Monday 2 February 2015

சாரல் துளிகள்


1)  பலவீனமாக்குவதல்ல,.. மேலும் உறுதிப்படுத்துவதே அன்பு.

2) கட்டைவிரல் குறிப்பால் தாகத்தை உணர்த்திய சாலை வியாபாரிக்கு, புத்தம்புது தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துச் சென்ற வாகன ஓட்டுனர் உணர்த்திச்செல்கிறார் மனிதம் இன்னும் செத்து விடவில்லையென்பதை..

3) தெருவில் போகும்போது "டாய்ய்ய்ய்.. " என்று வலிய அழைத்து 'டாட்டா ' சொல்லிச் சிரிக்கிறது இளம்பிஞ்சொன்று # இந்த நாள் இனிது#

4) திரைப்படம் ஆரம்பிக்குமுன் ஒலித்த தேசியகீதத்துடன் தானும் கூடச்சேர்ந்து பாடிக்கொண்டிருக்கிறது கை கால் முளைத்த ஒரு புல்புல்..

5) எதிர்முனையிலிருக்கும் நபரின் நிலைமையைச் சற்றும் சிந்தியாமல், “ஏன் போனை உடனே எடுக்கலை?” என்று தேம்பும் அப்ரண்டீஸ்களைத் தேற்றியே பாலன்ஸ் தீர்ந்து விடுகிறது.

6) கூடை நிறைந்திருக்கிறது.. ஒவ்வொன்றாய் உண்கிறான் பசி பொறுக்காத வியாபாரி.

7) மெலிந்த கைகளை நீட்டி வானிடம் சில துளிகள் யாசகம் கேட்க ஆரம்பிக்கிறது மரம்.. கோடைகாலம் ஆரம்பம்.

8) காலோடு தலை போர்த்திக்கொண்டால் பேய் பிசாசால் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணும் குழந்தையின் அறியாமை ரசிக்கவே வைக்கிறது.

9) இளவெயிலில் உலர்ந்து கொண்டிருந்த வானவில்லிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன வண்ணங்கள். உத்திரவாதம் வெளுத்துப்போயிற்றே இந்திரனே.

10) முதல் மழைத்துளியை அருந்திய நிலத்திலிருந்து வெளிப்பட்ட ஆவியாய் எங்கிருந்தோ மணத்துக்கொண்டிருக்கிறது ஒரு புல்லாங்குழல்.

6 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் உணர்ந்ததை நாங்களும்
உணரும்படிச் சொன்னவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கவிதை
கவிதையை முடித்த விதம்
கவிதையை இன்னமும்
உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

அனைத்தும் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை.

த.ம. +1

LinkWithin

Related Posts with Thumbnails