முடிஞ்சு வந்த உங்களை வரவேற்கிறோம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

உங்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிம்மா..

சென்னை பித்தன் said...

//இனி பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா!!..”//
நிச்சயம் முடியும்.இயல்பான,தெளிந்த நீரோட்டம் போன்ற நடை,அருமை.

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சென்னை பித்தன்,

வாசிச்சு கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

அறிமுகத்துக்கு நன்றிப்பா :-)

LinkWithin

Related Posts with Thumbnails