Friday 7 February 2020

ரோஸு.. ரோஸு.. ரோஸு டே.

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் தினம் ‘ரோஸ் டே’, அதாவது ரோஜா தினம் எனக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரோஜாக்கள் ஒருவருக்கொருவர் பரிசாக வழங்கப்படுகின்றன. ஒருவர் மீதான தன் எண்ணத்தை, விருப்பத்தை, கொடுக்கப்படும் ரோஜாக்களின் வண்ணத்தை வைத்தே வெளிப்படுத்தி விடுவர். 

காதலர் தினத்தன்று சிவப்பு ரோஜாக்கள்தான் அதிகமும் கொடுக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் காதலை வெளிப்படுத்துவதற்கு சிவப்பு ரோஜாக்கள்தான் உகந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், பிற வண்ணங்களிலிருக்கும் ரோஜாக்களும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகின்றன. 

பர்ப்பிள் வண்ண ரோஜா ஒருவரின் மீதான தனது ஈர்ப்பைத் தெரிவிக்க வழங்கப்படுகிறது. அந்த ஈர்ப்பு எப்போது வேண்டுமானாலும் காதலாக மாற வாய்ப்பிருக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்துவது அது.

வெள்ளை ரோஜாப்பூ கொடுப்பவரின் குற்றமற்ற மனதை வெளிக்காட்டும். தூய நட்பை வெளிப்படுத்தவும், காதலை நாகரிகமான முறையில் மறுப்பதற்கும் வழங்கப்படுகிறது.

பிங்க் நிற ரோஜாப்பூ கருணை, கனிவு மற்றும் நன்றியைத் தெரிவிக்குமுகமாக வழங்கப்படுகிறது.







அழகின் மீதான ரசனையை வெளிப்படுத்த பர்கண்டி அதாவது கருஞ்சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் கொடுக்கப்படுகின்றன.


ஆரஞ்சு நிற ரோஜாப்பூ உற்சாகம் மற்றும் விருப்பத்தை வெளிக்காட்டும்.
மஞ்சள் நிற ரோஜாப்பூ நட்பை வெளிக்காட்டும். நாம் நல்ல நண்பர்களாக மட்டும் இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்தவும் இது கொடுக்கப்படுகிறது.




சிவப்பு ரோஜாப்பூ காதலை வெளிப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. 









2 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். அனைத்தும் ரசித்தேன்.

தகவல்களும் சிறப்பு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்ஜி,

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails