Thursday 12 December 2013

முதலீடும் வட்டியும்..

பூரியா சப்பாத்தியா என்ற குழப்பத்திற்கு விடை தேடி முடிக்கையில் உப்புமா வந்து உட்கார்ந்து கொள்கிறது காலை உணவாக.

கற்பித்தலின் மூலம் கற்றுக்கொள்வதை விட பார்த்தும் கேட்டும் உணர்ந்தும், ஏற்படும் அனுபவத்தால் கற்றுக்கொள்வதே அதிகமும் வழி காட்டுகிறது.

சுமையாய் நினைக்காத வரை கனம் உணரப்படுவதில்லை.

நமது போதனைகளிலிருந்து கற்றுக்கொள்வதை விட நம்மிடமிருந்தே அதிகமும் கற்றுக்கொள்கின்றன குழந்தைகள்.

பக்குவப்பட்டவனை எதுவும் பாதிப்பதில்லை.

‘வாழ்க்கை என்பது இப்படித்தான்’ என்ற பக்குவம் எல்லா மனிதர்களுக்குமே வந்து விடுகிறது. சிலருக்குச் சீக்கிரமாக.. சிலருக்கு வாழ்வு முடியும்போது.

வாழ்வின் ஆரம்ப காலங்களில் செய்யும் முதலீட்டுக்கான வட்டியே பிற்பாதியில் கிடைக்கிறது. நல்லதை முதலீடு செய்து மகிழ்ச்சியைப் பெறுவோம்.

பிறரின் கண்ணீருக்குக் காரணமாக இருப்பவன் இறுதியில் அவர்களை விட அதிகமாகக் கண்ணீர் விட நேரிடும்.

கண்ணீர்ப்பூக்களைப் புன்னகைப்பூக்களாக மாற்ற வல்லது அன்பு.

ஆரம்பகால உற்சாகம் அடுத்து வைக்கும் அடிகளிலும் குன்றாதிருப்பதே வெற்றியை நோக்கி நம்மை வேகமாக இட்டுச்செல்லும்.

LinkWithin

Related Posts with Thumbnails