Sunday 1 May 2022

செம்பருத்தி நூல் அறிமுக உரை - கல்கியில் வெளியானது.

எந்தவொரு செயலையுமே ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்று சொல்வதுண்டு.சுமாராகவோ நன்றாகவோ.. எப்படிச்செய்தாலும் சரி,.. அதற்கு ஒரு சின்னப்புன்னகையாகவோ மெல்லிய தலையாட்டலாகவோ கிடைக்கும் அங்கீகாரம் தரும் போதை அதீதமானது. இன்னும் நன்றாகச் செய்ய வேண்டுமென்ற உற்சாகம் நிச்சயமாக ஊற்றெடுக்கும். அதுவே மேலும் முன்னேறவும் தூண்டும். 

என்னதான் எதையும் எதிர்பார்க்காமல்தான் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், "இன்னிக்கு சமையல் நல்லாருக்கு.." என்று ரங்க்ஸ்கள் வாய்தவறிச் சொல்லி விட்டால் நாம் மகிழ்ந்துதானே போகிறோம். தினமும் சொல்லத்தான் நம் புத்திர சிகாமணிகள் இருக்கிறார்களே 🙂 இந்த ஒரு வார்த்தைக்காகவே அடுத்த வேளைச் சமையலை இன்னும் ருசியாகச் செய்து போடுகிறோமா இல்லையா? :-))

வீட்டில் கிடைக்கும் சின்ன அங்கீகாரமே நம்மை இவ்வளவு உற்சாகப் படுத்தும்போது, ஊரளவில் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தாதா என்ன? அதுவும் பெரிய பத்திரிகைகள் நம்மையும் நம் எழுத்துகளையும் கவனிக்கிறார்கள், வாசிக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள் என்பதை அறிய வரும் அக்கணம் பொற்கணம்.

வாசிப்பு ஒரு மனிதனைப் பண்படுத்துகிறது, பண்பட்ட வாசிப்பு இன்னும் அவனை மேம்படுத்துகிறது. புத்தகங்கள் மீதான காதல் அதைத் தேடித்தேடி வாசிக்க வைக்கிறது. வாசித்ததோடு நின்று விடாமல் அவ்வினிய அனுபவத்தை நம் அணுக்கர்களோடு பகிரும் விழைவும் உண்டாகிறது. அவ்வினிய பயணத்தின் பொருட்டு ஃபேஸ்புக்கில் உருவானதே "வாசிப்போம்-தமிழ் இலக்கியம் வளர்ப்போம்" குழு. எத்தனையெத்தனை நூற்களைப்பற்றி அறிந்து கொள்ள இயலுகிறது!!

எழுத்தாளர்கள், ஆன்றோர் நிரம்பிய இக்குழுவில் இணைந்து நான் பகிர்ந்த நூல் அறிமுகங்களில் தி. ஜானகிராமன் எழுதிய "செம்பருத்தி"யின் அறிமுகம் பெரும் வரவேற்பைப்பெற்றதுடன், கல்கி ஆன்லைன் இதழிலும் வெளியாகியிருக்கிறது என்ற இனிய செய்தியை குழுவின் வழிநடத்துனர்களில் ஒருவரான திரு. மந்திரமூர்த்தி அவர்கள் மூலம் இன்று அறிந்தேன். குழுவினர் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

பிரசுரித்த கல்கி இதழின் எடிட்டர் திரு. ரமணன் அவர்களுக்கு இங்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். வாசிப்பின் ருசி அறிந்தவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும் "நூல் அறிமுகம்" பகுதியின் மூலம் நீங்கள் செய்து வரும் பணி அளப்பரியது.

கல்கியில் வெளியாகியிருக்கும் நூல் அறிமுகக்கட்டுரையை வாசிக்க இணைக்கப்பட்டிருக்கும் சுட்டியைச் சொடுக்குங்கள்.


எனது வலைப்பூவில் எழுதிய அறிமுக உரையை வாசிக்க 

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

கல்கியில் பிரசுரம்...... வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts with Thumbnails