புதுகைத்தென்றலுக்கு ஒரு யுகாதிப்பரிசு . அளித்தவர்.. .ஆனந்த விகடன்'. ஆமாம். இந்தவார விகடனில் வரவேற்பறையில்அவரது கூட்டுப்பதிவான கானகந்தர்வன் பாராட்டப்பட்டுள்ளது.
நல்ல மெலோடியஸான பாடல்களை கேக்கணும்னா வலையிலிருந்து தரவிறக்கம் செய்வது வழக்கம். அப்படியான ஒரு பொழுதில்தான் இந்த வலைப்பூ கிடைத்தது.
இப்பல்லாம் நல்ல மெலோடியஸான பாடல்களை கேக்கணும்னா அங்கேயும் விசிட் அடிக்கிறது உண்டு. ஜேசுதாஸின் நல்ல கலெக்ஷன் இங்கே இருக்கு. நவரத்தினங்களில் எது சிறந்தது என்று சொல்வது கஷ்டம்தான். என்னுடய ஃபேவரிட் பாடல்...."தேரி தஸ்வீர் கோ சீனே ஸே லகா ரக்கா ஹை"
வாழ்த்துக்கள் தென்றல்.

27 comments:
அய்யா நான்தான் பர்ஸ்ட் !
வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவான் பனித்துளி !
ஆஹா..... எங்கள் வாழ்த்து(க்)களையும் சேர்த்துச் சொல்லுங்க.
வாங்க பனித்துளி சங்கர்,
வாழ்த்துக்களை புதுகைத்தென்றலிடம் சேர்ப்பித்து விடுகிறேன்.
வருகைக்கு நன்றி.
வாங்க துளசி டீச்சர்,
உங்க பாராட்டுக்கள் இன்னேரம் டெலிபதியில் தென்றலிடம் போய் சேர்ந்திருக்கும்.
வரவுக்கு நன்றி டீச்சர்.
பதிவில் படம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
பேரண்ட்ஸ் க்ளப்பை தொடர்ந்து இப்போது கானகந்தர்வனும், தென்றலின் தொப்பியில் இன்னொரு மயிலிறகாக! மிகவும் சந்தோஷம். வாழ்த்துக்கள் தென்றல்!
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அமைதிச்சாரல்.
தண்ணீர் தினத்துக்கான படத்தையும் பார்த்தேன். நல்லது அமைதிச்சாரல். விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் நமது சிறுபங்கு.
பகிர்வுக்கு நன்றி மேடம்...
தேரே தஸ்வீருக்கோ கேட்டேன் நெம்ப நன்னாருக்கு
புதுகைதென்றல் அவர்களுக்கும் வாழ்த்துகள்
எனது வாழ்த்துக்களையும் சொல்லுங்கள் சாரல்.
convey mine too
என்னுடைய பாராட்டுக்கள்.
வாங்க வசந்த்,
அழகான வரிகள் இல்லையா!!
ஆலாபனையில் வந்து இணைந்துகொள்ளும் தப்லாவும்,சிதாரும் இனிமை.
வாழ்த்துக்களை அனுப்பியாச்சு.
வருகைக்கு நன்றி.
வாங்க அன்புடன் மலிக்கா,
எல்.கே,
மாதேவி.
பாராட்டுகளை டெலிபதியில் அனுப்பியாச்சு.
வருகைக்கு நன்றி.
//தென்றலின் தொப்பியில் இன்னொரு மயிலிறகாக!//
எழுத நினைத்து எப்படியோ விட்டுப்போன சொற்றொடர். அழகா கொண்டு வந்துட்டீங்க ராமலஷ்மி மேடம்.
ராமர் பாலம் கட்ட, அணில் உதவியது போல் என்னுடைய சிறுபங்குதான் அந்தப்படம்.
வாழ்த்துக்கள் தென்றலுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.
வரவுக்கு நன்றி.
பார்த்ததும் பதிவிட்டதற்கு நன்றி!!
அப்புறம் தென்றல் எங்கே ஆளையேக் காணோம்? பதிவும் போடல? அப்பப்ப இப்படிச் சொல்லிக்காம சைலண்டாயிடுறாங்க!!
உங்களை உலக தண்ணீர் தினம் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். http://ramyeam.blogspot.com/2010/03/blog-post.html
பூங்கொத்து!
வாங்க ஹுஸைனம்மா,
அதுதான் நானும் யோசிச்சிக்கிட்டிருக்கேன். ஒருவேளை புதுகையில் மையம் கொண்டு விட்டதோ. என்னவோ??.. பசங்களுக்கு லீவாச்சே...
வாங்க அன்புடன் அருணா,
பூங்கொத்துக்கு தென்றல் சார்பில் நன்றி.
வாங்க மாதேவி,
கட்டாயம் எழுதறேன்.
அழைப்புக்கும் வருகைக்கும் நன்றி.
நல்ல செய்திக்கு மிக நன்றி சாரல். சாரலிடம் தென்றலுக்குத் தூது விடுகிறேன் வாழ்த்துகளை:)
வளம் பெறுக.
வாங்க வல்லிம்மா,
தூது வந்து சேர்ந்தது,வாழ்த்துக்களுடன்.
தென்றல் சார்பில் நன்றிம்மா.
நிஜமாவெ இந்த வருட யுகாதி பரிசுதான். நீங்க சொல்லித்தான் மேட்டர் தெரியும். பதிவு போட்டு வாழ்த்து சொல்லியிருக்கும் உங்களுக்கும் மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
மாமா மறைந்த பிறகு நாங்கள் ஆரம்பித்திருக்கும் முதல்பண்டிகை யுகாதி. தெலுங்கு வருடப் பிறப்பு. அந்த வேலைகளில் பிசியாகிவிட்டேன்.
இனி வந்திடுவேன்ல
பு.தென்றலுக்கு வாழ்த்துகள்!
பகிர்வுக்கு நன்றி அமைதிச்சாரல்! :-)
தென்றலுக்கு என் வாழ்த்துக்களையும்
சாரல் மூலம் அமைதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
வாங்க சந்தனமுல்லை,
நானானிம்மா,
உங்க வாழ்த்துகளை அனுப்பிட்டேன்..
Post a Comment