Tuesday 19 April 2016

படமும் பாடலும் - 2

படக்கொடை-இணையம்
பத்தடிமேல் வந்ததால் பல்லற்று ஊசிவாய்
குத்துவதால் மன்னுயிர் கத்திடுதே – சத்தமின்றி
சுத்திடினும் மட்டையால் சாகும் மருந்துக்கு
எத்திடுமிப் பொல்லாக் கொசு (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)

ஆணவர் அஞ்சிட ஆரணங்கு செய்திட
மாணப் பெரிதே கவலையிது- வாணலியில்
அப்பாமல் வந்தால் அருசியாம் அம்முறைநீ
தப்பாமல் உப்புமா செய் (இருவிகற்ப நேரிசை வெண்பா)
அரும்பி அலர்ந்த அனற்பூவாம் கோடை
விரும்பி வனங்களை யுண்டு - கரும்பாய்
வருக்கையும் மாவும் வகையாய் அளித்தும்
வருத்திடவும் செய்யுதே காண் (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
மாந்தரெலாம் ஏத்தி வணங்கும் பரம்பொருளாம்
நீந்துபுனல் கொண்டோன் அருளினால் - ஏந்துபுகழ்
நாஞ்சிலாம் நாடிதுடன் என்றென்றும் வாழியவே
நாஞ்சிலின் சீர்மிகு கூர் (இருவிகற்ப நேரிசை வெண்பா)

அரவமிகு கோயிலின் நாமமிதன் பேராம்
அருமாந்த ஊரிதன் மன்புகழ் சாரலாம்
கொஞ்சும் இயற்கையையும் நங்கைநீ பாடுக
நாஞ்சிலின் நாரோயில் சீர் (இருவிகற்ப நேரிசை வெண்பா)

4 comments:

கீதமஞ்சரி said...

அசரவைக்கும் பாக்கள்... ஊற்றுப்போல சரசரவென்று கொட்டுகின்றனவே.. பாராட்டுகள் சாந்தி.. அந்த உப்புமா பா அதிசுவைப்பா.

ஸ்ரீராம். said...

சாதா பா வே வராது... வெண்பாவுக்கும் எனக்கும் தூரம் ஜாஸ்தி! அப்பாதுரை இதில் ஜித்தர்! பாக்களை ரசித்தேன்!

raji said...

நானும் ரசித்தேன் :)

Easwaran said...

அனைத்தும் வீண்பாக்களல்ல. அருமாந்த வெண்பாக்கள். நாஞ்சில் புகழும், நாரோயில் நன்னினைவும் நெஞ்சில் நிறைந்ததப்பா. வாழ்க.

LinkWithin

Related Posts with Thumbnails