Thursday, 1 May 2025

உழைப்பாளர் தினத்தில் பிறந்த மஹாராஷ்ட்ர தினம்


உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்' என்ற பாரதியின் கூற்றுக்கேற்ப ஆண் பெண் பேதமில்லாமல், உழைக்கும் வர்க்கம் அனைவருக்குமே வாழ்த்துகளைச்சொல்லுவோம். அடுக்களையில் உழைப்பவராயினும் ஆபீசில் களைப்பவராயினும், வீதியில் பாடுபடுபவராயினும் விண்வெளியில் சாடுபவராயினும் அனைவரும் ஒன்றே. உடலாலும் மூளையாலும் உழைப்பவர் அனைவரும் ஓர் வர்க்கமே. அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

இன்று மஹாராஷ்ட்ரத்தில் மஹாராஷ்ட்ர திவஸ் கொண்டாடப்படுகிறது. மொழி வாரியாகப் பிரிந்து மராட்டிய மாநிலம் உருவான தினம் இன்று. மேலதிகமாக விக்கியண்ணன் கொடுக்கும் தகவல்கள் இதோ..

The States Reorganisation Act, 1956 defined boundaries for the states within India on the basis of languages. The Bombay State that was formed as a consequence of this act, however, was composed of different areas where different languages were spoken; Marathi, Gujarati, Kutchi and Konkani. The Samyukta Maharashtra Samiti was at the forefront of the movement to divide the Bombay State into two states; one composed of areas where people primarily spoke Gujarati and Kutchi and the other where people primarily spoke Marathi and Konkani.
The state of Maharashtra and Gujarat were formed as a result of this movement according to the Bombay Reorganisation Act, 1960 enacted by the Parliament of India on 25 April 1960. The act came into effect on 1 May 1960, hence the reason of annual celebration. from onwards.

பல வருடங்களுக்கு முன் எனது வலைப்பூவில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி..

//தனி மாநிலம் வேண்டுமென்று போராடிய சம்யுக்த மராட்டிய இயக்கத்தினரின் ஒரு போராட்டத்தின் போது 105 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து, முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மராட்டிய மாகாணம் கலைக்கப்பட்டு, தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960ல்உருவானது. மஹாராஷ்டிர மாநிலம் பிறந்த இத்தினத்தை இங்குள்ள மக்கள் "மஹாராஷ்டிர திவஸ்" என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் உழைப்பாளர் தினமான மே தினமும், மஹாராஷ்ட்ர தினமும் ஒவ்வொரு வருடமும் இணைந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. 

மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசப்படும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள், முந்தைய ஹைதராபாத் மாகாணத்தின் எட்டு மாவட்டங்கள் போன்றவை இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. குஜராத்தி மொழி பெருவாரியாகப்பேசப்படும் பகுதிகள் இணைக்கப்பட்டு குஜராத் மாநிலமும் இதே நாளில்தான் உருவானது. இன்றைய தினம் தாதரிலிருக்கும் சிவாஜி பார்க்கில் ஊர்வலங்கள், மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுவதோடு மராட்டிய மாநில ஆளுநரின் உரையும் கட்டாயம் இடம் பெறும். மஹாராஷ்டிர தினத்தன்று மாநிலம் முழுவதும் மதுபான விற்பனையும் கண்டிப்பாகத்தடை செய்யப்பட்டிருக்கும்.//

LinkWithin

Related Posts with Thumbnails