Showing posts with label உடல் ஆரோக்கியம். Show all posts
Showing posts with label உடல் ஆரோக்கியம். Show all posts

Friday, 24 February 2012

அதிர்ச்சி வைத்தியம் பலனளிக்குமா?..

கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கணும். விதை விதைச்சதும் முளைச்சு, விளைஞ்சு அறுவடையாகிரும்ன்னு அவசரப்பட முடியுமோ?.. குறைஞ்ச பட்சம் வேரூன்றித் தழைக்க ஆரம்பிச்சாலாவது எப்படியும் பிழைச்சுரும்ன்னு நம்பிக்கையோட இருக்க முடியும். அது வரைக்கும் பொறுமை.. பொறுமை.. அண்ட் பொறுமை தேவை. பொறுமை எருமையை விடப்பெரியதுன்னு சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க பெரியவங்க.

எப்பவும் போல அன்னிக்கும், பொறுமையா ஒரு சிகரெட் புகைக்கலாம்ன்னு பொட்டிக் கடைக்கு வந்து ஒரு சிகரெட் வாங்கிக்கிட்டு, கடையிலிருந்த லைட்டரோட பட்டனை அமுக்கினா, அது..ராம் நாம் சத்ய ஹை"அப்டீன்னு சவுண்டு விடவும் பதறியடிச்சுப் பின் வாங்கிய மக்களுக்கு, ஒரு இயக்கம் கொடுக்கற அதிர்ச்சி வைத்தியம் அதுன்னு மொதல்ல புரியலை..
காமிராவில் பிடிச்சாந்தது..
வடக்கே இந்துக்களின் இறுதி ஊர்வலத்தும்போது, கூடவே நடக்கறவங்க "ராம் நாம் சத்ய ஹை" அப்படீன்னு மெதுவான குரல்ல உச்சாடனம் செஞ்சுட்டே போவாங்க. போற உசுரு கடவுள் நாமத்தைக் கேட்டுக்கிட்டே போகட்டுமேங்கற நினைப்புத்தான். அதைத்தவிர வீண் அரட்டையோ அல்லது வேறு எந்த நிகழ்வுகளோ இருக்காது. அந்த உச்சாடனத்தைக் கேக்கறப்ப கொஞ்சம் நம்ம உசுரையே அசைச்சுப் பார்த்துடற மாதிரி இருக்கும். பொதுவாவே இறுதிச்சடங்கு நிகழ்வுல கலந்துக்கறவங்களுக்கு ஒரு விதமான பற்றற்ற மனநிலை இருக்கும். பூமியில உசிரோட இருக்கறவரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய மனுஷன் கடைசியில் என்னத்தைக் கொண்டு போறான். நாமளும் அப்படித்தானே போகப்போறோம்,.. அதனால இருக்கறவரைக்கும் மத்தவங்களுக்குப் பிரயோசனமா இருக்கணும், அன்பா இருக்கணும்ன்னு ஒரு வைராக்கியமே வரும். இதைத்தானே மயான வைராக்கியம்ன்னு சொல்றோம். அந்த இடத்தை விட்டு வெளியில வந்தப்புறம், "பழைய குருடி கதவைத்திறடி"ன்னு பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பறது தனிக்கதை :-) இங்கெல்லாம் இறுதி யாத்திரை போகுதுன்னா, கிட்டக்கப் போயி இறந்தவங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுட்டு அவங்கவங்க வழியில போவாங்க.

மனுசன் உலகத்துக்கு வந்தது ஒரே வழியில் ஆனா, உலகத்தை விட்டுப் போறது வெவ்வேறு வழிகளில்ன்னு சொல்லுவாங்க. அங்கே இறுதியாத்திரை செஞ்சுட்டிருக்கறவரும் அப்படித்தான் ஏதாவதொரு வழியில், ஏன் கான்சராலக் கூட உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்துருக்கலாம்.

ஆனாலும் நம்ம அரசாங்கத்துக்கு மக்கள் மேல அபார நம்பிக்கைதான். முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம், இது போக வழக்கமான கல்வி நிலையங்கள்ன்னு எக்கச்சக்கமா ஏற்படுத்திக் கல்வியை ஊட்டறோமே.. அது வீணாப் போகுமா?. எப்படியும் மைக்ராஸ்கோப் வெச்சுப் படிச்சாவது தெரிஞ்சுக்குவாங்க என்ற அசாத்திய நம்பிக்கை அவங்களுக்கு இருக்கு. அதனாலதான் கடுகை விடச் சின்னதா "Cigarette is Injurious to Health"ன்னு சிகரெட் பொட்டியில் எழுதி வெச்சிருக்காங்க. ஒரு வேளை இங்க்லீஷ் படிக்கத் தெரியலைன்னா என்னா செய்யறதுன்னுதான் "புகை பகை".. "புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு"ன்னு தமிழ்லயும் எழுதி வெச்சிருக்காங்க.

ஆனாலும் மக்கள் இந்த வெண்சுருட்டை(தமிழ்ல இந்தப் பேருதானே?.. தெரிஞ்சவங்க சொல்லுங்க) விடறதா இல்லை. பொது இடங்கள்ல புகை பிடிச்சா அபராதம்ன்னும் ஒரு சட்டம் வந்துச்சு. ஆனாலும் ஓரளவுக்கு குறைக்க முடிஞ்சுதே தவிர முழுசும் இதை தடுக்க முடியலை. சிகரெட்டால புற்று நோய் வர வாய்ப்பிருக்குன்னு சொன்னாக்கூட மக்கள் சட்டை செய்யறதா இல்லை. இதுக்கு மேல ஒரு அரசாங்கம் மக்களை எப்படித்தான் எச்சரிக்கை செஞ்சு பாதுகாக்க முடியுமாம்.. யக்கா நீ சொல்லேன்!! அண்ணாத்தை நீங்க சொல்லுங்களேன் :-)

நடமாடும் புகை போக்கிகள் அதான் சிகரெட் பிடிக்கிறவர்கள் தங்களோட வீட்ல தனியிடத்துலயோ, இல்லைன்னா, மறைவா எங்கியாவதோ பிடிச்சா மத்தவங்களுக்குப் பிரச்சினையில்லை. அட்லீஸ்ட் வாங்குன கையோட கடை மறைவுல நின்னு கதையை முடிச்சுட்டுக் கிளம்புனாக்கூட தொந்தரவில்லை. ஆனா, இரு சக்கரத்துலயோ நாலு சக்கரத்துலயோ போற போக்குலயும், நடந்து போகறச்சயும் புகையை மத்தவங்களுக்கும் சப்ளை செய்யறவங்களை என்னன்னு சொல்றது. சிலருக்கு அந்த வாசனை விருப்பமானதா இருக்கலாம். ஆனா, ரோட்டுல குழந்தைகளும் நடமாடுது, அவங்களுக்கு இந்தப் புகை அலர்ஜியாக் கூட இருக்கலாம்ங்கறதையும் இவங்க யோசிக்கிறது நல்லது.

புகை பிடிக்கிறவங்களை விட அதைச் சுவாசிக்கிறவங்களுக்குப் பாதிப்பு கூடுதல்ன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. சமீபத்தில் பையருக்கு உடம்பு சரியில்லாம மருந்து வாங்கப் போயிருந்தப்ப, கடையில் ஒரு குடும்பம் நின்னுட்டிருந்தது.கடைப்பையரும் அவங்க குடும்பமும் நண்பர்கள் அதனால மனசு விட்டுப் பேசிக்கிட்டிருந்தாங்க. கசமுசன்னு கடைப்பையன் கிட்ட பேசிக்கிட்டு இருந்ததைக் கவனிச்சதும் காதை அந்தப் பக்கம் அனுப்புனேன். ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகியிருக்கும் அவங்களோட மூத்த பையருக்கு கான்சராம். கல்யாணம் நிச்சயமாகி ஒரு மாசமே ஆகியிருந்த நிலையில் ரொம்ப சீரியஸான கட்டத்துல அட்மிட் ஆகியிருக்கார். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாத அவருக்கு, செயின் ஸ்மோக்கரான அவங்கப்பா மூலமா கான்சர் பரவியிருக்குது. பாதிக்கப்பட்ட பையருக்கு வயசு இருபத்தஞ்சைக் கூட தாண்டலைங்கறதுதான் கொடுமை.

சிகரெட்டை முடிச்சுட்டுக் கனிஞ்சுட்டிருக்கற துண்டை, அப்படியே வீசிட்டுப் போறவங்களையும் சொல்லணும். நம்ம நாட்ல கிராமங்கள்லயும், நகரங்கள்லயும் செருப்பில்லாம வெறுங்காலோட நடக்குற நிலைமையில் இன்னும் கூட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க. இங்கேயும் எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வெறுங்காலோட சிக்னல்கள்ல அங்கியும் இங்கியும் ஓடறதைப் பார்த்திருக்கேன். ஏதாவதொரு ஆட்டோ, அல்லது காரிலிருந்து விழும் கனல்துண்டு அதுங்க பாதத்தைப் பதம் பார்க்கவும் வாய்ப்பிருக்கே.

திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு நம்மூரு வாத்தியார் பாடி வெச்சது இங்கேயிருக்கும் Cancer Patients Aid Association- (சுருக்கமா)CPAA-க்கு எப்படித்தான் தெரிஞ்சதோ.. திருடங்களைத் திருத்தணும்ன்னா அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும்ன்னு துணிஞ்சு இறங்கிட்டாங்க. மொதல்ல குறிப்பிட்ட சிகரெட் லைட்டர்தான் அந்த அதிர்ச்சி வைத்தியம். இது மின்சாரத்துல இயங்கறதால ஷாக் ட்ரீட்மெண்டுன்னும் இங்க்லீஷ்ல சொல்லிக்கலாம்.

மும்பையில் பான் கடைகள் ரொம்பவே பிரபலம். பான் வகைகளும், குட்கா போன்ற வஸ்துகளோட சிகரெட்டும் இருக்கும். இதான் சரியான களம்ன்னு களமிறங்கிய CPAA மும்பையில் மட்டும் மொத்தம் 25 இடங்கள்ல இந்த லைட்டர்களை கடைக்காரங்களோட அனுமதியோட வெச்சிருக்கு. நிறையப்பேர் இதை வெச்சுக்க எதிர்ப்பு தெரிவிக்கறாங்கதான். சரிதானே?.. தன்னோட காலைத் தானே கோடரியால வெட்டிக்க யாருக்குத்தான் விருப்பமிருக்கும்?. இதை வெச்சுக்க அனுமதிச்சா எங்க பொழைப்பு என்னாகறதுன்னு கேக்கறாங்க. உங்க பொழைப்புக்காக மத்தவங்க வாழ்க்கையில் விளையாடறது ஞாயமான்னு கேக்குற CPAA  இந்தத்திட்டத்தை கட்டாயமாக்க வேணப்பட்ட சட்ட பூர்வமான முயற்சிகளையும் எடுத்துட்டு வருதுன்னு இதோட இயக்குனர் தெரிவிச்சுருக்கார். கான்சருக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் கிட்ட பரப்பும் முறைகளில் இந்தத் திட்டமும் ஒன்னு..

யூடியூப்ல ச்சும்மா வலை மேய்ஞ்சுட்டிருந்தப்ப கிடைச்ச புதையல் இது. மேற்கொண்டு தகவல் தேடுனப்ப இவங்களுக்குன்னு தளமும் இருக்கறதைக் கண்டு பிடிச்சேன். சேவைகள், கான்சருக்கான சிகிச்சை முறைகள்ன்னு ஒரு தகவல் சுரங்கமே இருக்குது அங்கே. லைட்டரோட ஸ்விட்சை அமுக்கினதும் எப்படி ஷாக் அடிச்சு, ஓரோருத்தரும் ஜெர்க்காகுறாங்கங்கறதை நீங்களே வீடியோவில பாருங்க ..

ஒரு சிலர் மட்டும் இந்த உச்சாடனத்தை தனக்கான எச்சரிக்கை ஒலிக்கிறதா எடுத்துக்கிட்டு , "இந்த சிகரெட் பழக்கம் இனிமேலும் அவசியமா"ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. மத்தபடி மெஷினைக் கண்டு பின் வாங்குனாலும் சிகரெட்டை விடமுடியாத சிலர் வத்திப் பொட்டி கேக்க ஆரம்பிச்சுருக்காங்களாம். இன்னும் சில துணிஞ்ச மனசுள்ளவங்க அந்த லைட்டரைத் தைரியமா உபயோகப் படுத்தறாங்களாம். வழக்கமா அரசாங்கம், ஜோரா ஆரம்பிச்சு ஆரம்ப ஜோர்ல கொண்டாடப்பட்டு, கடைசியில காயலாங்கடைக்குப் போற நல்ல திட்டங்கள் மாதிரி இல்லாம, பொது நல சேவை மனப்பான்மையோட தனியார் ஆரம்பிச்சுருக்கும் இதுவாவது நீடிச்சு நின்னு நல்ல பலனைத்தரணும்..

இப்போ தீர்ப்பு மக்கள் கையில்....


Wednesday, 17 August 2011

மழைக்காலத்தில்..

வெய்யில் காலத்துல, ஒரு மழைத்துளியாவது விழாதா?..கொஞ்சமாவது வெக்கை குறையுமேன்னு ஏங்குன காலம் போய், மும்பையில் இப்போ செம மழை. என்னதான்,.. குடை, ரெயின் கோட்ன்னு கொண்டுபோனாலும், மழையில நனையுற சுகமே தனி.. 

ஆரம்ப ஜோர்ல எல்லாமே நல்லாத்தான் இருக்கும். அப்புறம், என்னதான் துணிதுவைக்கும் இயந்திரத்தின் உலர்த்தியில்(ட்ரையர்ன்னு இங்கிலீசுலயும் சொல்லலாம் :-)) காயவைத்தாலும், சட்ன்னு காயாத துவைத்த துணிகள், மழைக்காலத்துக்கே உரிய இன்னபிற சங்கடங்கள்ன்னு வரிசையா வந்து படுத்தியெடுக்கும். மழை ஆரம்பிச்ச ரெண்டுமாசத்துக்குள்ளாறயே எப்போதான் மழைக்காலம் முடியப்போவுதோன்னு ஒவ்வொருவரையும் முணுமுணுக்க வெச்சிடுது..

இதுக்கெல்லாம் தேவையேயில்லாம, நம்மை இந்தக்காலத்துகேற்ப கொஞ்சம் மாத்திக்கிட்டா, சொர்க்கம்தான்.. கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருந்துக்கிட்டா, மழைக்காலத்துல வர்ற வியாதிகள்லேர்ந்தும் நம்மை காப்பாத்திக்கலாம்.

இந்த லிஸ்டுல மொதல்ல வர்றவங்க குழந்தைகள்தான்.. தண்ணீரில் விளையாடப்பிடிக்காதுன்னு சொல்ற குழந்தைங்க உண்டா என்ன?!!.. அதுவும் பள்ளிவிட்டு வீடு திரும்பும்போதுதான் செமையா நனைஞ்சுக்கிட்டு வருவாங்க. வந்ததும், அப்டியே அலாக்கா குளியலறைக்கு தூக்கிட்டு போயி, ஈர உடைகளை மாற்றி, கை,கால்களை நல்லா சோப்போ, இல்லை தரமான கிருமி நாசினியோ போட்டு கழுவச்சொல்லணும். தேங்கி நிக்கிற அழுக்குத்தண்ணீர்ல எவ்ளோ கிருமிகள் இருக்கும்ன்னு சொல்லியா தெரியணும் :-) 

முடிஞ்சா, இதமான சூடுள்ள வென்னீர்ல கொஞ்சம் டெட்டால், சாவ்லான் எதையாவது கலந்து ஒரு பக்கெட்ல எடுத்துக்கிட்டு, கால்களை அதில் கொஞ்ச நேரம் வெச்சிருந்தா, நக இடுக்குகளில் இருக்கற பாக்டீரியாக்களும் அழிஞ்சு, கால் சுத்தமாயிடும். இதனால், அரிப்பு போன்ற சருமப்பிரச்சினைகள் தவிர்க்கப்படுது.. இது பெரியவங்களுக்கும் பொருந்தும். 

மழைக்காலத்துல ஷூக்களைதவிர்த்து அதுக்கென இருக்கற சப்பல்கள், சாண்டல்களை உபயோகப்படுத்தும்போது, அது தரமானதுதானான்னு சரிபார்த்து வாங்கினா நல்லது. இல்லைன்னா, நாலு நாள் துவைக்காத சாக்ஸுக்கும் அதுக்கும் மணத்தில் எந்தவித வித்தியாசமும் இருக்காது. காலுக்கும் அலர்ஜியாகிடும். ஷூக்களை, அதுக்குள்ளே செய்தித்தாளை திணிச்சுவெச்சு பார்சல் செஞ்சு மழைக்காலம் முடியறவரை பரண்ல பத்திரப்படுத்துங்க.

மழைக்காலத்துல தண்ணீரை காய்ச்சியோ அல்லது வாட்டர் ஃபில்டர்களில் ஊற்றி சுத்தம் செய்தோ பயன்படுத்தணும்ன்னு நமக்கு தெரியும்தான்,.. ஆனாலும், ஃபில்டர்களை சரியா சுத்தம் செய்யலைன்னா, அதுவே பாக்டீரியாக்கள் பல்கிப்பெருகற ஒரு இடமா மாற வாய்ப்பிருக்கு. அப்றம் நோய்களை வெத்தலைபாக்கு வெச்சு அழைச்ச கதைதான் :-)))

மழை மற்றும், அதை தொடர்ந்து வர்ற குளிர்காலங்கள்ல சூடா சாப்பிடறது நலம். அதுவும் குடும்பத்துல எல்லோரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டா, உறவு வளரும், கேஸ்செலவு குறையும். (சாப்பாட்டைஅடிக்கடி சூடாக்கவேண்டிய தேவையிருக்காதே:-). கூடுமானவரைக்கும் அந்தந்த நேரத்துக்கு போதுமான அளவு உணவை சமைச்சு வெச்சுக்கலாம். சாப்பாட்டுலயும் மிளகு, சுக்கு, இஞ்சிவகைகளை நிறைய சேர்த்துக்கிட்டா, நாக்குக்கும் ருசி.. உடம்புக்கும் நல்லது.

மழை பெஞ்சா தோட்டம் வெச்சிருக்கறவங்களுக்கு கொண்டாட்டம்தான்,.. மழைத்தண்ணீரே செடிகளுக்கு போதுமானது. அப்றம், மழைக்காலங்கள்லதான், மண்புழுக்கள் வெளியே வரும். அதுல நாலஞ்சை பிடிச்சுட்டு வந்து தொட்டிக்கு ஒன்னு ரெண்டா போட்டுவெச்சுட்டா, செடிகளுக்கு நல்லது. இயற்கையுரம் தயாரிக்க வெச்சிருக்கற டப்பாவுல கழிவுகளோட,மண்புழுக்களை போட்டுவெச்சா, இயற்கையுரத்தை இன்னும் சத்தாக்கிடும். 
இயற்கையுரத்துல வளர்ற எங்கூட்டு பூக்களை நலம் விசாரிக்கும் பட்டாம்பூச்சி..
மழைக்காலத்துல இன்னொரு தவிர்க்கமுடியாத பிரச்சினை,.. பிரச்சினைன்னு சொல்றதைவிட ஆபத்துன்னே சொல்லலாம். அதான் ஒழுகும் கூரைகள்.. இதுக்கு அடுக்குமாடி கட்டிடங்களும் விதிவிலக்கல்ல. இதனாலயே இங்கெல்லாம் தரைத்தளத்துலயும், மேல்தளத்துலயும் இருக்கற வீடுகள் சட்ன்னு விக்கிறதில்லை. வித்தாலும் 'ஏதோ.. வீடுன்னு ஒன்னு இருந்தாப்போதும்'ன்னு நினைக்கிறவங்கதான் வாங்குவாங்க.
அந்தா............ சுவத்துல கோலம் போட்டிருக்காங்களே.. அதான் கெமிக்கல்பூச்சு..
கூரைகள் மட்டும்தான் ஒழுகும்ன்னு இல்லை. சிலசமயங்கள்ல விரிசல் விட்டுருக்கும் சுவர்கள் வழியாவும் நீர் கசியும். அந்த மாதிரி கசிவு இருக்கற இடங்கள்ல மின்சார இணைப்புகளோ, சுவிட்சுகளோ இருந்தா,.. வேற வினையே வேண்டாம். எப்போ ஷாக் அடிக்கும்ன்னே தெரியாது. பயந்துக்கிட்டே இருக்கணும். அதனால, மழைக்கு முன்னாடியே இங்கெல்லாம் கட்டிடங்கள்லயும் வெளிச்சுவர்கள்ல ரசாயனப்பூச்சுவேலை நடக்கும். ஏன்னா, பால்கனியில தண்ணீர் தேங்கினாக்கூட, அது நமக்கு கீழ்த்தளத்துல இருக்கற வீட்ல கசிய வாய்ப்பிருக்கு.

எனக்கு தெரிஞ்சவங்க வீட்ல, வீட்டோட இணைஞ்ச மொட்டைமாடியில செங்கல் வெச்சு தொட்டி கட்டி, அதுல மண் நிரப்பி, தோட்டம்போட்டிருந்தாங்க. தினமும் அதுக்கு ஊத்துற தண்ணீர் சுவர் வழியா கசிஞ்சு, கீழ்த்தளத்துல இருந்த வீட்டோட சமயலறையின் டைல்களெல்லாம் அப்படியே உதிர்ந்து 'சொத்.. சொத்'ன்னு விழற நிலைமைக்கு போயிடுச்சு. மொத்தமா விழுந்தா பரவால்லை.. ஒவ்வொரு நாளும் ஒன்னு ரெண்டா விழுந்தா, எப்படி?.. தினமும் பயந்துக்கிட்டே சமைக்கமுடியுமா?.. கடைசியில சொஸைட்டில புகார்கொடுத்து, தொட்டியை இடிக்கவெச்சதுமில்லாம, தங்களோட அடுக்களையையும் சரிசெஞ்சு கொடுத்தப்புறம்தான் சமாதானமானாங்க :-)

இப்படியெல்லாம் இருந்தாலும் பாதுகாப்பு கருதி நாமும் எச்சரிக்கையா சில முன்னேற்ப்பாடுகளை செஞ்சுக்கணும். ஷாக் அடிப்பதை தவிர்க்க சுவிட்சுகள், மற்றும் ப்ளக் பாயிண்டுகள்ல எர்த் கனெக்ஷன் இருக்கான்னு பார்த்து சரிசெஞ்சுக்கணும். முடிஞ்சவரைக்கும் த்ரீ பின் பாயிண்டுகளை உபயோகப்படுத்துவது நல்லது. 

அதுவும் மிக்ஸி, டிவி, சிஸ்டம் போன்ற மின்சார மற்றும் மின்னணுச்சாதனங்களை உபயோகப்படுத்தியபிறகு, சுவிட்சுலேர்ந்து ஒயரைப்பிடுங்கிடுறது நல்லது. அதிகம் இடிமின்னல் இருக்கும் சமயங்கள்ல டிவியையும், ஃப்ரிஜ்ஜையும் ஆஃப் செஞ்சுடுறது அதுக்கும், உங்க பர்சுக்கும் பாதுகாப்பு. 

தரைத்தளத்துல இருக்கறவங்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம்தான். மழைல நனைஞ்சுட்டு சகதிக்காலோட வீட்டுக்குள்ள நடமாடினா, ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை வீட்டை துடைச்சு, சுத்தம் செய்யவேண்டிய அவசியத்துக்கு வீட்டுப்பெண்களை உள்ளாக்கினா, அப்றம், சமைக்க நேரமெங்கே இருக்குன்னு அதிரடி பதில் கண்டிப்பா வரும்.  'அதிகப்படியான சுத்தம் சோறுபோடாது :-))

ஈரமான குடைகளை வீட்டுக்குள்ள கொண்டுவராதீங்க. வெளியவே ஒரு பக்கெட்டை வெச்சு குடைகளை அதில் வெச்சுடுங்க. அதிகப்படியான தண்ணீரெல்லாம் வடிஞ்சப்புறம், வேணும்ன்னா, எல்லோரும் தூங்கப்போறச்சே ஹால்ல குடைகளை விரிச்சு வெச்சுட்டா, பத்து நிமிஷத்துல காய்ஞ்சுடும். மடக்கி வெச்சுடலாம். மழைக்கோட்டுகளை உலர்த்தறதுக்குன்னு தனியா ஒரு கொடி கட்டி, அதுல காயவெச்சுட்டா, ஈரவாசனை தவிர்க்கப்படும்.

அலுவலகம் போறவங்க,.. முக்கியமா பெண்கள், இந்த மழை நேரத்துக்குன்னே தனியா, சீக்கிரம் காயறவகையிலான செயற்கை இழையாலான ஆடைகளை உபயோகப்படுத்தறது நல்லது. முடிஞ்சா, ஆபீசில் உங்களுக்குன்னு டேபிள் இருந்தா, ஒரு செட் உலர்வான உடைகளை எப்பவும் அதுல வெச்சிக்கிறது ரொம்ப பயனானது. ரொம்பவே தொப்பலா நனைஞ்சு, அத்தனை பேர் நடுவுல கூனிக்குறுகி, குளிர்ல நடுங்கிட்டே வேலைசெய்யற அவஸ்தையை இதனால தடுக்கலாம். இது இங்கே தொலைத்தொடர்பு துறையில் பணிபுரியும் என்னோட தோழி சொன்ன டிப்ஸ்.. பெண்களுக்குன்னு தனியா ஓய்வறை வசதி இருக்கற அலுவலங்கள்லயாவது இதை கடைப்பிடிக்கலாமே..
மழைக்காலத்துல குஞ்சுகளுக்கு கதகதப்பா படுக்கை தயாரிக்க எங்கூட்டு செடிகள்தான் போகுதாக்கும் :-)). டப்பாவே தெரியாத அளவுக்கு வளர்ந்து பூத்துக்கிடந்த செடி, ஒர்ரே நாள்ல பணாலான கதியைப்பாரீர் :-))
அதிமுக்கியமானது,.. வியாதிகள்லேர்ந்து காப்பாத்திக்க தடுப்பூசிகளை போட்டுக்கிடறது நல்லது. கொசுக்கள் பெருகாம இருக்க, வீட்டுப்பக்கங்கள்ல தண்ணீர் தேங்கி நிக்கிற இடங்கள்ல வேப்பெண்ணெய், ஆமணக்கெண்ணெய், மற்றும் கழிவு ஆயில்களையும் (நன்றி-உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா) ஊத்திவெச்சா,.. கொசுக்கள் அழிக்கப்பட்டு, அதனால பரவற காய்ச்சல் வகைகள் கொஞ்சமாவது தடுக்கப்படும். 

அமெரிக்காவின் டாக்சஸ், விஸ்கோன்சின், அலபாமா ஆகிய பல்கலை கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைஞ்சு, சிக்கன் குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசியை கண்டுபிடிச்சிருக்காங்க. பன்றிக்காய்ச்சலுக்கும் தடுப்பூசி இருக்காம். வருமுன் காப்பது நல்லதுதானே..

மும்பையில் ஒவ்வொரு இடங்கள்லயும், புகைபோட்டு கொசுவை அழிச்சுக்கிட்டிருக்காங்க. ஒவ்வொரு கட்டிடமா போயி, கீழ்த்தளத்துல, மழை நீர்வடிகால்கள், அப்றம் வாகனங்கள் நிறுத்தற இடங்கள்ன்னு எல்லா இடங்கள்லயும் புகையடிப்பு நடக்குது.
எங்க பில்டிங்கில் மருந்தடிக்கிறாங்க... கொசுவுக்கு :-)

முக்கியமானது,.. மழை பெஞ்சாத்தான் நாடுசெழிக்கும்,.. காடும் செழிக்கும். குடிதண்ணீர், காய்கறிகள்ன்னு எல்லாமும் தட்டுப்பாடில்லாம கிடைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியா சுத்துப்புறமும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் அருவிகளெல்லாம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால, மழை பிடிக்கலைன்னாலும் தயவு செய்து,' சனியன் பிடிச்ச மழை.. விடாம பெய்ஞ்சு கெடுக்குதே'ன்னு அலுத்துக்காதீங்க. மழை நல்லது :-)))


Thursday, 4 August 2011

நமக்கே நமக்காக..

உடம்போட எடையைக்குறைச்சு ஒரு ஸ்லிம்ரனா ஆகணும்கறதும், ஹீரோக்கள் மாதிரி சிக்ஸ்பேக் வைக்கணும்கறதும் இந்தக்கால இளவட்டங்களோட ஆயுட்கால கனவு. அதனால, கோடை காலத்துல காலை நேரங்கள்ல பார்த்தாப்போதும்.. வேர்க்க விறுவிறுக்க வாக்கிங் போறதும் பக்கத்துல இருக்கற பூங்காக்கள்ல போயி, செட்டு சேர்த்துக்கிட்டு யோகா செய்யறதும்.. வீட்ல, ஜிம்முலன்னு உடற்பயிற்சி செய்யறதும்ன்னு அடடா!!!!!... திமிலோகப்படும்.

 கடந்துபோன மழை மற்றும் குளிர்காலத்துல, வெளியே போகப்பயந்துக்கிட்டு போர்வையை இன்னும் நல்லா இழுத்து மூடிக்கிட்டு உறங்கியும், ஒரே இடத்துல உக்காந்து சாப்பிட்டும் சேர்த்த உடல்பருமனை, வெய்யில்காலத்துல கரைக்கிறேன் பேர்வழின்னு சிலபேர் உடம்பைப்போட்டு படாதபாடு படுத்திட்டிருப்பாங்க.

‘எப்படியாவது குறைஞ்சது பத்து கிலோவாவது குறைச்சே ஆகணும்’கறது அவங்களோட கனவு லட்சியமா இருக்கும். லட்சியத்தை கைப்பிடிக்கப்போற வேளையில கோடை முடிஞ்சு மழைக்காலம் வந்து தொலைச்சுடும். ‘இந்த மழையில் வாக்கிங் போவாங்களா?.. சூடா பஜ்ஜி சாப்பிட்டா நல்லாருக்குமே.. பக்கோடா சாப்பிட்டா நல்லாருக்குமே’ன்னு முழ நீள லிஸ்டில் இருக்கற பலகாரங்களை வயித்துக்குள் ஏற்றுமதிசெய்வாங்க

விளைவு!!.. இன்னும் உடம்பு பூரிச்சுப்போகும். 'அதெல்லாம் எங்க குடும்ப வாகே அப்படித்தான்' அப்படீன்னு ஒரு முத்தாய்ப்போட எடைகுறைக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு,.. அளவு சின்னதாய்ப்போன அழகான ஆடைகள், ஒரு பெருமூச்சோடு தானமளிக்கப்பட்டுவிடும்.

இன்னும் சிலபேர், வீட்ல கல்யாணம், அல்லது இன்னபிற விசேஷங்கள் வருதுன்னா, அன்னிக்கு அழகா தெரியணும்கறதுக்காக அதுக்கு முன்னாடியே எடையைக்குறைக்கறேன் பேர்வழின்னு பரண்ல கிடக்கற ஷூக்கள், ட்ராக் சூட்டுகளை கரப்பான்கள்கூட்டத்து நடுவுலேர்ந்து தேடிக்கண்டுபிடிச்சு முறையா பயிற்சி செய்ய ஆரம்பிப்பாங்க. என் தோழி இரண்டாவது குழந்தைக்கு தாயாராகுமுன், பத்துகிலோ எடையைக்குறைச்சு தயாராகிவிட்டிருந்தாங்க. அதன்பலனா, பிரசவத்துக்கப்புறம் பெண்களுக்கு வழக்கமா கூடிப்போகும் எடைப்பிரச்சினையிலேர்ந்து தப்பிச்சாங்க..

ஆனா, இப்படியெல்லாம் குறைக்கப்படற எடை நிரந்தரமா ஒரே நிலையில் இருக்குதான்னு கேட்டா,.. அதான் கிடையாது. குறிக்கோள்கள் நிறைவேறினதும் எடைகுறைப்பு லட்சியமும் காத்துல பறந்துடும்..“எங்க பரம்பரையிலேயே எல்லோருக்கும் பூசினமாதிரி உடம்புங்க.. அப்படியே அவங்க தாத்தாவாட்டம்,.. பாட்டியாட்டம்..” என்ற சால்ஜாப்புகள் சொல்லப்படும். இப்படி ஒரு குறிப்பிட்ட காலத்துக்காக குறைக்கப்பட்ட எடை அதே வேகத்துல மறுபடியும் கூடுதலாயிடும்ன்னு பயமுறுத்தறாங்க J

இதுக்கெல்லாம் நாற்காலியிலேயே குடியிருக்கற நம்முடைய வாழ்க்கைமுறையும், உணவுப்பழக்கவழக்கங்களும்தான் முக்கிய காரணம். அசையாம ஒரே இடத்துல உக்காந்திக்கிட்டிருந்தா சாப்பாடு சரியா செரிக்காது.. செரிச்சதும் கொழுப்பு செல்களா மாத்தப்பட்டு உடம்புல சேமிக்கப்படும். விளைவை தன்னைத்தானே ஆளுயுயர கண்ணாடியில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க J

சாதாரண மக்களுக்கே இம்புட்டு பாடு இருந்தா, நம்மமேல வீசப்படற அர்ச்சனைப்பூக்களையெல்லாம் தாங்கிக்கிட்டு, நாற்காலிய எப்பவுமே விட்டுக்கொடுக்காம, தமிழுக்கு சேவைசெய்யறதுக்காக கணினி முன்னாடி உக்காந்துக்கிட்டு, பொட்டி தட்டுற நமக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும்.அதையெல்லாம் தாண்டி நம்ம உடல் எடையையும், ஆரோக்கியத்தையும் கட்டுப்பாட்டுல வெச்சிக்க,.. நம்ம டாக்குட்டர் ’கெட்வெல்’ சொல்ற அறிவுரையையும் கவனிக்கலாம். 

1. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள்:
இடுகை எழுதறதுக்கு முன்னாடி, என்ன விஷயத்தைப்பத்தி எழுத’லாம்’. என்னென்ன பாயிண்டுகள் சேர்க்க’லாம்’. மத்தவங்க கவனத்தை ஈர்க்கறமாதிரி என்ன தலைப்பு வைக்க’லாம்’ இப்படி எல்லா ‘லாம்’களையும் எப்படி பார்த்துப்பார்த்து தேர்ந்தெடுக்கறோமோ… அதேமாதிரிதான் சாப்பாட்டையும் தேர்ந்தெடுக்கணும்,..  பொரிச்செடுத்த பஜ்ஜி, வடை, போண்டாக்களை மத்தவங்க இடுகைகள்ல போயி எடுக்கறதோட நிறுத்திக்கணும்.. நெஜத்துல அவிச்ச, சுட்ட, வாட்டிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கறது உடம்புக்கு நல்லது.

2. சாப்பாட்டை நிதானமா மென்னு சாப்பிடணும்.
மின்சாரம் கட்டாகுறதுக்குள்ளாற இடுகையை எழுதிமுடிக்கணுமே… மத்த பதிவுகளையும் படிச்சு பின்னூட்டமிடணுமே.. அதுக்குள்ள சாப்பிட்டுடலாம்ன்னு அவசர அவசரமா சாப்பிடக்கூடாது. பொதுவா நாம சாப்பிட ஆரம்பிச்ச பதினஞ்சாவது நிமிஷத்துலதான் ‘வயிறு நிறைஞ்சுடுச்சு’ன்னு நம்ம மூளை தகவல் அனுப்புமாம். அதனால அவசர அவசரமா சாப்பிடுறப்ப, எப்போதும் சாப்டுறதைவிட கொஞ்சம் கூடுதலாவே சாப்பிட்டுட வாய்ப்பிருக்குதாம். சாப்பாட்டுல பழங்கள் பச்சைக்காய்கறிகள் சேர்க்கப்பட்ட,.. நார்ச்சத்து நிரம்பிய ஆரோக்கியமான உணவை சாப்பிடறது நல்லது.
3 .தண்ணி குடிக்க மறந்துடாதீங்க
இது ரொம்ப முக்கியமானது.. சிலவிஷயங்களைப்பத்தி படிக்கிறப்ப (உதாரணமா என்னோட இந்த இடுகை J) ‘சரி.. சரி.. தண்ணியக்குடி’ன்னு நம்மை நாமே தேத்திக்கிறதுக்காக சொல்லிக்கிறதுண்டு. அந்தமாதிரி சமயங்களில் ஒருகப் தண்ணீரைக்குடியுங்க. ஒரு நாளைக்கு குறைஞ்சபட்சம் எட்டிலிருந்து பத்துகப் தண்ணியாவது குடிக்கிறது ரொம்ப நல்லது. இது உடம்பிலிருக்கிற நச்சுப்பொருட்களை வெளியேத்தவும், சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, சாப்பாட்டுல இருக்கற சத்துக்களை உடம்புமுழுக்க எடுத்துச்செல்லவும் உதவியாயிருக்கு. ஜூஸ்,இளநீர் இதுகளெல்லாம்கூட எடுத்துக்கலாம்..
4.காலையுணவை மறக்காதீங்க.
என்னிக்குமே காலைச்சாப்பாட்டை மறந்துடாம எடுத்துக்கறது நல்லது. இடுகையை காலைல பப்ளிஷ் கொடுத்துட்டு, பின்னூட்டம் வருதா.. வருதான்னு F5 பட்டனை தேய்ஞ்சுபோறவரைக்கும் அழுத்தி அழுத்தி, கண்ணு பூத்துப்போறவரைக்கும் கணினித்திரையை பார்த்துட்டே இருந்தா நிச்சயமா சாப்பிடமறந்துதான் போகும். அதைவிட புரோட்டீன் சத்துகள் நிரம்பிய சாப்பாடா எடுத்துக்கிட்டு அப்புறமா கணினிப்பக்கம் வந்தா, இன்னும் தெம்பா பின்னூட்டத்துக்கு காத்திருக்கலாம். அன்னிக்குப்பூரா எதிர்பார்த்த அளவுக்கு பின்னூட்டம் வரலைன்னாலும், சோர்வே வராது 
:-) இன்னும் தெம்பா பின்னூட்டங்களுக்காக காத்திருக்கலாம். ரெண்டு இட்லி.. ஒரு பக்கெட் சாம்பாரும் ஓகேதான். அதுக்கு மாறா பூரி,பராத்தா,பொங்கல்ன்னு சாப்பிட்டா கண்ணைச்சொக்கிட்டு வரும்.. அப்றம், லேப்டாப்பையே தலையணையாக்கி தூங்கிடுவீங்க… கவனமா இருங்க J

5.உணவை பகிர்ந்து உண்ணுங்க..
சிஸ்டத்துல வாசிச்சுட்டிருந்தத அப்படியே பாதியில விட்டுட்டு சாப்பிடவந்துட்டு, சாப்பிட சோம்பல்பட்டு நம்ம தட்டுல இருக்கறதை, வாழ்க்கைத்துணையோட தட்டுலயோ… இல்ல பசங்களோட தட்டுலயோ, அவங்க பார்க்காத நேரத்துல நைசா வெச்சுடறதுதான் பகிர்ந்துண்ணுதல்ன்னு,.. இதுக்கு அர்த்தம் சொல்லமாட்டேன் J

ஒரே நேரத்துல பெரிய பாத்திகட்டி வளைச்சுக்கட்டாம அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா சின்ன்ன்ன பாத்தி கட்டுனாப்போதும்.. இந்த வழிமுறை அடிக்கடி பசிஎடுப்பதை தடுக்குது.. அதுக்காக ஒவ்வொரு வேளையும் ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டுட்டு வெயிட்டே குறையமாட்டேங்குதேன்னு புலம்புனா, கம்பேனி பொறுப்பாகாது J
6.நொறுக்குத்தீனியை தவிருங்க..
சிலபேருக்கு சினிமா பார்க்கறச்சே, டிவி பார்க்கறப்ப, இப்ப லேட்டஸ்டா பொட்டிதட்டுறப்ப நொறுக்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கும். மொதல்ல அந்தப்பழக்கத்தை டிலீட் செய்யுங்க. இல்லைன்னா, விஷயத்தோட சுவாரஸ்யத்துல எவ்ளோ சாப்பிட்டோம்ன்னே தெரியாது J. அதுவுமில்லாம அதோட துணுக்குகள் கீபோர்டுல விழுந்து வைச்சா எறும்புத்தொல்லையும் வரும்.. அதோட, ‘நாராயணா.. இந்த எறும்புத்தொல்லை தாங்கலைடா’ன்னு டயலாக்கை மாத்தி சொல்லிக்கலாம்.

7.ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை சமாளியுங்க.
மன அழுத்தம் கூடுதலா இருக்கச்சேதான், ஒண்ணு எக்கச்சக்கமா சாப்ட்டு குண்டாயிருவாங்க. இல்லைன்னா சாப்பிடாம இருந்து நரம்பாட்டம் ஒல்லியாகிடுவாங்க. ரெண்டுமே தப்பு.. அதனால மன அழுத்தத்தை அண்டவிடாதீங்க. யோகா, ஏரோபிக்ஸ் மாதிரியான பயிற்சிகளால மன அழுத்தத்தை விரட்டிடலாம். இந்த மன அழுத்தங்களுக்கான காரணங்கள் ஆளுக்காள் வித்தியாசப்படும். உதாரணமா சொல்லணும்ன்னா,.. ஒரு இடுகை ஃப்ளாப் ஆனா என்ன!!.. ‘இதுவும் கடந்துபோகும்’ன்னுட்டு அடுத்த இடுகையை இன்னும் நல்லா எழுதி, பாப்புலராக்குற வழியைப்பார்க்கலாமே :-)))
8.உடற்பயிற்சி செய்யுங்க..
உடற்பயிற்சிங்கறதையே மறந்து, கணினி முன்னாடியே தவம் கிடக்கறதால என்னாகும்ன்னு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை J. அதனால, காமணி நேரத்துக்கொருக்கா எழுந்துபோயி நடந்துட்டு வருவது நலம். இந்த வாய்ப்பை ‘சரி..சரி.. தண்ணியக்குடி..’ திட்டத்துக்கு பயன்படுத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிறவங்க ‘சிக்கனம் சின்னச்சாமி’ என்ற பட்டத்தை தமக்குத்தாமே வழங்கிக்கொள்ளலாம் J. அதேசமயத்தில் காற்றடைத்த குளிர்பானங்கள் டீ காபி இவற்றை தவிர்க்கவும். ‘ஐயோ.. டீ காபி இல்லைன்னா எனக்கு வேலையே ஓடாதே’ங்கறவங்க.. அதோட அளவைக்குறைச்சுக்கோங்க. அதுக்குப்பதிலா, எவ்ளோ வேண்ணாலும் நீர்மோர் குடிக்கலாமே..

இதுபோக ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்களுக்காவது வெளியே வாக்கிங் போயிட்டு வர்றது நல்லது. இந்த வாக்கிங் நேரம் விடியற்காலையா இருந்தா, ஃப்ரெஷ்ஷா காய்கறி வாங்கிட்டு வரது, வீட்டிலிருக்கும் செல்லப்பிராணியையும் வாக்கிங் கூட்டிட்டுப்போறதுன்னு செஞ்சா வீட்லயும் நல்லபேரு எடுக்கலாம்.

9.காலம் கழிந்து சாப்பிடவேண்டாம்
இது, நடுராத்திரியில.. டின்னரெல்லாம் முடிச்சு,.. எல்லோரும் தூங்கினப்புறமும் சிஸ்டத்துக்குள்ள தலையை விட்டுக்கிட்டு, எழுதவோ வாசிக்கவோ செய்யும் சாமக்கோழிகளுக்கானது...(நான் உட்பட :-)) ராத்திரி ரொம்ப நேரத்துக்கப்புறம் மறுபடியும் பசி எடுக்குதுன்னுட்டு பிஸ்கட்ஸ், டோஸ்ட்ன்னு வளைச்சா அது நல்லதில்லை. நேரம் கழிச்சு சாப்பிடற சாப்பாடு சீரணமாகாது.. உடம்புல வெயிட்டைத்தான் கூட்டும்.
10. சுவரோ, டிராயிங் போர்டோ இல்லை காகிதமோ.. ஏதாவது ஒண்ணு அடிப்படையா இருந்தாத்தான் சித்திரம் எழுதமுடியும். அதேமாதிரி, உடல் எடையை கட்டுக்குள்ள வைக்காட்டி இதயசம்பந்தமான நோய்களும் வர வாய்ப்பிருக்கு. ஒருத்தரோட எடை எவ்ளோ இருந்தா ஆரோக்கியமான நிலைன்னு நாமே கண்டுபிடிச்சிக்கலாம். 

உங்க உயரத்தை செ.மீட்டரில் அளந்துக்கோங்க. அதுலேர்ந்து 100-ஐக்கழிங்க. மீதி வருவதுதான் உங்க சரியான எடை. உதாரணத்துக்கு உங்க உயரம் 158 செ.மீ இருக்குதுன்னு வெச்சுப்போம். அப்படீன்னா உங்க எடை 58கிலோவா இருக்கணும். ஆனா, உங்க எடை அதுக்கும்மேல கூடுதலாயிருந்தா.. நீங்க உடற்பயிற்சி செய்யவேண்டிய நேரம் வந்துட்டுதுன்னு அர்த்தம். நல்லா பயிற்சி செஞ்சு தெம்பா இருந்தாத்தானே பதிவுகள்ல போயி கும்மியடிக்கமுடியும்.. :-)).. சரியா!!..


ரெடி.. ஸ்டார்ட் மூஜிக் :-)))
 


LinkWithin

Related Posts with Thumbnails