எண்ணிய தெய்துவது எப்போவென் றேங்கியே
கண்ணில் மிதக்கும் கனவு
போஹாவும் மிக்சர் பழமும் கலந்துண்ண
ஆஹா அமிர்தம் இது.
***************************************************************
அன்னை பிழைத்தால் அவளுக்கு ஏச்சுண்டு
கன்னற் கனிமொழியாள் செய்யும் குறும்புகளோ
முன்னர் கடிதோச்சும் மூதன்னை பின்தணிந்து
அன்பை அளிப்பாள் அணைத்து.
**************************************************************************
குழைந்து கிடக்கும் குளமெலாம் ஊறும்
தழைகள் பொலிந்து துளிர்க்கும் - துழைஇ
குழைக்கும் உழவர்க் கினியதாம் நன்றாய்
மழையை அருந்திய மண்.
***************************************************************************
எட்டிநாம் நிற்பினும் அட்டியின்றிக் கண்பார்ப்பான்
கிட்டே நெருங்கிடக் கட்டுண்டோ - இட்டமுடன்
சட்டென சென்னிசூடிச் சிக்கெனப் பற்றுக
விட்டலன் பாதம் விடாது.


