Sunday 26 January 2020

71-வது வாழ்த்துகள்


பக்கத்து ஊரிலிருக்கும் ரயில் நிலையத்தின் வெளியே உள்ள மைதானத்தில், நவி மும்பையின் சிட்கோவானது, நடைப்பயிற்சி, ஸ்கேட்டிங், போன்றவற்றுக்கான பாதைகளை அமைத்துள்ளது. ஸ்கேட்டிங்கிற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள நேரத்தை மற்றவர்கள் யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். பணி ஓய்வு பெற்ற மக்கள் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு தங்கள் பொறுப்பில் வளர்த்தும் வருகிறார்கள். 

உடற்பயிற்சியில் ஆர்வமும் அனுபவமும் உள்ள மக்கள் தாங்களாகவே இணைந்து பல்வேறு குழுக்களாக அமைந்துள்ளனர். அதாவது, இது 'தானாச்சேர்ந்த கூட்டம்'. இதில், யோகாவில் பயிற்சி உள்ளவர், பிற உடற்பயிற்சிகளில் அனுபவமுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது வழக்கம். இங்கே எல்லோரும் மாணவரே, எல்லோரும் குருவே. 

கூட்டத்தில் இணைய விருப்பமில்லாதவர்கள் தனித்தனியாக சித்தம் போக்கில் வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம், இன்ன பிற உடற்பயிற்சிகள் போன்றவற்றை ஆங்காங்கே அமர்ந்து செய்வது வழக்கம். இதில் இரண்டு குழுக்கள் கொடியேற்றுதல், உரையாற்றுதல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம், கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி சிறு ஊர்வலம்,என இன்றைய குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அவற்றில் சில காட்சிகள் இங்கே..





கொடி வந்தனம்


வந்தே மாதரம் என்போம்

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்




தாயின் மணிக்கொடி பாரீர்..
வேற்றுமையில் ஒற்றுமை,.. அதுவே இந்தியா. அந்த ஒற்றுமையையும் ஒருமைப்பாடையும் அசைத்துப்பார்க்கவும் சோதித்துப்பார்க்கவும் அடிக்கடி சில நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனைகள் சூழ்ந்துள்ளன. அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி நாம் எப்போதுமே ஒரு தாய் மக்கள்தான் என்பதை நிரூபிப்போம். தாயின் மணிக்கொடி வாழியவே. அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

குடியரசு தின நல்வாழ்த்துகள் ஐயா

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அழகு.

வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயக்குமார் ஐயா,

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்ஜி,

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails