வாலைப்பெண் கைக்குடம் வீழ்ந்துடைந்த நீர்பெருகி
சாலையோரம் மண்நனைத் தன்னதே மங்குல்
அலைவுற்று மீவெடித் தாசாரம் வீசி
மலைமூழ் குமருவி நீர்.
*******************************************************************
பெடையு மடையு மிடையூறு டைத்தாய்
அடைமழையில் கீச்சுங் கிளி.
******************************************************************
காழ்ப்பும் அழுக்காறுங் கொண்ட கலகத்தார்
வாழ்வையோ போமென செப்பு
********************************************************************
*********************************************************************
தனியாய்ப் புலம்புமெனைத் தேற்றுவாள் தாயும்
கனிவாய் அறுபடைக்குக் கந்தனாம் அண்ணன்
இனிதாய் அரசில் பனிமலையி லீசன்
தனித்தபின் நானுந் தனி.
P.C: Yadhavan Raghavan
1 comment:
படங்களும் படங்களுக்கான உங்கள் பாக்களும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.
Post a Comment