Wednesday 15 August 2018

72-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

இரவினில் சுதந்திரம் வாங்கி விட்டோம் அதனால்தான் இன்னும் விடியவில்லை' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம். ஒவ்வொருவரும் வாய்ப்பேச்சை விட்டுச் செயலில் இறங்கினால் இந்தியா நிச்சயம் இப்போதிருப்பதை விட இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். லஞ்சம், ஊழல், பெண்சிசுக்கொலை போன்ற புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீர்கேடுகளால் நோயுற்றிருக்கும் பாரதமாதாவை, தனிமனித மனமாற்றம் என்னும் தடுப்பூசியால்தான் குணப்படுத்த முடியும்.

சில வருடங்களுக்கு முன் எழுதிய வரிகள் இவை. வருடங்கள் கடந்திருக்கின்றனவே தவிர நிலையில் சிறிதாவது மாற்றம் இருக்கிறதா எனக்கேட்டால் இல்லையென்றே பதிலளிக்க வேண்டியிருக்கும்.  லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் இனிமேல் தண்டனையுண்டு என்ற அறிவிப்பு சற்றே ஆறுதலளித்தாலும், சிறுமிகளென்றும் பாராமல் ஆங்காங்கே அவர்கள் மேல் நடத்தப்படும் பாலியல் வன்முறை கவலையளிக்கிறது. இனிமேல் வரும் வருடங்களிலாவது இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமென்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

3 comments:

Ajai Sunilkar Joseph said...

இனிதாகட்டும் இந்த சுதந்திர தினம்

வெங்கட் நாகராஜ் said...

இனி வரும் வருடங்களில் ஆவது.... நம்பிக்கை தானே வாழ்க்கை....

சுதந்திர நாள் வாழ்த்துகள் 🎊.

ராஜி said...

இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்

LinkWithin

Related Posts with Thumbnails