Tuesday, 31 December 2024

படமும் பாடலும் (8)



கயல்விழி ராதையொடு கோதையு முண்டு
குயில்மொழி ஆய்ச்சியர் காண்ப துயர்வாய்
மயலுற்ற னைத்தும் மதுசூதன் விட்டு
வயல்வெளியில் நின்றான் வளர்ந்து.
***********************************************************************

லேட்டாபால் வாரதினால் நாக்கேங்கு தேகாலை
லோட்டா நிறைகாப்பிக் கே.
*************************************************************************

கட்டுச்சோற் றுப்பொதிக்குக் கச்சிதமாய்த் தேர்வதில்
இட்லிக்கு உண்டோ இணை.

சுடச்சுடக் காபியுடன் இட்லியெனில் சொர்க்கம்
சடனாய் அருகே வரும்.

சட்னியொரு கண்ணெனில் சாம்பாரோ மற்றொன்றாம்
இட்டமெக் கண்ணெனச் செப்பு

பஞ்சுபோல் இட்லியைப் பாய்ந்துண்ணீர் நாளைகிட்டும்
மிஞ்சியமா தோசையாய் வார்த்து
*************************************************************************

ரசவடைக் கென்றே சுடினும் சபல
வசப்படின் எஞ்சுவ தேது.
****************************************************************************

வாயைக் கிளறவரும் வம்பரின் அன்பெலாம் மாயைதா னென்றே உணர்

**************************************************************************************

வீட்டுக் கிரண்டொரு வாகனம் உண்டாயின்
ரோட்டில் பெருகாதோ ஜாம்
*********************************************************************************

தங்கவளை கேட்டதும் தங்கவலை யெண்ணாது மங்காத ரத்னவளை மாட்டுகிறீர் பர்த்தாவே வாங்கிய வாங்கியை வாட்டியே இன்றேனும் பாங்காய்ச் சமைக்கிறேன் பாத்.

1 comment:

ஸ்ரீராம். said...

குறள் வடிவமோ வெண்பா வடிவமோ உங்களுக்கு இவை யாவும் அழகாய் கைவருகிறது.  நான் கண்ட பா தான் எழுதுவேன்!!

அதுசரி, காபியுடன் இட்லியா, இட்லியுடன் காபியா?  எது முதல்?!!!

எல்லா 'பா'க்களுமே ரசனை, அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails