Wednesday 30 June 2010

மழையே மழையே...4(கடைசிப்பாகம்).



சூரிய பகவானின் தரிசனம் கண்டு ரெண்டு மூணு நாள் ஆகியிருக்கும். அன்னிக்கு மதியத்துக்கு மேல மழை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு நிக்க ஆரம்பிச்சுடுச்சு. மழை விட்டும் தூவானம் விடாத கதையா, ஹை டை இன்னும் முடியாததால தண்ணீர் மட்டம் அப்படியே இருந்தது. பசங்களெல்லாம் கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாம கப்பல் செஞ்சுவிட்டு விளையாடிக்கிட்டிருந்தாங்க. மெதுவா காரை நிறுத்தியிருந்த இடத்துக்கு போய் பார்த்தேன்.எதிர்பார்த்ததுதான்... மிக்ஸிங் எதுவுமில்லாமலேயே தண்ணியில மிதந்துக்கிட்டிருக்கு. நல்லவேளை இருக்கைகள் வரை தண்ணி ரொம்பலை. ஆக்ஸிலேட்டர் நல்லா கடப்பாரை நீச்சலடிச்சு குளிச்சிக்கிட்டிருக்கு. இந்த மழைக்கப்புறம் எல்லா சர்வீஸ் செண்டர்களிலும் பயங்கர பிஸினெஸ் தெரியுமோ..

மதியத்துக்கு மேல நீர்மட்டம் குறைய ஆரம்பிச்சது. இப்ப ரங்க்ஸ் பையரை கூட்டிக்கிட்டு, 'சும்மா.. அப்டிக்கா போயிட்டு வர்றேன்'ன்னு நழுவிட்டார். போயிட்டு சாவகாசமா, ஆடி அசைஞ்சு அரைகப் பால் பாக்கெட்டோட வர்றாங்க. ஏது இதுன்னா.. ரெண்டுபேரும் ஊர்க்காடெல்லாம் சுத்திச்சுத்தி, ஊருக்கு வெளிய இருக்கிற பண்ணைக்கு பக்கமா போயிருக்காங்க. அங்க பால்சப்ளை நடக்கிறதை பார்த்ததும் வாங்கிட்டு வந்திருக்காங்க. அரைகப் பால் வெறும் முப்பதே ரூபாய்தானாம். இதுல, அரைமணிக்கொருக்கா ஊசிபோட்டு பால்சுரக்க வெச்சு, காசுபார்த்த கொடுமையும் அங்கெல்லாம் நடந்துக்கிட்டிருந்ததாம். நெறைய மாடுகள் வெள்ளத்தில் அடிச்சிக்கிட்டு போயிட்டதால உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம். அதை இப்படி ஈடுகட்டி மழையுள்ளபோதே நனைஞ்சிருக்காங்க.

கிட்டத்தட்ட நாலாம் நாள் தண்ணீரெல்லாம் சுத்தமா வடிஞ்சு, தரையெல்லாம் கொஞ்சம் காயவும் ஆரம்பிச்சுடுச்சு. அப்பாடா... இனி இயல்பு நிலை திரும்பிடும்ன்னு நினைச்சிருந்தோம். வீட்டுக்குள்ளேயே இருந்தா ஊர் நிலவரம் எப்படி தெரியும்!!. கிளம்பிட்டேன்.. ரோடெல்லாம் ஒரே குப்பை. தண்ணீரில் ஊறிப்போன ஃபர்னிச்சர்கள், மெத்தைகள். பாய் தலையணைகள், உணவுப்பொருட்கள்ன்னு எல்லாத்தையும் மக்கள் வெளியே கொண்டு வந்து குப்பையா குமிச்சிக்கிட்டிருக்காங்க . வீட்டை சுத்தம் பண்ண வேணாமா.. கடைத்தெருவிலிருந்த ஒண்ணு ரெண்டு கடைகளை தவிர மற்ற இடங்களில் தண்ணீர் புகுந்ததால ஊறிப்போன அரிசி, சோளம், கோதுமை மூட்டைகளை அப்படியே குப்பைத்தொட்டிக்கு பக்கத்துல கொண்டாந்து கொட்டியிருந்தாங்க.

ஒருகடையின் வெளியே வெச்சிருந்த போர்டை பார்த்ததும் திக்குன்னு ஆயிடுச்சு. 'பக்கத்தூர்ல இருக்கிற அணை எப்போ வேணும்ன்னாலும் உடையலாம், எல்லாரும் பாதுகாப்பா இருந்துக்கோங்க'ன்னு எழுதி வெச்சிருந்தாங்க. அந்த அணை நிரம்பிவழியுது, ஏகப்பட்ட ஷட்டர்களை திறந்து தண்ணீரை வெளியேத்துறாங்கன்னு தோழி ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. உடனே வீட்டுக்கு ஓடிவந்தேன். இங்கே என்னடான்னா அதுக்குள்ளே இதப்பத்தி கேள்விப்பட்டு மீட்டிங்கை கூட்டிட்டாங்க. அப்படி அணை ஒடைஞ்சா தண்ணி அரை மணி நேரத்துல இங்கே வந்துடும். மொதல்ல தரைத்தளம் மற்றும் முதல் தளத்துல இருக்கிறவங்க, முக்கியமான பொருட்களை (documents, pass books, passport, jewels,cash) எடுத்துக்கிட்டு மேல்தளங்கள்ல இருக்கிறவங்க வீட்டுக்கு போயிடுங்கன்னு அறிவிச்சாங்க. எங்க வீட்டுக்கும் ரெண்டு ஃபேமிலியை அழைச்சோம். முக்கியமான பொருட்களோட கம்ப்யூட்டர், டிவி, உணவுப்பொருட்கள்ன்னு என்னல்லாம் கொண்டு வரமுடியுமோ, அதையெல்லாம் எங்க வீட்டுல பத்திரப்படுத்தினாங்க.

அந்த சூழ்நிலையில் எனக்கு 'கள்ளிக்காட்டு இதிகாசம்'தான் ஞாபகம் வந்தது. வைகை அணையில் நீர் நிரம்பும்போது இப்படித்தானே ஊர்களெல்லாம் மூழ்கும். அந்த சூழ்நிலையிலும் ரங்க்ஸ் கிட்டபோய் செயின் இருக்கான்னு கேட்டேன். கடைசி நேரத்துல காமெடி பண்றாளே.. பயத்துல மூளை கலங்கிடுச்சோன்னு நினைச்சாரோ இல்லியோ.. 'எதுக்கு?' ன்னார். 'இல்ல, காரை கட்டிப்போட்டா வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போவாதில்ல'ன்னு சொன்னப்புறம்தான் நான் கேட்டது தங்கச்செயின் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டு நிம்மதிப்பெருமூச்சு விட்டார். அணை உடைஞ்சு வெள்ளம் வந்தா அந்த வேகத்துல நம்ம பில்டிங்கே நிக்குமோ நிக்காதோ.. ஸ்டீல் செயினெல்லாம் எந்த மூலைக்கு.. பொழச்சுக்கெடந்தா நம்ம கார்ல பயணம்.. இல்லேன்னா தேவலோக வாகனத்துல பயணம். எது வாய்க்குதோ பாக்கலாம்.

இத்தனை பேர் ஒரே சமயத்துல வந்தா ட்ராபிக் ஜாம் ஆயிடும்ன்னு நெனைச்ச முப்பத்து முக்கோடி தேவர்களெல்லாம் ஓவர்டைம் பாத்து, அந்த அணையை காப்பாத்திட்டாங்க. சில இடங்களில், அணை உடையப்போவுதுன்னு வதந்தியா கிளப்பறதுக்கே சில காமெடிபீஸ்கள் அலைஞ்சுக்கிட்டிருந்தது. ஒடனே மாநகராட்சி ஜீப்புல ஆட்களை அனுப்பி,' வதந்திகளை நம்பாதீர்'ன்னு தண்டோரா போட்டப்புறம்தான் வதந்தியலை ஓய்ஞ்சது. ஒரு வாரத்துக்குள்ள மும்பை மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பிடுச்சு.

மும்பை நகருக்குள் வெள்ளசேதம் நிறைய ஏற்படுவதற்கு நகருக்குள் ஓடும் Mithi நதியும் ஒரு காரணம் . Powai, மற்றும் விஹார் ஏரிகளிலிருந்து மும்பைக்கு குடி நீர் வழங்கப்படுது. இந்த ஏரிகளிலிருந்து வெளியாகும் அதிகப்படியான நீரே அந்த நதி. இது, Powai, Saki Naka, Bandra Kurla complex, calina, Dharavi மற்றும் பல இடங்கள் வழியா ஓடி மாஹிம்மில் அரேபியக்கடலில் கலக்குது. பேருக்குத்தான் இது நதியே தவிர எல்லாவிதமான மற்றும் தொழிற்சாலைக்கழிவுகளை கொட்டும் இடமாத்தான் இருக்குது.அதோட மழை நீர் வடிகாலாகவும் இது இருக்குது. மக்கள் கொட்டிய குப்பைகள் , கழிவுகளெல்லாம் அதோட ஓட்டத்தையே திசைதிருப்பிடுச்சு. மும்பையின் கலீனா பகுதிதான் வெள்ளத்தின்போது ரொம்பவும் சேதப்பட்டது. அதற்கு இந்த நதியே முக்கிய காரணம். போதாக்குறைக்கு பாந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ் இதன் பாதையை மறித்துக்கட்டப்பட்டதால் மழைத்தண்ணீர் போக்கிடமில்லாம ஊருக்குள் புகுந்துடுச்சுன்னும் அரசியல் நடந்தது. வெள்ளமெல்லாம் வடிஞ்சப்புறம் அந்த நதியை தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தமும் செஞ்சாங்க. இப்பவும் வருஷாவருஷம் அந்த சடங்கு நடக்குது. நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்தாலும் சரி.. உடனே வெள்ள எச்சரிக்கை கொடுத்து, அந்த பகுதி மக்களை உஷார்படுத்திடுவாங்க.

Mithi நதியின் பாதை.

மழையெல்லாம் முடிஞ்சப்புறம், பாலிதீன்பைகள் சாக்கடைகள், மற்றும் வடிகால்கள்ல போய் அடைச்சிக்கிட்டதாலதான், வெள்ள அபாயம் வந்துச்சுங்கிற ஒரு ஒலக மகா உண்மைய ரூம்போட்டு யோசிச்சு கண்டுபிடிச்சாங்க. (அவங்கவங்க இருந்த இடத்துல, ரெண்டு நாளா மாட்டிக்கிட்டு,... நகரமுடியாம இருந்த சந்தர்ப்பத்துல,.. யோசிச்சதாத்தான் இருக்கணும்). மழைக்கப்புறம் ஒரு மாசத்துக்குள்ளாற கடைக்காரர்களெல்லாம், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறதுக்காக அவங்க ஸ்டாக் வெச்சிருக்கிற பாலிதீன்பைகளை காலிபண்ணனும், அதுக்கப்புறம் அவங்க ஸ்டாக் வெச்சிருக்கிறதா கண்டுபிடிச்சா அபராதம், பொதுஜனங்கள் யாராவது கேரிபேக்கை கையில் வெச்சிருக்கிறதை பாத்தா ஆயிரம்ரூபாய் அபராதம்ன்னு சட்டம் போட்டாங்க. அப்புறம் 50 மைக்ரான் கள் அளவுக்கு பாலிதீன்பைகள் தயாரிச்சிக்கலாம்ன்னு ரெண்டு படி இறங்கிவந்தாங்க. இப்போ, 20 microns அதாவது .002 cm வரை அனுமதி கொடுத்திருக்காங்க. எதுவோ தேஞ்சு கட்டெறும்பு ஆச்சுதாமே!!! அந்தக்கதை ஞாபகம் வருதா :-))

மும்பையை பொறுத்தவரை, எந்த சீசனா இருந்தாலும் நல்லா ஜாலியா எஞ்சாய்பண்ணுவோம். மழை வந்தாத்தான் எங்களுக்கு ஐஸ்க்ரீமே ருசிக்கும் :-) வினாயகர் சதுர்த்திக்கப்புறம் நாரியல் பூர்ணிமான்னு ஒரு பண்டிகை வரும்... அதுவரை மழை இருக்கும். இங்கே கொஞ்சமா தண்ணி தேங்கறது, பஸ், ரயில் போக்குவரத்து தாமதப்படுவது, நிறுத்தப்படுவதெல்லாம், அன்றாட நிகழ்ச்சி... சொல்லப்போனா, நாங்களே அதை எதிர்பார்க்கிறதுண்டு... ஏன்னா மும்பை மக்கள் த்ரில் பிரியர்கள். இதோ இப்பக்கூட.. மும்பையின் புற நகர்பகுதியான தானாவில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துருக்கு. இதையும் தாண்டி வருவோமில்ல....

நாலு நாளா பெஞ்ச மழையில் எங்கூடவே நனைஞ்ச உங்களுக்கு ரொம்ப நன்றி. யாருக்காவது சளி பிடிச்சிருந்தா, சொந்த அனுபவத்தில் ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன்... செஞ்சு பாருங்க.

ஒரு கைப்பிடி துளசியும், ரெண்டு ஸ்பூன் பனங்கற்கண்டும், ரெண்டு கப் தண்ணியில் போட்டு கொதிக்கவெச்சு ஆறவிடுங்க. ஆறியதும் ஒரு ஸ்பூன் தேனை அதில் விட்டு, ஒரு நாளுக்கு ரெண்டுவேளைன்னு மூணு நாள் குடியுங்க. சளி, இருமல் ஓடிப்போயிடும்.

வர்ட்ட்டா....

34 comments:

எல் கே said...

nalla thril anubvam

அகல்விளக்கு said...

//
மழையெல்லாம் முடிஞ்சப்புறம், பாலிதீன்பைகள் சாக்கடைகள், மற்றும் வடிகால்கள்ல போய் அடைச்சிக்கிட்டதாலதான், வெள்ள அபாயம் வந்துச்சுங்கிற ஒரு ஒலக மகா உண்மைய ரூம்போட்டு யோசிச்சு கண்டுபிடிச்சாங்க. ///

இப்படியெல்லாம் ஆளுங்க இருக்குறப்போ.. வெள்ளம் வராம என்ன செய்யும்...

Chitra said...

பட்ட கஷ்டத்தை கூட, நகைச்சுவை உணர்வோட - தன்னம்பிக்கையோட இருந்து - அருமையாக தொகுத்து வழங்கி இருக்கீங்க...

வெங்கட் நாகராஜ் said...

அமைதிச்சாரலில், மழைச்சாரல் [வெள்ளம்] படித்து நாங்களும் நனைந்தோம்.

தில்லியில் மழை வருது...வருது-ன்னு சொல்லிட்டு தான் இருக்காங்க, இன்னும் வந்தபாடில்லை. பார்ப்போம் :)

Kousalya Raj said...

அனைத்து பதிவையும் இன்று மறுபடி சேர்த்து படித்தேன், அந்த படங்களும் உங்கள் வர்ணனைகளும் மிகவும் அருமை. உண்மையில் மழையில் நனைந்த உணர்வு வந்து விட்டது. நன்றி

pudugaithendral said...

அந்த ஹைலைட்டட் மேட்டரை முன்னாள் மும்பை வாசியாக எல்லாத்துக்கும் ரிப்பீட்டிக்கறேன்.

எல் கே said...

//தில்லியில் மழை வருது...வருது-ன்னு சொல்லிட்டு தான் இருக்காங்க, இன்னும் வந்தபாடில்லை. பார்ப்போம்//

varum aana varathu

ஹேமா said...

குளிர்ல நடுங்கவிட்டு மருந்தும் சொல்லிட்டீங்களே சாரல்.
நன்றி.உண்மையில் அனுபவத்தோடு நனைய வைத்தீர்கள்.

துளசி கோபால் said...

இயற்கைச் சீற்றத்துக்கு முன்னே யாரும் ஒன்னும் செய்ய இயலாதுன்னாலும் நிலமையை இன்னும் மோசமாக்க மனுசன் தெரிஞ்சுவச்சுருக்கான்:(

ப்ளாஸ்டிக் சனியனை ஒழிச்சுக்கட்டுவதுதான் பெரிய போராட்டமா இருக்கப்போகுது.

நாலு இடுகைகளும் அருமை.

சண்டிகரில் இந்த ஆண்டு பருவ மழை வந்துருக்கவேண்டியது, இன்னும் வரலை. ரொம்பத் தாமதமாகலாமாம்:(

ஹுஸைனம்மா said...

மழையில முழுசா குளிப்பாட்டிட்டு, மருந்தா சொல்றீங்க!!??

;-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நல்ல த்ரில்லான அனுபவமாத்தான் இருந்தது.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அகல்விளக்கு,

குதிரை ஓடினபிற்பாடு லாயத்தை பூட்டினானாம் ஒருத்தன்.. அதே கதைதான். தொடர்கதையாகாம இருந்தா சரிதான்.

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

மழை சீக்கிரமே வரட்டும். அதுவரை நம்ம பதிவுல பெய்யுற மழையை பார்த்து ரசியுங்க.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கௌசல்யா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

அதனாலதான் ஹைலைட் போட்டு காட்டியிருக்கேனாக்கும் :-))

வருகைக்கு நன்றி.

ஜெயந்தி said...

மும்பை மழைய ஒரு த்ரில் கதை ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்க. இன்ட்ரஸ்டா போச்சு. எங்க அவஸ்த்த உங்களுக்கு இன்ரஸ்டான்னு திட்டாதீங்க. உண்மையிலேயே கொடுமையான அனுபவம்தான்.

நசரேயன் said...

நன்றி மழை ஓய்ந்ததற்கு

பா.ராஜாராம் said...

நாலு இடுகைகளும் வாசித்தேன், ஒரே மூச்சில் சகோ.

அருமையான நடை. intresting article!

நசரேயன், :-))

கெடக்க மாட்டேங்குறாரே சாரல் இவர்.

Asiya Omar said...

நல்ல த்ரில்லான அனுபவம்.அருமையாக எழுதிருக்கீங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

அந்த வருஷம் கொஞ்சம் ஜாஸ்தியாப்போச்சு, அவ்வளவுதான். மத்தபடி மழையை நாங்க அவஸ்தையா நினைக்கிறதேயில்லை :-))))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசர்,

அப்பாடான்னு இருக்குதா :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பா.ரா. அண்ணா,

நேரம் ஒதுக்கி, வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிண்ணா.

வீட்டுல,பிரசாதத்தட்டுமேல கண்ணுவெச்சிக்கிட்டே,'பூசை எப்பம்மா முடியும்'ன்னு சிணுங்கிக்கிட்டே இருக்குமே.. அப்படி ஒரு கடைக்குட்டித்தம்பிதான் நசரு :-))))) கும்மி அடிக்கமுடியாம நாலு நாளா கையை கட்டிப்போட்டு வெச்சிட்டேனில்ல...அதான் :-)))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

நன்றிப்பா. ஊருக்கு போறீங்க போலிருக்கு,பத்திரமா போயிட்டுவந்து சொல்லுங்க.

வருகைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

சித்ரா சொன்னதை வழிமொழிகிறேன். கைப்பக்குவத்துக்கும் நன்றி. தானேயில் இருந்திருக்கிறேன் இரண்டு வருஷம், ஒரு இருபது வருஷம் முன்னே! மும்பை மழை அனுபவத்திருக்கிறேன் நானும். பகிர்ந்த விதம் மிக அருமை.

SARAVANAN said...

nall erukuya unga commady. naduthuga unga estam polo mmmmmm mmmmmmmmmm ok.

சாந்தி மாரியப்பன் said...

எல்.கே,

சீக்கிரமே அங்கியும் மழை வரட்டும்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

மருந்து சாப்பிட்டு தேத்திக்கிட்டாதானே அடுத்தாப்ல நனைய முடியும்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

ப்ளாஸ்டிக்குக்கு எதிரான கோஷம் அப்பப்ப எழுந்து அடங்கிடுது. இதுக்கு என்னதான் நிரந்தர தீர்வோ :-(

நேரம் ஒதுக்கி நாலுஇடுகைகளையும் படிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஜலதோஷம் பிடிக்கிறதுக்கு முன்னால மருந்தை குடிச்சுடுங்க :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ஆஹா.. நீங்களும் முன்னாள் மும்பைவாசிதானா.. :-).தானேயில் எங்கேங்க?..

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சரவணன்,

அடுத்த இடுகைக்கு வரவேண்டிய கமெண்ட் இங்கே வந்துருக்குன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப ரசித்துப் படித்தேன்பா.
உங்க வீட்டுக்கு மத்தவங்களையும் வரவழைச்சுக் குடித்தனம் செய்திருக்கீங்களே. மழைன்னால ஒத்துமையும் அதிகரிச்சிருக்கு. இங்கயே மழை பெய்த ஃபீலிங்காப் போச்சு.:)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

உண்மைதான்.. ஒரு இக்கட்டான சூழ்நிலைன்னதும் அத்தனைபேரும் ரொம்பவே ஒத்துமையாயிட்டாங்க...

நன்றிம்மா.

LinkWithin

Related Posts with Thumbnails