Friday 14 February 2020

இதயமே.. இதயமே..

//ஒத்த வயதுள்ள எதிரெதிர் பாலினரிடத்தில் மட்டுமன்றி, சக மனிதர் அனைவரிடமும் சுரக்கும் மனித நேயத்திற்கு வெறுமனே காதல் என ஒற்றை வார்த்தையில் முத்திரை குத்தி அதை, சிமிழுக்குள் கடலென அடைத்து விட முடியுமோ!!  தாயிடத்தில், தந்தையிடத்தில், உடன் பிறந்தாரிடம், ரத்த உறவுகளிடம், மற்றும் ஊழின் துயரில் அழுந்திப் பரிதவிக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏற்படுவதை அன்பு, பாசம் என பல்வேறு பொதுப் பெயர்களால் அடையாளமிட்டாலும் இரு நெஞ்சங்களினிடையே ஏற்படும் ஈர்ப்பு மட்டும் "காதல்" என வார்த்தை மகுடம் சூடிக்கொள்கிறது.// 

முன்பொரு முறை எழுதிய அதே வரிகளை மறுபடியும் நினைவூட்டுவதோடு ஒரு ஒளிப்படக்கலைஞராக இந்த வருடத்தைய எனது பங்களிப்புகள். இவற்றில் ஏற்கனவே வலையேற்றப்பட்ட சில படங்களைத்தவிர மற்றவை புதியவை.
















நாளும் கோளும் அன்பை வெளிப்படுத்துபவர்க்கில்லை. ஆதலால் அன்பு செய்வீர் உயிர்களனைத்திடமும், அனுதினமும்..

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அனைத்தும் அழகு!

அனைவரிடத்தும் அன்பு செலுத்துவோம்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்ஜி,

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

கோமதி அரசு said...

படங்கள் அனைத்தும் அழகு.
அன்பு செய்து வாழ்வோம்.

LinkWithin

Related Posts with Thumbnails