Sunday 22 September 2019

கணபதி - 2019

மஹாராஷ்ட்ராவில் பிள்ளையார் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக நடைபெறும் ஒரு விழா. விதவிதமான வடிவங்களில், விதவிதமான கருத்துகளை வலியுறுத்தி அமைக்கப்படும் பிள்ளையார் திருவுருவங்களைக்காண கண் கோடி வேண்டும். மாலை வேளைகளில் தத்தம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் திருவுருவங்களைக்காணவென்றே கூட்டங்கூட்டமாக மக்கள் கிளம்பிச்செல்வது வழக்கம். அதற்கெல்லாம் நேரம் கிடைக்காத மக்கள் விசர்ஜன் நடக்கும் பகுதிகளுக்குச்சென்று அங்கு வரும் பிள்ளையார்களைக் கண்டு கொள்வர். அதற்கும் நேரமில்லையா?.. விழா தொடங்கு முன் விற்பனைக்கென பிள்ளையார் சிலைகள் இருத்தப்பட்டிருக்கும் பண்டல்களுக்குச்சென்றால் ஆயிற்று. அம்மையப்பன்தான் உலகம் என இருக்குமிடத்திலேயே தாயையும் தந்தையையும் சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக்கொண்டவர் காட்டிய வழிதான் நமக்கும் :)

இந்த வருட பிள்ளையார் உலாவில் காணக்கிடைத்தவர்கள் இங்கே..

















இவ்வருடம் எங்கள் வீட்டுக்கு வந்த பிள்ளையார்.

கண்பதி பப்பா மோரியா.. மங்கள் மூர்த்தி மோர்யா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா.

எங்கள் வீட்டு கணபதி ஆரத்தியும் அதைத்தொடர்ந்த விசர்ஜனும் சிறு வீடியோவாக.
முந்தைய கணபதிகளைக்காண இங்கே சொடுக்குங்கள்.

2 comments:

Anuprem said...

ஒவ்வொரு விநாயகரும் வித்தியாசமும் அழகும் ...

வெங்கட் நாகராஜ் said...

எல்லா விநாயகர் சிலைகளும் அழகு.

LinkWithin

Related Posts with Thumbnails