Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday, 25 March 2012

நித்திய கண்டம் பூரண ஆயுசாம் பூரண் போளிக்கு..

பூரண் போளி என்னும் இந்த அருமையான சுவையான வஸ்துவைச் சமைக்க ஆரம்பிக்குமுன், நாள் நட்சத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதைப் பஞ்சாங்கத்தில் பார்த்துக் கொள்வது முக்கியம். குறிப்பாகப் “போறாத” காலம் இல்லாத பொழுதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு போளியும் சமைக்கும் போது ஒவ்வொரு கண்டத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் அமைந்து விடும்.

இந்த பூமியும் அதில் உலவும் கட்டைகளாகிய நாமும் மட்டுமல்ல, போளியும் பஞ்சபூதங்களால் தயார் ஆனவையே என்று என்னப்பன் நெய்யப்பன் புளுகிய புராணத்தில் அருளிச்செய்திருக்கிறான். அதாவது, மாவு நிலமாகித் தாங்கி நிற்க, நெய்யானது நீராகப் பெய்யப்பட்டு, சமையல்வாயு பகவானின் அருளுடன், லைட்டாக எரியும் அக்னி பகவானின் கருணையால் சுடப்படும் போளியில் அண்டசராசரம் ஆகாயமெங்கும் பரவி நிற்கும் பரம்பொருளெனப் பூரணம் விரவி நிற்கும். மும்மூர்த்திகளை இணைத்துப் பரம்பொருளென்று அழைப்பது போலவே கடலைப்பருப்பு, வெல்லம், ஏலக்காய் இவற்றின் கூட்டணியும் பூரணமென்று பொதுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
நானும் என் காமிராவும் சுட்டவை..
விசேஷ தினமொன்றில் ஒரு வீட்டில் பூரண்போளி சமைக்கப்படும் வாசனை தேவலோகம் வரை எட்டிப்பார்க்கிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டவர்களுக்காக, அந்த வீட்டின் அடுக்களையிலிருந்து இதோ.. லைவ் டெலிகாஸ்டாக நிகழ்ச்சி தொடருகிறது.

“என்னாங்க.. ஒரு கப் கடலைப்பருப்பை குக்கரில் வேக வைக்கச் சொன்னேனே.. செஞ்சீங்களா?..”

“எப்பவோ ஆச்சும்மா.. பருப்பு வெந்து இறக்கவும் இறக்கியாச்சு. இனிமே என்ன செய்யணும்?”

“தண்ணீரை நல்லா வடிகட்டிட்டு, நல்லா மசிச்சு வையுங்க. பருப்பு நல்லா மசியணும். இல்லைன்னா போளியா இடறப்ப மாவுலேர்ந்து வெளிநடப்புச் செஞ்சுரும்”

“ஹூம்.. கொடுத்து வெச்சது அவ்ளோதான்”

“என்ன அங்கே முணுமுணுப்பு?.. எனக்குக் கையிலே சுளுக்குப் பிடிச்சுருக்கற நேரம் பார்த்து, பூரண்போளி வேணும்ன்னு கேட்டீங்கல்லே. கொஞ்சம் ஒத்தாசை செஞ்சாத்தான் என்னவாம்?..”

“ஒண்ணுமில்லே.. வெல்லம் எங்கே வெச்சிருக்கேன்னு கேட்டேன். எவ்வளவு வெல்லம் போடணும்?”

“இந்த அரைக்கிலோ வெல்லத்தைப் பொடிச்சுட்டு அதுலேர்ந்து ஒன்னரை கப் அளவுலே எடுத்துக்கோங்கோ..”

“அப்ப மிச்ச வெல்லத்தை என்ன செய்யறது?”

“அதைப் ஃப்ரிஜ்ஜுல வையுங்க. அடுத்த தடவைக்கு ஆகுமில்லே. இப்ப எடுத்துக்கிட்ட வெல்லத்தோட கால் கப் தண்ணி ஊத்தி அடுப்புல வெச்சுச் சூடாக்கிக்கோங்க. வெல்லம் கரைஞ்சதும் கல், மண் போக வடிகட்டிக்கோங்க. வடிகட்டினதுக்கப்புறம் அடுப்புல வெச்சு, பாகுபதம் வர்ற வரைக்கும் மறுபடியும் சூடாக்கணும்..”

“பாகுபதம் வந்ததும் மசிச்ச கடலைப்பருப்பை அதுல போட்டு, நல்லாச் சுருண்டு வர்ற வரைக்கும் கிண்டீட்டு, ரெண்டு ஏலக்காயைப் பொடிச்சுப்போட்டுரணும். நல்லாக் கெட்டியானதும் இறக்கி ஆற விடணும். ரைட்டுதானேம்மா?..”

“அட!.. எப்டீங்க?.. இவ்ளோ சீக்கிரம் கத்துக்கிட்டீங்க!!”

“ஆங்.. போன தீவாளிக்கு பூரணம் செய்ய, நாந்தானே எல்ப் செஞ்சேன். அப்பக் கத்துக்கிட்டேன்.”

“சமத்து.. பூரணம் ஆறட்டும். அதுக்குள்ள போளிக்கு மேல்மாவு தயார் செஞ்சுருவீங்களாம். சரியா?. இப்பல்லாம் மைதாவுக்கு மவுசு குறைஞ்சுட்டு வருது. அதுல சத்து இல்லேன்னு வேற சொல்றாங்க. அதுனால கோதுமை மாவுலயே மேல்மாவு தயார் செஞ்சுருங்க”

“எங்க ஆத்தா சாம்பார் வைக்கச் சொல்லிக்கொடுத்தா, ரசம் வைக்கச் சொல்லிக்கொடுத்தா, இவ்வளவு ஏன்? பாயசம் வைக்கக்கூட சொல்லிக்கொடுத்தா. ஆனா, போளிக்கு மாவு பிசையச் சொல்லிக் கொடுக்கலையே..”

“சப்பாத்திக்கு மாவு பிசையச்சொன்னா, தோசைக்கான பக்குவத்துல கரைச்சு வெச்ச ஆளாச்சே நீங்க.!! அதான் அவங்க சொல்லித்தரலை. அழுவாதீங்க, நான் சொல்லித்தரேன். ரெண்டு கப் கோதுமை மாவை எடுத்துக்கோங்க. நாலு பேர் இருக்கற நம்மூட்டுக்கு இதுவே போறும். இப்ப மூணு டேபிள் ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி மாவுல விட்டு, ஸ்பூனால நல்லா கலக்கி விடுங்க. நேரடியா கையை வெச்சு, விரலைச் சுட்டுக்காதீங்க. நெய் மாவுல கலந்ததும், சிட்டிகை உப்பும், மஞ்சப்பொடியும் போட்டுப் பிசிறி விடுங்க. நல்லாச் சேர்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாத் தண்ணி தெளிச்சு, பொறுமையாப் பிசைஞ்சு வையுங்க. மாவு பிசையுறதுலதான் மென்மையான போளியோட சூட்சுமமே இருக்குது. பிசைஞ்ச மாவை சமமான உருண்டைகளாப் பிரிச்சு வையுங்க."

"ஆச்சா.. இப்ப ஒவ்வொரு உருண்டையையும் சொப்பு மாதிரி செஞ்சுக்கிட்டு, அதுல கொஞ்சம் பூரணத்தை வெச்சு, அழகா மூடிரணும். இப்ப அதை சப்பாத்தியாத் திரட்டணும். பொறுமையா திரட்டலைன்னா ஒவ்வொண்ணும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியான்னு ஒவ்வொரு கண்டமாத்தான் இருக்கும். தோசைக்கல்லுல போட்டு ரெண்டு பக்கமும் நெய் தடவிச் சுட்டெடுக்க வேண்டியதுதான். பக்குவமாச் சுட்டெடுத்தா ரெண்டு நாள் வரைக்கும் கெட்டுப்போகாம மிருதுவா இருக்கும்”

“இனிப்புப் பத்தலை, மிருதுவா இல்லைன்னு ஈஸியா நொட்டை சொல்லிச் சாப்பிடற போளிக்குப் பின்னால இவ்ளோ உழைப்பு இருக்குதா!.. ஸாரிபா, இனிமே சமையல்ல குறை கண்டு பிடிக்கவே மாட்டேன்”

“அடடா.. பூரணம் வெளியே வராம அழகாத் திரட்டணும். இல்லைன்னா சப்பாத்திப் பலகையில மாவு ஒட்டிக்கிட்டு, பெரிய இம்சையாப்போயிரும். நகருங்க, நான் சுட்டெடுக்கறேன்”

“அப்ப, கையில் சுளுக்குப்பிடிச்சுருக்குன்னு சொன்னியே?”

“சமையக்கட்டுச் சிரமங்கள் உங்களுக்குத் தெரியணும்ன்னுதான் அப்படிப் புளுகினேன்.”

“அப்ப,.. நானும் ஒரு உண்மையைச் சொல்லவா?.. என்ன இருந்தாலும் உன் கையால் சமைச்சது போல் ஆகுமா?.. அதான் நானும் போளி திரட்டறப்ப வேணும்ன்னே சொதப்பி வெச்சேன்..”


Saturday, 6 August 2011

லொள்ளுடன் ஒரு அட்வைஸ் :-))).

அந்தக்காட்டுல சிங்கம்,புலி, சிறுத்தை முதலான மாமிச பட்சிணிகளும் மான் முயல், எலி, யானை போன்ற தாவரபட்சிணிகளும், ரெண்டையும் கலந்தடிச்சு சாப்டுற,.. வயித்துக்கு வஞ்சகம் செய்யாத பிராணிகளும், எக்கச்சக்கமா வசிச்சு வந்தன. மனிதர்களோட பார்வை இன்னும் படாத காடு.. ஆகவே எக்கச்சக்கமான மரங்கள் ரொம்பவே அடர்ந்து படர்ந்து சூரியக்கதிர்களே தரையில் விழாதபடிக்கு எக்கச்சக்க நிழல் கொடுத்து வந்தன. மிருகங்களும் வேட்டையாடப்படற பயமில்லாம சுதந்திரமா சுத்திக்கிட்டு வந்தன..

அங்க இருக்கற மிருகங்களோட ஒர்ரே கெட்ட பழக்கம் போதைப்பழக்கம்தான் திட திரவ வாயு நிலைகள்ல இருக்கற எல்லா பொருட்களையும் டேஸ்ட் செய்யாம விடறதில்லை. சாயங்காலமானா,..  பகலெல்லாம் வேட்டையாடின அலுப்புதீர, "வென்னீர் போட்டு வைய்யி.. இன்னிக்கி பிடிச்சுட்டு வந்ததை நெறைய வெண்ணெய் போட்டு பொன்முறுவலா வறுத்து வைய்யி"ன்னு மனைவியை நோக்கி உத்தரவு போட்டுட்டு,.. கடையை நோக்கி நடையைக்கட்டிடுவாங்க.. மனைவிகளெல்லாம் அவங்களைத்திருத்தறதுக்காக அறிவுரை சொல்லிச்சொல்லி அலுத்துப்போயிட்டாங்க.

(பய புள்ளைகளை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டாந்திருக்கேன்.. நீங்களாவது நல்லபுத்தி சொல்லுங்க :-))

ஒரு சாயங்காலம் நேரத்துல,.. கடைக்கு போயிட்டு தம்மடிச்சுட்டு வந்தது பத்தாதுன்னு பார்சல் வாங்கியாந்து, 'உற்சாகபானம்' அருந்திக்கிட்டிருந்த கரடிகிட்ட ஒரு எலி ஓடிவந்தது..

"அண்ணே.. அண்ணே.. வேணாம்ன்னே இந்தப்பழக்கம்.. இந்த போதைப்பழக்கத்தால உங்க குடும்பத்தை கவனிக்க மறந்துடறீங்களே.. இதெல்லாம் நல்லால்லை. இந்தக்காட்டைப்பாருங்க.. இயற்கை எவ்வளவு அழகா தாண்டவமாடுது.. இதையெல்லாம் பார்த்து ரசிக்காம குடியே கடி.. ச்சே!!.. கதின்னு கிடக்கறீங்களே. உங்களுக்கு ஏதாவதொண்ணுன்னா உங்க புள்ளைகுட்டிகளெல்லாம் நடு ரோட்டில் நிக்குமே.. அதுங்க பாவமில்லையா. அதுங்க முகத்துக்காகவாவது இந்தப்பழக்கத்தை விட்டுடுங்க"ன்னு கெஞ்சிக்கூத்தாடுச்சு.

எலியைக்கண்டதும், மொதல்ல எளக்காரமா நினைச்ச கரடிக்கு தன்னோட குட்டிகளைப்பத்தி எலி சொன்னதும், அதுங்க எதிர்காலத்தை நினைச்சு பயம் வந்துடுச்சு.. "ஆத்தாடீ.. எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா,.. என் குடும்பம் நடுக்காட்லேயில்ல நிக்கும்.. பரவால்லை.. பய மூளைக்காரந்தான்.. இந்த சின்னவயசுலயே இவ்ளோ ஞானமா!!!!.. இப்படி தன்மையா மென்மையா புரியவைச்சிருந்தா மனைவிங்க பேச்சை எப்பவோ கேட்டிருந்துருப்பேனே." ன்னு ஒரேயடியா ஆச்சரியப்பட்டுது.
(சத்தியம் பண்ற நேரத்துல இந்த எலித்தம்பி எங்க போனான்னு தெரியலியே.. )
"சரி எலித்தம்பி, நீ சொல்றதும் சரிதான்.." என்ற கரடி,.. 'நாளை முதல் குடிக்கமாட்டேன்.. சத்தியமடி தங்கம்..'என்று எலியின் தலையிலடிச்சு சத்தியம் செய்ய ஓரடி முன்னே வைக்க, தன் உயிரை காப்பாத்திக்க எலி ஈரடி பின்னே வைச்சது.. எலி மட்டும் அப்படியே நின்னுட்டிருந்துருந்தா இந்தக்கதை கிடைச்சுருக்குமா :-)))

"சரி வா.. யாம் பெற்ற அறுவையுரை பெறுக இவ்வனம்.. அப்படியே காலாற நடந்து இந்தக்காட்டையே போதையின் பிடியிலிருந்து விடுவிக்கலாம்" அப்டீன்னுட்டு எலியும் கரடியும் காட்டை சுத்திப்பார்க்க புறப்பட்டுதுங்க..

போற வழியில ஒரு குதிரை, ஏதோ ஒரு போதைப்பொருளை உறிஞ்ச படாதபாடு பட்டுட்டிருந்தது.. அதுகிட்டயும் இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து மூளைச்சலவை செய்ய, அதுவும் மனசு மாறி அவங்க கூட புறப்பட்டுச்சு. மூணுபேருமா காட்டுவலம் வர்றாங்க.. போறவழியில பார்க்க கிடைக்கிற மிருகங்களையெல்லாம் இப்படி ஒவ்வொண்ணா கூட்டு சேர்த்துக்கிட்டு வந்துக்கிட்டிருக்காங்க.
பாதையில ஒரு புலி, கையில் மதுக்கிண்ணத்தை ஏந்திக்கொண்டு பாட்டுப்பாடி ஆடிக்கிட்டிருந்தது. நெறைய பேரு தன்னோட வீட்டை நோக்கி வர்றதைப்பார்த்தது,.." என்ன என்ன..பிரச்சினை?.. எதுவானாலும் இப்ப தீர்ப்பு சொல்லமுடியாது"ன்னுது.

"ஏண்ணே.."ன்னு பரிதாபமா கேட்டன மிருகங்களெல்லாம். காட்டுராஜா சிங்கம்,.. காட்டு மந்திரியா புலியை நியமிச்சுட்டு வெளி நாட்டுக்கு சுற்றுப்பயணம் போனதுலேர்ந்து பதினெட்டுப்பட்டிக்கும் தீர்ப்பு சொல்ற உரிமை புலிகிட்டதான் இருந்துவந்தது. அதனாலயே அதுக்கு பவுசும் ஏறிப்போச்சு :-)


'ஆலமரம் சாஞ்சிருச்சே.. அதனால அதுக்கடியில மாட்டிக்கிட்ட,.. அரைக்காப்படி சொம்பும் நெளிஞ்சிருச்சே.. சொம்பு வாங்கியாரப்போயிருக்கற ஆளு வந்தப்புறம்தான் தீர்ப்பெல்லாம் சொல்லமுடியும். அதனால இப்ப வழக்கு என்னான்னு மட்டும் சொல்லிட்டுப்போங்க"ன்னுது புலி..

"வழக்கெல்லாம் ஒண்ணுமில்ல மதி மந்திரியாரே. எங்களையெல்லாம ஆளற பொறுப்புல இருக்கற அரசாங்கமே.. அதாவது மதி மந்திரியாரே மதுவருந்தலாமா..  அதுவும் எங்களை விட்டுட்டு தனியா அருந்தலாமா??!!.... போதைப்பொருட்களை உபயோகிக்கிறது தப்பில்லையா.. இதெல்லாம் எலித்தம்பி சொன்னதும்தான் எங்களுக்கு நல்லா புரிஞ்சது..  நீங்களும் புரிஞ்சுக்கோங்க. வேண்டாம்ண்ணே!!.. நாளைமுதல் மட்டுமல்ல இன்று முதலே அதை தூக்கியெறிங்க.. இந்தபிரச்சாரத்தைத்தான் நாங்க எல்லோரும் காடுமுழுக்க பரப்பிட்டு ஜமா சேர்த்துட்டு வரோம்"ன்னு யானை சொல்லிமுடிக்க.......'பளார்'ன்னு ஒரு அறைவிழுந்த சத்தம்.


யாரு அடிவாங்கினாங்கன்னு சுத்துமுத்தும் பார்த்தா,.. எலி கன்னத்தை தடவிவிட்டுக்கிட்டு நிக்குது.

"அட ஏண்ணே!!.. நல்ல விஷயத்தைத்தானே சொல்லிருக்கான். ஒரு சின்னப்பையனைப்போயி அடிச்சிட்டீங்களே"ன்னு அங்கலாய்த்தது கரடி.
புலி பதிலளிச்சது,.. "யாரு சின்னப்பையன்?.... இவனா!!!!.. நேத்தும் இப்படித்தான் எக்கச்சக்கமான போதையில.. இதே டயலாக்கை பேசிக்கிட்டு,... என்னைய பக்கத்து ஊரு காடுமுழுக்க மூணுமணி நேரம் அவங்கூட சுத்த விட்டுட்டான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" 

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் மது மற்றும் மற்ற போதைப்பொருட்கள், வீட்டுக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல... காட்டுக்கும் கேடுதான் :-)


டிஸ்கி: இதை நாலுவரி குறுந்தகவலா அனுப்பிவெச்ச என் பெண்ணின் தோழிக்கு நன்றி :-)))))))))))





Thursday, 4 August 2011

அவ்வ்வ்வ்..... அவன் ஏன் ஓடிப்போனான்???!!!...

வரவர இவனுங்க சாப்டுறதுக்கு கொடுக்கற இம்சை இருக்கே… சாப்பாட்டை வெச்சா சாப்பிடாம… சிந்தறதும் செதர்றதும், வாரியிறைக்கிறதும்ன்னு ஒரே அட்டகாசம். ஒருத்தனை ஒருத்தன் தொரத்தரதும், விரட்டிப்பிடிக்கிறதுமா சாப்பிடற பொழுதுகள்லதான் விளையாட்டும். இவனுங்களை நாம ஏதாச்சும் சொன்னா,.. அவ்ளோதான். ’குய்யோ..முறையோ..’ன்னு ஒரே கூப்பாடு. வடிவேலு சொன்னாப்ல, ‘ஒரே சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்கு’ன்னு தோணினாலும் அதானே உண்மையும் கூட J

‘இந்த அவனுங்க அவனுங்கன்னு அடிக்கடி சொல்றீங்களே!!… அவனுங்கல்லாம் யாருங்க!!..’ன்னு நீங்க கேக்குறது புரியுதுங்க.(டாக்டர் இஸ்டைலில் படிக்கவும். டாக்டர் யாருன்னு வலையுலத்துக்கு சொல்லத்தேவையில்லைன்னு நினைக்கிறேன்). சொல்றேன்…

எங்க வீட்டுக்கு மூணுபேர் எப்பவும் மத்தியானம் சாப்பிட வருவானுங்க.. மூணுபேர்ன்னா சொன்னேன்??.. மூணு வெரைட்டின்னு சொன்னா ரொம்ப பொருத்தமாருக்கும். ‘சாப்பாடு தா.. தா..’ங்கற பெரிய வாக்கியத்தை அவனுங்க பாஷையில சிம்பிளா ஒத்தைச்சொல்லுல, ’கா.. கா..’ன்னு சொல்லுவாங்க. இதத்தான், சுருங்கச்சொல்லி விளங்கவைக்கிறதுன்னு பெரியவங்க சொல்லுவாங்களோன்னு நானா விளங்கிக்கிட்டேன் :-)

அவனுங்க கேக்குறாங்களேன்னு நாம சட்னு சாப்பாட்டை கொண்டுபோயி வெச்சிடமுடியாது. ஒருத்தனுக்கு வெறுஞ்சாப்பாடு வேணும். ஒருத்தனுக்கு குழம்பு ஊத்திவேணும், இன்னொருத்தன் ரொம்ப விசேஷம்…. தண்ணியில போட்டு கழுவிட்டுத்தான் சாப்பிடுவான்.. சுத்த்த்தம்!!!!!!! (குழம்பு உட்பட கழுவிட்டுத்தான் சாப்டுவான்) ஆங்!.. மூணு வெரைட்டி வந்துடுச்சுல்லே J


அதுவும் நேரத்தோட வரமாட்டானுங்க.. மத்தியானம் மூணுலேர்ந்து மூணரைக்குள்ளதான் வருவானுங்க.. பங்க்சுவாலிட்டியாம்!!!.. சொல்றானுங்க J இதுனாலயே ஆரம்பத்துல இதுங்க வந்துடுச்சுன்னா, ‘அம்மா.. மூணரைக்காக்காங்க வந்துடுச்சூ’ன்னு பசங்க கொரல் குடுப்பாங்க. நானும் போயி சாப்பாட்டை வெச்சுட்டு வந்துடுவேன். ஒருத்தன் ஒழுங்கா சாப்டுட்டு போயிடுவான்.
ஒருத்தன் அதுக்கப்புறமும் சாப்பிடாம கத்திக்கிட்டிருக்கறதை அப்புறமாத்தான் கவனிச்சேன்.. ‘ஏன்?.. நல்லாத்தானே போயிட்டிருந்தது.. என்ன இப்ப..”ன்னு கேட்டதும்,.. அதுல ஒருத்தன் மட்டும், டபக்ன்னு எந்திரிச்சி, அதுங்க குடிக்கிறதுக்காக தண்ணி ஊத்திவெச்சிருந்த தட்டுல சாதத்தைப்போட்டுட்டு அப்றமா சாப்டறதை.. ‘சரி.. காரம் ஒத்துக்கலை போலிருக்குன்னு, மறுநாள் கொஞ்சமா குழம்பு ஊத்திவெச்சா அப்றமும் இதே கதைதான். ‘போடா..’ன்னுட்டு வெறுஞ்சோத்தை வெச்சேனா, இன்னொருத்தன் கபால்ன்னு பாய்ஞ்சுவந்து சோத்தை முழுங்க ஆரம்பிச்சுட்டான்.. ஆஹா!!.. இதுங்க என்னிய வெச்சு காமெடி பண்ணுதுங்களே…

அதுலேர்ந்து வெறுஞ்சோத்தைப்போட்டு, அதோட ஒருஓரத்துல குழம்பு ஊத்திவெச்சுட்டு... வேணுங்கறமாதிரி தின்னுக்கோன்னுட்டு வந்துடுவேன். அதுலேர்ந்து இவனுங்களுக்கு சோத்துக்காக்கா, தண்ணிக்காக்கா, கொழம்புக்காக்கான்னு அடையாள நாமகரணம் சூட்டப்பட்டது மறைக்கப்படாத வரலாற்று உண்மை :-) . இவனுங்க போனதும், மிச்சமீதியை எங்கூரு அதிகாரபூர்வமற்ற மாநிலப்பறவையான புறா, அப்றம் குருவியெல்லாம் வந்து காலிபண்ணும். தண்ணி குடிக்கிறதுல புறாம்மாவும்,அய்யாவும்தான் சமர்த்து.. தட்டுல இருக்கறதை மூச்சுக்கூட விடாம ‘சர்ர்ர்ர்ர்’ன்னு ஓரேயடியில குடிச்சுட்டுத்தான் நிமிருவாங்க.

இன்னிக்கி காலைல வழக்கம்போல, அஞ்சரைமணிக்கு கையில காப்பியோட பால்கனியில நின்னு, எதிர்ல தெரியிற மலைலேர்ந்து கொட்டிக்கிட்டிருக்கற அருவியை வேடிக்கை பார்த்துக்கிட்டே காப்பியை குடிச்சுமுடிச்சுட்டு,(நல்ல மழைபெஞ்சதுல திற்பரப்பு ரேஞ்சுக்கு அருவி கொட்டுது) வழக்கம்போல மை ஃபேவரிட், ‘ கணேஷாய தீமஹி..’யை கேக்கலாம்ன்னு சிஸ்டத்தை இயக்கிட்டு, காலைல டிபனுக்கு சாமையரிசி உப்புமா செய்யலாமா.. இல்லைன்னா, சேமியா உப்புமா செய்யலாமான்னு உலகமகா முடிவெடுக்கமுடியாம ஆழ்ந்த சிந்தனையில ஆழ்ந்திருந்ததை.., அரைஉறக்கம்ன்னு உலகவழக்குல சொல்றதையெல்லாம் நான் ஏத்துக்கமாட்டேம்ப்பா J (ஹை.. ஒர்ர்ர்ர்ரே வாக்கியமா எழுதிட்டேனே!!!.. வெரிகுட்)

அப்ப, பால்கனிலேர்ந்து ஒரே கூப்பாடு கேக்குது .. ‘இன்னும் சாப்பாடாகலை. பொறவு வா..’ன்னா கேக்க மாட்டேங்கான். நேத்திக்கு மிஞ்சிய சாதத்தை, ஆப்பத்துக்கு இன்னிக்கு அரைக்கிறப்ப சேர்த்து அரைக்க ஆகுமேன்னு ராத்திரியே தண்ணி ஊத்திவெச்சுட்டேன்.. பழையதைப்போயி போடமுடியுமா.. இவனுங்க சூடாவே சாப்டு பழகினவங்க... இப்ப என்ன செய்ய?.. 


பசிக்கு பாவமில்லைன்னுட்டு அந்த பழையதை கொஞ்சூண்டு பிழிஞ்சு வந்து போட்டேன்..”கா..கா..கா..’ ஒரே கத்தல். பழையது சாப்பிடமாட்டார் போலிருக்குன்னுட்டு ஒரு ஸ்லைஸ் ப்ரெட்டை பிச்சுப்போட்டேன்.. காலைல நீராகாரமோ, தயிர்விட்ட பழையதோ சாப்பிட்டா அல்சருக்கு நல்லதுன்னு தெரியாது போலிருக்கு. கண்டதையும் சாப்டறதால அல்சர் வராமயா இருக்கும்?.. ‘கா..கா..கா…’ இன்னும் சுருதி கூட்டி கத்துது. இது வழக்கமில்லியே… ஒருவேளை இவன் புதுசோ!!…

“காலைல அஞ்சரை மணிக்கு வந்து நின்னா,. இதான் கிடைக்கும். வேணும்ன்னா மத்தியானம் வா.. 'பிரியாணி' போடறேன்…’ன்னு சொன்னேன். அவ்ளோதான் ஓடியே போயிட்டான்…. என்னாச்சுன்னு தெரியலை. அப்றம் அந்த சாப்பாட்டையெல்லாம், வழக்கமான வாடிக்கையாளர்களான புறாவும்,குருவியும் வந்து காலிசெஞ்சாங்க.. ஆமா??... அந்தக்காக்கா ஏன் ஓடிப்போச்சு ??!!!!!!!......




Wednesday, 3 August 2011

'பழ'மொழிகள் பத்து..

(படத்துக்கு நன்றி -இணையம்)
1. மாம்பழத்தை மரத்துலே பார்த்தா,..ஊறுகாயை பாட்டில்ல பார்க்கலாம்

2. மாமியார் உரிச்சா பலாப்பழம் .. மருமகள் உரிச்சா வாழைப்பழம்.

3. கூரை ஏறி கொய்யாப்பழம் பறிக்கமுடியாதவன்,..ஆல்ப்ஸ் மலைஏறி ஆப்பிள் பறிச்சேன்னானாம்..

4. ஒரு பெட்டி திராட்சைக்கு ஒரு பழம் பதம்..

5. ஆயிரம் ரூபாய்க்கு அன்னாசி வாங்குனவன்,.. அஞ்சு ரூபாய்க்கு கத்தி வாங்க யோசிச்சானாம்.

6. அக்கடை வாடிக்கையாளருக்கு இக்கடைப்பழம் சிறப்பு.

7. பேரீச்சம்பழம் களவுபோனா கணக்கு பார்ப்பான்.. பேரீச்சைமரம் போன இடம் தெரியாது.

8. பண்டிகை காலத்துல பஞ்சாமிர்தத்துலயும் அஞ்சாறு வகையாம்.

9. பழச்சாறு பிழியறப்ப சும்மா இருந்துட்டு, குடிக்கிறப்ப கிளாசை தூக்கிக்கிட்டு வந்த கதையால்ல இருக்கு!!!..

10.அலங்காரக்கூடையாம், ஜரிகைத்தாளாம்.. உள்ளே இருக்குமாம் அழுகலும் புளிப்பும்.



டிஸ்கி: இதுமாதிரி உங்களுக்கு தெரிஞ்ச பழமொழிகளை ரீமிக்ஸ் செஞ்சு 'பழ'மொழிகளாக்கி பின்னூட்டத்துல எடுத்துவிடுங்க :-))





Thursday, 28 July 2011

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு :-))))



'அரிது.. அரிது.. ஆரோக்கியமாய் இருத்தல் அரிது; அதனினும் அரிது மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடல்'ன்னு நிகழ்காலக்கலம்பகத்துல படிச்சப்பகூட நான் நம்பலை.. வறுபட்டு ஃப்ரைட்ரைஸ் ஆனப்புறம்தான் நம்புனேன் :-)))

அந்த சரித்திரமுக்கியத்துவம் பெற்ற சம்பவம் நடைபெற்று பத்துப்பதினஞ்சு நாளானப்புறமும்கூட அதோட பாதிப்பு இன்னும் நெஞ்சைவிட்டு நீங்கலைன்னா, அதோட மகிமை என்னான்னு புரிஞ்சுக்கோங்க. பையருக்கு பல்லில் பிரச்சினை காரணமா, பல்டாக்டரைப்பார்க்கவேண்டி வந்தது (பல்டாக்டரைப்பார்க்காம பின்னே,.. கண் டாக்டரையா பார்ப்பாங்கன்னு கமெண்டுறவங்கல்லாம் அப்டியே ஒன் ஸ்டெப் பேக் :-)).

இந்த E.N.T. ஸ்பெஷலிஸ்டுகளெல்லாம் ஏன், பல்லுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடாதுன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். காது,மூக்கு,தொண்டை எல்லாத்துக்கும் ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இருக்கறமாதிரியே பல்லோடயும் சம்பந்தம் இருக்குதுதானே!!.. என்ன இருந்தாலும் அவங்கல்லாம் பக்கத்துப்பக்கத்து வீட்டுக்காரங்க இல்லியா :-)

சொல்லவந்ததை விட்டுட்டு எங்கியோ போயிக்கிட்டிருக்கேன்.. முந்திய நாளே ஆசுத்திரிக்கு போன் செஞ்சு, 'இந்த மாதிரி இந்தமாதிரி பையனுக்கு பிரச்சினை இருக்கு,.. அதனால இந்தமாதிரி இந்தமாதிரி டாக்டர்கிட்ட கலந்தாலோசிக்கணும். அதனால அப்பாயிண்ட்மெண்ட் குடுங்க'ன்னு கேட்டேன். அதுக்கு அங்க வரவேற்பறையில இருந்தவங்க,' இந்த மாதிரி இந்த மாதிரி மொத நாளே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது,.. அதனால நாளைக்கு காலேல போன் செய்யுங்க'ன்னு சொன்னாங்க.

அதேமாதிரி மறு நாள் காலேல போன் செஞ்சப்ப, 'டாக்டர் மத்தியானம் ஒருமணிக்குத்தான் வருவாரு,.. உங்களுக்கு ரெண்டுமணிக்கு அப்பாயிண்ட்மெண்டு கொடுத்திருக்கேன்'னு சொன்னாங்க. சரீன்னுட்டு 'நோயாளியோட பேரை எழுதிக்கோங்க'ன்னுட்டு பையரோட பேரைச்சொன்னேன். 'பரவால்லைங்க.. நீங்க மத்தியானம் வரச்சே வரவேற்புப்பிரிவுல வந்து பேரைச்சொன்னாப்போதும்'ன்னாங்க. அவங்க சொன்னதை நம்ம்ம்ம்பி மெத்தனமா இருந்துட்டேன்.

மத்தியானமா, குறிச்ச நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னாடியே கிளம்புனோம். ஆக்சுவலி அந்த ஆசுத்திரிக்கு பதினஞ்சு நிமிஷத்துலயே போயிடலாம். ஆனா, ஆசுத்திரிக்கும், பஸ் நிலையத்துக்கும் நடுவால இருக்கற ரோட்டுல பாலம் கட்டுற வேலை நடக்குது. அதனால, ஊரெல்லாம் ஊர்கோலம் போயித்தான் சேரணும். அங்க போனா, மூணாவது மாடிக்கு போங்கன்னாங்க. அங்க போயி கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா காத்திருந்தோம். ஒவ்வொரு காமணி நேரத்துக்கொருக்கா, சிஸ்டர் கிட்ட டாக்டர் வந்தாச்சான்னு கேக்கறதும், இப்ப வந்துடுவார்ன்னு அவங்க பதில் சொல்றதும், இடையிடையே, எதுக்காப்ல இருந்த வார்டுகள்ல இருக்கற குட்டிக்குட்டி பேஷண்டுகளை வேடிக்கை பார்க்கறதுமா இருந்தோம்.

கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சதும்,   டவுட்டு வந்து தலைல தட்டுச்சு. தடவிவிட்டுக்கிட்டு, மறுபடி வரவேற்புப்பிரிவுல வந்து 'டாக்டர் எப்போங்க வருவாரு.. குறைஞ்சபட்சம் அவருக்காவது போன் செஞ்சு கேளுங்களேன்'னு ஐடியா கொடுத்தேன்.. (எல்லாம் நேரம்... அவங்க வேலையையும் நாமளே பாக்க வேண்டியிருக்கு!!..). போன் செஞ்சு கேட்டவங்க, அப்படியொரு குண்டைத்தூக்கிப்போடுவாங்கன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.

விஷயம் என்னான்னா,.. அன்னிக்கு காலைல டியூட்டியில இருந்தவங்க,.. நாங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கறதையே டாக்டர்கிட்ட சொல்லாம இருந்திருக்காங்க.உடனே, நானே நேரடியா டாக்டர்கிட்ட பேசி, ரெண்டு நாளைக்கப்புறம் அப்பாயிண்ட்மெண்டை அவர்கிட்டயே உறுதிசெஞ்சுக்கிட்டு, அப்றமா பழைய வரவேற்பாளினியை லேசா டோஸ்விட்டுட்டு வந்தேன்.அவங்க சார்பா இவங்க மன்னிப்பு கேட்டாலும், 'மாஃபி.. இந்தியில எனக்கு புடிக்காத ஒர்ர்ரே வார்த்தை'ன்னுட்டு கிளம்பி வந்துட்டோம்.

அப்றமா, டாக்டர் கிட்ட போயி செக்கப் செஞ்சப்ப, B12ங்கற விட்டமின் குறைபாடு இருக்குமோன்னு தோணுது. எதுக்கும் இரத்தப்பரிசோதனை செஞ்சுடுங்கன்னு எழுதிக்கொடுத்தாரு. அங்க இருக்கற லேபோட லட்சணம் தெரிஞ்சும், இப்பவாவது குறையையெல்லாம் சரிசெஞ்சுருப்பாங்கன்னு நம்ம்பி,.... லேபுக்கு போனா,.. பையரை விட்டுட்டு, ஜாலியா கையைக்கட்டிக்கிட்டு அங்கியும் இங்கியும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கற எங்கிட்ட ஊசியும் கையுமா ரத்தம் எடுக்கவர்றாங்க.. (எனக்கெதிரா உள் நாட்டு சதி நடக்குதோ???) எனக்கு அழறதா சிரிக்கறதான்னு தெரியலை.

 'ஏங்க.. பேஷண்டோட பேரை படிச்சுப்பாக்கமாட்டீங்களா??..பேஷண்ட் யாருன்னுகூட செக் பண்ண மாட்டீங்களா'ன்னு அழாக்குறையா கேட்டேன். தப்பு எம்மேலதானாம்.. நான் உக்காந்திருந்த இருக்கையிலதான் பேஷண்டை உக்காரவெச்சு ரத்தத்தோட மாதிரியை எடுப்பாங்களாம். (அது பேஷண்டா இல்லைன்னாக்கூடவா :-))))). ரிப்போர்ட் வந்ததும் போன்செஞ்சு சொல்லுவோம். நீங்க வந்து வாங்கிக்கலாம்ன்னு சொல்லிட்டு போன் நம்பரை அவங்க தப்பா எழுதிக்கிட்டதும், அதை ஒருவாரத்துக்கப்புறம் நான் போனப்ப கண்டுபிடிச்சு டோஸ்விட்டப்ப,.. எங்கிட்டயிருந்து வாங்கிக்கட்டிக்கிட்டதும் இடைச்செருகல் :-))

ஒருவாரத்துக்கப்புறம் ரிப்போர்ட்டை வாங்கிக்கிட்டு, டாக்டர்கிட்ட போனா,.. பி12 குறைச்சலா இருக்கு. இங்கிருக்கற பொதுமருத்துவர்கிட்ட நான் அனுப்பினேன்னு சொல்லி, ரிப்போர்ட்டை காமிங்க, மருந்து கொடுப்பார்ன்னு சொல்லி அனுப்பிவெச்சார். பொதுமருத்துவரும் ஊசிபோடணும்ன்னு சொல்லி, எழுதிக்கொடுத்தார். அங்கிருந்த மருந்தகத்துல சிரிஞ்ச் உட்பட வாங்கிட்டு வந்து கொடுத்தா, அதுல விட்டமினோட அளவு குறைச்சலா இருக்குதுன்னுட்டு சிஸ்டரையே சரியான மருந்தை வாங்கிட்டு வரச்சொல்லி அனுப்பிவெச்சார். மருந்து மட்டும் போதும்.. புதுசிரிஞ்ச் அவங்களே கொடுப்பாங்கன்னு சொன்னதால நான் வாங்கின சிரிஞ்சை திருப்பிக்கொடுத்தேன். ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக்கட்டுதே :-))

அடுத்து நடந்ததுதான் வேடிக்கையின் உச்சக்கட்டம்..
நான் : "மொத்தம் எவ்ளோங்க ஆச்சு??.."
மருந்தாளுனர் : "104 ரூபா ஆச்சுங்க.."
நான் : (குழப்பத்தோட)"சிரிஞ்சோட விலை எட்டு ரூபாயை இதுல கழிச்சுக்கச்சொன்னேனே.. செய்யலையா ?.."
மருந்தாளுனர் : "அட!.. ஆமால்ல. இதோ கழிச்சுடறேன்... ம்ம்ம் ஆங்... இப்போ, 196 ரூபா தரணும் நீங்க.." (இவரு எந்த ஊர்ல கணக்குப்பாடம் படிச்சார்ன்னு தெரியலியே )

ஊசியே போடவேணாம் போங்க.. :-)))). இத்தனைக்கும் அந்த ஆசுத்திரியில எங்கூரு பெரியதலையின் மருமகள் நிர்வாக இயக்குனர்களில் ஒருத்தரா இருக்காங்க. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கிட்ட இவ்ளோ அலட்சியமா நடந்துக்காம அவங்களுக்கு உதவறது, மருத்துவர்களுக்கு மட்டுமான கடமை இல்லைதானே??. அங்கிருக்கறவங்களுக்கும் அந்தக்கடமை உண்டுதானே!!.. அங்கேயுள்ள லட்சணம் ஓரளவு தெரிஞ்சிருந்தும் அங்கே ஏன் போனீங்கன்னு உங்க அடிமனசுல கேள்விகள் வருதுல்ல.. கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்குதில்லையா,.. அதேமாதிரி அங்கேயுள்ள டாக்டர்கள் நல்லபடியாத்தான் சேவை செய்யறாங்க. இந்த பரிவார தேவதைகள்தான் இப்படி :-))

Tuesday, 8 March 2011

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா..


சிலபல வருடங்களுக்கு முன்னால், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு மும்பைக்கு ரயிலேறினப்ப,  என்னுடைய இந்தி புத்தகம் இருக்கையில் எனக்கென்ன கவலைங்கற தைரியமும் வித்தவுட்டில் என்னோட மும்பைக்கு வந்து இறங்குச்சு. ஏன்னா, மும்பையைப்பத்தி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி பயமுறுத்தியிருந்தாங்க. இங்க வந்தப்புறம்தான் தெரிஞ்சுச்சு, வெறுமனே இந்தியை வெச்சிக்கிட்டு காலத்த ஓட்டமுடியாது, 'மராட்டி'ங்கற இன்னொரு வில்லனையும் சமாளிக்க வேண்டியிருக்கும்ன்னு.. வல்லாரைபொறியல்(வரலாறு புவியியலுக்கு நாங்க வெச்ச செல்லப்பேரு)வகுப்புகளை கவனிச்சுருந்தாத்தானே மஹாராஷ்ட்ரத்துல மராட்டிதான் தாய்மொழிங்கற உண்மை ஞாபகம் இருந்திருக்கும்.

இருந்தாலும், இந்தியில அனா, ஆவன்னாலேர்ந்து அஹன்னா வரைக்கும், அப்புறம் ஒண்ணு ரெண்டு லேர்ந்து இருபத்தஞ்சு வரைக்கும் நாமதான் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கோமே.. சமாளிச்சுரலாம்ன்னு ஒரு நம்பிக்கை அந்த குளிர்காலத்துலயும் துளிர்விட்டு பூ பூத்துச்சு..அது ஏன் அத்தோட நிறுத்திட்டேன்னு நீங்க கேக்காம தலைதெறிச்சு ஓடினாலும், பிடிச்சு ஒக்காரவெச்சு சொல்லுவேன்ல..

ஒன்பதாம் வகுப்பு முடிகிற தருணத்தில்தான், எங்க ஸ்கூல்ல இந்தி வகுப்புகள் நடக்குதுன்னும், பரீட்சையெல்லாம் வெச்சு பாஸானவங்களுக்கு சர்டிபிகேட் கொடுப்பாங்கன்னும் தெரியவந்துச்சு. சரி.. ஒரு சர்ட்டிபிகேட்டை நாமளும் வாங்கிவெச்சா அப்புறம் ரிசர்வ் வங்கில கவர்னர் வேலைக்கு போகும்போது கையெழுத்துபோட ஒத்தாசையா இருக்குமேன்னு வகுப்பில் சேர்ந்துவெச்சேன்.  'வாணாம். அப்புறம் பொழுதன்னிக்கும் இதையே கட்டிட்டு அழணும். வழக்கமான பாடங்களை படிக்க நேரமிருக்காது'ன்னு ஏற்கனவே இந்தி படிச்சிட்டிருந்த, நண்பிகள் என்ற பெயரில் உலாவந்துக்கிட்டிருந்த ஜெலுசில்கள் பயமுறுத்துனாங்க.. நா ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துடுவேனோன்னு அவங்களுக்கெல்லாம் பொறாமை.

வகுப்பில் சேர்ந்ததுமே, முதல்வேலையா என்பெயரை இந்தியில் எப்படி எழுதணும்ன்னு ப்ராதமிக் முடிச்சிருந்த ஒரு ஜெலுசில் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். நாளப்பின்ன, கையெழுத்து கூட போடத்தெரியாத கைநாட்டுன்னு வரலாறுல நம்மை தப்பா பதிஞ்சுடக்கூடாதில்லியா!!.. எம்பேருதான் அவளுக்கும், ஆனாலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட அவ சொல்லித்தந்ததும், அதையே அஞ்சாறு வருஷமா நான் கடைப்பிடிச்சதும், அப்றம் இங்கே வந்தப்புறம் 'ஞஞஞ' வானதும் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் :-))). அப்றம் பத்தாம் வகுப்புக்கு போனதும், பொதுத்தேர்வை காரணம் காட்டி ரிசர்வ் வங்கிக்கனவு உடைக்கப்பட்டது. நஷ்டஈடா தங்கவங்கி கூட கிடைக்கலை :-))

இங்கே வந்தப்புறம், முதல் சிலமாதங்கள் நல்லாத்தான் போச்சு.. அக்கம்பக்கத்துல யாராச்சும் மராட்டியில ஏதாவது கேட்டா சின்ன சிரிப்போட நகர்ந்துடுவேன்.மராட்டி அப்புறமா கத்துக்கலாம். மொதல்ல இந்தியை ஒருவழி செய்யலாம்ன்னுட்டு வீட்ல இருக்கற நேரங்கள்ல என்னோட புத்தகத்தை வாசிக்கிறதும், ரங்க்ஸ் வந்தப்புறம் அர்த்தம் தெரிஞ்சுக்கிட்டு அந்த வார்த்தைக்கு பக்கத்துல எழுதிவெச்சுக்கிறதுமா என்னோட மொழியறிவு வளர ஆரம்பிச்சுச்சு. படிச்சதை பரிசோதனை செஞ்சு பார்க்க அக்கம்பக்கத்து குழந்தைகள் ஆப்டாங்க. அவங்க என்னத்தையாவது கேக்க, நான் என்னத்தையாவது சொல்லிவைக்க, அதுங்க பரிதாபமா முழிக்கும் :-). ஆனாலும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸாயிட்டோம் :-)). அவங்க வீட்டுக்கு என்னத்தையாவது வாங்கறதுக்கு கடைக்கு போனா, எங்கிட்ட வந்து, 'ஆன்ட்டி, ஐ கோயிங் ஷாப். யூ வாண்ட் வாட்?'ன்னு கேட்டுட்டு போகும்.

மொழியறிவை வளர்த்துக்க நான் கடைப்பிடிச்ச இன்னொரு வழி.. தூர்தர்ஷன். கேபிள்டிவி, மெட்ரோல்லாம் வர்றதுக்கு முன்னாடி மத்தியானம் ஒருமணி நேர நிகழ்ச்சியில சீரியல், சமையல்ன்னு கலந்துகட்டி அடிப்பாங்க. கர்மசிரத்தையா, அதுல வர்ற பொருட்கள், அதோட பேரு, சிலபல வினைச்சொற்கள் இதெல்லாம் ரொம்பவே கவனிச்சு வெச்சிக்கிட்டு, அர்த்தத்தை ஆராயறதுதான் வேலை. ஆச்சு.. அரைகுறை ட்ரெயினிங் போதும்.. இனி களத்துல இறங்கிடவேண்டியதுதான்னு நானே மார்க்கெட் போக ஆரம்பிச்சேன். ஆகவே மக்களே ஒரு புது மொழியை கத்துக்கணும்ன்னா டிவி, பக்கத்துவீட்டு பசங்க, மட்டுமல்ல சமயத்தில் நடைமுறை வாழ்க்கையும் உதவிசெய்யும். வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சு உக்காந்துருந்தீங்கன்னா ஒண்ணையும் கத்துக்கமுடியாது :-))))

பின்ன அளவுகளான கால்,அரை,முக்காலுக்கு என்ன சொல்லணும்ன்னு தெரியாது, காய்கறிகளோட பேரும் ஓரளவுக்குத்தான் தெரியும். இருபத்தஞ்சு வரைக்கும்தான் எண்களும் தெரியும். இப்படி எல்லாத்துலயும் அரைக்கிணறு தாண்டி அந்தரத்துல நிக்கிற நிலைமை. இதுல கொடுமை என்னன்னா, மார்க்கெட்ல, வெங்காயமும் கடலைமாவும் மாதிரி இந்தியும் மராட்டியும் கலந்து மணக்கும். ரெண்டுமொழியையும் கலந்துதான் பேசுவாங்க.'காய் பாஹிஜே தும்கோ'ன்னு அவங்க கேக்கறப்ப காய்தாம்ப்பா வேணும்ன்னு வாய்வரைக்கும் வர்ற வார்த்தைகளை அப்படியே முழுங்கிடுவேன். தூர்தர்ஷன் கொடுத்த ட்ரெயின் கடைசி ப்ளாட்ஃபார்முக்கு ஓடிப்போயிடுச்சு.

என்ன செய்வேன்னா... காய்கறிகளை பரிசோதனை செய்றமாதிரி பில்டப் கொடுத்துக்கிட்டே மத்தவங்க வாங்கறப்ப என்ன பேசிக்கிறாங்க, தராசில் என்ன எடைக்கல் விழுதுன்னு பார்த்து மனசில் பதிச்சிக்கிட்டு அப்றம் அதையே சொல்லி வாங்குவேன். இதனால சிலசமயங்கள்ல நூறுகிராமுக்குமேல அதிகம் தேவைப்படாத கொத்தவரங்காயை அரைக்கிலோ வாங்கிட்டு முழிச்சதும் உண்டு. ஏன்னா நூறுகிராமுக்கு என்ன சொல்லணும்ன்னு தெரியாதே :-)))). முக்கால் கிலோ வேணும்ன்னா மொதல்ல அரைக்கிலோ போடச்சொல்லிட்டு அப்றம் அப்பத்தான் ஞாபகம் வந்தமாதிரி 'அவுர் பாவ்கிலோ'ன்னு சொல்லுவேன். கொஞ்ச நாள்ல ரங்க்ஸுக்கே வகுப்பு எடுக்கற அளவுக்குவளந்தது தனிக்கதை.

ஏதாவது வாங்கிட்டு காசுகொடுக்கறப்பவும் இந்த மொழிப்பிரச்சினை ஈரக்கூந்தலை விரிச்சுப்போட்டுக்கிட்டு நிற்கும். அவங்க சொல்ற எண் இருபதுக்குள்ள இருந்திச்சின்னா, யோசிக்காம இருபது ரூபாயை எடுத்து நீட்டி பிரச்சினையை ஹேர்ட்ரையர் போட்டு காய வெச்சிடுவேன். இப்பத்தான் கால், அரை, முக்கால், முழுசுன்னு எல்லாமும் கொஞ்சம் பிடிபட்டுடுச்சே.. ஆனா, எனக்கு கண்டம் இருபத்தஞ்சுலேயும் முப்பதுலேயும் போய் கும்மியடிச்சிட்டிருக்கும். பீஸ்ன்னா இருபது.. தீஸ்ன்னா முப்பது, ஏற்கனவே கடைக்காரர் சொல்றது பீஸா, தீஸான்னு புரியாம நான் நொந்து பீஸ்பீஸாகிட்டிருப்பேன். இந்த லட்சணத்துல ஒரு நாள் பஞ்ச்வீஸ்ன்னு ஒருவார்த்தைய கேட்டதும் ஆடிப்போயிட்டேன். 'ஹாங் ஜீ'ன்னு நான் முழிச்சப்பவே அவருக்கு மத்ராசின்னு புரிஞ்சிபோச்..  'பச்சீஸ்.. ட்வெண்டிஃபாயிவ்'ன்னு முழிபேர்த்தார்.இருபத்தஞ்சை மராட்டியில சொல்றாராம் :-)))))

இந்த பீஸும் தீஸும் இன்னிக்கும் காமெடி பீசாக்கிக்கிட்டிருக்கு. முக்கியமா மீட்டர் சிஸ்டம் இல்லாத ஆட்டோரிக்ஷாவுல, எவ்ளோன்னு கேக்கறப்ப, அலட்சியமா எங்கியோ பாத்துக்கிட்டே ''#%$^"ன்னு சொன்னதுல காத்துல போனதுபோக மீதி பதில்வரும். புரியலைன்னா கடுப்பாகி திரும்பவும் கேக்கணும். இல்லைன்னா இறங்கறச்ச வேற கட்டணம் சொல்லப்பட வாய்ப்பிருக்கு. நேத்தும் இப்படித்தான்,.. ரயில்வே ஸ்டேஷன் போக ரிக்ஷா பிடிக்கணும்.

"ஸ்டேஷன் போகணும்.. எவ்ளோ??"

"@#%$&"

"ஹாங்ஜீ பையா??.."




Wednesday, 22 December 2010

இப்படியும் நடக்குமோ!!!..

'கிடைச்சிருக்கிற தகவல் சரிதானா??.. உறுதிப்படுத்திக்கிட்டீங்களா'

'நூறுசதவிகிதம் உண்மைதான்.. இந்தமுறை நாம ஏமாறமாட்டோம் சார்'

'போனதடவைமாதிரி அங்க போனப்புறம் ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சது... அப்றம் உங்க எல்லாருக்கும் இருக்குது'

'இல்ல்ல சார்..'

'ஜீப்பை ரெடி பண்ணச்சொல்லுங்க.. ஆயுதமெல்லாம் பக்காவா எடுத்து வெச்சிட்டீங்கல்ல'

'எல்லாம் ரெடி சார்.'

'ஓ.கே... ஜீப்புல ஒரு பத்துபேர் போதும்... பில்டிங்கை சுத்தி மத்தவங்களை நிப்பாட்டுங்க.. முக்கியமா பால்கனி பக்கம். அங்கிருந்து கீழே குதிச்சு தப்பிச்சு போயிட வாய்ப்பிருக்கு'

' நம்ம கபாலி கிட்டயிருந்து மீன்பிடிக்கிற வலையை இரவல் வாங்கிட்டு வந்துருக்கேன் சார்'

'அய்யோ... என் புத்திசாலி'  வழிச்சு முறிச்சதில் படபடன்னு உடைஞ்சு போகுது திருஷ்டியெல்லாம்.

'கமான்.. ஃபாலோ மீ'

தடதடவென எல்லோரும் ஏறிக்கொண்டபின் எல்லோரும் ஏறியாச்சான்னு உறுதிப்படுத்தியபின் அதிகாரி ஏறி உட்கார்ந்தார்.

'உய்ங்..உய்ங்..உய்ங்....'

'சைரனை நிறுத்துங்கப்பா.. உஷாராகிடப்போறாங்க'

வண்டி மெதுவாக கட்டிடத்தின் முன் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து எல்லோரும் இறங்கினார்கள்.

'நாலு பேரு அப்படி போங்க.. நாலுபேரு இப்படி போங்க.. மீதியிருக்கிறவங்க என்பின்னாடி வாங்க'

டிங்க்.... டாங்..... அழைப்புமணி அடித்தது.

கதவை திறந்த பெண், வாசலில் நின்றுகொண்டிருந்த இருவரையும் பார்த்துவிட்டு.'யெஸ்' என்றாள்.

'மேடம்... உங்க வீட்டுல சட்டவிரோதமா பதுக்கல்பொருள் இருக்கிறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு. சோதனை போட வந்திருக்கோம்' என்றார் ஆபீசர்.

'அதுக்கு ஏன் பழைய பேப்பர் வாங்குறவரையும் கூட்டிட்டு வந்திருக்கீங்க.. எங்க வீட்டுல அப்படி எதுவும் பதுக்கி வைக்கலை.. நம்புங்க'

பின்னால் திரும்பிப்பார்த்தவர் ஜெர்க்கானார். நீ போப்பா என்று பேப்பர்காரரை அனுப்பிவிட்டு, 'பாவிப்பசங்க.. வழக்கம்போல காலைவாரிட்டாங்க' என்று மனதுக்குள் பொருமியபடியே,

'மேடம்.. நாங்க O.C.+B&Iலேர்ந்து வந்திருக்கோம்' என்றபடி அடையாள அட்டையை எடுத்து நீட்டினார்.

வேறுவழியில்லாமல் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டியதாயிற்று அந்தப்பெண்ணுக்கு.

நேராக பால்கனிக்கு சென்று அங்கிருந்து கீழே நின்றுகொண்டிருந்த மற்றவர்களுக்கு குரல்கொடுப்பதற்காக சென்றவர் கண்களில் அது பட்டுவிட்டது.

'ஹெ..ஹெ..ஹெ.. என் கழுகுக்கண்ணுலேர்ந்து எதுவுமே தப்பமுடியாது' என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டவர், வீட்டின் உள்புறமாக திரும்பி

'எதுவுமே பதுக்கிவைக்கலைன்னு சும்மாதானே சொன்னீங்க...அப்படீன்னா இது என்னாது!!!.. அரசாங்கத்துக்கு தெரியாம இதையெல்லாம் வளர்க்குறது சட்டப்படி விரோதம். கவர்மெண்டைதவிர யாருக்கும் இதை வெச்சுக்கிற உரிமை கிடையாது. இதை இப்பவே நீங்க அரசாங்கத்துக்கிட்ட சரண்டர் பண்ணனும்'

அடடா!!.. தப்பிக்க முடியாதோ..

'ஆப்பீசர்.. ஆப்பீசர்... இந்த ஒரு வாட்டி மன்னிச்சு விட்டுடுங்க.. இனிமே தெரிஞ்சு, இந்த தப்பை செய்யமாட்டேன், ப்ளீஸ்'

'அதெல்லாம் முடியாது..இதை கொண்டுபோறதை தவிர எங்களுக்கு வேற வழியில்லை'

'வேண்ணா, உங்களுக்கும் பங்கு தரேன் ஆப்பீசர்... ப்ளீஸ்'

'ம்ம்.. சரி. ரொம்ப கெஞ்சி கேக்குறதுனால மன்னிச்சு விட்டுடறேன். அறுவடையானதும், ஒழுங்கா எங்கவீட்டுக்கு அனுப்பிவைக்கணும். புரிஞ்சதா!!

'சரி ஆப்பீசர்.'


எவ்வளவோ ரகசியமாத்தான் இவனை வெச்சி பாதுகாத்துக்கிட்டு வர்றேன்.. யாரு போட்டுக்குடுத்ததுன்னு தெரியலியே....


டிஸ்கி: தலைப்பை மறுபடியும் படிங்க :-)))))





Friday, 20 August 2010

ஆத்தா... நான் கவிதை எழுதிட்டேன்!!!..............

அது ஒரு அழகிய இளவேனில் காலம். அதாவது சூரியன் சுட ஆரம்பிக்காத காலைப்பொழுது. வழக்கம்போல கல்லூரிக்கு வந்தப்புறம்தான், வழக்கம்போல ஸ்ட்ரைக் நடக்குதுன்னு தெரிஞ்சது. இன்னிக்கி என்ன காரணம்ன்னு தெரியலை. காண்டீன் டீயில, உப்பு குறைச்சலா இருக்குதுன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஒரு வேளை அதுக்காக இருக்கலாமோ.. சீச்சி, அது போனவாரம்... இது இந்தவாரம். என்னத்துக்குன்னு தெரியலை, ஆனா நாலு நாளா நடக்குது.

வழக்கம்போல வகுப்புகள் நடக்காத அறையில் வந்து உக்கார்ந்தோம். ஒவ்வொரு வகுப்பிலும் பேருக்கு ஒரு ஆறேழு மாணவிகள்தான் உண்டு. பசங்கதான் மெஜாரிட்டி. எல்லாரும் ஸ்ட்ரைக்குக்காக வெளியே போயிட்டதால, நாலஞ்சு பேருக்கு.. என்னத்தை வகுப்பு எடுக்கிறதுன்னு, விரிவுரையாளர்களும் சும்மா வகுப்புக்கு வந்துட்டு போயிட்டு இருந்தாங்க.

காரிடாரில், 'லெஃப்ட்.. ரைட், லெஃப்ட்.. ரைட்'ன்னு சத்தம். உண்மையில் அது கல்லூரிக்கு முன்னால இருந்த மைதானத்துல இருந்து வந்துட்டு இருந்தது. கூடியிருந்த மாணவர் கூட்டத்தை 'பெருமையோட' பாத்துட்டு தன்னோட அறைக்கு, நடந்து போயிட்டிருந்த ப்ரின்சிபாலைப்பாத்துதான் பசங்க அப்படி சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க. அவரோ எதையும் சட்டை செய்யாம தன்னோட ரூமுக்கு போயிட்டு இருந்தாரு.

அப்ப, எங்க வகுப்பறைக்குள்ளாற எங்க இங்கிலீஷ் விரிவுரையாளர் வந்தார். 'பாடம் நடத்தமாட்டேன்.. அதுக்கு வேற எதையாவது உருப்படியா பண்ணலாம். இப்ப, உங்களுக்கே தெரியாம நிறைய திறமைகள் உங்களுக்குள்ள பெட்ஷீட்டை போத்திக்கிட்டு ஒளிஞ்சிருக்கும். அதையெல்லாம் கண்டுபிடிச்சி, வெளிய கொண்டுவரணும். அதனால, அவரவருக்கு என்னென்ன எழுதணும்ன்னு தோணுதோ.. கதை, கவிதை, கட்டுரை.. இப்படி ஏதாவது எழுதுங்க'ன்னு சொல்லிட்டு அவர் கொண்டுவந்திருந்த நாவலை படிக்க ஆரம்பிச்சிட்டார்.

என்னடாயிது,..இந்த தமிழ்நாட்டுக்கு வந்த சோதனைன்னு நினைச்சிக்கிட்டு, 'என்ன எழுதலாம்'ன்னு கன்னத்துல கைவெச்சிக்கிட்டு உக்காந்தோம். அப்படி உக்காந்தாத்தான் கற்பனை ஓடுமாம். எங்கேன்னு தெரியலை :-)) அப்பத்தான் வராந்தாவுல நாற்காலி போட்டு உக்காந்திருந்த ஏழரைச்சனி என்னைப்பாத்து சிரிச்சான். நானும் பதிலுக்கு ஒண்ணரைப்பல்லை காமிச்சு வெச்சேன்... ஐடியா வந்துட்டது. கவிதையே எழுதலாம். கதைன்னா ரொம்ப கற்பனை வளம் வேணும். கட்டுரைன்னா நிறைய விஷயங்கள் தெரிஞ்சுருக்கணும். கவிதை எழுதறதுதான் ஈஸி. உடைச்சுப்போட்டா,..

க..
வி..
தை..
ஆகிடாதா என்ன??

என்ன விஷயத்தைப்பத்தி எழுதலாம். நாம எழுதறதையும் கவிதைன்னு நினைச்சு படிக்கிறவங்களுக்கு ஏமாத்தம் வரலாமோ!!!!. எவர்க்ரீன் டாப்பிக் " வரதட்சணை"
ரொம்ப செண்டியான விஷயம் இது. எப்படி எழுதினாலும் நிச்சயம் பாராட்டு வாங்கும். எழுத ஆரம்பிச்சேன்.

விளக்கேற்ற வரும் பெண்ணிடம்
வரதட்சணை வாங்கும்
மாமியார்களே..
கேட்ட தட்சணை
கிடைக்காததால்தான்
மருமகளையே
விளக்காக
எரிக்கின்றீர்களோ!!!!

எழுதிமுடிச்சிட்டு வெற்றியோட நிமிர்ந்து பார்த்தா, ஒவ்வொருத்தியும் செமஸ்பீடா எழுதிக்கிட்டு இருந்தாங்க. விட்டா.. அடிஷனல் ஷீட் கேப்பாங்க போலிருக்கு. நான் பேப்பரை கொண்டுபோய் சார்கிட்ட கொடுத்தேன். வாங்கி படிச்சுப்பார்த்தார்.. வேர்த்து விறுவிறுத்து முகத்தை துடைச்சிக்கிட்டு அப்படியே உக்காந்துட்டார். அப்றம் மெதுவா சமாளிச்சிக்கிட்டு, வகுப்புக்கு வெளியே போயிட்டார். அந்தக்கவிதை எழுதினதன் பலன் மறுநாள் கல்லூரிக்கு வந்தப்போதான் தெரிஞ்சது.

"ஸட்ரைக் முடிஞ்சு போச்சாம்"


டிஸ்கி: மொதமொத கவிதைன்னு எழுதினது அது. குத்தங்குறை இருந்தா பொறுத்தருளவும்.. ஒரு கவுஜையாளரை உருவாக வழிகாமிச்ச அந்த லெக்சரர், இப்போ இருக்காரான்னு தெரியலை. எனவே ஆட்டோ அனுப்ப வேண்டாம் :-)). இது சும்மா சுத்தின கொசுவத்தி.



Thursday, 22 July 2010

வாங்கோ.. வாங்கோ..

என்னைய வளர்க்குற நைனாவும், நான் வளர்க்கிற மைனாவும் ஒரு விஷயத்துல ஒத்துமையா இருக்காங்க..

எப்படிடா!!!!

எப்ப என்னைய பாத்தாலும், ஒடனே கத்த ஆரம்பிச்சுடுறாங்க.

***********************************************************************************

தோசை, சட்டுவத்தைப்பார்த்து பஞ்ச் டயலாக் அடிச்சா என்ன சொல்லும்?..


' நா.. எப்ப வருவேன்.. எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்..

சட்டுவம் திருப்பிச்சொன்னது," அதிகமா டயலாக் பேசுனே.. பிச்சுப்புடுவேன் பிச்சி".

********************************************************************************
கற்றதனாலாய பயன் என்கொல் இண்டர்னெட்டில்
வலைப்பதிவு எழுதா விடின்.

ப்ளாக் எழுதி வாழ்வாரே பதிவர் மற்றவரெல்லாம்
வாசகரென்று அறியப் படுவர்.

கமெண்டென்ப ஏனை ஓட்டென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வலைப்பதி வாளருக்கு..

அகர முதல எழுத்தெல்லாம் தமிழ்
எழுதியில் எழுதிப் பழகு.

நாங்களும் எழுதுவம்ல வலைக்குறள்..(வசந்து தம்பி கோச்சுக்க மாட்டீங்கதானே)

*********************************************************************************

பெட்ரோலே இல்லாம ஓடுற காரு எது தெரியுமா?..

கங்காரு.

*********************************************************************************
அஞ்சு லட்சம் நட்சத்திரங்கள் வானத்துல இருக்குன்னு சொல்லுங்க.. கேள்வியே கேக்காம ஒத்துக்குவாங்க. அதுவே,' இந்த பெஞ்சில் அடிச்சிருக்கிற பெயிண்ட் ஈரமா இருக்குன்னு சொல்லுங்க.. தொட்டுப்பாத்தாத்தான் நம்புவாங்க".. ஏங்க இப்டி?..


***********************************************************

இஞ்சினீயரிங்க் காலேஜில் படிச்சா இஞ்சினியர் ஆகலாம்.. ப்ரெசிடென்சி காலேஜில் படிச்சா ப்ரெசிடெண்ட் ஆகலாமா?...

********************************************************************************

ஒரு ஆமையும் முயலும் நுழைவுத்தேர்வு எழுதின. ஆமைக்கு 75%ம், முயலுக்கு 80%ம் கிடைச்சது. ஆனாலும் ஆமைக்குத்தான் வேலை கிடைச்சது. ஏன்ன்ன்ன்?..

ஆமைக்கு வேலை கிடைச்சது 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல'.. ரெண்டுக்கும் பந்தயம் நடந்து ஆமை ஜெயிச்ச கதை நினைவிருக்கா!!

********************************************************************************

எதிரி மன்னன் புதுவிதமா நம்ம மன்னரை தோற்கடிச்சிட்டானா... எப்படி?

புறா காலில் 'சுறா' படத்துக்கான டிக்கட்டை கட்டி அனுப்பியிருக்கான்..

********************************************************************************

Photobucket என்னோட சிஸ்டம் ப்ரோக்ராமில் bug இருக்கிறதா அடிக்கடி மெஸேஜ் வருது.. ஏதோ ஒரு ஈமெயில் வழியா வந்திருக்கு. எப்படி சரிசெய்றதுன்னு தெரியலை.உதவி ப்ளீஸ்...
(thanks net for the picture).

********************************************************************************
ஒரு நாள் 'டோமினோஸ்' க்கு ஒரு போன் கால் வந்தது.
பணியாளர்: ஹலோ டோமினோஸ்.. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?..

வாடிக்கையாளர்: "--------"

பணியாளர் : "&^%##@(!@%#*/+##"

சக பணியாளர் : என்னப்பா ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவமா திட்டுறே?..

பணீயாளர் : நல்ல பிஸ்ஸா சாப்பிடணும், pizza hut டோட நம்பர் கிடைக்குமான்னு கேக்குறார்..






Friday, 16 July 2010

குழந்தைகள் பலவிதம்..



அந்த நீளமான கம்பியில் கைகளை கோர்த்துக்கொண்டு உடலையே ஊஞ்சலாக்கி ஆடிக்கொண்டிருந்தது அந்தக்குழந்தை. உற்சாகமிகுதியில் பாட்டு வேறு :-)).. வீசி வீசி ஆடும்போது, விலைமதிப்பில்லாத எதுவோ கிடைத்துவிட்ட சந்தோஷப்புன்னகை அதன் முகத்தில். நிம்மதி.. நிம்மதி என்று அலைபவர்கள் இந்தக்குழந்தையின் புன்னகையில் அதைக்கண்டுபிடிக்கலாம்.

ஆடிக்களைத்து விட்டதோ என்னவோ, 'தொப்' என்று கீழே குதித்தது. தவறி புல்வெளியில் விழுந்ததும் என்னவோ பெரிதாக அடிபட்டமாதிரி, 'ஆஆஆ' என்று பெரும் குரலெடுத்து கண்ணீர் வராமல் அழுதது. யாரும் கவனிக்கவில்லை என்றதும், தானே எழுந்து, இல்லாத மண்ணை தட்டிவிட்டுக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தது. ஒரு ஆள் உயரத்தில் நட்டு வைத்திருந்த, வரிசையாக இருந்த கம்பிகளில், டார்ஜான் போல் தன்னை நினைத்துக்கொண்டு, வினோதமான சப்தம் எழுப்பிக்கொண்டு அங்குமிங்கும் கைகளாலேயே பற்றிக்கொண்டு தொங்கியபடியே தாவியது. பக்கத்தில் தன்னுடைய வயதுள்ள குழந்தையும் இன்னொரு அங்கிளும் நிற்பதை பார்த்ததும் அதனுடைய விளையாடும் வேகம் அதிகமானது. 'நான் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறேன் பார்' என்று காண்பிப்பதுபோல் இருந்தது அதன் நடவடிக்கைகள். ஓரக்கண்ணால் அந்தக்குழந்தை இன்னும் அங்கேயே நிற்கிறதா.. இல்லை,.. ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறோமா என்று உறுதிப்படுத்திக்கொண்டது அவ்வப்போது :-)

யாருமில்லாத தனிமையில் விளையாடும் குழந்தைகளை கவனித்திருக்கிறீர்களா?.. அதற்கு அதைச்சுற்றிலும் இருக்கும் எல்லாமே, விளையாட்டுப்பொருட்கள்தான். அது வீசும் காற்றாகவும் இருக்கலாம், தோட்டத்திலிருக்கும் செடியாகவும் இருக்கலாம், ஏன் வீட்டிலிருக்கும் பண்டபாத்திரங்களாகவே இருக்கலாம். தன்னுடனேயே பேசி, சிரித்து, சண்டைபோட்டு.. சமாதானமாகி என்று ஒரு காவியமே நடக்கும். யாரும் கவனித்துவிட்டால் ஒரு வெட்கப்புன்னகையுடன் பதுங்கி, மறுவினாடியே பழைய வேகத்துடன் பாய்வது நடக்கும் :-) நிமிடத்தில் சண்டையிட்டு, பின் அதே வேகத்தில் சமாதானமாகும் வித்தையை, எங்கிருந்துதான் கற்றுக்கொள்கிறார்களோ இந்த ஆசான்கள்!!!.

எங்கிருந்தோ வந்த அந்த சினிமாப்பாடல் அதற்கு பிடித்ததாக இருந்திருக்க வேண்டும்.. மெலிதான நடனத்துடன் அதன் உடல் அசைய ஆரம்பித்தது. தன்னையே அந்த கதாநாயகியாக நினைத்துக்கொண்டு, லேசாக ஆட ஆரம்பித்த குழந்தையின் கவனத்தை ஊஞ்சலும் அதில் வரைந்திருந்த யானைகளும் கவர்ந்தன. யானைகள் வானில் பறப்பதை இனிமேல் யாரும் பார்த்தால் அதிசயப்படவேண்டாம். அவற்றுக்கெல்லாம் விடுதலையையும், சிறகுகளையும் அந்த சிறுகுழந்தை அளித்துவிட்டது.

'டமடம' என்று அதிர்ந்த இடி அந்தக்குழந்தையை பயப்படுத்தி இருக்கக்கூடும். திடுக்கிட்டு கைகளை இறக்கைகளாக விரித்தபடி எழுந்து, அம்மாவைத்தேடியது. அடுத்தடுத்த இடிகள், ' அம்மா.. அம்மா..' என்று அலறின. புல்வெளியில் காணோம்.. பெஞ்சுகளில் காணோம்.. நடைபாதையில் கூட காணவில்லை. பார்க்கும் முகங்களில் எல்லாம் அம்மாவைத்தேடியது அந்தக்குழந்தை. 'நீ எங்கே போனே!!' தனிமை பயம் கொடுத்தது.. பலூன் விற்கும் மாமாவின் அருகே நின்ற ஒரு புடவையை நோக்கி ஓடிச்சென்று, அவள் முழங்காலைக்கட்டிக்கொண்டு சிரித்தது..

உலகத்திலேயே மிகவும் சிரமமானது டீச்சராக இருப்பதுதானாம்... நாலுவயசு மனிஷா சொல்கிறாள். மூன்று தலையணைகள், இரண்டு பாத்திரங்கள் மற்றும் எட்டுமாதமாகும் சார்மிஷாவுடன் ஆரம்பமாகும் அவளது வகுப்பில், யாருக்குமே a,b,c,d, சொல்லத்தெரியவில்லையாம்!!!. நாலுமாதமாக படித்தும்கூட, என்ன கேள்வி கேட்டாலும், 'ஈ..' என்று மட்டுமே சொல்லத்தெரிகிறதாம் சார்மிக்கு. 'அதைச்சொல்லும்போது வாய் ஏன் இந்தக்காதுக்கும் அந்தக்காதுக்குமாக விரிய வேண்டும்??' என்பது மனிஷாவின் கேள்வி..

'நான் போயி தண்ணி குடிச்சிட்டு வர்றேன்.. அதுவரை யாரும் அசையப்புடாது.. யாராவது எந்திரிச்சிப்போனா அடி' என்று எச்சரிக்கப்பட்டும், சார்மி அதை மீறுவதாக குற்றச்சாட்டு பெற்றோர்களுக்கு போயிருக்கிறது. அவளது மற்ற ஸ்டூடன்ஸ், ரூல்ஸை கொஞ்சமும் மீறுவதில்லை என்பதில் அவளுக்கு மகா பெருமை. யாரும் படிக்க இஷ்டப்படாமல் டீச்சரை ராகிங் பண்ணினால்,' உங்களுக்கு டீச்சரா இருக்கிறதை விட நான் ராஜினாமா செஞ்சுடலாம்'ன்னு சொல்லிட்டு கலர்டவல்களை சுருட்டி வைத்துக்கொண்டு, 'கனகாம்பரம்.. சம்பங்கி, ரோஜா.. பூவு.. பூவு' என்று, என் பெண் சின்னவயசில் செய்தது மாதிரியே, அவளும் பூவிற்கப்போய்விடுவதுண்டு :-))

குழந்தைகளின் விளையாட்டை கவனிப்பதென்பது, பால்யத்துக்கே திரும்பப்போய்விடுவதைப்போல் இருக்கிறது. நிபந்தனைகளற்ற மிகப்பிரியமான அன்பும், விட்டுக்கொடுத்தலும் நிறைந்த தனிஉலகத்தில் அவர்கள் வளையவருகிறார்கள். அது அப்படியே இருக்கவேண்டும்..








Thursday, 1 July 2010

பொழுது போகலைன்னா இப்படியா?......

ஆய்வாளர்: ஏன் அந்தப்பையன், க்ளாஸ்ரூமுக்கு வெளியே நிக்கிறான்??..

தலைமையாசிரியர்: ஹி..ஹி.. அவந்தான் எங்க ஸ்கூலோட outstanding student.

**************************************************************************************

ஒரு இண்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகள்;

  1. ப்ரூஸ்லிக்கு பிடித்த டிபன்-------------------------- இட்லி.
  2. பிடித்தமான நாடுகள் ------------------------------- சிலி, இத்தாலி.
  3. பிடித்தமான விளையாட்டு வீரர் ------------------- ப்ரெட்லி
  4. பிடிக்காத வியாதி ------------------------------------ தலைவலி.
இப்படிக்கு : அடுத்த இண்டர்வியூவை எதிர் நோக்கியிருப்போர் சங்கம்..

***************************************************************************************

தேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி?...

அம்மியில் ------சர்ர்ரக்,..சர்ர்ரக்,.. சர்ர்ரக்.. சர்ர்ரக்..

மிக்ஸியில்----- சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

(சட்னி சாப்பிட்டே நொந்து போனோர் சங்கம். தலைவராக இருக்க, சட்னி அரைப்பதில் முன் அனுபவம் பெற்றோர் வரவேற்கப்படுகிறார்கள்)

**************************************************************************************

ஒருத்தர் ஒரு பல்கலைக்கழக வாசலில் நின்னுக்கிட்டு வேகவேகமா எதையோ எழுதிக்கிட்டிருந்தார். ஆர்வம் தாங்காத ஒருத்தர் அவர்கிட்டே போய் ,'என்னப்பா எழுதறீங்க?'ன்னு கேட்டார்.

எழுதிக்கிட்டிருந்தவர் சொன்ன பதில்: "பாத்தா தெரியலை??... நுழைவுத்தேர்வு எழுதிக்கிட்டிருக்கேன்".

******************************************************************************************

மூக்குல அணிஞ்சிக்கிறதாலதான் மூக்குக்கண்ணாடின்னு சொல்றோமாம். அப்படீன்னா பூதக்கண்ணாடிய பூதமா அணிஞ்சிக்கிடுது. யாராச்சும் பதில் சொல்லுங்களேன்.

யக்கா... நீ சொல்லேன்!!,. யண்ணே நீ சொல்லேன்,.!!!


**************************************************************************************************

"செடி கொடிகள்லாம் பச்சையா ஏன் இருக்கு தெரியுமா?.."

"ஏன்னா,.. அதுக்கு பச்சைத்தண்ணி ஊத்துறோம்ல அதான்"

அலோ .. யாருப்பா அது?!!.. இத ஏற்கனவே கேட்டாச்சுன்னு சொல்றது??.. நம்ம டவுட்டே வேற...

"பச்சைத்தண்ணி ஊத்தி செடியெல்லாம் பச்சையா இருக்குன்னா,... பூவெல்லாம் கலர்கலரா எப்படிப்பா பூக்குது?... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது!!!!!!!!"

*************************************************************************************

எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் எல்லாத்துக்கும் மருந்து, தடுப்பூசின்னு எல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க,.. இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை?.....

( கேள்விமட்டுமே கேட்கத்தெரியும்ன்னு சொல்லுவோர் சங்கம். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது).

******************************************************************************************************

முதலாமவர்: அந்த தாத்தாவுக்கு ஏதோ பரிசு கிடைச்சிருக்காமே!!!! என்ன பரிசு?.

இரண்டாமவர்: நோ 'பல்' பரிசு..


***************************************************************************************************

ஒருத்தர் ஒரு காட்டுவழியா நடந்து போயிட்டிருந்தார். அப்போ அவர்முன்னால் இருந்த மரக்கிளையில் பாம்பு ஒண்ணு தொங்கிக்கிட்டிருந்ததை பார்த்தார். அதைப்பார்த்து பயப்படுவார்ன்னு நினைச்சா,..நேரா அதுகிட்ட போயி ஏதோ சொன்னார். அதைக்கேட்டதும் பாம்பு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சிட்டது. அப்படி அதுகிட்ட என்னதான் சொன்னார்?..
"
"
"
"
"
"

"இதப்பார்... இப்படி தொங்குறதால ஒண்ணும் பிரயோஜனமில்லை.. அம்மாவை காம்ப்ளான் கொடுக்கச்சொல்லு".

****************************************************************************************************

ஒரு பையன் ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்குப்போனான். அவங்கப்பாவுக்கு செம கோவம்.. கூப்பிட்டு செம காய்ச்சு காய்ச்சினார். 'இல்லேப்பா,.. என் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் போனேன்'ன்னு சொல்லியும் அவர் நம்பலை. ஒடனே 'எந்த ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்னு நானே கண்டுபிடிக்கிறேன்'னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா ஃபோன் பண்ணார்.

அஞ்சு பேரு, 'ஆமா அங்கிள், இங்கேதான் இருந்தான்'ன்னு சொன்னாங்க.

மூணு பேரு, ' அங்கிள், இப்பத்தான் அவன் எங்க வீட்டுலேர்ந்து கிளம்பினான்'ன்னு சொன்னாங்க.

ரெண்டு பேரு,' அங்கிள், அவன் எங்க கூடத்தான் உக்காந்து படிச்சிக்கிட்டிருக்கான். நாளைக்கு எக்ஸாம் வருதில்லையா!! டிஸ்டர்ப் பண்ணவேணாம்..ஏதாச்சும் சொல்லணுமா'ன்னு கேட்டாங்க.

ஃப்ரெண்ட்ஷிப்போட பவர் என்னன்னு இப்பவாவது புரிஞ்சிக்கோங்க...

***************************************************************************************


Thursday, 10 June 2010

அள்ளித்தந்த வள்ளல்...

இந்த உலகத்துல இப்படியெல்லாம் நல்ல மனசுக்காரங்க இருக்கிறதாலதான் நாட்டுல மழை பெய்யுது. மின்னஞ்சலில் வந்த பணமழை இதோ...


Dear Selected Winner,

Subject: You have won £ 600,000.00 GBP (Kuwaiti dinars 265,128.672)

Congratulations your email is among the two lucky winners that won Six Hundred Thousand British Pounds (UK £ 600,000.00 = 265,128.672 Kuwaiti dinars) each in the just concluded draw held to promote this year's (November -2010) coming up Lebara Wireless to Kuwait sponsored by the Wireless Industry Research Conglomerate.

To this effect, you are therefore mandated to contact Mr. Samuel Taylor (Claims Manager) via email:
samueltaylor@zing.vn for your Prize Claim.

-And therefore provide the following information via email for the processing of your Prize Fund.

Claims Requirements:
* Full Name: ---------------------------------------------- ---------
* Full Postal Address: --------------------------------------------- ----------- * Zip Code: -------
* Country of residence: -------------------------* Age: ----------
* Occupation: ------------------------------------- * Phone / Fax: ----- ----------------------
* Alternative Email Address: ----------------------

Winning information attached to your email:
* Promotion Claim Reference: 07VZ-Y654522-09-KK
* Our Reference: 980047-002623 - KK-073

Please quote your Reference Numbers Promotion Claim in any correspondences with your designated agent.

Yours sincerely,

Roland Kobold
Promotion coordinator
Admin Team - wireless Industry Research Conglomerate.


OFFICIAL USE ONLY
Winning Address Security Code
|||||||||||||||||||||||||||||||||||||||
Draw Notification Date: 08/06/2010

இந்த பரிசுப்பணத்தை வெச்சு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். எங்கூட பரிசை பகிர்ந்துக்கிற அந்த நல்ல ஆத்மா யாருன்னு தெரியலை :-))))). யாரா இருந்தாலும் சரி... உங்க பங்கை என்னோட ட்ரஸ்டுக்கே அன்பளிப்பா கொடுத்துடுங்க. உங்களுக்கு ஆயுசு முழுக்க வருமானவரி விலக்கு மட்டுமல்ல,.. வருமானத்துல இருந்தே விலக்கு அளிக்கப்படும்.

நான் கணக்குல ரொம்ப monthதம் .( எப்பவும் வீக்ன்னே சொல்லி போரடிச்சுடுச்சு.) அதனால இந்திய மதிப்புல எவ்ளோ ரூபாய்ன்னு கணக்கு போட்டு சொல்லுங்களேன். அப்படியே இலங்கை, சீனா, மலேஷியா, அம்பேரிக்கா, ஆப்பிரிக்கா,இங்கேலாந்து மற்றும் அண்டார்டிகா முதலிய கோபால் பல்பொடி புகழ் பரவியுள்ள நாடுகள், கண்டங்களிலும் , அவங்க நாட்டு மதிப்புல,பரிசுப்பணத்தை கணக்கு போட்டு சொல்லுங்க :-))). எவ்ளோன்னு தெரிஞ்சுக்கணுமில்ல....



Sunday, 16 May 2010

மைக்ரோசாப்டில் வேலை வேணுமா!!!!!

நாட்டுல வேலையில்லா திண்டாட்டம் தலையை விரிச்சுப்போட்டுக்கிட்டு ஆடுது. அதுக்கு ஒரு ஜடைபின்னி, பூ வெச்சு விடத்தான் ஆளில்லைன்னா, ஒரு பாப்கட், ஸ்டெப் கட், அட... அதுவுமில்லைன்னா ஒரு லேயர் கட்ன்னு செஞ்சு விடவும் ஆளில்லாம போச்சு. மனசுக்குள்ள பொலம்பிக்கிட்டே நடந்துக்கிட்டிருந்தார் நம்ம ஹீரோ. அப்பத்தான் அவரு கண்ல அந்த பந்தல் பட்டுது.

அக்ஷய த்ரிதியைன்னா... மோர்ப்பந்தல், அன்னதானப்பந்தல் எல்லாம் அந்தக்காலத்துல வெப்பாங்களாமே. இப்பத்தான் எல்லாரும் நகைக்கடை வாசல்ல க்யூவுல நிற்கிற சம்பிரதாயத்தை ஆரம்பிச்சிருக்காங்க. ஒருவேளை உலகம் ரிவர்ஸில் சுத்தி,.. நாம அந்தக்காலத்துக்கு போயிட்டோமோன்னு ஒரு நிமிஷம் குழம்பினாலும், அடிக்கிற வெய்யிலுக்கு மோராவது சாப்பிட்டு வரலாம்ன்னு பந்தலுக்குள் நுழைஞ்சார் . வரிசையா திருவிழாக்கடைகள் மாதிரி ஸ்டால்கள். ஒவ்வொண்ணிலும், ஒரு கம்ப்யூட்டர். கம்ப்யூட்டருக்கு முன்னால, நுனிநாக்கு இங்க்லீஷில் மட்டும் பேசும் பெண்கள். ஒவ்வொரு கவுண்டரின் மேற்பகுதியிலும் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது. அதுல என்னவோ எழுதியிருக்குதேன்னு கிட்டக்க போய்ப்பார்த்தா,... கம்பெனிகளோட பேர். ஓடிப்போய் வெளிய இருந்த விளம்பரத்த பாத்தார். 'Walk In Interview' அப்டீன்னு பொத்தாம்பொதுவா எழுதியிருந்தது. அப்ளிகேஷன் போடாம, காத்திருக்காம, நேரடியா இண்டர்வ்யூ நடத்தி ஆட்களை தேர்ந்தெடுக்கும் ஒரு முறை இது. ஆஹா!!!! அட்சய த்ரிதியை அன்னிக்கு அட்சய பாத்திரம் கிடைச்சிருக்கேன்னு ஒரு ஜாலியாட்டம் ஆடிட்டு, உள்ள போனார்.

நம்ம ஹீரோ ஒரு லட்சியவாதி. செய்யுற வேலையே தெய்வம், நேரத்தோட ஆப்பீசுக்கு போய் நேரத்தோட வீட்டுக்கு வரணும் , நாம பாக்குற வேலையில சின்சியரா இருந்து நல்ல பெயர் எடுக்கணும்ன்னு நினைக்கிற ஒரு சின்சியர் சின்ராசு. ஆனா பாருங்க,.. அவருக்கு இன்னும் வேலை கிடைக்காததால அவரோட சின்சியாரிட்டி, ப்ரிஜ்ஜில் வெச்ச பழமாட்டம்... அப்படியே ஃப்ரெஷ்ஷா , ஹாரிபாட்டர் படத்துல வர்ற வில்லன் வால்டிமார்ட்டோட உசிர் மாதிரி, வெளியுலகத்துக்கு தெரியாம அப்பிடியே இருக்கு.

வரிசையா பேனர்களை பாத்துக்கிட்டே, போனப்ப பில்கேட்ஸின் 'மைக்ரோசாப்ட்' கம்பெனியும் தனி ஹால்ல ஸ்டால் போட்டிருந்ததை பார்த்தார். இதுதான் நமக்கு சரியான இடம்ன்னு, முடிவு பண்ணி, ஹாலுக்குள்ள போனார். அவரோட அதிர்ஷ்டம் , 'மைக்ரோசாப்ட் ஆசியா'வுக்கான சேர்மனை தேர்ந்தெடுக்கிறதுக்கான இண்டர்வ்யூவை நடத்த பில்கேட்ஸே வந்திருந்தார். சுமார் ரெண்டாயிரம் பேர் வேலைக்காக வந்திருந்தாங்க அப்ளிகேஷன்லாம் தரவேண்டாம்.தனித்தனியா இண்டர்வ்யூ செஞ்சா வேலைக்காகாது,.. நான் மொத்தமாவே இண்டர்வ்யூ செஞ்சுக்கிறேன்னு பில்கேட்ஸ் சொல்ல எல்லோரும் நாற்காலிகளில் உக்காந்தாங்க. இண்டர்வ்யூ ஆரம்பிச்சது....

பில்கேட்ஸ்: "வந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி. சேர்மனுக்கான இண்டர்வ்யூ இது... நான் எதிர்பார்க்கிற தகுதிகளை சொல்லுவேன். அது இல்லாதவங்க தயவு செஞ்சு இண்டர்வ்யூல இருந்து விலகிடுங்க. மொதல்ல...

'ஜாவா' தெரியாதவங்க இண்டர்வ்யூல இருந்து விலகிக்கலாம்"

உடனே ஐநூறு பேர் இடத்தை காலி செஞ்சாங்க. 'எனக்கு ஜாவா தெரியாதுதான்.ஆனாலும் இங்கே இருக்கிறதால நான் இழக்கப்போறது எதுவுமில்லை. என்னதான் நடக்குது பார்க்கலாமே'ன்னு நினைச்சிக்கிட்டு நம்ம ஹீரோ அங்கியே இருந்தார்.

பில்கேட்ஸ் : "உங்கள்ல யாருக்காவது நூறு ஆட்களையோ, அதுக்கு மேலயோ, சமாளிச்ச அனுபவம் இருக்கா?. அப்படி இல்லாதவங்க விலகிடுங்க."

ஒடனே இன்னும் ஐநூறு பேர் வெளியேறிட்டாங்க. நம்மாளு மனசுக்குள்ள , 'எத்தினி தியேட்டர்ல, கூட்டத்த சமாளிச்சு டிக்கெட் எடுத்திருப்பேன். எனக்கில்லாத அனுபவமா'ன்னு நினைச்சிக்கிட்டு கெத்தா உக்காந்திருந்தார்.

பில்கேட்ஸ் : "இந்த பதவிக்கு எம்பியே (MBA) படிச்சவங்க இருந்தா, நல்லாருக்கும்னு நினைக்கிறேன். ஃபெயிலாயிருந்தா கூட பரவாயில்ல".

அவர் சொல்லி வாய்மூடலை. இன்னும் ஐநூறு பேர் எந்திரிச்சி போயிட்டாங்க. நம்ம ஹீரோவுக்கு லேசா தைரியம் வந்துச்சு. 'நாமதான் பன்னெண்டாம் வகுப்பு எம்பி, எம்பியே பாசாயிருக்கோமே, பாஸ் பெரிசா ஃபெயில் பெருசா?' ... ஏங்க... நீங்கதான் கொஞ்சம் சொல்லுங்களேன்....

பில்கேட்ஸ் (கடைசியாக) : "ஆசியாவுக்கான சேர்மன் பதவிக்கு ஆளெடுக்கிறோம். அதனால ஆசிய மொழி தெரிஞ்சவங்க மட்டும் இருந்தாபோதும்".

கட்டக்கடைசியா நானூத்தி தொண்ணுத்தியேழு பேர் வெளியேறினாங்க. பில்கேட்ஸ் இண்டர்வ்யூவை முடிச்ச திருப்தியோட மீதி, நம்ம ஹீரோஉட்பட இருந்த மூணு பேர் கிட்ட வந்தார். "ஃப்ரெண்ட்ஸ் எனக்கு ஃப்ளைட் புடிக்க டைம் ஆயிடிச்சு. உங்கள ஆப்பிசுக்கு வரச்சொல்ல நேரமில்ல.அதனால உங்களுக்கு இங்கியே அப்பாயின்ட்மெண்ட் லெட்டர் குடுத்துடறேன்."

ஆர்டரை கொடுத்துட்டு,"எதுக்கும் நீங்க மூணுபேரும்,உங்களுக்குள்ள ஆசிய மொழிகள்ல பேசிக்காமிங்களேன்.எனக்கும் திருப்தியா இருக்குமில்ல"

நம்ம ஹீரோ திரும்பி, பக்கத்தில் இருந்தவரிடம்,"அண்ணாச்சி, நீங்க எந்தூர்லருந்து வாரியோ?"

அவர் பதில் சொன்னார்," நமக்கு இங்கிணதான், ஆராமுளி பக்கத்துல நாரோயில்லேர்ந்து வாரென் மக்ளே".

மூணாவது ஆள் கிட்ட வந்து,"இன்னாபா... நம்மள கண்டுகிட மாட்டேங்றியே?.. இப்ப இன்னாங்கிற... அக்காங்".


இது என்னோட ஐம்பதாவது பதிவு. இந்த தொலைவை நிச்சயமாக உங்க ஆதரவு இல்லாம என்னால் கடக்க முடிந்திருக்காது. கூடவே வந்து ஆதரவளித்தும் , பின்னூட்டமிட்டும் உற்சாகப்படுத்திய அன்புள்ளங்களுக்கு, நன்றி என்ற சின்ன வார்த்தை போதாது. என்றாலும் நன்றி.. நன்றி.. நன்றி..





Tuesday, 6 April 2010

யோசிப்போர் சங்கம்...

மாடுபோல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா?


அது கன்னுக் குட்டி! கடவுளே!!! ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?

நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!

போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆன்ட்டி பேரு என்னம்மா?

சரோஜா!... ஏன் கேக்குற?

அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?


பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல! ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று!!

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு! அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேஷண்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்ல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா? ------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப்போய்ட்டாங்க!!

கொடூர மொக்கை!!!

என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்' வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி...


டிஸ்கி: மக்களே.. கொலைவெறியோட ஆட்டோ அனுப்பிடாதீங்க. இது சத்தியமா நான் எழுதலை.. ஈ.. கொண்டு வந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails